Friday 27 November 2020

Dream and Decryption

Dream and Decryption

Decryption or Decoding - மறைமுகமாக நமக்கு தேவையான ஒரு விஷயத்தை நமக்கு தேவையற்ற அல்லது புரியாத ஒரு விஷயத்தின் மூலம் நமக்கு கடத்துவது...இது கண்டிப்பாக புரியவேண்டியவர்களுக்கு மட்டும் புரியும் வகையில் இருக்கும்..ஏனென்றால் அவர்களால் மட்டுமே இதை கணிக்க இயலும்,சில நேரங்களில் அவர்களால் கூட கணிக்க முடியாமல் மர்மமாகவே போகலாம்...decryption நுட்பமானது மறையியலில் பெரும்பங்கு வகிக்கிறது...இது கனவுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது...சிலர் கனவுகளுக்கு விளக்கம் தேடி செல்வதை பாத்திருப்போம்..எல்லாம் இதன் விளைவால் தான்..இன்னும் கிராம புறங்களில் ஒவ்வொரு விதமான கனவுகளுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்களை வைத்திருப்பர்..அது முற்றிலும் அந்த கனவுக்கு தொடர்பு இல்லாத மாதிரியே இருக்கும்...இந்த கனவுகள் பல காரணங்களால் தோன்றுகிறது இதில் ஒன்று தான் உடல்-மன ஒன்றிப்பால் ஏற்படுவது...உடலில் ஏற்படும் வினைகளுக்கு ஏற்றார் போல் கனவுகள் நிகழ்வது... இதற்கு ஒரு உதாரணம் சொல்றேன் இது எனக்கு நடந்த ஒரு கனவு " இருட்டான வீட்டுக்குள்ள அரை தூக்கத்தில் நடந்துட்டு இருக்கேன் அதுவும் எங்க வீட்டுக்குள்ள தான்...சரியான தாகம் தொண்டை வறண்டு வயிறு எரியும் அளவுக்கு தாகம்,தடுமாறி போய் refrigerator அ திறந்து உள்ள இருந்து பெரிய cool drinks பாட்டிலை எடுத்து குடிக்கிறேன் நான் குடிக்க குடிக்க அதிலுள்ள ஜூஸ் பாட்டிலின் மேல்புறத்தில மிதக்குது நானும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் குடிக்க முடியல திரும்பி பார்த்த tining table ல ஒரு இளநீர் இருந்துச்சு அதை எடுத்துட்டு அவசரமா வெளிய ஓடுறேன் வெளிய போய் உக்காந்து அந்த இளநீரை மேலே சீவுறேன் இளநீர் கீழ்ப்பக்கம் தானாகவே ஓட்டை விழுந்து தண்ணீர் கீழே கொட்டிடுச்சு " - பதறிப்போய் முழிச்சிகிட்டேன் கனவில் ஏற்பட்ட அதே வயிறு எரிச்சல்,தீராத தாகம் மற்றும் தொண்டை வறட்சி ஓடி போய் தண்ணீர் குடிச்சு நிதானத்துக்கு வந்ததுக்கு அப்றம் தான் தெரியுது அது கனவு ன்னு...இரவு சிக்கன் ரைஸ் சாப்டுட்டு தண்ணீர் குடிக்காமலே தூங்குனதால ஏற்பட்ட விளைவு தான் இந்த தாகம்...இந்த தாகம் என்னும் உடல் இயக்கத்தை என் மூளை அதுக்கு தெரிஞ்ச வகையில எனக்கு உணர்த்த முயற்சி பண்ணிருக்கு (cooldrinks, இளநீர்)....இதே போல தான் நம்ம ஆழ்மனது உணரக்கூடிய விடயங்களை கனவுகள் மூலமாக நமது மூளை நமக்கு உணர்த்த முயலும் ஆனால் சரியான விளக்கம் கொடுக்க முடியாமல் தேவையற்ற மெய்நிகற்காட்சிகளை தோற்றுவித்து குழப்பம் அடைய செய்யும்...நமது மூளை ஒரு விஷயத்தை அப்படியே கடத்தாது - அதுக்கு தெரிஞ்ச வகையில் அதற்கு உண்டான காட்சிகளையும்,நிகழ்வுகளையும் மட்டுமே காட்டும்...ஒருவர் எதிரில் நிற்கும் மற்றொருவருக்கு வாயை திறக்காமல் சைகையிலே ஒரு விஷயத்தை உணர்த்தனும் ன்னா அவர் என்னென்ன செய்வாரோ அதே போல தான் இந்த மூளையும் கனவின் போது இயங்கும்....கனவின் மூலம் ஆன்மாக்கள் தொடர்புகொள்ளும் ன்னு ஏற்கனவே பாத்திருக்கோம்...அதுபோன்ற வெளிப்புறத்திலிருந்து பெறப்படும் தகவல்களும் இப்படி குழப்பமாக தான் இருக்கும் அதை decrypt செய்து அதற்கான அர்த்தத்தை அறிவது ரொம்ப கடினம்...அதே சமயம் சில கனவுகள் நாம எளிதில் decode பண்ணுகிற அளவுக்கு தான் இருக்கும் காரணம் அலைவரிசை ஒன்றிப்பு....நாய்களின் கண்ணுக்கு பேய் தெரியும் ன்னு சொல்றத போல தான்... சிலரால் மட்டுமே சில விஷங்களை மறைக்குள் இருந்து வெளிக்கொணர முடியும்....சிலருக்கு அது என்னவென்று தெரிய வந்தாலும் அதை தெரிந்து கொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார்கள் காரணம் அது தேவையற்ற நிகழ்வாக காட்சிப்படும்....கனவில் மட்டுமல்லாமல் மெய் வாழ்க்கையிலும் சில விஷயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன அதை decrypt செய்ய முயன்றாலும் முடியாது..காரணம் அதுவும் கொண்டவர்களை போய் சேரும் வகையிலே அமைந்திருக்கும்...நிலையில்லா பிரபஞ்ச நகர்வில் சில விடயங்கள் சரியாக கடத்தப்பட்டு கொண்டிருப்பது ஆச்சரியமூட்டும் ஒரு வேடிக்கை தான்

Sunday 22 November 2020

Time and Movement - காலமும் இயக்கமும்

Time and Movement - காலமும் இயக்கமும்
நேரம் முழுக்க முழுக்க இயக்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியது...இந்த இயக்கமானது எப்படி ஒவ்வொரு இடத்திலும் வேறுபடுகிறதோ அதே போல தான் நேரமும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு அமையும்..கிட்டத்தட்ட வானியல் ஜாதக கணிப்புகள் போல...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புகள்,திசை இயக்கங்கள் (இயக்கத்திற்கு திசை முக்கியமானது)...இப்போ எதார்த்த நிலையில் இதை பாப்போம் - 40 பேர் உள்ள ஒரு வகுப்பறையில் 1 மணிநேர வகுப்பு நடக்குது...இதில் இந்த ஒரு மணி நேரம் என்பது எல்லாருக்கும் பொதுவானது தான் ஆனால் அதை நமது மூளை ஏற்றுக்கொள்வதையும்,நமது முழு மனதின் பங்கேற்பும் தான் அவரவருக்கான நேர விரயத்தை தீர்மானிக்குது...அதாவது அந்த வகுப்பில் சிலருக்கு 1மணிநேரம் சீக்கிரமா கடந்த மாதிரி இருக்கலாம்,சிலருக்கு ரொம்ப நேரம் போன மாதிரி இருக்கும்,இன்னும் சிலருக்கு எப்ப டா முடியும் ங்குற அளவுக்கு இருக்கும்,சிலர் என்னடா இன்னிக்கு சீக்கிரம் முடிஞ்சது ன்னு நெனைப்பாங்க..நல்ல பரபரப்பா இயங்கிட்டு இருக்குற ஒரு தெரு முனையின் ஓரத்தில் நின்னு அங்கு நடக்கும் மனிதர்களின் நடமாட்டத்தை கவனிச்சோம் ன்னா ஒவ்வொருவருக்கும் இடையேயான தனித்தன்மை இயக்கத்தை பார்க்கலாம்..வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு வேலைகளை செஞ்சிட்டு இருப்பாங்க...குறிப்பிட்ட ஒரு காலம் அங்குள்ள அனைவருக்கும் வெவ்வேறு சுய அளவைகளில் நிகழும்..உதாரணத்துக்கு சில கஷ்டமான,சோகமான காலகட்டத்தில் நேரம் சீக்கிரம் போகவே போகாது...சில சந்தோஷமான காலத்தில் நேரம் டக்குனு போயிடும்...நாமலும் நமது மனதும் எந்தளவுக்கு ஒரு நிகழ்வை அனுபவிக்குது என்பதை பொறுத்து தான் இங்கு காலம் தீர்மானிக்கபடுது...(எனக்கு கூட சமீபத்தில் பிடிக்காத ஒரு வேலையை செய்யும்போது நேரம் போகவே இல்லை நானும் எவ்வளவு நேரம் கடத்தி கடத்தி பார்த்தும் நகரவே இல்லை ஒரு நிமிடம் ஒரு நாள் போல கடந்தது அந்த நேரத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் என் மனதில் ஆழப்பதிந்தது..அதே வேலையை அதே இடத்தில் இன்னொருமுறை தொடர்ந்தேன் ஆனால் அப்போ எனக்கு பிடிச்சு அதை செஞ்சேன் அந்த சமயம் எனக்கு நேரம் போதுமானதாக இல்லை அந்தளவுக்கு காலம் வேகமா நகர்ந்திடுச்சு...

ஒரு மனிதன் ஒரு 10அடி நகர்வதற்கு சில வினாடிகள் ஆகும்,அதே ஒரு எறும்பு கடக்குறதுக்கு நிமிடங்கள் ஆகும்,அதே ஒரு முயல் கடக்குறதுக்கு மனிதனை விட குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும்...இவை முழுக்க முழுக்க இயக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு எடுத்துக்காட்டு ஆனால் இதை உற்றுநோக்கும் போது மனதளவில் ஒவ்வொரு உயிரினமும் எந்தளவுக்கு அந்த நிகழ்வை அனுபவித்துள்ளதோ அதனை பொறுத்தே காலம் தீர்மானிக்கப்படும்....கடிகாரமே இல்லாத உலகத்தில் இது எளிதாக விளங்கும்...

Sunday 18 October 2020

Radioaction of Crystals and Compounds - படிகங்கள் மற்றும் சேர்மங்களின் கதிரியக்க செயல்பாடு

Radioaction Of Crystals and Compounds - படிகங்கள் மற்றும் சேர்மங்களின் கதிரியக்க செயல்பாடு

இந்த பிரபஞ்சம் முழுதும் கனிமகூட்டு பொருட்களால் ஆனது ன்னு தெரியும்...இருப்பதும் ஒன்னு,ஈர்ப்பதும் ஒன்னு,உண்பதும் ஒன்னு ன்னு எல்லாமே இங்குள்ள பொருட்களின் கூட்டு சேர்மானம் தான்...அவை தான் சேர்மங்கள் (compounds)..இந்த சேர்மங்கள் பல வடிவங்களில் இருக்கு உலோகமாக,அலோகமாக, படிகமாக,தனிமமாக அறியப்படுது..பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தனிமங்களும் தனித்தன்மை வாய்ந்தவை, இவை அதிர்வுகளையும், ஆற்றல்களையும் உமிழும் தன்மை மற்றும் ஈர்க்கும் தன்மை கொண்டவை..மேலும் குறிப்பிட்ட தனிமங்களின் கூட்டு சேர்மானங்கள் உருவாக்கும் கட்புலானாக கதிர்வீச்சுகள் மனிதன் மற்றும் பிற உயிர்களின் உடல் மற்றும் மன ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை...இதற்கு உதாரணமாக ராசி கற்களை(Gems) எடுத்துக்கலாம் இது எந்தளவுக்கு நல்ல அதிர்வுகளையும் ஆற்றல்களையும் மனிதன் கிட்ட ஈர்க்குது ன்னா வசதியான சிலர் கைகளில் அணிந்திருக்கும் கற்களை வெச்சு தெரிஞ்சிக்கலாம்... இதை உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்துறாங்க..எல்லாம் இதிலிருந்து வெளிப்படும் கத்திவீச்சின் செயல்பாடு தான்..இந்த சேர்மானங்கள் சில அதிர்வுகளையும் ஆற்றல்களையும் ஈர்க்கவும் செய்யுது இதற்கு எளிமையான உதாரணம் உப்பு வீட்டில் குழந்தைகளுக்கு கண்ணூரு கழிப்பதற்கு உப்பை வைத்து அவர்களை சுற்றி அவர்மீது செறிந்திருக்கும் தீய அதிர்வுகளை ஈர்த்து பின்னர் அந்த உப்பை எறிச்சிடுவாங்க.. இதே நுட்பம் தான் புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் உப்பு,மஞ்சள் கொடுக்கும் நிகழ்விலும் நடக்குது...உப்பில் நல்ல எண்ண அதிர்வுகளை விதைத்து அதை பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதன் பலன் தெரிஞ்சிக்கலாம்...இதே தான் படிகார கல்லுக்கும்..படிக கற்கள்,உப்பு போன்றவை ஈர்க்கவும் அதிர்வுகளை உமிழவும் பயன்படுகின்றன...சில வகை தனிமங்கள் உருவாக்கும் கதிர்வீச்சு மனித மூளையையும் உடலையும் பாதிக்க கூடியது..
துருதிஷ்ட வசமா இதையும் நவீன அறிவியல் ரீதியாக நிரூபிக்குற வரைக்கும் இதெல்லாம் pseudoscience ன்னு தான் சொல்லுவாங்க..
பூமிக்கு பல அடி ஆழத்தில் பல தனிமங்கள் செரிந்துள்ளன இவை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு மேற்பரப்பில் வாழும் மக்களை பாதிக்கும் அளவுக்கு வலிமை கொண்டதாம்..இதன் விளைவாக தான் சில இடங்களில் தொடர் விபத்துகள் நேரிடுவதாகவும் சொல்லப்படுது.. காரணம் பூமிக்கு அடியில் உள்ள தனிமங்களின் கதிர்வீச்சு..இது தான் வீட்டு வாஸ்துவிலும் மறைமுகமா சொல்லப்படுது..அது போக தனிமங்களால் ஆன பொருட்களை ஆபரணமாக அணிவது,சமையலுக்கு பயன்படுத்துவது ன்னு எல்லாமே உடலுக்கு நன்மை பயக்கும் செயல்பாடாக தான் இருக்கு...அதே சமயம் இந்த தனிம மற்றும் படிக சேர்மானங்கள் பல அசாத்தியமான ஆபத்துகளையும் உருவாக்க வல்லது (programme செய்யப்பட்ட மாந்திரீக தகடு)...அதிசக்தி வாய்ந்த படிக கற்கள்(Gem stones) பழங்காலம்தொட்டே இந்த கற்களின் மீதான நம்பிக்கையும் தேடலும் நடந்துட்டு தான் இருக்கு இந்தவகை அற்புத கற்கள் பல அதிசயங்கள் செய்வதாகவும் சொல்லப்படுது அது உண்மையும் கூட இதற்கு உதாரணமா உப்பை பயன்படுத்தி செய்யும் தியானத்தை எடுத்துக்கலாம்...அதுபோக இந்த கற்களின் கதிர்வீச்சை பயன்படுத்தி அசாத்திய செயல்கள் பல செய்வதற்காக இன்றளவும் பலர் கற்களை தேடி நகர்ந்துட்டு தான் இருக்காங்க..நாகரத்தின கற்களின் தேடுதலும் இதன் நீட்சி தான்.. Avengers படத்துல Thanos கதாபாத்திரம் கையில் கூட கற்கள் காட்டப்படும் வித விதமான கற்கள்..இந்த கற்கள் உலகையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு ஆற்றல் மிகுந்தது...சாதாரண சோடியம் குளோரைடு NaCl - ரசவாத சேர்மானம் மனித உணவில் சுவை எனும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கு அது இயற்கை அதே சமயம் பேராசை கொண்ட மனித மூளையால் அதிக சுவைக்கு உருவாக்கப்பட்ட மோனோசோடியம் குளுட்டாமேட்(Monosodium Glutamate) மனித உயிரை கொள்ளும் அளவுக்கு தீங்கானது...இதன் அடிப்படையில் தான் அத்தனை மருந்து சேர்மங்களும்,பயன்பாட்டு உலோகமும்...இந்த கலவைகளின் பேராற்றல் இன்னமும் மனிதன் அறியாவண்ணம் உள்ளது நன்மை தான்...பலவகை கற்கள் பலவகை கதிர்வீச்சுகள் மனிதனின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தும் காரணியாக மாறிவிடும்...

