Tuesday 31 December 2019

Time-Illusion(மாயை)

Time-Illusion
காலம்-மாயை

ஒவ்வொரு வருடமும் எல்லாரும் புத்தாண்டு வர போகுது ன்னு கொண்டாட்டத்திற்கு தயாராகிட்டு இருப்பாங்க..அப்போ இது வரைக்கும் இருந்தது பழசா..?? இனி வரப்போவது புதுசா..??
கொஞ்சம் யோசிங்க இன்னிக்கி இருக்குற இடத்துல தான் நாளைக்கும் இருப்போம்...இன்னிக்கு நடந்த நடவடிக்கை தான் நாளைக்கும் தொடரும்...இப்படி இருக்கையில் எது புதுசு?? எது பழசு?? ன்னு அவசியம் தெரிஞ்சிக்கணும்...

விஷயத்துக்கு வருவோம்...நாட்களையும்,காலத்தையும் எதை வெச்சு கணக்கிடுறோம்...கடிகாரம்,காலண்டர், இரவு,பகல் மாற்றம் - இதை வெச்சு தான் மொத்த உலகமும் காலத்தையும்,நேரத்தையும் கணக்கிடுறங்க..சரி அப்போ இந்த உலகத்துல constant ஆ இருக்க விஷயங்களை எடுத்து விட்டு பாப்போம்...கடிகாரத்தை எடுத்துவிட்டா நமக்கு நேரம் தெரியாது...அது போல சூரியனை எடுத்துவிட்டால் பொழுதுகள் தெரியாது...அந்த நிலையில் அனைத்து நேரமும் ஒரே மாதிரி தான் இருக்கும்...எப்பவும் இருட்டா இருந்தா எப்போ 12மணி எப்போ 6மணி ன்னு எப்படி கணக்கிட முடியும்...மொத்தத்தில பாத்தா நேரம் அப்டிங்குறது ஒரு மாயை...புவியில் உள்ள அனைத்து உயிருள்ள,உயிரற்ற பொருட்களின் செயல்பாடுகளை பிரபஞ்சத்தில் பதிவு செய்வதே நேரம் என மதிப்பிடப்படுகிறது...இதில் சுவாரஸ்யம் என்ன ன்னா நம் செயல்பாடுகளை பிரபஞ்சத்தில் பதிவுசெய்த பின் திரும்ப மாற்றங்கள் செய்ய இயலாது...

இப்போ நான் இதை எழுதுறதும், அதை நீங்க படிக்குறதும் கூட பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும் விஷயம் தான்...இதில் நம் தேவைக்கேற்ப மாற்றம் செய்ய முடியாது.
ஆனால், அவற்றை திருப்பி பாக்கலாம்..எப்படி ன்னா பிரபஞ்சத்தில் கலந்துள்ள தகவல்களை பிரபஞ்சத்தில் கலந்துள்ள ஒரு உயிராற்றல் மூலமா(பிரபஞ்சத்தில் கருப்போடு கருப்பா கலந்தவங்க)..அது தான் இறந்தவர்களின் ஆன்மா க்கள்..குறிசொல்லும்போது கூட நாம் செஞ்ச தவறுகளை சுட்டிக்காட்டுவாங்க ல அது போல தான்.வெத்தலை ல மை போட்டுபாக்கும் மாயமும் இதுவே..

பூமியை பொறுத்தளவுல ஒவ்வொரு நொடியும் புதுசு தான்...நீங்க சும்மா இருந்தாலும் சரி இயக்கத்தில் இருந்தாலும் செரி -அனைத்தும் இப்பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும்(காலம் மட்டும் யாருக்காகவும் நிக்காது).
காலங்களையும் நேரங்களையும் கட்டுப்படுத்தும் பல கடவுள்கள் பல சமயங்கள்ல இருக்காங்க..ஜோதிடவியல் அடிப்படையில் பார்த்தால் கூட கோள்களின் இயக்கங்கள் கூட பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும் ஒன்னு தான். கோள்களும் ஓரிடத்தில் நிற்பதில்லை அவற்றின் சுற்றியக்கமும் பதிவு செய்ய்யப்பட்டே வரும்..சில கிரக செயல்பாடுகள் கூட பல வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் ன்னு தான் சொல்றாங்க..ஒருபோதும் புதுசா நடக்குது ன்னு சொல்ல மாட்டாங்க ஏனென்றால் இங்க எல்லாமே புதுசு தான் எல்லாமே பழசு தான்..

