Wednesday 15 January 2020

எண்ண அதிர்வுகள் - Intentional Vibrations

எண்ண அதிர்வுகள்


நாம் வெறும் வாயால் பேசும் அனைத்து சொற்களுக்கும் வலிமை உள்ளது அது அன்றாட வாழ்வில் பல விஷயங்களை புரட்டிபோட வல்லது...இந்த பதிவு எண்ண அதிர்வுகளின் செயல்பாடுகளை நம் பேச்சாற்றலுடன் தொடர்புடையது..

எண்ணங்கள் என்பது பொதுவாக நாம் மனதில் நினைக்கும் விஷயங்களை குறிக்கும்..இதில் கற்பனை, Visualization,ஏற்கனவே கேட்ட பாடலை நினைவில் கொண்டு வந்து அதே போல மனதிற்குள் கேட்டு கொள்வது ன்னு பல விஷயங்கள் இருக்கு...
சரி இந்த எண்ண அலைகள் நம் உடலிலும் அன்றாட நடவடிக்கைகளிலும் எந்தளவு மாற்றங்களை உருவாக்குது ன்னு பாப்போம்..எண்ணங்களை அதிர்வுகளை ரெண்டு வகையாக வெளிப்படுத்துறோம் ஒன்னு emotions (உணர்ச்சிகள்),இன்னொன்னு எண்ணங்கள் (Intentions),, இவற்றில் intentions அடிப்படையில் பார்க்கையில் நாம் நம் எண்ணங்கள் தான் நம் செயலிலும்,நடவடிக்கைகளிலும்,பேச்சுகளிலும் கலந்துள்ளது..இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தில் பல மொழிகள் உள்ளன இருந்தாலும் எவ்வாறு அனைத்து மொழிகளையும் இப்பிரபஞ்சம் உணர்ந்து நாம் வேண்டியதை கொடுக்கிறது...இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு பொதுவான மொழி என்பது கிடையாது எண்ணங்களையும்,உணர்வுகளையும் கடத்தும் அனைத்து யுக்திகளும் இப்பிரபஞ்ச மொழி தான்..உணர்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தால் சிரிப்பு, அழுகை,கோவம் போன்றவற்றிற்கு உலகம் முழுதும் ஒரே மொழி தான்..அதற்கு அடுத்தாற்போல் எண்ணங்கள்..

நாம் எதை நினைக்கிறோமோ அதாகவே ஆகிறோம்!! 
                    -இது அனைவரும் அறிந்த ஒன்றே..

இது எப்படி எனில் நாம் மனதில் தொடர்ந்து  நினைக்கும் ஒரு விடயம் நம்மை சுற்றி அதிர்வலைகளை(vibrational waves) உருவாக்கும் அந்த அதிர்வுகள் வலுப்பெற வலுப்பெற அதிர்வெண்களாக(frequency) உருவெடுத்து இப்பிரபஞ்சத்தில் கலந்து நம் எண்ணங்களுக்கு ஏற்றார் போல் நம்மை இயக்க தொடங்கும்...

போதும்பொன்(எங்க அம்மா பேர்)
இந்த பெயரை அதிகம் தென்மாவட்டங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள்...ஒரு வீட்டில் தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்து வந்தாலோ அல்லது அடுத்து பிறக்க வேண்டியது ஆண் வாரீசாக இருக்க வேண்டும் என்றாலோ கடைசியில் பிறந்த பெண்குழந்தைக்கு போதும்பொன்னு ன்னு பேர் வைப்பாங்க...இதை நெடுங்காலம் ஒரு மூடநம்பிக்கை ன்னு கூட சொன்னாங்க..ஆனால் உண்மை என்ன ன்னா..நம் பேச்சிற்கும் எண்ணங்களுக்கும் உண்டான தொடர்பை பயன்படுத்தி பிரபஞ்சத்தில் நம் வேண்டுகிற விஷயத்தை மறைமுகமாக விதைப்பதே இதன் மர்மம்..அந்த கடைசியாக பிறந்த குழந்தையை போதும்பொண்ணு என்று அழைக்க அழைக்க நம் மனதில் அந்த வார்தைக்கான அர்த்தம் எண்ணங்களாக பதிய துவங்கும்..அனைவரும் அந்த பெயரை பயன்படுத்த பயன்படுத்த எண்ணங்கள் வலுப்பெற்று அதிர்வெண்ணாக உருவெடுத்து பிரபஞ்சத்தில் விதைக்கும்...இதன் விளைவாக அடுத்து பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும்..(எங்க அம்மா பேர் இது தான் எங்க அம்மாக்கு முன்னாடி 4 பெண் பிள்ளைகள் எங்க தாத்தா போதும்டா சாமி ன்னு இந்த பேர் வெச்சாரு அதுக்கு அப்றம் தான் எங்க மாமா பொறந்தாரு)

இதற்கு தான் வீட்டில் விளையாட்டுக்கு கூட தவறான,துஷ்ட விஷயங்களை பேசக்கூடாது ன்னு சொல்லுவாங்க...

நல்லதையே பேசுங்க!!! நல்லதே நடக்கும்!!!