Thursday 15 October 2020

Resonance of Convergence - அதிர்வுகளூடே ஒத்திசைதல்

Resonance of Convergence - அதிர்வுகளூடே ஒத்திசைதல்
ஒத்திசைவு - குறிப்பிட்ட ஒரு அலைவரிசையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடனோ தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும்,அதன் வாயிலாக தேக மற்றும் ஆன்ம தேவைகளுக்காக செய்யும் பயிற்சி போன்றதே இந்த ஒத்திசைவு...இதை பல இடங்களில் இன்னமும் உலகின் பல மூத்த மதங்களும்,இனங்களும் பின்பற்றிக்கொண்டு தான் உள்ளார்கள்..இத தான் எளிமையா விரதம்/நோன்பு ன்னு தமக்கு ஏற்ற மாதிரி வித்தியாசமான பெயர்களில்சொல்லிட்டு வராங்க...பிரபஞ்சத்தின் எந்த ஒரு நிகழ்வுக்கும் காலம் மற்றும் இயக்கம் தான் மூலமே இந்த குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்காக குறிப்பிட்ட காலம் தனது உடல் மற்றும் ஆன்மாவை இயக்கத்திற்கு தூண்டும் செயலே இந்த ஒத்திசைவு...நோன்பு என்றாலே இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தான் ஞாபகத்துக்கு வரும் காரணம் எச்சிலை கூட விழுங்காமல் ஒரு மாதம் கடக்கும் கடும் நோன்பு..ஆனால்,இது மட்டும் அல்ல அந்த நோன்பு நோன்பு காலங்களில் நல்லதை பேசணும்,அன்பு செய்யணும்,இறைவனை நோக்கிய சிந்தனை இருக்கணும்,பிறருக்கு உதவனும் ன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு...இதன்படி பார்த்தால் நோன்பு காலங்களில் நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு அதிர்வும் நம்மை இறையின் வழியில் ஈர்க்கும்..நோன்புகள் வெறுமென உண்ணாநிலையை மட்டும் உணர்த்தாமல் நல்ல அதிர்வுகளை உருவாக்கும் ஒரு காலகட்டமாகவும் அமைகிறது...இதையே தான் கிருஸ்தவத்திலும் பின்பற்றபடுது உண்ணாமல் இருப்பதோடு இறை மீதான பற்றை வெளிப்படுத்தும் சிந்தனைகளை மட்டுமே தோற்றுவிக்கும் எண்ணங்கள் அது சார்ந்த அதிர்வுகளை உருவாக்கும் வல்லமை கொண்டது..அடுத்ததா இந்து மதத்திலும் சொல்லவே வேணாம் இப்படி விரதங்கள் வெறும் உண்ணாமல் இருப்பதை மட்டும் நோக்கமாக கொண்டமைவதில்லை மாறாக தங்களது வேண்டுகோளுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேற்கொள்ளும் பயிற்சியை போன்றது உடலளவிலும் சரி மனதளவிலும் சரி...சரி அது எப்படி நோன்பு நோற்றல் உடல் அளவிலும் மனதளவிலும் ஆற்றலை தரும்?? இதுக்கு ஒரு உதாரணமா கிராமங்களில்  தீமிதித்தல்,தீச்சட்டி ஏந்துதல் ன்னு இருக்கும் சில சடங்குகளை எடுத்துக்கொள்வோம்..சாதாரண நாட்களில் இந்த மாதிரியான நெருப்போடு விளையாடும் விளையாட்டை யாரும் செய்திட முடியாது...முறையாக குறிப்பிட்ட நாட்கள் நோன்பு நோற்று அந்த காலத்தில் தமக்கு தேவையான உடல் & மன வலிமையை மேம்படுத்தி தனது உடலையும் ஆன்மாவையும் மேம்பட்ட ஒரு ஆற்றலாக உருவெடுக்க செய்யும் வழிமுறை தான் நோன்பு(விரதம்)..இது குலதெய்வ வழிபாட்டிலும் முக்கிய பங்காற்றுகிறது குறிப்பிட்ட முன்னோரை வணங்கும் சந்ததியினர் அந்த திருவிழாவிற்கு பல நாட்கள் முன்பிருந்தே விரதம் மேற்கொள்வார்கள் இந்த நோன்பு காலங்களில் வெளியில் எங்கும் நீர் அருந்த மாட்டார்கள் காரணம் ஒவ்வொருவரின் மண அதிர்வலைகளின் வெளிப்பாடு கண்டிப்பாக அவர் பயன்படுத்தும் நீரில் கலந்திருக்கும் இப்படி ஒரு குறிப்பிட்ட முன்னோரை வழிபட இருக்கும் மக்கள் பிற வீட்டாரின் நீரை பகிர்ந்துகொண்டால் அது அவரது எண்ணங்களை பாதிக்கும்...மேலும் முறையாக நோன்பு நோற்று தனது முன்னோர்களை எண்ணி தனது மரபணுவில் கலந்துள்ள கூறுகளை வெளிக்கொணர சில நெறிமுறைகளையும் கொண்டுள்ளனர் ("7ம் அறிவு" படத்தில் சூர்யாவுக்கு அவரது முன்னோரின் மரபுகூறை வெளிக்கொணர சில நவீன நெறிமுறைகள் பின்பற்றப்படும்...இந்த படத்தில் கூட விரதம் இருப்பது போல் சில காலம் சில பயிற்சிகள் மேற்கொள்வார்கள்)..இப்படி மனிதனுக்கு சவாலான காரியங்களில் ஈடுபடும் முன் இவ்வாறு பல நெறிமுறைகள் பின்பற்றப்படுது அதை தான் விரதம்/நோன்பு ன்னு சொல்றோம்...உலகெங்கும் உள்ள பல மதத்தினரும் தீமிதித்தல் சடங்கை செய்யுறாங்க மஞ்சள் காமாலை க்கு சூடு போடுறதுக்கு பதிலா தான் இந்த சடங்கு ன்னும் சொல்லப்படுது இருப்பினும் மக்கள் இதற்கு பல வழிமுறைகளை பின்பற்றி முறையாக விரதம் இருந்தே ஒத்திசைவை உருவாக்குகின்றனர்.. மாந்திரீக சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு செடி,கொடி மூலிகைகளும் குறிப்பிட்ட நாட்கள் காப்பு கட்டி சித்தி செய்து முறையாக நோன்பு நோற்பது போல் தான் பிடுங்கி எடுத்துவரபடுகிறது..சில மருத்துவ மூலிகைகளும் அவ்வாறு செய்தால் தான் பலிக்குமாம்...இதை விட ஊர்திருவிழாக்கள்,ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடக்கும் முன்பும் இது போல தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் பிற அதிர்வலைகள் தங்களை நெருங்காமல் இருக்கவும் தங்களது அதிர்வுகளை உருவாகும் ஒரு பயிற்சி முறை தான் இந்த நோன்பு...சின்னதா ஒரு பண்டிகை ன்னா கூட வீட்டை சுத்தம் செய்வதும் இதில் அடங்கும் வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகளை களைந்து புதிய அதிர்வை உருவாக்குதல்..ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஆண்கள் கூட போட்டிக்கு முன் சில காலம் தங்களுக்கான உடல்&ஆன்ம பயிற்சிகளை மேற்கொள்வதும் விரதம் ன்னு தான் சொல்றாங்க..குலதெய்வ வழிபாட்டில் தனது முன்னோரிடம் பேச தனது உடலையும் மனதையும் தயார்படுத்தும் வகையில் தான் இந்த நோன்பு அமைந்துள்ளது முழுக்க முழுக்க அவர்களை எண்ணி தனது மரபை நோக்கி தன்னிடமே பேசி முன்னோர்களோடு ஒத்திசைவை ஏற்படுத்துவது தான் இந்த விரதம்..

உண்ணாநிலை - இது மேற்கண்ட நோன்புகளில் தலையாயது.இந்த நிலையில் தான் சில அபரிவித ஆற்றல்களை நமது உடல் மற்றும் ஆன்மா ஈர்க்கிறது...குறிசொல்பவர்கள் கூட சாப்பிடுவதற்கு முன் தான் சொல்வார்கள் உண்ட பிறகு சொன்ன வாக்கு பலிக்காது..காட்டில் கடும் தவம் இருக்கும் யோகிகளுக்கும் ஏது உணவு...இதுபோல நமது உடல் மற்றும் ஆன்மாவை பிற ஆற்றலோடு ஒத்திசைக்கும் காரணி தான் இந்த விரதம்

Saturday 10 October 2020

Expansion of Everything - அனைத்திற்க்கான விரிவாக்கம்

Expansion of Everything - அனைத்திற்க்கான விரிவாக்கம்

உயிர்களின் இயக்கவியல் அடிப்படை நகர்தல் முக்கியமான ஒன்று அதாவது அடுத்தகட்டத்தை நோக்கிய நகர்வு...மனிதன் உட்பட அனைத்து பூவுலக ஜீவராசிகளும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயத்திற்க்காகவும் இந்த பிரபஞ்சத்தில் இயங்கிக்கொண்டுள்ளன...இந்த உலகம் தோன்றியதில் இருந்து இங்கு அனைத்தும் பெருக்கம் அடைந்து கொண்டே தான் இருக்கு...இது ஒரு சமாமன பிரபஞ்ச நியதி ன்னு கூட சொல்லலாம்..மனித பரிணாம வளர்ச்சியை கூட இதுக்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம்...ஒரு செல் உயிரில் ஆரம்பித்து பூச்சி,ஊர்வன,முதுகெலும்பி,பரப்பன ன்னு இப்போ உச்சகட்டமா மனிதன் ல வந்து நிக்கிறோம் இதுவும் இதோட நிக்க போறது இல்ல இன்னமும் சில காலங்கள் கழிச்சு இதுவும் மாறிட்டே தான் போகும்...இவை எல்லாம் ஒரே ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் தான் நிகழுது...தன்னை விரிவுபடுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் தான் அந்த ஏக்கம்...இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் தலையாய நோக்கமே இது தான் expansion - தன்னை தானே விரிவுபடுத்தி கொள்ளல்...கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் ல ஆரம்பிச்சு உருவத்தில் பெரிய யானை வரை எல்லாமே தனது சந்ததியை பெருக்குவது தான் நோக்கமாக வெச்சிருக்கு...இது பிரபஞ்சத்தின் தன்னிச்சையான ஒரு இயக்கம்...இந்த உலகம் தோன்றியதாக சொல்லப்படும் சில கருத்துகளில் கூட ஆரம்பத்தில் வெரும் நெருப்பாக இருந்ததாகவும் பின்னர் மழை பெய்ந்து பின் உயிரிகள் வளர தொடங்கியது எனவும் அதன் பின் செடி,கொடி வளர்ச்சி ன்னு ஒரு கட்டமைப்பு உருவாக தொடங்கியதா அந்த கருத்துகள் சொல்லுது...அதன் அடிப்படையில் பார்த்தால் கூட இந்த பிரபஞ்சம் கூட தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும்,விரிவாக்கம் செய்யவும் தான் முனைகிறது...இப்போ நாம உச்சகட்ட பரிணாமமாக நினைக்கும் மனிதன் கூட நாளைக்கு அவனை விட ஆற்றல் வாய்ந்த ஒரு வளர்ச்சியை நாடி தான் பயணிப்பான்.. Transhumanism - இதன் அடிப்படையில் தான் வரும்..
இந்த பிரம்மாண்ட பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு தேவையான ஆற்றல் உருவாக்கம் இந்த மெய்மையின்(reality) இருமைத்தன்மையின் உதவியால் தான் நிகழுது... உதாரணத்துக்கு ஒரு காந்தத்தை எடுத்துகிட்டா இரு வெவ்வேறு துருவங்கள் இருப்பதால் தான் அதை சுற்றி காந்தபுலம் உருவாகுது,அதே போல தான் மின்னோட்டத்திலும் electron,proton இயக்கம்...அனைத்திலும் இவ்விரண்டு தன்மை  தான் அடுத்தகட்ட விரிவை ஊக்குவிக்கிறது..ஆண் பெண் ங்குற இருமையால தான் இங்க சந்ததிகள் உருவாக்கமும் நடக்குது...
எல்லாத்துக்கும் மேல இங்குள்ள மருத்துவம்,அறிவியல்,வானியல்,கட்டுமானம்,தத்துவம் அனைத்துமே இந்த பிரபஞ்சத்தை விரிவுபடுத்தும் நோக்கிலே தான் நடக்குது...இங்க இந்த விரிவாக்கம் தான் இயல்பு..அதை விட்டுட்டு பிரம்மச்சரியம்,துறவறம் போன்றவையெல்லாம் தேவையற்றது தான்...என்ன தான் இங்க பல தத்துவ கோட்பாடுகள் துறவு செல்வதை ஆதரித்தாலும் அவை ஒரு போதும் இந்த விரிவாக்கத்திற்கு உதவாது...என்ன தான் பலர் அதை பின்பற்றினாலும் இந்த பிரபஞ்ச அனிச்சை இயக்கத்தை யாராலும் தடுக்க முடியாது...பல இழப்புகள் ஏற்பட்டாலும் சரி மேலும் மேலும் வளர்ச்சி ஒன்றை தான் நோக்கமாக கொண்டு இயங்கும் இயல்புடையது இந்த இயற்கை...ஒரு சராசரி மனிதனின் எண்ணங்களும்,ஏக்கங்களும் கூட அவனுக்குமான அவன் சந்ததிக்குமான அடுத்தகட்ட நகர்வாக தான் இருக்கும்...இவ்வாறு இருக்கும் அத்தனை உயிரினங்களின் எண்ணங்கள் தான் இன்றும் இந்த விரிவாக்கம் அதிக வீரியத்துடன் நடந்துட்டு இருக்கு...
"அவனன்றி அணுவும் அசையாது" - அந்த  அசைவு அவனுக்கானதா இருக்கணும்

Thursday 24 September 2020

Genetic Induction - மரபணு தூண்டல்(DNA)

Genetic Induction - மரபணு தூண்டல்

ஏக்கங்கள் - இங்க எல்லாமே இதன் அடிப்படையில் தான் செயல்படுது இதை அடுத்த கட்ட பரிணாமத்துக்கு எடுத்துச்செல்ல காலம் அவசியமாகுது அதுதான் தலைமுறை இடைவெளி இந்த இடைவெளியில் நாம் நமது மரபுகூறினுள் புகுத்தும் அத்துணை விஷயங்களும் தேவையின் உச்சத்தை தொடும்போது முழுமையாக வெளிக்கொணரும்...

மரபு பொருள் - DNA வின் செயல்பாடு மிகவும் அபரிவிதமானது ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நிகழும் அத்தனை நிகழ்வுகளும்/அனுபவங்களும் உடல செல்களால் உணரப்பட்டு DNA வில் பதியப்படுகிறது...இதை தனக்கு தேவையான நேரத்தில் வெளிக்கொணருவது தான் ஒரு சவாலான விஷயம்...DNA வில் பதிந்துள்ள தரவுகளை வெளிக்கொணர பல காரணங்கள் இருக்கு...அதில் முக்கியமான ஒன்னு ஏக்கமும்/தேவையும் தான்...ஒரு உயிரின் ஏக்கம் தான் அதன் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது...அதே சமயம் அந்த உயிரினம் தன்னை தானே நொந்து கொண்டால் அதன் வளர்ச்சி குன்றவும் வாய்ப்பிருக்கு...இது டார்வினிய கொள்கையை சார்ந்து இருக்கும்...கிட்டத்தட்ட பரிணாமம் போலவே ஒரு பரம்பரையில் பல தலைமுறைக்கு  முன்னிருந்து ஒரு ஏக்கம்/தேவை இருந்தால் அது அடுத்தடுத்த தலைமுறைகளில் வளர துவங்கும்...சில தலைமுறைகள் கழித்து அந்த ஏக்கம் அபரிவிதாமாக பரிணாமிக்கும்... உதாரணத்துக்கு பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட(ஒடுக்கப்படுறோம் ன்னு நம்ப வைக்கப்பட்ட) ஒரு சமூகம் நான் முன்னேற வேணும் ன்னு ஏக்கத்தை உருவாக்கியதான் விளைவாக இன்றைய தலைமுறையில் அந்த குறிப்பிட்ட சமூகம் சமுதாயத்தில் சிறந்து விளங்குகிறது..இதற்கு நிகழ்கால உதாரணமாக தமிழர்களையே எடுத்துக்குவோம் சில ஆண்டுகளுக்கு முன்பு  பக்கத்து நாட்டில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டோம்..ஆனால் இப்பொழுது தமிழன் என்று சொன்னாலே உலகளவில் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு பற்றும் உணர்வும் வந்திருக்கு...இப்போது இருந்த சூழல் அப்போ இருந்திருந்தா???...அன்று வீழ்ந்ததன் ஏக்கம் தான் இன்னிக்கு நமக்கு அடையாளத்தை உருவாக்கியிருக்கு...சரி என்னடா DNA பத்தி சொல்லிட்டு திடீர் ன்னு ஒரு பெரிய இனத்தை வெச்சு பேசுறானே ன்னு தான பாக்குறீங்க...இங்க DNA வழித்தொடரா இருந்தாலும் சரி..ஒரு இனக்கூட்டமா இருந்தாலும் சரி..ஏக்கங்கள் என்பது எண்ணங்கள் தான்..மீண்டெழ வேண்டும் என்ற எண்ணமும் தேவையும் தான் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர்த்துது...இதை ஒரு தனிமனித பரம்பரை கட்டமைப்பில் பார்த்தால் எத்தனையாவது தலைமுறையில் எப்பொழுதோ ஒருவர் குறிப்பிட்ட ஒரு செயலை சாமர்த்தியமாக செய்து காட்டியிருப்பார்...அந்த நிகழ்வு அவர் மரபில் பதிந்திருக்கும்..இப்போ நிகழ்காலத்தில் அவரது வம்சாவளி ஒருவருக்கு இதே போல சிக்கல் ஏற்படுது ன்னு வெச்சிக்குவோம் இப்போது அவன் மூளை தீவிரமா சிந்திக்க துவங்கும் மூளையின் அனைத்து தரவுகளையும் புரட்டி பார்க்கும் அப்போது தான் பலதலைமுறைகள் முன்பு தனது முன்னோர் செய்த செயல் ஞாபகத்துக்கு வரும்..ஆனா,அது எப்படி ஞாபகத்துக்கு வந்தது ண்ணே தெரியாம போய்டும்...

இதனடிப்படையில் தான் இங்குள்ள பரம்பரை குலங்கள் இயங்குகிறது...குறிப்பா சொல்லணும் ன்னா மண் சிற்பங்கள் செய்யும் குடியில் பிறந்தவன் நான்...நான் சிறு வயதிலேயே நகரத்துக்கு வந்துவிட்டதால் எனக்கும் அந்த மண் சிற்ப வேலைகளுக்கும் தொடர்பே இல்லாமல் போயிடுச்சு..திடீரென  ஒருமுறை  ஒரு விநாயகர் சிலை வடிக்க தொடங்கினேன் அப்போது தான் எனக்கே தெரியாமல் ஏதோ பல காலம் பழகிய வேலை போல மடமட வென ஒரு சிலையை வடித்தேன் இதில் என்னவொரு அதிசயம் ன்னா அது என் முன்னோர் சிலை வடிக்கும் முறையிலே இருந்தது.. 

இது சாதரணமாக DNA வில் பதிந்துள்ளவை...இதை இன்னமும் ஆழமாக வெளிக்கொணரும் போது தான் நமது முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வயும் நமக்கு தேவையான பொழுது வெளிக்கொணரலாம்..இது சில நேரங்களில் அனிச்சையாக நடக்கும்..இருப்பினும் ஏக்கம்(எண்ணம்) இருந்தால் அதிக வீரியத்துடன் வெளிப்படும்...குலதெய்வ கோவிலுக்கு சென்று வேண்டும்பொழுது நமக்கு உடலவிலும் ஆற்றலும்/ஆறுதலும்/மன அமைதியும் கிடைப்பதை உணரலாம் இதுக்கு காரணம் நாம வேண்டுவது நம்மகிட்ட தான்..நமக்குள்ள அடங்கியிருக்கும் நமது முன்னோர்கிட்ட...