இப்போ மணி 11.59.59 secs ன்னு வெச்சிக்குவோம்..அடுத்து வர்ர நொடி புதுசு ன்னு சொல்றதுக்குள்ள பழசாகிடும்... எல்லாமே மில்லி மைக்ரோ நொடிகள் ல நடக்குது...இந்த புதுசுக்கும் பழசுக்கும்  இடைப்பட்ட மணித்துளிகள் தான் முக்கியமானவை..அது தான்  0° - zero degree..
ஆக மொத்தத்தில காலத்தையும்,நேரத்தையும் நிர்ணயிக்கவோ,கட்டுப்படுத்தவோ சாமானியனால் முடியாது.. அதுக்கும் வேற tricks இருக்கும்..

Time and Memories
நம் வாழ்க்கையில் நினைவுகள் மிக அற்புதமானது..பிரபஞ்சத்தில் வாழும் ஜீவராசிகளுக்கு கிடைத்த அருமையான வரம்..இது இறந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் (memories)...அதே மனிதர்கள் அதே இடம் என்றாலும் அந்த நினைவை மட்டும் நம்மால் மீளுருவாக்கம் செய்ய முடியாது....

காரணம்? காலம்(நேரம்) Time...
பிரபஞ்சத்தில் மனிதன் காலத்தின் மீது பயணிப்பதன் விளைவாக தான் நினைவுகளும் அதை நினைத்து பார்க்கவும் முடிகிறது...நினைவு மட்டுமன்றி இன்னும் பல விடயங்களை காலம் தான் தன்னுள் அடக்கி கொண்டுள்ளது..காலத்தை மட்டும் நீக்கிவிட்டால் நினைவுகள் மட்டுமன்றி எந்த ஒரு இயக்கமும் இருக்காது...
சந்தோஷ பட்டுக்கோங்க..காலத்தின் மீது பயணிப்பதால் தான் நினைவுகளை நினைத்து பார்த்து சந்தோசப்படவும்/வேதனைப்படவும் முடிகிறது...

நேற்று போல் இன்று இல்லை;
இன்று போல் நாளை இல்லை 
காரணம் - Time

மேலும் காலம் என்பது ஒளியை போல் நேர்கோட்டில் பயணிக்க கூடியது...அது மட்டும் நேர்கோடல்லாமல் எங்கும் பரவி பயணித்தால் நேற்று இன்று நாளை லாம் இருக்காது...எல்லாமே குழம்பி விடும்.


Present Illusion

நிகழ்வு - நிகழ்காலம் இது இருப்பதிலேயே மிகவும் குழப்பமான நுணுக்கமான மாய தோற்றம்..முழுவதும் கண்ணாடியால் ஆன பல அறைகள் உள்ள ஒரு கட்டிடத்தின் உள் நுழைந்தால் எந்தளவுக்கு நம் கண்கள் விழித்திருக்கும்போதே மறைக்கப்படுமோ அதே போல இந்த நிகழ்காலம் எனும் மாய பிம்பம்..நாம் காலத்தில் தான் பயணிக்குறோம் ன்னு சொல்றாங்க உண்மைய சொல்ல போனால் நாம ஒரு சுழலில் மட்டிக்கிட்டு தவிக்கிறோம் கடந்தகாலம், நிகழ்காலம்,எதிர்காலம் என்னும் சுழல்...இதில் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை சுட்டி காட்டலாம் ஆனால் ஒரு போதும் நாம் நிகழ்காலத்தில் இருப்பதை உணர முடியாது..இப்போ நீங்க present ல இருக்கீங்க ன்னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே அது இறந்தகாலமாகிடும் எல்லாம் நுண்ணிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துட்டு இருக்கு...காலம் நேரம் மட்டுமல்ல அனைத்து இயக்கங்களும் மிக மிக நுண்ணிய மனித புலனுக்கு எட்டாத வகையில் நடக்குது...போன நொடி வரை உயிரோட இருந்த மனுஷன் இந்த நொடி மரணிக்கிறான்...இந்த கால நகர்வு தான் எல்லாவற்றையும் தீர்மானிக்குது காலமும் இயக்கமும் ரெட்டை குழந்தைகள் ஒன்றை ஒன்று பிரியாது...உனக்கு நேரம் சரியில்ல time சரியில்ல ன்னு சொல்றது லாம் இதன் விரிவாக்கம் தான் கால சுழற்சியில் இயக்கங்கள் மாறி மாறி நிகழும் அது சாமானியனுக்கு  சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம்...இந்த காலச்சக்கரத்தில் நாம ஒரு துகள் போல இஷ்டம் போல சுழலுவோம் இயக்கம் போல நகருவோம்...எது நிழல் எது நிஜம் ன்னு கணிக்க முடியாத ஒரு நிலை நிகழ்கலாம்...

Sunday 29 December 2019

ஆற்றல்-Energy

Energy_ஆற்றல் (Part-1)
சிவம் - 'சி' மேல இருக்க சுழிக் கொம்பை நீக்கினால் சவம் ன்னு வரும்...மேலே சுழித்து விடப்படும் சுழிக்கொம்பு காற்றின் அலை வடிவத்தை ( ~ ) குறிக்குது.அப்போ,காற்று (oxygen) உள்ளிருக்கும் வரைதான் "சிவம்"...அலைவடிவ காற்று வெளியேறிய பின் "சவம்" ஆகிறது...இதைப்பொருத்து அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது...அது தான் சிவம்...புவியை பொறுத்தளவில் இங்குள்ள சவங்களை(பூத உடல்களை)..வளி எனப்படும் இயக்க ஆற்றலின் மூலம் சிவமாக(உயிருள்ள உடலாக) வைத்துள்ளது...

சரி வளி ஆற்றலால் உடல் இயங்குது எனில் எப்படி இயங்குது~??..சரி ஆற்றல் ன்னா என்ன~??...அந்த ஆற்றல் தான் நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் இயக்குதா...
ஆற்றல் - இங்க எல்லாத்துக்கும் ஆற்றல் தேவை,அதுதான் இயங்குசக்தி....
சிவம் இயங்க தேவையான ஆற்றலை(வளி மண்டலம்) கொடுக்கும் மூலம் எது...
(வளி என்பது இங்க அடிப்படை இயங்கு ஆற்றல்)

ஆன்மா சுழற்சி (part-2)

ஆன்மா சுழற்சி
part-2

சொர்க்கம்,நரகம் இல்ல ன்னா நமக்கான நன்மை,தீமை கணக்கு எங்க தீர்க்கப்படும்....கண்டிப்பா அது இந்த பூமியிலே தான் தீர்க்கப்படும்...உதாரணத்துக்கு ஒருத்தர் இறந்த பிறகு அவருடைய நன்மையும்,தீமையும் அவருக்கு ஈம சடங்கு செஞ்ச வாரிசுகளுக்கு போகும்...அதுலயும் யாரு மொட்டை அடிச்சு காரியம் பண்ணுறங்களோ அவங்களுக்கு தாக்கம் அதிகமா இருக்கும்...காரணம் மொட்ட அடிச்சு தனது உடலுக்குள் இறந்தவங்க உயிராற்றலை இறக்கி கொள்வாங்க....இது எங்கேயோ படிச்சது...முடியை மழித்து உச்சந்தலை வழியே தன் இறந்த முன்னோரின் ஜீவ ஆற்றலை வாங்கி கொள்வாங்க...அதன் பின் இறந்தவங்க நல்லவராக இருப்பின் நன்மை கிட்டும்... தீயவராக இருப்பின் கர்மாவின் அடிப்படையில் அவருக்கான நியாய கணக்கு அவரின் சந்ததிக்கு தொடரும்...இறந்தவரின் சந்ததிகள் பூத உடலோடு பூமியில் அனுபவிக்கும் கஷ்ட, நஷ்டங்களை கண்டு சுத்த வெளியில் கருப்போடு கருப்பாய் கலந்திருக்கும் அவரின்  ஆன்மா வருத்தம் கொள்ளும்...