இதற்கு முக்கியமா தனக்கான ஏக்கங்களையும் தேவைகளையும் மனதளவில் உணரனும்...அந்த சிந்தனையை மனதில் ஆழமாக விதைக்கணும்..அப்படி செய்யும்போது நீங்க உங்க முன்னோர்களை உணருவீங்க...இப்பவும் உங்க உடலில் பல லட்சம் செல்கள் இருக்கு அதனுள் மரபுகூறும் (DNA) இருக்கு...எப்பொழுது  எந்த செல்லில் உள்ள நினைவு உங்களுக்கு உதவுது ன்னு தான் சொல்ல முடியாது...

இந்த பதிவுக்கு எடுத்துக்காட்டா சொல்லணும் ன்னா சில சாதிய ஒடுக்குமுறைகள்,பல தலைமுறையா வறுமையில் இருந்தவன் இப்போ செல்வந்தனா மாறியது,உடலவில் கூட குட்டையான வம்சாவளி ஏக்கத்தின் விளைவாக உயரமாக மாறுதல்...
இதிலுள்ள ஒரு பாதகமான விஷயம் என்ன ன்னா எண்ணங்களை விதைப்பதில் கவனம் வேணும் ஏக்கத்தினால் முன்னேற நினைப்பவன் வெற்றி பெறுவான்... அதே ஏக்கத்தினால் நொந்து போய் வருந்தி கொண்டால் அவனது மரபும்(DNA) வருந்தி முன்னேற நினைக்காமல் மேலும் மேலும் மோசமான நிலையை எட்டுவான்..

Monday 21 September 2020

Dark - இருள்

Dark - இருள்


இந்த பூமியின் duality ல ரெண்டு சமமான விஷயங்கள் இருக்கு..அதுல ஒன்னு தான் இருள் (இது பூமிக்கு மட்டுமே பொருந்தும்)...பிரபஞ்சம் முழுதும் இருள் தான் ன்னு சொன்னாலும் பூமியை பொறுத்தவரை அது ஒரு பகுதி மட்டுமே..இருள் பிரபஞ்சம் முழுதும் பரவி உள்ளதால் சில அற்புதங்களை தன்னுள் அடக்கி கொண்டுள்ளது...இருள் மனித உடல் மற்றும் மூளையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது...இருள் சூழ்ந்த நேரங்களில் மனிதனின் சிந்தனை அபரிவிதமாகவும்,உள்நோக்கு சிந்தனை உடையதாகவும் இருக்கும்...உதாரணத்துக்கு எதிர்காலம் குறித்த சிந்தனைகள் இரவில் தான் அதிகம் தோன்றும்...இரவில் பெரும்பாலும் கற்பனை கலந்த வகையிலே தான் சிந்தனைகள் பிறக்கும்..உதாரணத்துக்கு ஒருத்தன் இரவில் 'நான் அதை செய்வேன்' ,  'இன்னும் கொஞ்ச நாளில் அப்டி வாழ்வேன்', 'நாளை முதல் இப்படி மாறிடுவேன்' ன்னு என்னென்னமோ திட்டம் போடுவான் ஆனா பகலில் அதையெல்லாம் மறந்து வழக்கம் போல அவன் வேலையை தான் பாப்பான்..இதுக்கெல்லாம் அவனது உள்முக சிந்தனைகள் தான் காரணம்..இதே உள்முக சிந்தனை தான் ஒருவனை மனஉலைச்சலுக்கும் ஆளாக்குது..எல்லாரும் depression ன்னு பொலம்புறங்களே அதுக்கும் இதான் காரணம் இரவில் சிந்தனைகள் வெளி நோக்கி இருக்காது தனுக்குள்ளே யோசிச்சு தேவையற்றதை மனதில் ஆளப்பதிய செய்யும்...பெரும்பாலான வீடுகளில் இரவில் தான் அதிகம் சண்டை வரும்,இருட்டுல உக்காந்து தான் அழுதுட்டு இருப்பாங்க...அதே பகலில் பார்த்தால் எப்பவும் போல அவர்களின் வேலையை பார்க்க துவங்குவார்கள்...இன்றும் பலர் இரவில் தற்கொலை அளவுக்கு போய்விட்டு பகலில் சகஜமாக வாழ்ந்துட்டு இருப்பாங்க...சண்டைகள் என்றாலே 6 மணிக்கு மேல தான் போடணும் ன்னு இருப்பாங்க...இது தான் இருளின் சூட்சுமமே இருளில் நாம் எதை செய்யணும் ன்னு நெனைக்குரமோ அதை நம் மனதில் விதைத்தால் அது சரியான பாதையில் நம்மை அழைத்து செல்லும் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் அதன் போக்கில் ஈர்க்கும்... முழு இருளில் உறங்குவது தான் சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள் அதே சமயம் முழுவது இருள் இருந்தால் தான் pituitary சுரப்பியின் செயல்பாடும் சரியாக நடக்கும்... pituitary - ஞானத்தின் திறவுகோல் னும் சொல்றாங்க...அதுக்காக தான் கோவில் கருவறைகள் கூட இருள் கொண்டு இருக்கு...ஒளி ஆற்றல் போல இருளும் தனக்குள் ஆற்றலை கொண்டுள்ளது...ஒளியை விட வேகமானதும் கூட...

இருள் சூழ்ந்த நேரங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால் நமது உடல் ஆரோக்கியம் பெரும்..ஆனால் அதை சிதைக்கும் வகையில் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்கு...தேவையற்ற அதிர்வலைகளை நமக்கே தெரியாமல் நமது மூளைக்குள் செலுத்திவிடும்..

பழங்காலம் தொட்டே சில சடங்குகளும் வழிபாடுகளும் இரவிலேயே நடந்து வருகிறது..இதற்கும் காரணம் இருள் ஆற்றலின் பயன்பாடு தான்..உடல் சார்ந்த வளர்ச்சியும்,இதர உயிர்களின் வளர்ச்சியும் கூட இருளில் தான் நிகழ்கிறது..இன்னமும் சொல்லப்போனால் இருள் தனக்கென ஒரு உலகையே கொண்டுள்ளது...இருளில் தான் ஒருவன்(இருவர்) சுயமாக இயங்க முடிகிறது..இருள் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது...
மறையியல் சார்ந்த செயல்பாடுகளும் இரவிலே நடக்கிறது...சூரியன் உச்சம் கொண்டிருக்கும் வேளையில் இருள் தோற்கடிக்கப்படிகிறது..அப்பொழுது தான் அரக்கன் ஆட்சி(புலன்கள்) செய்கிறான்..
நீங்களே சோதித்து பாருங்கள் இருளில் உங்களது எண்ணம் மற்றும் சிந்தனை எப்படி இருக்கிறது என்று...அதே சமயம் பகலில் எப்டி உணருகிறீர்கள் என்றும் பாருங்கள்...
இருளை பயன்படுத்தி கொள்ளுங்கள்..

Vibration Technology - அதிர்வுகளின் நுட்பம்

VibrationTechnology - அதிர்வுகளின் நுட்பம்


அதிர்வுகள் - இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கமும் அதிர்வுகளின் அடிப்படையில் தான் இயங்குது ன்னு சொன்னா நம்ப முடியாது..ஆனால் அதான் உண்மை,இதை விளக்குவது தான் string theory அணுக்கருவினுள் உள்ள நுண்துகள் அதிர்வு தான் ஒரு அணு எந்த மாதிரி இயங்கனும் ன்னு தீர்மானிக்குது(ஒவ்வொரு தனிமத்துக்கும் இந்த அதிர்வு வேறுபடும்)...இந்த பேரதிர்வு தான் மனித வாழ்வியலிலும் பல மாற்றங்களை கொண்டு வருது.. எளிமையான உதாரணம் ன்னா கோவில் மணியை சொல்லலாம்..கோவில் மணி 'ஓம்' ன்னு ஒலிக்கும் கும் சொல்றாங்க அதெல்லாம் விட அதன் அதிர்வு தான் முக்கியம்..மணி, பொதுவாக கோயில்,தேவாலயம்,புத்த விகாரம் ன்னு எல்லா இடங்களிலும் பயன்படுத்தபடுது...இதன் பயன்பாடே கேட்ட அதிர்வுகளை விலக்கி கொடுப்பது தான்...உதாரணத்துக்கு நீர் உள்ள ஒரு பாத்திரத்தின் விளிம்பை தட்டினால் அந்த பாத்திரம் உருவாக்கும் அதிர்வு அதிலுள்ள நீரை ஒரு ஒழுங்கு முறையில் அதிர செய்யும்...இதே தான் மனித உடலிலும் நடக்குது...மணி ஓசை தீய அதிர்வுகளிடம் இருந்து காக்கிறது இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயமே...அதே அதிர்வு சில தீய ஆன்மாக்களிடம் இருந்தும் நம்மை காக்கிறது...இந்த பரந்த வெளியில் கருப்பு ஆற்றல்(காத்து, கருப்பு) நிறைந்த வண்ணம் உள்ளது..இவை தங்களிடம் நெருங்காமல் இருக்கவும் இந்த மணி பயன்படுத்த படுது..உதாரணத்துக்கு இறப்பு நிகழ்வுகளில் அடிக்கப்படும் மணியின் அதிர்வு பிற ஆன்மாக்கள் அங்கு நெருங்காமல் இருக்க உதவுகிறது...இதே மணி தான் ஐந்தறிவு ஜீவன்களையும் சில தீய ஆற்றல்களிடம் இருந்து காப்பாற்றுகிறது...ஆடு, மாடுகள் கழுத்தில் கட்டிவிடப்படும் மணி - இது பொதுவாக காட்டில் கால்நடைகள் தொலைந்து போகாமல் இருக்க தான் பயன்படுத்துவார்கள்..அதே சமயம் 'குரளி' போன்ற மாந்திரீக வேலைகளுக்கு பயன்படும் கண்ணுக்கு புலப்படாத ஜந்துக்கள் இந்த ஆடு,மாடுகளின் கொம்புக்கு நடுவே தான் தங்குமாம்...இதை நெருங்காவிடாமல் செய்யவே இது போன்ற அதிர்வு பயன்படுத்தபடுது...இந்த அதிர்வுகளை பயன்படுத்தும் நுட்பத்தை வைத்து இதன் பலன் மாறுபடும் அணுகுண்டு வெடிப்பின் அதிர்வுகள் எப்படி மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா அந்த மாதிரி...சில வகை அதிர்வுகள் மூளையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும்,சில அதிர்வுகள் கருவில் உள்ள குழந்தையை கூட கொன்று விடும்...இது உலோகங்களால் உருவாகும் அதிர்வுகளாலும்,மனித/பிற ஆன்மாக்களின் எண்ண அதிர்வினாலும் நடக்கும்...அதிவுகள் தான் இந்த பிரபஞ்சத்திற்கு universal language - காது கேட்காத,வாய் பேசாத குழந்தைக்கு கூட அதிர்வுகளை உணர முடியும்...உயரமான மலை பகுதியில் மழை மேகம் சூழும் நேரங்களில் நமது கை தட்டும் அதிர்வு கூட மழை பொழிய செய்யும்..

உலோக அதிர்வுகள் கொஞ்சம் வித்தியாசமானவை - செம்பு பாத்திரங்களின் பயன்பாடும் இதை மையமாக வைத்தே இயங்குது...கிராமங்களில் அடிபட்டு துடிச்சிட்டு இருக்கும் கோழி குஞ்சுகளை நெடுநாள் கவிழ்த்து வைக்கப்பட்ட வெண்கல பாத்திரத்தை கொண்டு மூடி அதன் மீது தட்டும் போது உருவாகும் அதிர்வுகள் அந்த கோழிக்குஞ்சுகளை காப்பாற்றுகிறது...இதை நவீனமா vibration healing ன்னு சொல்றாங்க...

உலோகமல்லாத பிற அதிர்வுகளும் மனித உடல் மற்றும் மூளையில் அற்புதங்களை நிகழ்த்துது...உருமி, உடுக்கை போன்ற கருவிகளின் உதவியால் உருவாக்கப்படும் அதிர்வுகள் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி மரபு பொருளை தூண்டுகிறது..குலதெய்வ வழிபாட்டில் இந்த அதிர்வுகளின் பயன்பாடும் முக்கியமானது...
ஏற்கனவே சொன்னது போல  இந்த அதிர்வுகளை வைத்து சில தீய செயல்களும் நடக்குது...தொலைக்காட்சி,செல்போன் போன்ற வற்றிலிருந்து வெளியேறும் மின்காந்த அதிர்வுகள்..சில சமய கூடங்களில் இந்த அதிர்வை பயன்படுத்தி தனக்கு தேவையானதை கூட நிறைவேற்றி கொள்கின்றனர்...மக்களை மடைமாற்றும் சில வேலைகளும் நடக்குது..உலோக அதிர்வுகள் நிறைந்த இடத்துக்கு போகும் போது கவனமா இருக்கணும்..மந்திரம் ஜெபிக்கபட்ட கலசமும் இதன் அடிப்படையில் தான் இயங்குது...உலோக பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரிற்கு எண்ணங்களால்(மந்திரம்) அதிர செய்து தனக்கு ஏற்றார் போல் அந்த நீரை பயன்படுத்தி கொள்கின்றனர்...ஒவ்வொரு முறையும் விழிப்போடு இருக்க நீங்கள் இருக்கும் இடத்தின் அதிர்வுகளை விலக்குங்கள்.. உங்களுக்கு தேவையான அதிர்வுகளை நிரப்புங்கள்...சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி போன்றவையும் இந்த அதிர்வுகளின் அடிப்படையில் தான் இயங்குது...

அதிர்வுகள் தான் அலைவரிசையா உருவெடுக்குது - ஒரு சின்ன மணியின் ஓசை ஏற்படுத்துவதற்கும்,பல மணி ஓசைகள் சேர்ந்தால் அதுவும் ஒலியே இல்லாமல் வெரும் அதிர்வோட மட்டும்

Saturday 19 September 2020

Law of everything - யாதும் ஆகி

Law of everything - யாதும் ஆகி


எந்தவொரு பொருளும் இந்த வெளியில் அணுக்களின் ஒன்றிப்பாலே உருவாகி இருக்கு...இந்த அடிப்படை துகளாக அணுக்கள் தான் பலவாக உருவெடுத்து இருக்கு...ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான அணுத்துகள்களை கொண்டு உருவாகி இருக்கு... Hydrogen, Oxygen, Carbon,Zinc, Sodium, Pottasium,Copper,Led,Nitrogen ன்னு அடுக்கிகிட்டே போகலாம்..இப்படி தனிமவரிசை அட்டவணையில் உள்ள அனைத்தும் இதுவரை மனிதர்களால் கண்டறியப்பட்ட elements..இவை பெயர் மற்றும் பண்புகளில் வித்தியாசமாக இருந்தாலும் அடிப்படையில் அணுக்கருவில் எல்லாமே ஒன்னு தான்..எலக்ட்ரான் வெளிகூட்டு பிணைப்பின் காரணமாகவும்,string theory ன் அடிப்படையிலும்,அணுக்கரு துகள்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் - ஒவ்வொரு அணு அல்லது மூலக்கூறு வெவ்வேறு தன்மை கொண்டதாக இருந்தாலும் அடிப்படையில் அவை அனைத்தும் ஒன்றே தான்... Fibonacci வரிசைப்படி சொல்லணும் ன்னா ஒன்றிலிருந்து தான் ஒன்று தோன்றும்..இது தான் அனைத்தின் தொடக்கம்...உதாரணத்துக்கு நமது உடல் முழுக்க முழுக்க நட்சத்திர கூட்டு பொருட்களால் ஆனது...நமது எலும்பில் உள்ள கால்சியம் சுண்ணாம்பிலும் இருக்கு...ரத்த சோகை வந்து இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுறோம் அதே சமயம் இரும்புஆணி குத்திடுச்சு ன்னா புண் ஆகிடும் ன்னு மருந்து போடுறோம்...இங்க எல்லாமே அடிப்படையில் ஒன்னாதான் இருக்கு..இங்க உள்ள சுற்றுசூழலும் தேவைகளும் தான் தனக்கு ஏற்றார் போல பிரிச்சு வெச்சிக்குது...இங்குள்ள நிறங்களும்,சுவைகளும்,இசையும்,மனமும் -மனிதனின் தேவைக்காகவே பிரிச்சு வைக்கப்பட்டிருக்கு சுற்றுசூழல்,ஏக்கம் எனும் மாயை உருவாக்கப்பட்டு அதுக்குள்ள அகப்பட்டு கிடக்குறோம்..இது தான் பிரபஞ்சத்திலிருந்து விரிவடைஞ்சுகிட்டு வரும் மெய்நிகர்..எல்லா இடத்துலயும் எல்லாமும் இருக்கு,எல்லாம் ஒரே விஷயத்தினால் ஆனது.. இது எப்டி ன்னா இந்த பதிவ படிக்கிற நீங்களும் பதிவ எழுதின நானும் ஒன்னு ங்குற அளவுக்கு சிக்கலான ஒரு விஷயம்..அது உண்மையும் கூட இங்க எழுதுபவர் ங்குற reality க்காக நானும்,வாசிப்பவர் ங்குற reality க்காக நீங்களும் இருக்கீங்க ஆனா அடிப்படையில் நாம ரெண்டு பேரும் ஒன்னே தான்...அது தான் அடிப்படை அணுத்துகள்களால் ஆன உருவமைப்பு...எந்திரன் படம் மாதிரி சொல்லணும் ன்னா ஒரே மாதிரியான பல ரோபோக்கள் ஆனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தேவைகள்,ஏக்கங்கள்,சுற்றுசூழல்...இப்போ யோசிச்சு பாருங்க இதுவே எந்திரன் படத்துல இருந்த அதனை ரோபோக்களுக்கும் சனா மீது காதல் ஏற்பட்டுச்சு ன்னா என்ன ஆகும்??..எல்லாம் அத்துக்குள்ளேயே சண்டை போட்டு அழிஞ்சிரும்...அது தான் நமக்கு இந்த பிரபஞ்சம் கொடுத்திருக்க வரமும் சாபமும்.. அடிப்படையில் இங்குள்ள அனைத்தையும் ஒன்றாக வெச்சிட்டு அதற்கான இயக்கத்தை மட்டும் வேறு விதமா விதைச்சிருக்கு(உணர்வு/உணர்ச்சிகள்)..அந்த இயக்கத்தை(ஆற்றல்) தான் எல்லாரும் கோவில்களிலும்,மசூதிகளிலும்,தேவாலயங்களிலும் வேண்டி கேட்டுட்டு இருக்காங்க...இறைவன் அருள்,கிருபை,சக்தி ன்னு எல்லாமும் அந்த ஒரு ஆற்றலை நோக்கி தான் பயனிச்சிட்டு இருக்காங்க...மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே துகளால் ஆனது மதங்களும் அவ்வழியே எல்லாமும் இறைவன் இருப்பதை முன்வைத்தே கூறுகிறதே தவிர இறைவன் இல்ல ன்னு சொல்லல..நாத்தீகம் பேசுரவங்க இறைவன் இல்ல ன்னு சொல்றதுலயும் தப்பு இல்ல ஏன்னா அவங்க நம்மளோட எதிர் dulaity பயனிச்சிட்டு இருக்காங்க..இங்குள்ள உயிருள்ள,உயிரற்ற அத்தனையும் அடிப்படையில் ஒன்றாகவே உருவாகி யாதும் ஆகி தெரிகிறது...இந்த யாதும் ஆனா நிலையை மட்டும் மனிதன் எட்ட முடிந்தால் எதிர்காலம்,நிகழ்காலம்,கடந்தகாலம் ன்னு எங்கு வேணாலும் பயணிக்கலாம் அதே சமயம்,அந்த யாதுமாகின நிலையில் கோபம்,சிரிப்பு,துக்கம் ன்னு எல்லாமும் ஒரே மாதிரியே இருக்கும்...இதற்கு ஒரு உதாரணம் நம்ம ஊர்ல ஒருத்தன் அழுகுரத பாத்து ஒருத்தன் சிரிப்பான் நடுவுல இது எது உண்மை எது பொய் ண்ணே தெரியாம போயிரும்..இது இயக்கத்திற்கு மட்டுமில்ல உயிரற்ற பொருட்களுக்கு கூட பொருந்தும்...சும்மாவே உயிரற்ற சாதனங்களோட மனிதன் தொடர்புகொள்ள ஆரம்பிச்சிட்டான்... தனக்கு phone வரப்போவதை சில நொடிகளுக்கு முன்பாகவே சிலரால் கணிக்க முடியும்(இது எத்தனை பேருக்கு சாத்தியம் ன்னு தெரியல)..இதெல்லாம் வெரும் அடிப்படை தான் இதன் உட்சபட்ச நிலைய எட்டும் போது தான் மனிதன் எல்லையற்ற யாதுமாகியா ஆகுறான்...