(இப்போ நீங்க கேட்கலாம் அப்பன் தப்பு செஞ்சத்துக்கு அவன் புள்ளைய ஏன் தண்டிக்கணும் ன்னு...அப்பன் சேத்து வெச்ச சொத்து,பேர்,புகழ் மட்டும் மகனுக்கும் சேரும் ஆனால் பாவ புண்ணியங்கள் மட்டும் சேராதோ)

அப்பன் செஞ்ச பாவம் புள்ளைய விடாது - இந்த வழக்கு இன்னும் தமிழ்நாட்டுல இருக்கு.

இதே நல்லவங்களா இருப்பின் அவங்க கர்மா அவங்க சந்ததிக்கு நன்மையா அமையும்...இதனால் அவங்க இறப்பிற்கு பின்னும் கஷ்ட பட தேவையில்லை...

ஆகவே,சொர்க்கம் நரகம் லாம் கிடையாது வாழும்போது ஒழுக்க நெறியோடு வாழ்ந்தால்.. நமக்கு பின்னர் வரும் சந்ததியினர் நல்லா இருப்பாங்க அவ்ளோ தான் நான் சொல்ல வந்தது...

உதாரணத்துக்கு கல்யாணமான ஒருத்தன் குடிச்சிட்டு ஊதாரிய சுத்திட்டு செல்வங்களை அளிச்சு தீய வழியில் செத்து போறான்...இப்போ அவன் சந்ததி என்னாகும்...வருமையினால் நடுத்தெருவுக்கு வரும் இப்போ சொல்லுங்க அப்பன் தப்பா இருந்தா மகன் நல்லவனா இருந்தாலும் பாதிப்பு உண்டு தானே...

சரி மொத்தமா இப்போவே முடிச்சிகலாம்...

இறந்த உயிர்கள் மீண்டும் மனிதனோட தொடர்புகொள்ள நினைக்கும்...அது உன் முன்னோரா இருந்தா அது தான் குல தெய்வம் ன்னு சொல்லுவோம்(இறந்த எல்லாரும் குல தெய்வமாக ஆக முடியாது)...வேற யாரோ தீய எண்ணங்களுடன் இறந்திருந்தால் அவங்க தான்பா பேய் பிசாசு ன்னு சொல்றது...
தீராத கோபத்தோடு இறந்தவங்க இறந்த பின்பும் அடுத்தவர்களை துன்புறுத்த நினைப்பவங்க...

நல்லவங்களா கெட்டவங்களோ அவங்க நம்ம கூட தொடர்பு கொள்ள பயன்படுத்தும் கருவி தான் ரத்தம்....முன்னோர் வழிபாட்டில் நம்மலே பலி கொடுத்து அவங்களை அழைச்சு நமக்கு தேவையான கால சூழல்களை (குறி கேட்டல்&அருள்வாக்கு) கேட்டு பிடித்த பண்டங்களை படையலிட்டு அனுப்புவோம்...கெட்டவங்களா இருந்தா ரத்தம் உள்ள இடங்களில் அதுவே வந்து காத்து கிடக்கும் அதற்கான உடல் கிடைத்ததும் உள்ளே இறங்கி ஆட்டுவிக்கும் இது தான் பேயாட்டம்...

சரி கரிக்கடை பாய் க்கு ஏன் பேய் பிடிக்கல ன்னு கேட்கலாம்... இறந்த ஆன்மாக்களால் எல்லா இடத்துக்கும் வர முடியாது இடுகாடு ன்னு சொல்லப்படும் இடம்...சில முச்சந்தி...சில களத்துமேடு,கண்மாய் ஓரம்,சில பனைமரத்தில் கூட தங்கிடும் (பனைமரத்தில் பேயும் இருக்கும் & முனியும் இருக்கும்)  இதுக்கு தான் கறி வாங்க போகும்போது கரிக்கட்டை, மிளகாய் கொண்டு போறோம்...