Origin
இங்க எதுவும் உருவாக்க படல.. எதுவும் அழிக்கவும் படல...எல்லாமும் இங்கிருந்தே எடுக்கபட்டது...இறுதியில் இங்கேயே தான் விட்டும் செல்லணும்..இங்க புதுசு பழசு ன்னு ஒண்ணுமே கிடையாது மனிதனின் reality க்கு ஏற்ப அவனவன் அமைச்சுகிறது தான் எல்லாம்...பல மூலக்கூறுகளை ஒன்றிணைத்து புதுசா ஒன்றை தோற்றுவிக்கிறான் ஆனா அது புதுசு போல் காட்சிப்படும் பழசு தான்...டார்வினியம் போல உயிர்களும் அப்படியே பரிணாமித்தே உருவாகி இருக்கு...மனித இயல்புக்காக மட்டுமே physics, chemistry, biology ன்னு எல்லாவற்றையும் பிரிச்சு பாக்குறோம்..ஆனா அடிப்படையில் எல்லாம் ஒன்னு தான்...மனிதனின் புரிதலுக்காகவும் ஒற்றை இயல்பிற்காகவும் தான் பிரிக்க பட்டிருக்கு..எவ்வளவு மதங்கள்,எவ்வளவு பிரிவுகள்,இனம்,மொழி,நிறம் ன்னு இங்க பல வகையில் உடைஞ்சு இருக்கோம்..இந்த அத்தனைக்கும் அடிப்படை ஒன்னு தான் அதான் origin - இந்த origin அ தேடி தான் அத்தனை இறையியல் கோட்பாடும் நகருது... எல்லாவற்றிற்கும் மேல இந்த ஒற்றை துகள்களை இயக்கும் இயங்கு சக்தி(ஆற்றல்) தான் மனிதனால் எட்ட முடியாத பரிமாணம்...பிரபஞ்ச (கடவுள்) கோட்பாடும் அதான்...

Wednesday 16 September 2020

Karma - ஊழ்வினை

Karma-ஊழ்வினை
கர்மா இத பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது..அறிவியல் ரீதியிலும் விவரிக்கப்பட்ட ஒரு கருத்து தான் கர்மா...நியூட்டனின் மூன்றாம் விதி தான் இதற்கான விளக்கம்...நான் செய்யும் எந்த ஒரு இயக்கத்திற்கும் எதிர்வினை உண்டு என்பது தான் இதன் தத்துவம்...உதாரணத்துக்கு சுவற்றின் மீது எறியப்படும் பந்து...இதை விட அருமையா கர்மாவை பற்றி பலரும் சொல்லிருக்காங்க.. நாம என்ன தான் ஒரு விஷயத்தை சரியாவோ தப்பாவோ பண்ணிருந்தா அதுக்கான வினைப்பயன் கண்டிப்பா நம்மளை வந்து சேரும் அப்படி அது நமக்கு கிடைக்காவிட்டாலும் நம்ம சந்ததிகளுக்கு கண்டிப்பா கிடைக்கும்..உதாரணத்துக்கு சமீபத்தில் இறப்பு நடந்த வீட்டில் கொஞ்ச நாட்களில் பல மாற்றங்கள் நடக்கும் அது அந்த இறந்தவறது முன்வினைபயன்..அவர் விட்டுட்டுப்போன கணக்குக்கு விடை கிடைக்கும்..இது நன்மையாகவோ தீமையாகவோ இருக்கும்...அது அவரவர் வினைப்பயன்..குழந்தை பிறப்பும் அதுபோல தான்..சரி இப்போ இந்த கர்மாவுக்கும் நம்ம வாழ்வியலுக்கும் இடையேயான தொடர்பை பாப்போம்.
பொதுவா பூமியில் பிறந்த அனைவரும் இந்த கர்மாவால் பாதிப்பட்டு தான் ஆகணும் அதான் இதன் விதி...இது சாமானிய மனிதனுக்கு நடந்தே தீரும்..இந்த கர்மாவை சிறப்பாக கையாலுவது பெரிய பெரிய மகான்களுக்கும் ஞானிகளுக்கும் தான்  கைவந்த கலை...முதலில்  கர்மா ஒரு இயக்கத்தை கொண்டு தான் துவங்கும் அந்த இயக்கமானது கண்டிப்பாக தனக்காகவோ அல்லது தன்னை சர்ந்தோருக்காகவோ(சந்ததி) தான் இருக்கும்...இப்போ இந்த தொடர்பை துண்டிக்க தான் பிரம்மசார்யத்தை கடைபிடிச்சாங்க...ரெண்டாவது எதிர்வினை அதாவது நாம ஏதாவது செஞ்சா தான அதுக்கு எதிர்வினை வரும் எதுவுமே செய்யாம இருந்தா??? அதுக்காக தான் சில மகான்கள் சிவனே ன்னு சும்மா இருந்தாங்க... Neutral position ல இருந்தாங்க...ஓய்வும் ஒருவகை இயக்கம் தான்...அதனால முடிஞ்ச அளவுக்கு இந்த பூமியை விட்டு போக முயற்சி செஞ்சாங்க..சரி கெட்டது செஞ்சாதனே கர்மாவால் துன்பம் அவச்சொல் வரும் நல்லது செய்யலாமே-அங்க தான் இருக்குது uncertainty principle (நல்லதை மட்டுமே செய்ய கடவுளால கூட முடியாது)..இங்க நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் duality இருக்கு அதாவது நன்மைக்குள் தீமை,தீமைக்குள் நன்மை..நாம ஒரு வேலையை செய்யுறோம் ன்னா அது நமக்கு நன்மையாகவே இருந்தாலும் 0.00001% அதில் தீங்கு அல்லது எதிரான விளைவு இருக்கும்..அதனால தான் ஞானிகள் எதுவும் பேசாம எதுவும் செய்யாம யோக நிலையை பின்பற்றினாங்க அது போக அந்த வினைப்பயன்...உண்ணா நோன்பு கூட பின்பற்ற காரணம் நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்பு தான் ஹைட்ரஜன் பிணைப்பு சேர்மம் எல்லா மூலகூரையும் இணைக்கும் சேர்மம் உதாரணத்துக்கு நம்ம உடலில் மட்டும் ஹைட்ரஜன் இல்லை ன்னா...ஒவ்வொரு பாகமும் பிஞ்சு விழுந்திடும்...வீடு கட்டும் போது கூட சுவற்றுக்கு தினமும் தண்ணீர்(ஹைட்ரஜன்) விட்டு அதன் பிணைப்பை உறுதி செய்யுவாங்க... இதே தான் மனித உறவுகளுக்கும், இவருக்கிடையே சண்டை ஏற்பட்டால் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் நீரை பகிர்ந்து கொள்ள மாட்டாங்க (இதுக்கு தனி பதிவே போட்ருக்கேன்)..அதே போல தான் மகான்கள் எதையும் உண்ணாமல் எவரோடும் ஒட்டாமல் வாழ்ந்து வராங்க...இதை சுருக்கமா புரிய வைக்க தான் ஞானிகள் தாமரையை எப்போதும் குறியீடா பயன்படுத்துறாங்க..தாமரை - பீனியல் சுரப்பி (தவ நிலை) நீர் - வெளி உலகை தன்னோடு இணைக்கும் காரணி...தாமரை இதழ்கள் மீது தண்ணீர் எப்போதும் ஒட்டாது...இதை உணர்த்தும் வகையில் தான் இப்படி தாமரையை முதன்மை படுத்துறாங்க...அது போக நீர்(ஹைட்ரஜன்) தான் இங்குள்ள அனைத்தையும் இணைக்கும் காரணியாவும் திகழுது..உதாரணத்துக்கு ஒரு சின்ன குழந்தை முன்னாடி ஒரு பெரிய குளத்தை கட்டினால் அதன் மனம் ஆர்பரிச்சு உற்சாகமடையும் இது தான் சராசரி மனிதனையும் ஞானியையும் பிரிக்கும் கோடு...

Saturday 12 September 2020

Coordinated Loops

 Co-ordinated Loops
ஒன்றிணைக்கப்பட்ட தடப்பாதை
இந்த பரந்த வெளியில எல்லாமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தான்...உதாரணத்துக்கு ஒரு பேனா,பென்சில் ன்னு ஆரம்பிச்சு எந்த ஒரு பொருளை எடுத்தாலும் அது இந்த ஒட்டுமொத்த உலகத்தோடும் தொடர்புடையதா இருக்கும்..இப்போ உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் பெயரை சொல்லணும் இப்போ அவர்கிட்ட போய் இன்னொருத்தர் பெயரை கேக்கணும் இப்படி தொடர்ந்து கேட்டுகிட்டே போனோம் ன்னா முடிவில் ஆரம்பிச்ச இடத்துக்கே வரும் இருந்தாலும் விடாம அந்த சங்கிலித்தொடரை நீட்டிக்கிட்டே போனா அது இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் இந்த சங்கிலியில் இணைக்கலாம்(ஆனால் அதை நீங்க செஞ்சு முடிக்க சில வருடங்கள் ஆகலாம்)..
இது இந்த உலக மக்களுக்கு மட்டுமல்ல எந்த ஒரு பொருள்,உயிர்,செயல் எல்லாத்துக்குமே பொருந்தும் அதாவது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய விடயங்கள்...இதை ஏன் இங்க சொல்றேன் ன்னா இந்த பரந்து விரிந்த தொடரினைப்பில் யாரோ ஒருவர் எங்கோ ஏற்படுத்தும் சிறிய மாற்றம் வேறெங்கோ இருக்கும் ஒருவரை பெரிய அளவில் பாதிக்கும்(நன்மையும் நடக்கலாம்)..இதை எளிமையா விளங்கிக்கொள்ள ஒரு கயிறை எடுத்து ஒரு முனையை சுண்டினால் அந்த விசையியக்கம் மறுமுனை வரை பரவும்..அதே இப்போ ஒரு கயிற்றின் முடிவில் 5 கயிறு கட்டினால் இந்த விசையியக்கம் ஐந்து கயிரிலும் பரவும் இப்போ அந்த ஐந்து கயிறும் வெவ்வேறான நீளம் கொண்டதா இருக்கணும் இப்போ அந்த விசை இயக்கத்தின் நேரம் மாறுபடும்.. அதாவது சிறிய கயிற்றில் சீக்கிரம் விசை சென்றடயும் பெரிய கயிற்றில் மெதுவாக செல்லும்...இப்போ இந்த ஒற்றை கயிற்றை போல பல லட்சம் கயிறுகள் இருக்கு ன்னு வெச்சிக்குவோம் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று குறுக்க மறுக்க இணைக்கப்பட்டிருக்கு இப்போ ஒரு முனையில் ஒருவன் செலுத்தும் விசை மற்ற இடங்களுக்கு பரவலாம்/பரவாமல் தடுக்க படலாம்/திரும்பலாம்/வெகு காலம் கழித்து பரவலாம்/சீக்கிரம் பரவலாம் என நிகழ்தகவின் அடிப்படயில் எப்படி வேண்டுமானாலும் பரவும்...இதை அப்படியே மனிதனோடு ஒப்பிட்டு பாருங்க ஒவ்வொரு கயிறும் ஒவ்வொரு மனிதன் உருவாக்கும் இயக்கங்கள்(moments)..இது எங்க போகுது எப்படி போகுது ன்னு தெரியாது ஆனா கண்டிப்பா இந்த ஒட்டுமொத்த உலக இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்...

"ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒருவகை ஆற்றலை மற்றொருவகையாக மாற்றலாம்"  
ன்னு இயற்பியல் விதி சொல்லுது
அதேபோல அந்த ஆற்றல் கொண்ட இயக்கங்களையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது மாறாக அவை ஒருவகை இயக்கத்திலிருந்து மற்றொரு வகை இயக்கத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும்(ஓய்வும் ஒருவகை இயக்கமே)..

இதன் அடிப்படையில் தான் ஒட்டுமொத்த பிரபஞ்ச இயக்கமும் இருக்கு...அதாவது இன்னிக்கு நடந்துகிட்டு இருக்குற ஒவ்வொரு விஷயமும் ஏற்கனவே நடந்த ஒரு விஷயத்தின் தொடர்பு தான்..இது எப்போ ஆரம்பிச்சது ன்னு தேடினால் அது இந்த பிரபஞ்சம் ஆரம்பத்துக்கு தான் போகும்...உடனே எல்லாரும் பூமியோடு ஆரம்பம் பெருவெடிப்பு கொள்கை ன்னு சொல்லிடலாம் ஆனால் அதுக்கும் முன்னாடி என்ன நடந்தது,சரி எப்படியோ ஒரு இயக்கத்தின் விளைவா நாம இங்க வந்துட்டோம் இனிமேல் இது என்ன ஆகும் - யாருக்கும் தெரியாது.. இப்போ நான் முன்னாடி சொன்ன கயிறு உதாரணத்தை ஞாபகப்படுத்துங்க இப்படி பல சிக்கலாக பிணைக்கப்பட்ட கயிற்று தொடரில் எது முதல் எது முடிவுன்னே தெரியாது எல்லாமே சுத்தி சுத்தி வரும் ரொம்ப தூரம் போன மாதிரி இருந்தாலும் நாம சுத்திக்கிட்டு தான் இருப்போம்...அதே போல தான் இந்த பிரபஞ்சமும் எல்லாம் மீன்பிடி வலையில் இருக்கும் நூல் அமைப்பு போல தான்...இப்போ நீங்க இந்த பதிவை படிக்குறதுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப அதிபர் ஆகுறதுக்கும் கூட தொடர்பு இருக்கு ன்னா நம்பவா முடியுது,அதே சமயம் இந்த பதிவை படிச்சதால்  உங்களுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கு ன்னு சொன்னாலும் நம்பவா முடியுது..நம்பலனாலும் இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம் இல்லையா..இது தான் இந்த சங்கிலி தொடரின் சூட்சுமம்..இந்த சிக்கலான அமைப்புல உண்மை/பொய் ன்னு எல்லாமே ஒரே போல தான் தெரியும் உதாரணத்துக்கு ரெண்டு கயிறை எடுத்து எதிரெதிரே நிற்கும் இருவரின் கையில் ஒவ்வொரு முனையையும் பிடிக்க சொல்வோம்..
இப்போ வலது கையில் உள்ள கயிறு உண்மை இடது கையில் உள்ள கயிறு பொய் ன்னு வெச்சிக்குவோம் இப்போ ஒருத்தன் உண்மையை தேர்வு செஞ்சா அது இன்னொருத்தனுக்கு பொய்யா தெரியும்..இப்படி உண்மையும் பொய்யும் ஒரே மாதிரியே காட்சியளிக்கும் அவர் அவர் தேவைக்கு ஏற்ப நாமலே தீர்மானிக்கனும்..அது போக இந்த சுற்றுசூழல் நிலைமை தான் இங்க எல்லாத்தையும் தீர்மானிக்கும்..எல்லாமே Uncertainty தான்...ஒன்றோடொன்று கலந்த ஒன்றுமல்லாத ஒன்றின் இயக்கம் தான் இது

இப்போ உங்களுக்கு சில விஷயங்கள் தெரிய வரலாம் facebook, Twitterன்னு சமூக வலைதளங்கள் ஏன் பல மக்களை இணைக்குது...இந்த மாதிரி சங்கிலி தொடரை உருவாக்கினாலோ/மாற்றம் ஏற்படுத்தினாலோ ஒட்டுமொத்த உலக இயக்கத்திலும் மாற்றம் ஏற்படும் இயக்கங்கள் அதிகரிக்க நேரம் குறையும் நேரம் குறைந்தால் நன்மை($) தான்..

Reaction=Time=Money - காலமே காசு(கடவுள்)
இப்போ facebook ல நெறய பேர் சம்பாதிக்க ஆரம்பிச்சதயும் தொடர்புபடுத்தி பாருங்க...நம்மள விட வலிமையா இருக்குறவன் எப்படி லாம் வேலை செஞ்சு நம்மலை வெச்சே சம்பாதிக்குறான்...(நாம online ல வெட்டி சண்டை போட்டாலும் அவனுக்கு காசு தான்)

Thursday 3 September 2020

Probable Relativity - நிகழ்தகவுசார்பியல்

Probable Relativity
நிகழ்தகவுச் சார்பு 
இது தன்னிச்சையான இயக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையேயான ஒரு சிக்கலை குறிக்குது... உலகில் இரு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வு மற்றும் அதன் விளைவை கணிக்கும் யுக்தியை குறித்து தான் இதுல பாக்க போறோம்...

 உலகின் எந்த ஒரு நிகழ்வுக்கும் 50%/50% சாத்திய கூறுகள் உண்டு..அதாவது குறிப்பிட்ட ஒரு நிகழ்வு எதிர்காலத்தில் நடக்கலாம் நடக்காமலும் போகலாம்..இதை உறுதிப்படுத்துவது reality தான்..இந்த சமவாய்ப்பில் ஏதேனும் ஒன்று கண்டிப்பா நடக்கும்..இது தான் uncertain duality..இதில் உள்ள சிக்கலே இந்த சமவாய்ப்பில் ஏதாவது ஒன்றை கணிப்பது அதாவது எதிர்காலத்தை கணிப்பது...இது காலத்தோடு தொடர்புடையதா இருந்தாலும் எந்த ஒரு நிகழ்வயும் அனுபவிக்காமல் அதன் தீர்வ சொல்லிட முடியாது...மாறாக,அந்த நிகழ்வு நடப்பதற்கு முன்பே நமக்கு ஏற்றார் போல் மாத்திக்கிட்டா அந்த தீர்வில் மாற்றத்தை கொண்டு வரலாம் ஆனால் இதுவும் ஒழுங்கின்மையின்(uncertainty) அடிப்படையில் நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம்..சரி இப்போ எப்டி எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை கடந்த காலத்திலே மாற்றம் செய்வது ன்னு பாப்போம்.. "ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி எப்டி ஓடும்" - ஓடும் ஆனால் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது...ஏன்னா குவாண்டம் இயக்கத்தில் ஒரு விஷயத்தை நாம் பரிசோதிக்க முயன்றால் அது நமக்கு குழப்பம் கொண்ட முடிவயே தரும், யாரோ நம்மை கவனிக்கிறார்கள் ன்னு atomic particle க்கு தெரிஞ்சிடும் அதனால தன்னோட அற்புதமான இயக்கங்களை செய்யாம அதிலிருந்து மாறுபட்டு செயல்படும் (இதற்கு உதாரணமாக double slit experiment எடுத்துக்கலாம்)...சரி அது எப்டி ஆட்டோ கண்ணாடியை திருப்புனா வண்டி ஓடும் இது முட்டாள்தனமான கேள்வியா இருக்கலாம் இதையே விளையாட்டில் coin வெச்சு toss போட்டு batting தேர்வு செய்யுறதையும் பொருத்தி பாருங்க இது மட்டும் சாத்தியமா என்ன...எல்லாமே சாத்தியம் தான் உதாரணத்துக்கு சில விஷயங்களை துவங்குவதற்கு முன் கோவிலில் பூக்கட்டி போட்டு தனக்கான பதிலை தெரிஞ்சிக்குவாங்க..இங்க தான் ஒரு விஷயத்தை கவனிக்கணும் நிகல்காலத்தில் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் தான் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் மாற்றத்தை சாதகமாகவோ பாதகமாகவோ உண்டாக்கும்.. இது காலத்தோடு தொடர்புடையது அதே சமயம் கிரக இயக்கமும் ஜாதகமும் தான்...பரிகாரங்கள் இதனூடே தொடர்பு கொண்டது தான் எதிர்காலத்தில் நமக்கு வரப்போகும் சிக்கல்களை குறிப்பால் உணர்ந்தவர்கள் அதை மாற்றிக்கொள்ள நிகல்காலத்தில் ஏற்படுத்தும் சிறு சிறு மாற்றம் தான் பரிகாரம்..இதுவும் நிகழ்தகவின் நிலையின்மையின் அடிப்படையில் சரியாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்...இன்னிக்கு நீங்களும் நானும் உயிரோடு இருப்பது கூட இது போல ஏதாவது ஒரு செயல் செய்ததன் விளைவாக தான்... உதாரணத்துக்கு ஒரு நாள் நான் கல்லூரியில் இருந்து வழக்கமாக கிளம்பும் நேரத்தை விட 30நிமிடம் தாமதமாக கிளம்பினேன் வீட்டுக்கு போகும் வழியில அடிபட்டு கிடந்தேன் இதுவே ஒரு 2நிமிடம் முன்னதாகவோ அல்லது தமதமாகவோ கிளம்பியிருந்தால்? இல்லையெனில் சரியாக எப்போதும் போல போயிருந்தால்? அன்னைக்கு 30நிமிடம் விளையாடமால் இருந்திருந்தால்? - இது தான் சாத்திய கூறுகள்..இது போல பல நிகழ்தகவு அடிப்படையில் தான் நம்ம இயங்கிக்கிட்டு இருக்கோம்....யாரோ செய்த வினையால் யாரோ அவதிபடுவதும் இதில் அடங்கும்...இந்த ஒட்டுமொத்த உலக இயக்கமும் ஒன்றோடு ஒன்று ஏதோ ஒரு வகையில் நேரடி தொடர்புகொண்டோ மறைமுக தொடர்புகொண்டோ இயங்கிக்கிட்டு இருக்கு..
இதை வேற எந்த வகையில் விளக்கணும் ன்னு தெரியல

இதுக்கு ஒரு உதாரணம் தான்
Paul the Octopus
இது 2010ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது ஒவ்வொரு போட்டிகளின் முடிவையும் முன்னரே கணித்ததாக சொல்லப்படும் ஒரு கடல்வாழ் உயிரி ஆக்டோபஸ் (எண்காலி)..ஒரு போட்டிக்கு முன் இந்த octopus க்கு உணவளிக்கும் போது இரண்டு பெட்டகம் கொடுக்கப்படும் அந்த இரண்டிலும் போட்டியிடும் இரு அணிகளின் கொடி பொறிக்கப்பட்டிருக்கும்,எந்த அணியின் கொடி பொறிக்கப்பட்டுள்ள பெட்டகத்தை உயர்த்துகிறதோ அந்த அணி வெற்றி பெறும் அதே சமயம் கீழ்நோக்கி வைத்துள்ள பெட்டகம் கொண்ட அணி தோல்வியடையும்
                   - இது தான் இந்த எண்காலியின் சிறப்பு,சரி இதுக்கும் நிகழ்தகவு சார்பியலுக்கும் என்ன தொடர்பு? 
மேற்கண்ட விடயத்தில் இருந்து ஒரு கூற்று விளங்கும்

"போட்டியின் முடிவை octopus முன்னரே கணித்தது"

Uncertainty அடிப்படையில் இதை வேறு விதமாக பிரிச்சு பாப்போம் 

 "octopus பெட்டகத்தை உயர்த்தியதால் அந்த அணி வெற்றி பெற்றது"

எதிர்காலத்தை கணிப்பது கடினம் அதனால் முதல் கூற்றை நீக்கிடலாம்..இரண்டாம் கூற்றின் அடிப்படையில் பார்த்தால் நிகழ்காலத்தில் நமது செயல்கள் எதிர்காலத்தில் விளைவுகளை உருவாக்கும் என்பது உறுதி அது சாதகமோ பாதகமோ அதுவும் duality ன் அடிப்படையில் தான்...அது எப்படி ஒரு பெட்டகத்தை எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு ஆக்டோபஸ் உயர்த்துவதால்,மற்றொரு இடத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத கால்பந்து போட்டியோடு எப்படி தொடர்பு கொண்டிருக்கும்...இது தான் இந்த reality ஓட சூட்சுமமே இங்க நடக்குற எல்லா விஷயமும் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கும்..இருமையின் அடிப்படையில் அது உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம்....என்னதான் duality அடிப்படையில் செயல்பட்டாலும் நாம் வாழும் reality க்கு ஏற்ப நமது மூளை ஒரே ஒரு reality ஐ மட்டுமே நம்பும்..அதாவது,ஒரு காசை சுண்டி விட்டு பூவா,தலையா ன்னு பார்த்தோமென்றால் பூ அல்லது தலை என ஏதாவது ஒன்றை நாம் தீர்மானித்தே ஆகணும்...அதே போல அந்த காசும் பூ அல்லது தலை என ஏதாவது ஒன்றை மட்டுமே காட்டும்...
இது தான் நம்மளோட reality ன் மாயை...இங்க நமக்கு உண்மை,பொய் ன்னு எல்லாமே ஒன்னு தான் ஒன்றின் எதிர்த்துருவம் தான் மற்றொன்று..எதுவும் கெட்டதும் இல்ல எதுவும் நல்லதும் இல்ல எல்லாமே ஏதோ ஒரு நிலைப்பாட்டில் இருக்கணும் என்பதற்காக நாமாக உருவாக்கிக்கொள்ளும் ஒரு மெய்நிகரே

Tuesday 11 August 2020

Uncertainty - நிலையில்லா கோட்பாடு

Uncertainty - நிலையற்றதன்மை
         
இந்த பரந்த உலகத்தில் புழு,பூச்சியில் ஆரம்பிச்சு..பரிணாமத்தின் உச்சம் ன்னு நினைக்கும் மனித குலம் வரைக்கும் எல்லாமே தொடர்ந்து இயங்கிட்டு தான் இருக்கு...இப்படி கட்டுபாடில்லாம இயங்கும் இயக்கமானது சீராக இருப்பதில்லை..நிலையற்ற தன்மையிலே அமைகிறது...இந்த நிலையற்ற தன்மை அனைத்தின் அடிப்படை கூறான அணுக்கரு வின் எலக்ட்ரான் இல் துவங்கி...இந்த ஒட்டுமொத்த உலக இயக்கத்தையும் வரையறுக்கிறது...நிலையற்ற அல்லது ஒழுங்கற்ற எலக்ட்ரான் இயக்கம்...ஒரு உலோக அல்லது ஏனைய தளத்தில் எலக்ட்ரான் இயக்கமானது ஒழுங்கில்லாமல் இஷ்டம் போல நகர்ந்து கொண்டே இருக்கும்...கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்...இவ்வாறு சீரற்று பயணித்து கொண்டிருக்கும் ஒரு துகளின் நிலை(position) அல்லது உந்தம் ( பயணிக்கும் திசை) ஆகியவற்றை ஒரே நேரத்தில் கணிக்க முடியாது - இது தான் Heisenberg ன் நிலையில்லா கோட்பாடு...இந்த சீரற்ற இயக்கத்தின் விளைவு தான் நிலையில்லாமல் இந்த துகள்கள் இயங்குவது...இதற்கும் duality கும் நெருங்கிய தொடர்பு இருக்கு...துகளாக பயணிக்கும் ஒரு matter அலை தன்மையும் கொண்டிருக்கும்..இந்த துகளுக்கும் அலைக்கும் இடையேயான நிலைப்பாட்டை உறுதி செய்யவே இந்த இயக்கம் நோக்கம் போல குண்டக்க மண்டக்க இயங்கிட்டு இருக்கு...இதை அப்படியே மனிதனுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் பொறுத்தி பாப்போம்..

(அலை-மனம் : துகள்-உடல் ) இந்த ரெண்டு duality குள்ளேயும் மாட்டிக்கிட்டு நம்ம ஆன்மா படும் பாடு தான் இந்த இயக்கமே...துகளானது சூழ்நிலைக்கு ஏற்றார்போல் வேலை செய்யும்...ஆனால் அலை இயக்கம் எப்போதும் ஒற்றை செயல் முறையை கொண்டே தான் இருக்கும்...அலை வடிவில் இருக்கும் ஆன்மாக்கள் பிடிவாதம் கொண்டதாக இருப்பதன் காரணமும் இது தான் - சில விஷயங்களை தராவிட்டால் மன்னிக்கவே மன்னிக்காது..கிடா பலி கேட்பது - நேத்திகடன் செய்வது போன்றவற்றை கண்டிப்புடன் கேட்டு பெறுவது போன்றவை இதற்கு சான்றாக கொள்ளலாம்...இதே துகளாக இருக்கும் மனிதர்கள் அப்படி இல்லை ஏன்னா நாம மூளையினுடன் தொடர்புல இருக்கோம்...மூளை புலனுறுப்புகளுடன் தொடர்புல இருக்கு...எனவே  இதன் இயக்கம் வேற மாதிரி இருக்கும்...இதற்கு உதாரணமா ஒருத்தன் என்னதான் சிறுநீரை அடக்க மனதளவில் முயற்சித்தாலும் அவனது உடல் ஒத்துழைக்காது... காரணம் மூளை உடலின் துகள் நிலையை தக்கவைத்து கொள்ள முயற்சி பண்ணும்....இந்த மனதுக்கும் உடலுக்கும் இடையேயான சண்டை தான் இந்த சீரற்ற இயக்கம்....main road பக்கம் போய் ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க எவ்வளவு வாகனங்கள்,எவ்வளவு மக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக வேகமாக இயங்கிட்டு இருக்காங்க...ஒரு சீர் இல்லாமல் போய்கிட்டே இருப்பாங்க..

இந்த நிலையற்ற தன்மையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்க...நேத்து இரவு வரைக்கும் நல்லா பேசுனவன் இன்னிக்கு காலைல பேச மாட்டான்... ஒருவருசம் முன்னாடி நாம யார்கூட நெருக்கமா இருந்தோம் இப்போ யார்கூட நெருக்கமா இருக்கோம்...ஒரு நேரம் சிரிச்சு அன்பா பேசுறாங்க ஒரு நேரம் அவங்களே நம்மல கோவப்படுத்துறங்க...நேத்து பிடிக்கல ன்னு விலகி போனவங்க இன்னிக்கு நெருங்கி வந்து பேசுறாங்க..நேத்து வரைக்கும் கஞ்சிக்கே வழியில்லாம இருந்தவன் இன்னிக்கு கோடீசுவரன்,லட்சாதிபதியா இருந்தவன் இன்னிக்கு தினக்கூலி வேலைக்கு போறான்
அப்பப்பா என்ன ஒரு நிலையில்லா உலகு...

இந்த உலகம் துவங்கியது தொட்டே இந்த இயக்கம் இப்படி தான் இருக்கும்..இது துகளிற்கும் அலையிற்கும் இடையே நடக்கும் யுத்தம் இதுல சிக்கிக்கிட்டு ஏன் ஒடுறோம் எதுக்கு ஓடுறோம் எதுக்கும் சம்பாதிக்குறோம் என்ன செய்யுறோம் ன்னு அலஞ்சு திரியும்போதே வாழ்க்கை முடிஞ்சிரும்...

இந்த சீரற்ற நிலையை கணிப்பது கடினம் ஏன் சாத்தியாமே இல்லாமலும் போகலாம்...இது இப்படி இருப்பதால் தான் இந்த நிலையற்ற கோட்பாடு உறுதியற்றதாகவும் இருக்கு...இது தான் நிகழ்தகவியல் இத இன்னொரு நாள் பதிவிடுறேன்..

இதை சீர்தூக்கி பார்த்த சிலர் தான் இன்னிக்கு தத்துவ ஞானிகளா இருக்காங்க.. துகளையும் அடக்கி அலையையும் அடக்கி அந்த duality என்னும் நிலையை உடைச்சி சித்தம் தெளிஞ்சவங்க...

இருக்கு ஆனா இல்ல - இதுவும் இதன் அடிப்படையில தான் இயங்குது எல்லாமே நிகழ்தகவின் அடிப்படை கோட்பாடு தான்..50/50 நடைமுறை தான் இங்க நிலைபாட்டியலே..
இதை இன்னமும் தெளிவா சொல்ல தெரியல...

Uncertain relativity
சூழ்நிலைகளும்,உணர்ச்சி/உணர்வுகளும் தான் ஏதேனும் ஒரு நிலையை தேர்வு செய்யும் முயற்சியில் இந்த நிலையற்ற இயக்கத்தை நகர்த்துகிறது..உடல் ஒரு மூளையுடன் பிணைக்கப்பட்டுள்ளதால் ஆம்,இல்லை என்ற இரண்டில் ஒரு நிலைப்பாட்டை கண்டிப்பாக தேர்வு செய்தே ஆகணும்...அதனால் தான் உண்மை எது பொய் எது ன்னே தெரியாம பல இடங்களில் குழப்பம் மட்டும் மிஞ்சுகிறது...என்ன செய்யுறோமோ தெரியாது ஆனா எதையாவது செஞ்சு நம்மல நாமே திருப்தி படுத்திக்கணும்..நல்லதோ கெட்டதோஅதுமட்டுமன்றி இந்த duality இல் ஏதேனும் ஒன்றை ஏதோ ஒரு காரணத்துக்காக தேர்வு செஞ்சே ஆகணும்...கோவிலில் வரிசையில் நிக்கும்போது, ஒன்னு முன்னாடி நகரனும் இல்ல ன்னா வழிய விட்டு பின்னாடி போய்டனும் அத விட்டு நடுவுல நின்னா கண்டிப்பா எவனாச்சும் திட்டுவான்...ஏன்னா அவன் நகரனும் அவனால் யோசிக்க முடியாது..காரணம் அவன் அடுத்தகட்ட நகர்வுக்கு தள்ளப்படுறான் அது தான் நிலையற்ற சார்பு - சரியோ தப்போ ஏதோ ஒன்ன பண்ணியே ஆகணும் இல்ல ன்னா இங்க survive பண்ண முடியாது...

ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க..எவ்வளவு பெரிய உலகம் எத்தனை நாடுகள்,மதங்கள்,அரசியலமைப்பு,பணம்,பொருளாதாரம், போர்,புரட்சி - எல்லாம் எதுக்கு...சம்பந்தமே நிலை  இல்லாத நகர்வுக்காக மட்டுமே..அதுவும் ஒழுங்கற்ற இயக்கம்...

நிலையில்லா இந்த உலகத்துல நிலைகொள்ள முடியாது ன்னு தெரிஞ்சும் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள நினைக்கும் மக்கள் ; பாவம்,அவங்களுக்கு தெரியாது அதுவும் நிலையில்லாமல் தான் போகும் ன்னு - காரணம் நிலையில்லாமல் இயங்கும் இந்த நிலையில்லா கோட்பாட்டின் நிலைப்பாடு தான்,நாளைக்கு இதுவும் நிலையில்லாமல் போகும்..

Friday 7 August 2020

Inside Dream - Human Reaction

Inside Dream
HUMAN REACTION
இது உடலுக்கும்,மூளைக்கும் இடையே நடக்கும் ஒரு அனிச்சை இயக்கம் ன்னு சொல்லலாம்.அது என்ன ன்னா..பொதுவாக கனவுகள் ஒருவரின் எண்ணங்களை பொறுத்து தோன்றும் அதவது ஏக்கங்கள் - ஒருத்தன் உடலளவிலும் மனதளவிலும் ஏக்கங்கள் கொண்டிருந்தால் நிச்சயமாக அவனது உடல் மற்றும் மூளை இரண்டுமே அதை தீர்த்துக்கொள்ளவே முனையும்...உதாரணத்துக்கு தாகமா இருக்கும் குழந்தை தண்ணீரை தேடி ஓடும்..அது எங்க இருந்தாலும் அதை குடிக்க முயலும் இல்ல ன்னா அழுகும்..இது தான் ஏக்கம் இந்த ஏக்கம் தான் எண்ணங்களாக,ஆசையாக கடைசியில் கனவாகவும் உருவெடுக்குது..கனவு ன்னா நீங்க நெனைக்குற மாதிரி லட்சியம் கிடையாது..தூங்கும்போது ஏற்படும் கனவு..ஏக்கங்களால் அல்லது வேதனையால் நிறைந்த உங்களது மனது அதை தீர்த்துக்கொள்ளும் நோக்கிலே செயல்பட துவங்கும்..உதாரணத்துக்கு கார் ஓட்டனும் ன்னு ஆசையில் தூங்குறவனுக்கு நிஜத்திலே கார் ஓட்டிவிட்டது போல கனவுகள் வரும்..இது அவனது மூளை செயர்க்கையாக உருவகம் செய்யும் நிகழ்வு இதில் அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்...ஆனால்,இது சரியாக உருவாக காரணம் அவனது எண்ணங்களும் ஏக்கங்களும் தான்...ஒருவனது கனவில் பல மணிநேரங்கள் சில நொடிகளில் நடக்கும் இதெல்லாம் நம் மூளை நம் ஆன்மாவிற்காக உருவாக்கும் போலியான காட்சியமைப்பு..இந்த நிகழ்வின் போது உடல் உறுப்புகளின் பங்களிப்பு பெரிதாக தேவைப்படாது...காரணம் நமது ஆன்மா தான் கனவுலகில் வாழ்கிறது...ஆனால் நம் ஆன்மா கனவுலகில் அனுபவிக்கும் செயல்களுக்கு reaction நம்ம உடல்ல உணரலாம்...என்ன தான் கனவில் ஆன்மா மட்டுமே ஈடுபட்டாலும் கனவை தோற்றுவிக்கும் நமது மூளை உடலோடு தான் இணைஞ்சிருக்கு எனவே கனவில் நம்ம ஆன்மா அனுபவிக்கும் செயல்களுக்கு reaction நம்ம பூத உடலில் உணரலாம்...உதாரணத்துக்கு கடும் குளிரில் சுருண்டு போய் உறங்குபவனுக்கு குளிர்காய்வது போலவும்,போர்வைக்குள் சுருண்டு கொள்வது போலவும் கனவு வந்தால் அந்த இதமான கதகதப்பை அவன் உடலாலும் உணரலாம்...இது எல்லா புலன்களுக்கும் பொருந்தும்...கனவில் சாப்பிடுவது போல இருந்தால் நிஜத்தில் வாயை திறப்பது,வாயில் எச்சில் சுரப்பது..கனவில் அடிபட்டால் வலிக்காது ஆனால் வலிப்பதை போல மனது பாவனை செய்யும்..இங்க உண்மையில் எந்த சுவையும்,கதகதப்பான உணர்வும் தோன்றவில்லை எல்லாம் நமது மூளை உருவாக்கும் போலியான உருவகம்..மூளை உடலோடு இணைப்பில் உள்ளதால் அவை நம்மால் உணர முடிகிறது எப்படியோ...சந்தோஷமான கனவா இருந்தால் நல்லது தான்....இது போல நமக்கு தேவையான கனவுகளை உருவாக்கி அனுபவங்களை தெரிஞ்சிக்கலாம்...உடலால் உணர முடியாததை ஆன்மாவால் உணரலாம்...இதே போல ஒருவர் கணவுக்குள்ள இன்னொருவர் நுழைய முடியுமா ன்னு போக போக தெரிஞ்சிக்கலாம்....

 கனவுல சுச்சு போறதா நெனச்சு நிஜத்தில எத்தனை பேர் சுச்சு போனவங்க கைய தூக்குங்க (நான் first)

Inception
Inception - அதாவது பிறரது கனவில் ஊடுருவி அவர்களது மூளையில் உள்ள தகவல்களை திருடுவது தான் இந்த கதை...நிஜத்தில் இந்தளவுக்கு சாத்தியமா ன்னு தெரியல ஆனால்,பிறரது கனவில் நாம் ஊடுருவலாம் ங்குறது மட்டும் தெளிவா தெரியும்...எப்டி ன்னு தான கேக்குறீங்க~??..முதல்ல சாதாரணமாக ஒருத்தர் மூளையில் நமது கருத்துக்களை விதைப்பது/திணிப்பது குறித்து பாப்போம்...ஒருத்தர் கிட்ட போய் நீங்க ஒரு ஆப்பிளை நினைக்காதீங்க ன்னு சொன்னா அவர் கண்டிப்பாக ஆப்பிளை தான் நினைப்பார் (இது ஏற்கனவே நான் சொன்ன உதாரணம் தான்)...இதுல இருந்து என்ன தெரியுது ன்னா புலன்களின் வழியா நாம் குடுக்கும் சமிக்கை தான் அவரது மூளையில் பிம்பங்களை ஏற்படுத்தும்...இத அடிப்படையா வெச்சிக்கிவோம்... மனிதன் துகள்(உடல்) அளவில் இயங்கும் போது அலையாக ஊடுருவ முடியாது அதே சமயம் ஒருத்தர் தூங்கிட்டு இருந்தாலும் அவரது மூளையில் உண்டாகும் எண்ண காட்சிப்படிமங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை தோற்றுவிக்கும் இந்த அலைவரிசையில் சரியாக ஒன்றிப்போர் அவரது கனவில் தோன்ற வாய்ப்பிருக்கு...இதுக்கு முதலில் இருவரின் எண்ண அலைகளும் ஒன்றிக்கணும் அப்படி நடந்தா கனவில் தகவல் பரிமாற்றம் சாத்தியமாகும்..இதற்கு முதலில் உடலவிலும் மன அளவிலும் பல சோதனைகள் இருக்கு...மேலும் கனவில் நாம் தொடர்புகொள்ளும் நபருக்கும் நமக்கும் இடையேயான எண்ண பரிமாற்றம்(Telepathy) பொறுத்தும் அமையும்ஆனா இது இன்னும் ஒரு pseudoscience தான்...ஏன்னா சில மனோதத்துவ மருத்துவர்கள் இது அவங்க மூளை ஏற்படுத்தும் ஏக்கத்தினால் வந்த விளைவு உண்மையில் யாரும் கனவில் வருவது இல்ல ன்னு சொல்றாங்க..சரி மனிதரால் முடியாது ன்னா அலைவடிவமாக இருக்கும் ஆன்மாக்களால் சாத்தியம் தான...இந்த குறிப்பிட்ட அலைவரிசையில் ஆன்மாக்கள் ஒன்றிக்கும் போது...கனவு காண்பவர் மூளையில் ஆன்மாக்கள் ஏற்படுத்தும் பிம்பங்கள் பதியும் அவை கூற முனையும் விடயங்கள் சில சைகை அடிப்படையில்(குறிப்பிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட நிகழ்வுகள் நடப்பதை எச்சரிக்கும் ன்னு சொல்லுவாங்க) உணர்த்தும் இன்னும் சிலருக்கு முழு உருவமாக காட்சிப்படும் அந்த ஆன்மா அவரிடம் பேசும்...இதை தான் கிராமங்களில் இறந்தவர்கள் கனவில் வருவாங்க ன்னு சொல்லுவாங்க இதை உண்மை ன்னு சொல்லுவாங்க...கனவுல சாமி வந்து இதை செய்ய சொல்லுச்சு,அது கேட்டுச்சு ன்னு சொல்லுவாங்க...இது நினைவூட்டலாகவும் இருக்கலாம்..
தமிழகத்தில் குலதெய்வதோடு தொடர்புகொள்ள கனவு தான் சிறந்த வழி ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க...தென்மாவட்டங்களில் இது சாதாரணமா நடக்கக்கூடியது...கனவில் குறிகேட்டு சொல்லும் அறிய பழக்கமும் இங்க இருந்துட்டு தான் வருது... இதை பத்தி பொதுவுல விரிவா பேச கூடாது..ஆன்மாக்களோடு ஆன்மா தொடர்புகொள்ளும் ஒரு அற்புத நிகழ்வு அது...எல்லோருக்கும் அது சாத்தியப்படுவது அரிது.. கனவை ஒரு ஊடகமாக பயன்படுத்தி இந்தளவுக்கு தொடர்புகளை ஏற்படுத்த முடியும் ன்னா இதை வெச்சி சில கெட்டதும் செய்யலாம்...
பாம்பை கனவில் கண்டால் கெட்டது ன்னு சொல்லுவாங்க இதெல்லாம் சமிக்கை குறியீடு தான்..

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒருவருக்கு எதிரா மற்றவர் உண்டாக்கும் எதிர்மறை ஆற்றல் (ஏவல்)..அவரது ஆன்மாவை தான் முதலில் பாதிக்க துவங்கும்..ஆன்மாக்களை தொடர்புகொள்ள சரியான நேரம் தூக்கம் (கனவு) தான்....இந்த நேரத்தில் தான் அந்த எதிர்மறை ஆற்றல் அந்த ஆன்மாவின் மூளையில் தேவையற்ற பிம்பங்களை தோற்றுவித்து அவரது புலன்களுக்கு பய உணர்வையும்,பெரிய ஒரு தாக்கத்தையும் குடுக்கும்...இதற்கு உதரணம் சொல்லணும் ன்னா நம்ம வீட்டில் உள்ள TV, cellphone எப்படி நம்ம மூளையை பாதிச்சு தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவற்றை உருவாக்குதோ அப்படி தான்....

நமக்கு சம்பந்தமில்லாத ஒரு ஆன்மா...
நம்மோடு...
கனவில் தொடர்பு கொள்கிறதே..?
இது எப்படி சாத்தியம்..?

இது தான் யட்சிணி/துர்தேவதை/தீய ஆன்மாக்களின் தீண்டல் ன்னு சொல்லுவாங்க - யாராலோ ஏவப்பட்டோ அல்லது தாமாக சுயதேவைக்காகவோ ஒருவரின் உடல் மற்றும் மூளையை தொடர்புகொள்ள நினைக்கும் ஆற்றல் அல்லது ஆன்மாக்களின் செயல் தான் இது...இது செய்வினை,ஏவல் போன்றவற்றில் அடங்கும்...தாமாக வருவது அதன் சுயதேவைக்காக அமையலாம்....

Tuesday 28 July 2020

Boundaries of Dark Matter Vibrations-கருப்பொருள் ஆற்றலின் எல்லை ஆதிக்கம்

கருப்பொருள் ஆற்றலின் எல்லை ஆதிக்கம்
Boundaries of Dark Matter Vibrations

             

ஒரு உயிர் உருவாக்கும் எண்ணங்களை செயல்படுத்த அதன் உடல் உதவியாக இருக்கும்..இறந்த ஆன்மாக்களின் இயக்கத்திற்கு அலைகளும்/அதிர்வுகளும் உதவுகின்றன..இப்படி உருவாகும் அலைகள் ஒரு radiation போல உருவாகி குறிப்பிட்ட எல்லையை கொண்டு பரவி கிடக்கும்...நீரில் கல்லை போட்டால் அதன் அதிர்வு வளையம் எப்படி பரவுமோ அது போல..இது அந்த கருப்பொருள் ஆற்றலின் வீரியத்தை பொருத்தும் அமையும்...இந்த ஆற்றல்களின் எல்லைக்குள் மற்றவர்கள் செல்லும்போது அதனால் பாதிக்கப்படுவார்கள்...உதாரணத்திற்கு TV ஓடும் போது பக்கத்தில் phone இருந்தால் ஒன்றின் electro magnetic radiation மற்றொன்றை பாதிக்கும்...இது அப்டியே cell phone tower கும் பொருந்தும்... ஆவிகள்/ஆன்மாக்களின் நடமாட்டத்தை கண்டறிய emf detection எந்திரங்கள் பயன்படுத்தபடுது amazon ல கூட கிடைக்குது...இது போல கருப்பொருள் ஆன்மாக்களின் எல்லைக்குள் நுழையும் போது பல வகைகளில் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்...உதாரணத்துக்கு சில வாடகை வீடுகளில் நிரந்தரமாக யாரும் குடியிருக்க முடியாமல் இருக்கும்...காரணம் அந்த வீட்டை சுற்றியும் திரியும் அல்லது அந்த வீட்டின் சொந்தகாரரின் குலதெய்வ ஆன்மாவின் ஆதிக்கம் கூட அதிகமாக  இருக்கலாம்..இதை தவிர்க்க தான் புதிதாக வீடுகட்டி குடியேறும் முன் தச்சு கழித்தல் செய்வாங்க..இதன் மூலம் அந்த வீட்டை சுற்றி உள்ள ஆன்மாக்களுக்கு ரத்த பலியிட்டு பூஜைகள் செய்து வீட்டில் தங்களது குல தெய்வ ஆற்றலை புகுத்தி கொள்வார்கள்...இதற்கு குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டு வந்த பிடி மண், எலுமிச்சம்பழம் போன்ற radiation protection களை வைத்து மற்றவை நெருங்காமல் பாதுகாப்பார்கள்..இப்போ நவீன உலகில் எந்திரங்களின் கதிர்வீச்சில் இருந்து தற்காத்து கொள்ள பழைய படி செம்பு (copper) பொருட்களை பயன்படுத்த துவங்கி விட்டனர்...இணையத்தில் தேடி பாருங்க rafiation or emf protection என்று....இதை பல காலம் முன்னரே யந்திர தகடுகள், படிக கற்கள் போன்றவற்றை ஆன்மாக்களின் radiation இல் இருந்து தற்காத்து கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்...உதாரணத்திற்கு படிகாரகல்,crystals,யந்திர செம்பு தகடு,எலுமிச்சம்பழம்,உலோகங்கள் போன்றவை.. எலுமிச்சம்பழம் போன்றவற்றில் நேர்மறை ஆற்றல்களை விதைத்து அதை ஒரு signal jamer போல பயன்படுத்தலாம்...பயணத்தின் போது எலுமிச்சம்பழம் கொண்டு செல்வதும் இதற்கு தான்...நாம் வேறொரு ஆற்றல் வட்டத்தினுள் செல்லும்போது அதன் அதிர்வுகள் நம்மை தாக்காமல் இருக்க நம்மால் நேர்மறை ஆற்றல் விதைக்கப்பட்ட பழத்தை பயன்படுத்துறோம்...கர்ப்பிணி பெண்கள் கையில் எப்பொழுதும் ஒரு எழுமிச்சம்பழமும், உலோக துண்டும் கொடுத்திருப்பாங்க... சில கதைகள் ல சொல்ற படி செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஆற்றல்கள் (பூதங்கள்) கற்பிணிப்பெண்களை பலி கேட்கும் ன்னு...அதனால் தான் அவர்களை தற்காத்து கொள்ள இந்த radiation pritector கள் பயன்படுத்துறாங்க...

இதன் தன்மையை check பண்ணனும் ன்னா - ஒரு செடியை வெட்ட வெளியிலும் மற்றொரு செடியை செம்பு வேலிகளின் நடுவிலும் வைத்து வளருங்கள்...இது cell phone signal coverage உள்ள இடத்தில் இருக்கணும்..இந்த இரண்டின் வளர்ச்சியை கவனித்தால் copper வேலியின் கீழ் உள்ள செடி நன்றாக வளரும் - இப்போ புரியாத கோவில் கலசம்,யந்திர தகடு எல்லாம்...

குழந்தைகளின் தொட்டிலின் கீழே அரிவாள் போன்ற எஃகு உலோகங்கள் பயன்படுத்துவதும் இதுக்கு தான்...பருவமடைந்த பெண்களுக்கு காவலாக வெண்கல பூண் போடப்பட்ட உலக்கையும் இதுக்கு தான்..இதே போல குறிசொல்லும் பெண்களின் கையிலும் சிறிய பூண் போடப்பட்ட உலக்கை போன்ற குச்சி இருக்கும்...இது போக வீட்டின் வாசலில் கட்டப்படும் குதிரை லாடம்,வீட்டு கதவு நிலை வைக்கும் போது கீழே வைக்கப்படும் ஐம்பொன் தகடு போன்றவை அனைத்தும் இந்த negative radiation இல் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவே..