சரி நம்ம முன்னோர் நினைவலை வழிபாட்டுக்கு வருவோம்...

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு -நம்பித்தான் ஆகணும். இல்லாத, நீ பாக்காத சொர்க்க,நரகத்த நம்பும்போது உனக்கு முன்னாடி வாழ்ந்த உன் முன்னோரை நம்ப மாட்டியா....

ஏன் போன தலைமுறைக்கு முன்னாடி நெறியுடன் வாழ்ந்து இறந்த ஒரு மூதாட்டிய ( எங்க அப்பாவோட பாட்டி) தெய்வமா வணங்கி  வர்றாங்க...எல்லோராலும் அவங்கவங்க முன்னோரை தொடர்பு கொண்டு நெறியோட வாழலாம்...அவர்களின் நினைவலைகள் நம்மை வழிநடத்தும்... உங்களுக்கு தேவையான அருள்வாக்குகளை கேட்டு பெறலாம்.இது எல்லாருக்கும் சாத்தியமே...


Friday 27 December 2019

ஆன்மா சுழற்சி (Part-1)

Heaven and Hell (part-1)
ஆன்மா சுழற்சி

சொர்க்கம் & நரகம் -- உலகின் பல சமயங்களும்,மதங்களும் போதித்து மக்களை பயத்தில் ஆழ்த்தி கட்டுப்படுத்தி வருகிறது...உதாரணமாக கிறிஸ்துவத்தில்,இஸ்லாமில் ஏதோ மைதானத்தில் வைத்து கேள்வி கேப்பாங்க ன்னு சொல்லுவாங்க,இந்து மதத்துல கருட புராண எண்ணெய் சட்டி, மற்றும் பல சமயங்கள் இதை போதிக்குது...சரி சொர்க்கம்,நகரத்துக்கு முன்னாடி ஒருவர் இறந்த பின்னாடி என்ன நடக்கும் ன்னு பாப்போம்(இதை பத்தி நெறய பேர் சொல்லிருக்காங்க - இருந்தாலும் என் கருத்து கொஞ்சம் மாறுபட்டது)...பூத உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னர் அந்த ஆன்மா (உயிராற்றல்) கருப்பாக மாறி சுத்தவெளியை அடைகிறது(Outer Space)...இதை எளிதில் அறியலாம் யாராவது இறந்தா மேல போய்ட்டாங்க ன்னு தான சொல்றோம்...சரி சுத்தவெளியை அடையும் ஆன்மா பிரபஞ்சத்தோட கலந்திடும்...
இதுவரைக்கும் இருக்கட்டும், இறந்த (உடலை விட்டு பிரிந்த ) ஆன்மாவுக்கு புலன் உணர்வுகள் இருக்காது...ஆனால் ஆசைகள் இருக்கும்... அதன் ஆசையை தீர்த்துக்கொள்ள வேற உடலை நாடும் போது தான் பேய் பிடிக்குது ன்னு சொல்றாங்க...இதுவே நல்ல ஆன்மாவாக இருப்பின்...அதன் சந்ததிகளை காக்கும் பொருட்டு...அதன் வாரிசுகளை காக்க தொடங்கும்...இதுபடி பார்த்தால் சொர்க்கம் நரகம் ன்னு ஒரு ஊரு இல்ல...அங்க யாரும் கொடுமைகளை அனுபவிக்கல...சொர்க்கத்தில யாரும் சந்தோஷமா இல்ல...சொல்ல போனால் அப்டி ஒன்னு இல்லவே இல்ல...மக்கள் தீங்கிழைக்காமல் நெறியோட வாழ தான் அப்படி சொல்லபட்டுச்சு...ஆனால் இங்கே அதை வெச்சு பயமுறுத்திட்டு சுத்துறாங்க...