சுமைதாங்கி கல்,நடுகல் போன்றவை கேள்விப்பட்டு இருப்பீங்க..இதன் பணி வித்தியாசமானது சில வீடுகளில்/தொழிற்சாலைகளில் electro magnetic field radiation அதிகமாக இருக்கும் அதனால் அந்த வீட்டின் இணைப்பு earthing செய்யப்படும் அதாவது தரையிரக்கம்.. இதுபோல கருப்பொருள் ஆற்றல்கள் உருவாக்கும் அதிர்வுகளை குறைக்க தான் இந்த நடுகல், சுமைதங்கி கல் - அதி வீரிய அலைகள் இவ்வாறு  grounding செய்யப்படுவதால் அதன் வீரியம் குறைந்து இருக்கும்...ஆனால், சில ஒப்பந்தங்கள் அடிப்படையில் அந்த கருப்பொருள் ஆற்றல்களை தேவைப்படும் போது வெளியே கொண்டுவரலாம்...சில நினைவலைகள் மரம் போன்றவற்றிலும் தங்கும் - தென்மாவட்டங்களில் பனை மரத்தில் ஆவேசமான முனியாண்டி கோவில் அமைந்திருக்கும்..கடவுளாக வழிபட்டாலும் மக்கள் உச்சி பொழுதில் அந்த பக்கம் செல்ல அச்சம் கொள்வார்கள்..
கிராமங்களில் இதுக்கு தான் எல்லைகட்டுப்பாடுகள் இருக்கும்..குறிப்பிட்ட எல்லைகள் குறிப்பிட்ட சிறு தெய்வத்திற்கு இருக்கும் (இந்த கண்மாய்கரைக்கே கருப்பு தான் காவல்,இந்த வயக்காடு முழுசும் ஆத்தா கட்டுப்பாடு தான் - இது போன்ற சொல்லாடல்கள் இதை மேலும் வலுப்படுத்தும்)
இன்னமும் தெய்வங்கள் காவல்காக்கும் மா,பலா தோப்புகள் எங்க ஊர்ல இருக்கு..

இது போல ஊர்விட்டு ஊர்வந்து வாழும் மக்கள் அவர்கள் தங்கியிருக்கும் பகுதி எந்த கருப்பொருள் ஆற்றலின் கட்டுப்பாட்டில் உள்ளதோ அதை வணங்கி அதற்கு தேவையான பலியை கொடுத்து சமரசமா போய்டனும்..இல்ல ன்னா அந்த ஆற்றல் மட்டத்திற்குள் நுழையும் நம்மை அந்நிய ஆற்றலாக எண்ணி தொந்தரவுகள் தர துவங்கும்...இது அந்த பகுதியில் ஏற்கனவே இருக்கும் சிறு தெய்வங்களுக்கு பொருந்தும் ஆனால் அதுக்கு நீங்கள் இருக்கும் எல்லை யார்க்கட்டுப்பாட்டில் உள்ளது ன்னு தெரிஞ்சிக்கணும்...அங்க அந்த ஆற்றல் வலிமை குன்றி இருந்தா நாம் புதிதாக புகுத்தும் ஆற்றல் அங்கு ஆதிக்கம் செலுத்தும் அப்போ நாம தான் ராஜா...
இதுவே தீய ஆன்மாக்களாக இருந்தால் அதனிடம் சமரசம் லாம் செய்ய முடியாது வழக்கம் போல radiation protection பயன்படுத்த வேண்டியது தான் ( யந்திரதகடு,crystals, எலுமிச்சம்பழம் )...

குறிப்பிட்ட சில இடங்களில் விபத்துகள் நடப்பதும் இதில் சேரும் ரத்த பலிக்காக வலிமை குன்றிய ஆற்றலோடு தன்னோட எல்லைக்குள் நுழைபவர்களை எளிதில் காவுவாங்கி விடும்...இதுக்கு தான் #எழுமிச்சங்கா பயன்படுத்துறோம்
சில இடங்களில் சில அதிர்வுகளை சமாளிக்க மற்றொரு கருப்பொருள் அதிர்வை பயன்படுத்துவாங்க... இதுவும் குவாண்டம் இயக்கம் தான்...
பேய் படங்களில் கோவில் எல்லைக்குள் ஆன்மாக்கள் வரமுடியாதது போல காட்சி படுத்தியிருப்பங்க...அது தான் இது...

இங்க எல்லாமே அலையியக்கம் தான்
ஒன்னோட ஒன்னு மோதும்,விலகும் - இறுதியில் வலிமை மிக்கது ஆதிக்கம் செலுத்தும்...வலிமை குறைந்ததாக இருந்தாலும் தற்காத்து கொள்ள துவங்கும்

Friday 24 July 2020

Spiritual motion in Quantum - நினைவலைகளின் குவாண்டம் இயக்கம்

நினைவலைகளின் குவாண்டம் இயக்கம்
Spiritual motion in Quantum 

அண்டத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஈரியல்பு தன்மையின் அடிப்படையில் தான் இயங்கிக்கிட்டு இருக்கு...அதாவது துகள் மற்றும் அலை பண்புகள்..இது  குவாண்டம் இயக்கவியல் மூலம் தெளிவாகிறது.அணுக்களால் உருவான எந்தவொரு பொருளுக்கும் இது சாத்தியமான ஒன்னு தான்..அதன்படி மனிதனும் இதன் கீழ் தான் இயங்கனும்...இந்த ஈரியல்பு விதியில் இயங்கும் பொருள் துகளாக இயங்கினால் கட்புலனாகும் அளவிலும்,அலையாக இயங்கினால் கட்புலனாக வகையிலும் இயங்கும்...மனிதன் உயிரோடு இருக்கும் போது இவ்விரு தன்மைகளை கொண்டிருந்தாலும் துகள் நிலையில் மட்டுமே இயங்க முடியும் ஏனென்றால் மனித மூளை ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே உணர கூடியது..இதுவே ஒரு மனிதன் அலை வடிவில் இயங்கினால்??? - அவன் ஒரு super human ஆக உருவெடுப்பான்..அவனால் எதையும் எங்கும் எப்போதும் இயக்க முடிகின்ற அளவிற்கு வல்லமை படைத்தவன் ஆகிவிடுவான்..இதற்கெல்லாம் முட்டுகட்டு போடும் வகையில் அமைந்தது தான் துகள் தன்மை அதாவது உடல் நிலை..
ஒருவனது ஆன்மா(அலை) உடலை(துகளை) விட்டு வெளியேறிய பின் அலையாக மட்டுமே இயங்க முடியும் இந்த நேரத்தில் தான் நான் சொன்ன super human நிலைக்கு செல்லலாம்..ஆனால்,துகளை கைப்பற்ற இயலாத காரணத்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே அந்த அலை சுற்றி திரியும்...இதை தான் கிராமத்தில் காத்து(அலை),கருப்பு ன்னு சொல்லுவாங்க..
இப்படி அலையாக எங்கும் பரவி கிடக்கும்  ஆன்மாக்களை வணங்கும் பழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருது.. குறிப்பிட்ட சில காரணத்தால் இறந்த ஆன்மாக்களை மட்டுமே வணங்குவாங்க..
இப்படி அலையாக (காற்றாக) இருக்கும் அந்த ஆன்மாவை அழைத்து ஒருவரது உடலுக்குள் இறக்கி..துகள் நிலையை உணர செய்வார்கள் அதாவது self consciousness ஐ கொடுத்து தங்களுக்கு வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து பின்னர் அந்த துகளுக்கு தேவையானவற்றை தந்து அனுப்பி விடுவார்கள்...குறிப்பிட்ட எல்லைக்குள் பரவி கிடக்கும் அந்த அலை அங்குள்ள மக்களின் தேவைக்கேற்ப எல்லைக்குள் வேறு ஆற்றல்கள் நுழையாமலும், வேளாண்மை சிறக்கவும், மழை வேண்டியும் அவர்கள் கேட்டவற்றை நிகழ்த்தும்...மழை பொழிய செய்தல்,வேளாண்மை பெருக்கம் என்பது குவாண்டம் உலகில் சாத்தியமானது...இதற்கு அங்கு அலையாக செயல்படும்  ஆன்மாவே காரணம்..
இதை தவறான வழிகளிலும் பயன்படுத்த கூடும் ஏவல் காரியங்களுக்கு இது போன்ற அலையாக சுற்றி திரியும் ஆன்மாக்களை பிடித்து தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும் செய்கிறார்கள்..
குறிப்பிட்ட விபத்திற்கு பின்னர் சில ஊர்களில் மழை பொலிவு குறைந்ததாகவும்,விவசாயம் முடங்கியதாகவும் சொல்லப்படும்..அதே சமயம் சில கிராம அம்மன் கோவில்கள் வேளாண்மை செய்யும் களத்து மேட்டின் நடுவிலே அல்லது கண்மாய் கரைகளிலோ அமைந்திருப்பதையும் தொடர்புபடுத்தி பாத்துக்கோங்க..
இதே உயிரோடு இருக்கும் போது இது போன்ற அலை இயக்கம் என்பது அசாத்தியமான ஒன்று தான்...இதை சாத்தியப்படுத்தும் வகையில் சில செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கு...ஆனால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்...
இன்னும் சிலர் தங்கள் வீட்டில் இறந்த கன்னிப்பெண்களை தோட்டத்தில் நடுகல் வைத்து வழிபாடு செய்வார்கள்... இது அவர்களின் தோட்டத்தை காக்கவும்,மண் வளர்ச்சிக்கும் உதவும்

சில பேய் படங்களில் பேய்கள் TV போன்ற மின் சாதனங்களையும் கட்டுப்படுத்தும் அதே சமயம் மரம் செடி போன்றவற்றையும் கட்டுப்படுத்தும் மேலும் காற்று வாக்கில் மேலிருந்து கீழிரங்கும்,எங்கு ஓடினாலும் முன்வந்து நிற்கும்,ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்கும்.....இதெல்லாம் குவாண்டம் அறிவியலின் அடிப்படையில் சாத்தியமானதே...
இதை மேலை நாட்டினர் நிரூபிக்கும் வரை இது ஒரு Pseudoscience தான்.
 

Human Frequency

Human Frequency
ஒரு மனிதனின் மூளையில் எழும் எண்ணங்களும்/சிந்தனைகளும் அதிர்வுகளை தோற்றுவிக்கும் இது யாவரும் அறிந்ததே..இந்த அதிர்வுகள் வலுப்பெறும் போது அதிர்வெண்ணாக உருவெடுக்கும்..இது தான் frequency of human brain wave - இது போல ஒருத்தருக்கு மேல ஒரே மாதிரி சிந்தனையை கொண்டிருந்தால் அந்த அதிர்வெண்கள் ஒரே அலைவரிசையில் அமையும் அதாவது FM ரேடியோ போல..இது உலகில் எந்த இடத்தில் இருப்பவர்களையும் இணைக்கும்.. இது ஒரு World wide frequency modulation போல செயல்படும்.. அதாவது,உலகெங்கிலும் உள்ள ஒத்த சிந்தனையை/எண்ணங்களை கொண்டவர்களை இணைக்கும் செயல்பாடு...உதாரணத்திற்கு தற்போது உங்களுடன் நெருங்கி பழகுபவர்கள் ஏதோ ஒரு அலைவரிசையில் ஒத்து போவதன் விளைவாக தான் உங்களோடு இணைப்பில் உள்ளார்...நீங்கள் ஒரு பொருளை வாங்கனும்ன்னு நெனைக்குறீங்க ன்னு வெச்சிக்குவோம்..அப்போ உங்க மூளையில் அந்த பொருள் தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகள் கேள்விகள் எழத்துவங்கும் இது ஒரு அதிர்வெண்ணாக கொள்வோம்..இதே போல் அந்த பொருளின் தேவை உள்ளவரோ அதை பற்றி தெரிந்தவரோ மற்றொரு இடத்தில் எண்ணங்கள் மூலம் அதிர்வெண்ணை உருவாக்குகிறார் ன்னு வெச்சிக்கலாம்...இப்போ இந்த இருவரையும் இணைப்பது அந்த அதிர்வெண்ணின் அலைவரிசை ஒன்றிப்பு நீங்கள் அவரை தேடியோ அவர் உங்களை தேடியோ நகர தொடர்வது தான் அடிப்படை (இப்போ சொன்னது உதாரணத்துக்கு மட்டுமே)..

இந்த அலைவரிசை ஒன்றிப்பு ஈர்ப்பின் அடிப்படையில் நிகழும் பிரபஞ்ச ஈர்ப்பு - அதாவது பசும்புல்லை தேடி ஆடு செல்வது போல்...இது ஒரு அனிச்சை இயக்கம்...இதில் மேம்பட்ட நிலை தான் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே அவரது எண்ணங்களை உணர்வது...உலகின் எங்கோ இரு இடங்களில் இருப்பவர்கள் யார் எவரென தெரிந்தோ/தெரியமலேயோ எண்ணங்களை பரிமாறிக்கொள்வது - இது எப்படி ன்னா குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருவரின் சிந்தனை(தகவல்) upload செய்யப்படும் அதே அலைவரிசையில் யார் ஒத்திசைகிறாரோ அவருக்கு அந்த தகவல் கடத்தப்படும்(download)..கடத்தப்படும் நபரின் சிந்தனையில் புதிதாக உதிக்கும் சிந்தனை போல தோன்றும் ஆனால் உண்மையில் அது வேறு ஒருவரின் கடத்தப்பட்ட சிந்தனையாக கூட இருக்கலாம்..இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் சரியாக அதே அலைவரிசையில் ஒத்திசைப்பது... நான் நெனச்சேன் நீ சொல்லிட்ட/இதே தான் நான் சொல்ல வந்தேன் - இது போன்ற சம்பவங்கள் லாம் இதன் அடிப்படை...சமீபத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் இடையில் இது போல பல விஷயங்கள் நடந்திருக்கு அவன் நினைப்பான் நான் சொல்லுவேன்...இது 90% ஒத்துப்போகும் நிகழ்வுகளாக நடக்கும்...சில விஷயங்கள் அவனது சிந்தனைகள் தான் என்னூடே தரவிறக்கம் செய்யப்படும்..எளிமையா சொல்லணும் ன்னா அவன் யோசிப்பான் நான் அதை திருடுறேன் எனக்கே தெரியாம...
இதை தான் telepathy ன்னு சொல்றாங்க..

இது போல நம் சிந்தனைகளை மற்றவர்கள் ஒத்திசைக்க கூடாது என்றால் நாம் உருவாக்கும் அலைவரிசை வித்தியாசமாக இருக்கணும்...இது எண்ணங்கள் உருவாக்கத்தில் ஏற்படுத்தும் தந்திரம்...இது போன்ற அலைவரிசை ஒன்றிப்பு ரத்த உறவுகளில் மிக சாதாரண ஒன்று தான் - உன் அப்பா போல யோசிக்குற/இதையே தான் உங்கப்பாவும் சொல்லிருப்பாரு.. இது போன்ற உதாரணங்கள் கேள்வி பட்ருப்போம்..ஏற்கனவே உடலவில் (DNA) இணைப்பில் உள்ள நாம் மனதளவில் உருவாக்கும் எண்ணங்களை பரிமாறிக்கொள்வது எளிது தான்...பிள்ளைகளின் எண்ணங்களை பெற்றோர் தெரிந்து கொள்வது தானே

உங்க சமூக வலைதள வட்டத்தை உற்று நோக்குங்கள்.. இவை அனைத்தும் நீங்கள் ஈர்த்து கொண்டது தான் அலைவரிசை ஒன்றிப்பின் மூலமாக...

எல்லா எண்ணங்களுக்கும் அலைவரிசை உண்டு.. ஆனால், எவரெவர் சரியாக ஒன்றிணைகிறார்களோ அவர்களால் மட்டுமே தகவல் பரிமாற்றம் சாத்தியம்..

Friday 17 July 2020

Momentum - இயக்கம்

Momentum
இயக்கம் 
Action - Reaction

இயங்குதல் தான் ஒரு தொடரை(வாழ்க்கை னும் வெச்சிக்கலாம்) அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்..  அனைத்து இயக்கமும் ஏதோ ஒரு வகையில் முன் செய்த வினையின் தொடராகவே அமையும் அதாவது எந்தவொரு இயக்கமும் முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த இயக்கம் முடிந்தாலும் அது உருவாக்கும் பக்க கிளை இயக்கங்கள் நீடித்து கொண்டே செல்லும்...அதாவது chain reaction..
ஒரு செயல் பல செயல்கள் உருவாக அடிப்படையாக அமைவது...இந்த 
இது அடிப்படை புரிதலுக்காக தான்..உண்மையில் நம் வாழ்க்கையில் நாம் செய்யும் ஓவ்வொரு சிறிய விஷயங்களும் பெரிய மாற்றத்தை குடுக்கும் அது நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் அது நிகழ்தகவை பொருத்தது.. Chaos theory இல் ஒரு முக்கோண விளையாட்டு உண்டு ஒரு முக்கோணத்தின் உள்ளே ஏதோ ஒரு இடத்தில் புள்ளி வைக்கணும் பின்னர் அதிலிருந்து கோணத்தை நோக்கி ஒரு புள்ளியை குறிக்கணும் இதை தொடர்ந்து பல முறை செய்தால் முக்கோணத்தின் உள்ளே ஒரு முக்கோணம் போன்ற அமைப்பு உருவாகும்..இது ஒரு மூடிய பகுதியில் நிகழும் ஒழுங்கான மாற்றம்...இதன்படி ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது குறிப்பிட்ட நிகழ்வு வட்டத்தையோ குறி வைத்து சில மாற்றங்களை செய்தால் அதன் விளைவு ஆச்சர்யபடும் அளவிற்கு அமையும்..எளிமையா சொல்லணும் ன்னா(கற்பனை தான்) சுற்றுலா போய்ட்டு ஒரு குடும்பம் ஊர் திரும்பிட்டு இருக்காங்க அப்போ அங்க ஒரு குழந்தை சாக்லேட் கேட்டு அடம்பிடிக்குது அத வாங்கி தர மறுக்கும் பெற்றோர் இந்த ஜுஸை குடி ன்னு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கயில குடுக்குறாங்க அதை பிடிக்க தெரியாத குழந்தை ரோட் ல போட்றுச்சு இவங்களும் ஊர் வந்தாச்சு ஆனால் அந்த பாட்டில் விழுந்த இடத்தில் 5 மணி நேரம் கழிச்சு ஒரு விபத்து நடக்குது,காரணம் இந்த பாட்டில் தான் அதுல 2 பேர் இறந்து போறாங்க அவங்க இறந்ததால அவங்க குழந்தைங்க அனாதையா நிக்குறாங்க - இந்த நிகழ்வு ல ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மாற்றம் நடந்திருந்தா இதன் விளைவு வேற மாதிரி இருந்திருக்கும்..இந்த மாதிரி யாரோ எவரோ செய்யும் சின்ன செயல்கள் இந்த சமூகத்தில் பல சிக்கல்களை கொண்டு வந்திரும்...இதை தான் butterfly effect ன்னு உருட்டுறாங்க... ஆனா நான் இங்கே சொல்ல வந்தது இயக்கங்களை பத்தி...அதாவது இந்த பூவுலக இயக்கம், பூமி சுத்துறது கூட ஒரு இயக்கம் தான்..

உலகின் முதல் மனிதனில் ஆரம்பிச்சு இன்னிக்கு வர பல தலைமுறைகள் கடந்து இந்த இயக்கம் தொடர்ந்து கிட்டு இருக்கு இதன் விளைவு தான் பணம்,புகழ்,கல்வி,பொருள் எல்லாமே...சாதாரண ஒரு LED light இயங்குறதுக்கே மின்சாரம் ங்குற ஆற்றல் வேணும்...அப்டி இருக்கையில் இவ்ளோ பெரிய உலகம் இயங்குறதுக்கு தேவையான ஆற்றல் எங்கிருந்து கிடைக்குது..எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆற்றல் தேவை...ஒரு குழந்தை கருவறையில் உருவாவது பெற்றோரின் ஆற்றலில் தான் அதாவது வெற்றிடத்தில் ஆற்றல் உருவாக்கம் போல - மின்னூட்டங்களை பயன்படுத்தி...இவ்வளவு பெரிய உலகம் இயங்க தேவையான ஆற்றல் எங்கிருந்து கிடைக்குது...அப்படியே ஆற்றல் கிடைத்தாலும் அதை இயக்குவது யார்...பூமிக்கே இப்படி ன்னா பிற கோள்களின் இயக்கம்?...அதற்கு தேவையான ஆற்றல்?...

இதன் தொடக்கத்தை போலவே முடிவும் மர்மமானது எப்பொழுது இந்த இயக்கம் துவங்கியது என கண்டறிந்தால் தான் இதன் முடிவை கணக்கிட முடியும்...இவ்வளவு நாள் இப்பிரம்மாண்ட அமைப்பிற்கு தேவையான ஆற்றல் மூலம் தான் இதற்கு விடை...

இங்க நகர்வின் ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது..ஆனால் அதை சூட்சுமமாக கையாளனும் சில நேரங்களில் நன்மையில் முடியும் சில நேரங்களில் தீமையில் முடியும் அதுவும் மூடிய ஒரு வட்டத்தின் உள் மட்டுமே.

அண்ட வெளியில் இடக்கங்கள் அனைத்தும் ஆற்றலை அடிப்படையாக கொண்டு தான் இயங்குது.அதாவது ஆற்றல்கள் எங்கும் கொட்டி கிடக்குது..இது தான் வெற்றிடத்தில் ஆற்றல் உருவாக்கம்.. உதாரணத்துக்கு புவியில் வளிமண்டலம் - சைக்கிள் காத்து அடிக்கும் பாம்பு காலியான இடத்தில் உள்ள வளியை பயன்படுத்தி காற்று ஆற்றலாக மற்றும் யுக்தி..
இதை தான் zero point energy ன்னு சொல்றாங்க...ஒன்றுமில்லா ஆற்றல் ன்னு சொல்லலாம்..இது எங்கும் இருக்கும் என்ன தான் ஆற்றல்கள் பலவாக பிரிந்து கிடந்தாலும் அடிப்படையில் ஆதி மூல ஆற்றல் ஒன்று தான் அது பரிணாமித்தே பலவாக உருவெடுத்துள்ளது...இது மட்டும் சாத்தியம் ன்னா பெட்ரோல் போடாம bike ஓட்டலாம்,current இல்லாம bulb எறிய விடலாம்...

உதாரணமா மனிதருக்கு பல வழிகளில் ஆற்றல் கிடைக்கிறது உணவு,சூரிய ஆற்றல்,காந்த சக்தி,பிராண வாயு, cosmic energy...இது பலவகையாக இருந்தாலும் எல்லாமே ஆற்றல் தான் ஒன்றின் chain reaction தான் இன்னொன்னு...அது போக எல்லாம் interconnect also...

Friday 3 July 2020

369 - Tesla(The Universal Code Numbers)

369 - Tesla(The Universal Code Numbers)

எண்ணியல் கோட்பாட்டில் முதல் இரண்டு எங்கள் இருமை தன்மையை விவரிக்கின்றன இவை தான் அடுத்தடுத்து வரும் எண்களின் ஒற்றைப்படை,இரட்டைப்படை தன்மையை துவக்குகிறது. இவ்விரு எண்களுக்கு அடுத்ததாக மூன்றாம் எண் அதாவது '3' - இது முதலில் உள்ள இரண்டையும் சாராது உள்ளது போல் மூன்றாம் தன்மையை உணர்த்துவது போல் அமைகிறது.10th Man Rule போல.எனவே தான்,இந்த மூன்றாம் எண்ணும் அதன் மடங்குகளும் பிரபஞ்ச ரகசியங்களை கொண்டிருக்கும் திறவுகோலாக கருதப்படுகிறது.இதை தான் அறிவியலாளர் டெஸ்லா-வும் முன் வைக்கிறார். சாதாரணமா எந்த ஒரு எண்ணயும் மூன்றுமுறை கூட்டி கிடைக்கும் எண்களின் கூட்டுத்தொகை மூன்றின் மடங்காகவே அமையும்.அதேபோல 3,6,9-ம் வாய்ப்படுகளில் ஒவ்வொரு சமன்பாட்டின் கூட்டுத்தொகையும் 3,6,9 என்ற வகையிலே அமையும்.இது கொஞ்சம் மாயாஜாலம் போல இருக்கலாம்.இதை இன்னமும் நமது அன்றாட வாழ்விலும், பண்டைய நாகரீக மதங்களின் அடிப்படையிலும்,அறிவியலிலும் ஆழமாக தேடிப்பார்த்தால் நிறைய ஆச்சரியமூட்டும் எதர்த்தங்களை பார்க்கலாம்.மேலும்,இவை பிரபஞ்ச ரகசியத்தின் தொடர்புகள்.சாதரணமாக ஒரு வட்டம் 360கோணம் இருக்கும் இதன் கூட்டுத்தொகை 9 அதே போல அரைவட்டம் 180கோணம் இதன் கூட்டும் 9.அடுத்து கால்வட்டம் இதன்கூட்டு கோணமும் 9.இதை அப்படியே நகர்த்தி புவியுடன் ஒப்பிட்டால்.புவியின் ஒரு வருட சுற்றுக்காலம் என்பது 365.25 நாட்கள் இதனை கூட்டி கிடைக்கும் கூட்டுத்தொகையும் இறுதியில் 3 தான்.1 முதல் 9 வரை உள்ள எண்களை கூட்டி கிடைக்கும் கூட்டுத்தொகையும் 9 தான்.இது ஏதோ விசித்திர எண்கணித விளையாட்டை போல இருக்கலாம் ஆனால் இந்த 369Hz அதிர்வுகளை பயன்படுத்தி அசாத்திய சில அற்புதங்களை காணலாம்.இது மூளையோடு தொடர்புகொண்டு மனிதனில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.இந்த எண்களை காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தோமேயானால் ஒரு நிமிடத்தில் 60நொடிகள்.இதன் கூட்டு 6.அடுத்து ஒரு மணியில் 3600நொடிகள் இதன் கூட்டு 9.அதே போல ஒரு நாளையில் கிடைக்கும் நொடிகளின் கூட்டு 9.இதை மேலும் மதங்களில் புகுத்தி பார்த்தால் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் 786குறியீடு இதன் கூட்டுத்தொகையும் 3. மேலும் மூன்றாம்பிறை நிலாவும் சூரியனில் இருந்து மூன்றாவதாக அமைந்திருக்கும் வெள்ளி கோளும். வெள்ளி கோளானது பிறைநிலாவின் மேல் நட்சத்திரம் போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இயல்பாகவே மூன்றாம் பிறை பார்ப்பது மனதிற்குள் ஒரு அமைதியை உண்டாக்கும் என்பது கூடுதல் சிறப்பு.மேலும் நவகிரகங்கள்,நவராத்திரி,உடலில் நவதுவாரம்,நவமி,அருப்படைவீடு,அறுசுவை உணவு,அறுங்கோணம்(பென்சீன் வளையம், தேன்கூடு),முக்கண் தேங்காய்,திரிசூலம்,மும்மூர்த்திகள்,முப்பெரும்தேவிகள்,அம்+உம்+நம்,முக்கனி,(படைத்தல்,காத்தல், அழித்தல்),மூவேந்தர்கள் என பல இடங்களில் 369 குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஆல்பா,பீட்டா,காமா கதிர்வீச்சுகள் மற்றும் ஒமேகா3,6,9 கொழுப்பு அமிலங்கள் என பல அறிவியல் கூறுகளும் இத்துடன் அடங்கியுள்ளது.சமஸ்கிருத ஓம்-இல் கூட 3 என்ற எண்ணை கொண்டே இருக்கும்.அதுபோல ஓம் என்ற தமிழ் சொல்லிலும் மூன்று ஆறுகள் இடம்பெற்றுள்ளன.மேலும் அ+உ+ம் ஆகிய மூன்றின் கூட்டு தான் ஓம்.இவற்றை எளிதில் புரிந்துகொள்ள இதனுடன் இணைக்கப்பட்ட படங்களை உற்றுநோக்கவும்.மேலும் இதன் ஆழத்தை அறிய நீங்கள் காணும் இடங்களில் உள்ள 369 எனும் எண்களின் ரகசியத்தை கண்டறிய துவங்குங்கள்.

Earth Rotation  Vs 369

Time Vs 369
Slope Degree Vs 369

Multiplication Matrix of 369
Number Addition 369

Islamic Mythology Vs 369
Hinduism Vs 369
Essential Good Fats Vs 369

Duality - இருமைத்தன்மை

Duality - இருமைத்தன்மை


இந்த பரந்த அண்ட வெளியில் பூமியை மட்டும் மையமாக கொண்டு பார்த்தோம் ன்னா (பூமியிலிருந்து) எல்லாமே இருமைத்தன்மையின் அடிப்படையில் தான் இருக்கும்... Ying Yang - ன்னு சொல்றதும் இது தான்..பலருக்கும் இதை பத்தி தெரிஞ்சிருக்கும்...எதிரெதிர் தன்மையை தான் இப்படி சொல்றாங்க..


அதெப்படி ன்னா 

 இரவு-பகல், நன்மை-தீமை,

இன்பம்-துன்பம்,இயற்கை-செயற்கை,

மேலே-கீழே,ஆண்-பெண்,

மனிதன்-மிருகம்,சாத்தான்-தேவதை,

கருப்பு-வெள்ளை ன்னு நீண்டுகிட்டே போகும்


இந்த விதி எல்லாவற்றிற்கும் பொருந்தும் இப்போ ஒரு செயலை செய்யுறோம் ன்னு வெச்சிக்குவோம் முடிவில் நமக்கு கிடைப்பது வெற்றி அல்லது தோல்வி இது நிகழ்தகவின் அடிப்படையில் நடக்கும் அதை பத்தி இன்னொரு நாள் பாப்போம்...இப்போ இங்க ரெண்டே விஷயம் தான் நடக்கணும் வெற்றி or தோல்வி..

வெற்றி or தோல்வி யை தவிர்த்து மூணாவதாக ஒன்னு இருக்குமே இரண்டுக்கும்  இடைப்பட்ட நிலை அதை விவரிக்க முடியாது,அப்படி ஒரு நிலையை ஏற்றுக்கொள்ளவும் முடியாது விளையாட்டில் கூட match draw ஆகிவிட்டால் திரும்ப ஆட்டம் தொடர்ந்து முடிவு தீர்மானிக்கப்படும்...


இப்படி தான் எல்லா விஷயமும் இந்த இருமை பண்பை சார்ந்து இருக்கு..இப்போ இந்த இரண்டு பக்கமும் இல்லாம ஒரு மனுஷன் இருக்கவே முடியாது..(கண்ணை மூடி யோசிச்சு பாருங்க நீங்க இப்போ இன்பமா இருக்கீங்களா இல்ல கஷ்டத்துல இருக்கீங்களா) கண்டிப்பா நீங்க ஏதோ ஒரு நிலையில் தான் இருக்கணும் அது தான் விதி..ஆனால் இந்த இரண்டும் இல்லாம இடைப்பட்ட நிலையில் ஒருத்தன் வாழ்ந்தா அவனை என்ன ன்னு சொல்றது???

அப்படியும் வாழ்ந்து இருக்காங்க பல சித்தர்களும்,ஞானிகளும் - இப்படி இரண்டுமற்ற நிலையில் வாழ்ந்ததால் தான் அவங்க இறை நிலையை அடைஞ்சாங்களா??..மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத நிலை இருந்தால் அதை வேற எப்படி சொல்வது..சரி கடவுள் ன்னு சொல்ல வேண்டாம் ஆனால் கண்டிப்பா அது ஒரு அசாத்தியமான நிலையாகவே இருக்கும் Super Humans மாதிரி...ஆனால் அந்த நிலையில் இருப்பவர்களால் இந்த பூமியில் அந்த நிலையில் கிடைக்கும் ஆற்றலை வைத்து ஒன்னும் பண்ண முடியாது..ஏன்னா இங்க வாழனும் ன்னா இந்த இரண்டில ஒன்ன தொட்டே ஆகணும்...

மனித மனதுளையும் இந்த duality இருக்கு ஒரு குழந்தை கையில கருப்பட்டியை குடுத்து சாப்பிட கூடாது ன்னு சொல்லிட்டு அவனை விட்டு சென்றால் அந்த குழந்தை மனசுல ஒரு பிரளயமே வெடிக்கும் சாப்பிடு ன்னு ஒரு பக்கம் குரல் கேக்கும் வேண்டாம் ன்னு ஒரு பக்கம் குரல் கேக்கும் ரெண்டுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு வேற வழியில்லாம எதன் ஆதிக்கம் அதிகமா இருக்கோ அந்த பக்கம் அவன் மனசு திரும்பும்..இது குழந்தைக்கு மட்டுமில்ல அனைத்து வயதினருக்கும் நடக்கும் ஏன்னா அது தான் duality (நம்மலே ஒரு விஷயத்தை துவங்கும் முன் செய்யலாமா வேண்டாமா ன்னு ஒரு யோசனை வருமே அது தான் இது)

இந்த இரண்டு நிலையும் ஒன்று தான் ஆனால் ஒன்றின் பக்கம் நின்று பார்த்தால் மற்றொன்று எதிராக இருக்கும் கண்ணாடி முன் நிற்பது போல் இரண்டும் ஒன்று தான் நிழலுக்கும் நிஜதுக்கும் இடையே மோதல் ஆனால் இரண்டும் ஒன்று தான்...

இந்த இரண்டை தாண்டி ஒன்று இருந்தால் மூணாவதாக அது இந்த duality மக்களுக்கு விசித்திரமாகவே தோன்றும் அதற்கான ஒரு சான்று தான் திருநங்கை - இவர்கள் ஆண் உடலும் பெண் உளமும் கொண்டவர்கள் அதாவது ஆண், பெண் தன்மையை தவிர்த்து மூன்றாவது பாலினம்,மூன்றாவது என்பதால் தான் மூன்றின் மடங்கான ஒன்பது என்ற கேலிப்பெயரால் அழைக்க படுகிறார்களோ என்னவோ...நான் முன்னர் சொன்னது போல் இவர்களையும் நாம் விசித்திரமாகவே பார்க்கிறோம் ஏனென்றால் அவர்கள் duality யை விட்டு வேறுபடுகின்றனர்...சரி அப்போ அவங்களுக்கும் இறை நிலையை போல சக்திகள் உள்ளனவா??? அதெல்லாம் தெரியல ஆனால், ஒன்னு மட்டும் உறுதி பிறக்கின்ற ஒவ்வொரு  குழந்தைக்கும் ஜாதகம் பார்க்கப்படும் இதற்கு தேவையான குறிப்பில் பாலினமும் உண்டு (சிலர் பாலினம் குறிப்பிடாமல் கூட எழுதுவார்கள் ஆனால் திருமணத்தின் போது அதை வைத்துத்தான் கணிக்க முடியும்) இப்போ திருநங்கையாக பிறந்த ஒருவருக்கு எப்படி ஜாதகம் எழுத முடியும்? மூன்றாம் நிலை என்பதால் இவர்களுக்கு கோள்களின் செயல்பாட்டில் பாதிப்புகள் இருக்காதா? இருக்காது ன்னு தான் நெனைக்குறேன் ..இப்படி கோள்களினால் பாதிப்பு இல்லாததனால் தான் வட இந்தியாவில் புதிய தொழில் துவங்குபவர்கள் இவர்களை அழைத்து தொடங்குகிறார்கள் போல...அது போக பண்டைய காலம் தொட்டே பல மன்னர்கள் தன் அரண்மனையில் இவர்களை போன்றோரை  வைத்துள்ளனர்..ஒருவேளை ஜாதகத்தில் இருந்து தப்பும் நோக்கமாக இருக்கலாம் (நமக்கு வந்த கெட்ட நேரம் செல்ல பிராணிகளை தாக்குவது போல)

அப்படியே நரசிம்ம அவதாரத்தையும் சேர்த்து பாருங்க நமக்கு விசித்திரமான உருவம் + நரன் கலந்த சிம்மம் + மேலும் கீழுமற்ற நிலை - இங்க இறை நிலை ன்னு கூட சொல்ல வேண்டாம்..ஏன்னா நரசிம்மரை ஏற்கனவே கடவுளாக தான பாக்குறாங்க..

என்னடா இந்து மத கருத்துகளை முன்னவெச்சே பேசுறான் ன்னு நினைக்காதீங்க ஏன்னா இதுக்கு உதாரணம் சொல்ல இதுல தான் பாக்க வேண்டி உள்ளது.மேலும் என் சூழலுக்கேற்ப இதை அடிப்படையாக வெச்சு தான் பலவற்றையும் தொடர்புபடுத்த வேண்டி இருக்கு.