இது ஒரு சுழற்சி,இங்க நீயும் நானும் தனிப்பட்ட ஆள் இல்ல,உன் முன்னோர்களின் ஒட்டுமொத்த வடிவம் தான் நீ,நாளைக்கு உன் சந்ததிகளிலும் நீ இருப்ப...

Wednesday 18 December 2019

Behind the Wings


Behind the Wings

பொதுவாக தேவதைகளும் தேவ தூதர்களும் வெள்ளை நிறத்திலும், பசி,பிணி,ஆசை,கோவம் ஆகியவை உணர்ச்சிகள் இல்லாதவர்களாகவும்...மேலும் பெரிய இறக்கைகளுடன் இருப்பார்கள் ன்னு அனைத்து மதங்களின் புராண இதிகாசங்கள் கூறுகிறது...இதனடிப்படையில் ஒரு மனிதன் இத்தனை உணர்வுகளை வென்றால் தான் இறை நிலையை அடைய முடியும் என்பது தெளிவாகிறது...அப்படி பார்க்கையில் இத்தனை  உணர்வுகளை அடக்குவது சுரப்பிகளின் கட்டுப்பாட்டல் தான்...உதாரணமாக ஒருவர் கருவில் இருக்கும்போது உயிராற்றல் பீனியல் சுரப்பிலும்,பிறப்பின் பின்னர் அடிப்படை கற்றலுக்காக pituitary சுரப்பிலும் அடுத்ததாக பதின் பருவ  உடல் வளர்ச்சிக்காக தைராய்டு,தைமஸ் மற்றும் கணையம்...இறுதியில் பால் சுரப்பிகள் விந்தகம்,அண்டகம்...இவை அனைத்தையும் கடந்து தேவ நிலையை அடைய பீனியல் சுரப்பியால் மட்டுமே இயலும்....இதை தான் முக்தி அடையுறது ன்னு சொல்றாங்க(hinduism),
சர்ச் ல நெத்தியில் போடும் சிலுவை குறி (cristianity),இன்னும் சமணம்,பௌத்த மாதங்களுக்கு சொல்லவே வேணாம்...இஸ்லாமில் கூட தொழுகை அச்சு(islam)...சரி விஷயத்துக்கு வருவோம்... Sphenoid bone ங்குற எலும்பு தான் இங்க இறக்கைகளாக சொல்றாங்க இதன் நடுவில் அமைந்துள்ள பீனியல் சுரப்பி தான் தேவ தூதர்,Angels ன்னு சொல்றாங்க...இப்படி பார்க்கையில் இந்த இறக்கை வைத்த அசாத்திய உருவங்கள் உலகின் பல கலாச்சாரங்களில் இருந்துள்ளது...நீதி தேவதையாக,தீயவரை அழிக்கும் கடவுளாக,காக்கும் கடவுளாக,கடவுளரின் வாகனமாக,மன்னர்களாக,நற்செய்தி போதிக்கும் தூதராக என பல அடையாளங்களில் உலாவி வந்தது...அடுத்தகட்டமாக அந்த தேவ தூத இறக்கைகள் தான் மருத்துவ உலகையே ஆளுகிறது...மருத்துவத்தின் தந்தை Hippocrates கிரேக்க ஞானி தான் இறக்கைகளுக்கு நடுவில் உள்ள பாம்பு சின்னத்தை அறிமுகம் செய்தார்... அந்த பாம்பு தான் மனித உடல்,அதிலுள்ள வளைவுகள் சுரப்பிகள் எனும் சர்க்கரத்தை(human chakkra) குறிக்கும்....இப்பொழுது புரிகிறதா  மருத்துவம் அடிப்படையில் எவ்வளவு வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது...இதன் வழி வந்ததே ஆங்கில மருத்துவம்....இன்றும் இறக்கைகள் கொண்ட தேவதைகள் உலகை ஆள்வதை ஆங்கில மருத்துவமும்...இறக்கைகளுடன் உள்ள பாம்பு சின்னமும் உணர்த்துகிறது...

Isis - egypt
Michael - christianity
Garuda/vishnu - Hinduism
Corporeal angels - islam
Astraia - Greek