Monday 27 September 2021

மரங்களும் ஆற்றல்அதிர்வலைகளும் - Trees and Vibrationalwaves

மரங்களும் ஆற்றல்அதிர்வலைகளும்
Trees and Vibrationalwaves
பொதுவாக மரங்களும் மனிதர்களை போல எண்ணங்களை வெளிப்படுத்தும் என  பல ஆய்வுகள் கூறுகின்றன.இப்பேர்ப்பட்ட அதிர்வுகளை வெளியிடும் மரங்கள் தங்களுக்குள் வேறு சில அதிர்வலைகளையும் தக்கவைத்து கொள்கின்றன அல்லது வேறு சில அதிர்வலைகள் மரத்தை தன் அதிர்வின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன.Organic Pod Burial - முறையில் புதைக்கப்படும் மனிதர்களின் ஆன்மா.அவர்மீது வளரும் மரத்தில் தங்கும்.சீன மருத்துவ முறைகளில் மனித ஆன்மாக்கள் பஞ்சபூதங்களை போல ஐந்தாக பிரிக்கப்படுகிறது.இதில் நிலத்தோடு சேர்ந்து மரமாக்கும் முயற்சி தான் இது.இதிலிருந்து மேம்பட்ட நிகழ்வுகள் தான் வனதேவதைகள்,பூதகணங்கள் மற்றும் நினைவலைகள் போன்றவை மரங்களை ஆக்கிரமித்து அதோடு ஒத்திசைதல்.இறந்தவர்களின் ஆன்மாக்கள்,தாந்த்ரீக முறையில் ஆக்கம் செய்யப்பட்ட தேவதைகளும்,கணங்களும் இது போன்ற மரத்துள்ளே தங்கிக்கொள்ளும்.இவற்றிற்கு இடையூறு ஏற்படும் வண்ணம் நடந்தால் இவை தனது வேலையை காட்டிவிடும்.இதையே கிராமப்புறங்களில் குறிப்பிட்ட சில மரத்தில் பேய் இருக்கு ன்னு சொல்லுவாங்க.இன்னமும் சில புளிய மரங்களின் அருகில் செல்லவே பயப்படும் மக்கள் உள்ள ஊரும் இருக்கத்தான் செய்கிறது.இதற்கு உதாரணமாக பனைமரத்தடியில் முனியாண்டி வழிபாடும் ஆல,அரச மரத்தடியில் இருக்கும் பெண்தெய்வங்களின் வழிபாடும் எடுத்துக்கொள்ளலாம். சங்கிலி பூதத்தார் குறிப்பிட்ட மரத்தில் குடியிருந்ததாகவும் அந்த மரத்தை வெட்டி கொண்டுவந்து வேறு சில வேலைகளுக்கு பயன்படுத்தியதால் கோபமுற்ற பூதத்தார் வெட்டியவர்களை பலி வாங்கியதாக கதைகள் கூறுகிறது.இதை உறுதிசெய்யும் பொருட்டு இன்றும் புதுவீடு கட்டி குடியேறும் முன் தச்சுகழித்தல் செய்யப்படுகிறது.எங்கெங்கோ இருந்து கொண்டுவரப்படும் மரங்களில் என்னென்ன பூதங்களோ,தேவதைகளோ இருக்கக்கூடும் அவற்றை வெளியேற்றும் பொருட்டே பலியிடப்படுகிறது.மேலைநாடுகளில் சூனியக்காரர்களும் மரங்களை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.இதுவும் இதே நுட்பம் தான்.நடுகல்லும், சுமைதாங்கிகல்லும் இறந்த ஆன்மாக்களின் புகலிடமாக கூறப்படுகிறதோ அதுபோலவே தான் மரங்களும்.கேரளாவிலுள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பேய் பிடித்தவர்களை கட்டுப்படுத்தி அந்த ஆன்மாவை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டிவைத்துவிடுவார்கள்.உளவியளின் அடிப்படையில் பார்த்தாலும் இயற்கையாகவே மரங்கள் மனிதர்களோடு நேர்மறையான ஒரு பிணைப்பை கொண்டுள்ளது.ஒரு மரத்தை கட்டிபிடிக்கும் போது மனித உடலில் serotonin and dopamine சுரப்பு தூண்டப்படுகிறது இது மனிதமூளையை அமைதிக்கும், உற்சாகத்திற்கும் இட்டுச்செல்கிறது.இது மேலைநாட்டு ஆய்வுகளில் நிரூபணத்திற்கு உள்ளாக்கப்பட்டதால் இதை மட்டும் ஏற்றுக்கொண்டே ஆகணும்.மேலும் மரங்கள் இயல்பாகவே கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை கொண்டது வேற்றுமண்டல அதிர்வுகளிடம் இருந்து இவை தற்காத்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.அதுபோல மரங்கள் மின்காந்த அலைகளோடு தொடர்புடையது.இவை அலைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் வெளிப்புற அலைகளோடு தொடர்பும் ஏற்படுத்துகிறது.இந்த அலைகள் பெருக்கத்தின் பேரில் அதிர்வுகளாக இறுதியில் அலைவரிசையாக மாறுகிறது.இதனடிப்படையில் ஒரே மரத்தில் பல்வேறு அதிர்வலைகள் ஒன்றோடுஒன்று பிணைப்புக்குள்ளாகின்றன.

Saturday 25 September 2021

Trio - மும்மை

Trio - மும்மை 
எண்ணியலில் மூன்றின் மடங்குகள் மிகவும் அபூர்வமானவை ன்னு ஏற்கனவே பல இடங்களில் சொல்லிருக்கேன்.இப்போ நான் சொல்றது எண்ணியலை கடந்த ஒரு விஷயம்.அதாவது மும்மை,மூன்றாம் தன்மை - இதை இரண்டுக்குமானது அல்லது இவ்விரண்டால் ஆனது ன்னு சொல்லலாம்.எப்படி என்றால் 1 - இது ஒரு ஒற்றைப்படை. 2 - இது இரட்டைப்படை.இவ்விரண்டையும் கூட்டி கிடைக்க - 3 இதான் மும்மை.இது மேற்கண்ட இரண்டையும் கொண்டுள்ளது,இவ்விரண்டாலும் ஆகி உள்ளது.1 என்பதை ஒரு பரிமாணமாக வைத்துக்கொள்ளலாம் இந்த 1- க்கான எதிர் பரிமாணம் தான் 2.இந்த இரு பரிமாணங்களும் எதிரெதிர்.ஆனால், மூன்றாவதான மும்மை இவ்விரண்டோடும் ஒத்தும், விலகியும் காணப்படும்.

1 ----- 2 ----- 3 

1,2,3 - இந்த தொடங்கு வரிசையில் இரு ஒற்றைப்படை எண்களும்,ஒரு இரட்டைப்படை எண்ணும் உள்ளது. அதாவது அடுத்தடுத்த எதிர் பரிமாண உருவாக்கங்களை குறிக்கிறது.இதை காலத்தோடு ஒப்பிட்டால் இன்னும் தீர்க்கமான புரிதலை பெறலாம்.

ஒருவன் நிகழ்காலத்தில் இருக்கிறான்.அதான் மையம் ன்னு வெச்சிக்குவோம்.முன்னோக்கி பார்த்தால் எதிர்காலம்,பின்னோக்கி பார்த்தால் கடந்தகாலம் - எப்படி பார்த்தாலும் நிகழ்காலத்தின் எதிர்பரிமாணங்கள் முன்னும் பின்னும் செயல்படும்.இப்போ அந்த நிகழ்காலத்தை 2ம் எண்ணாக வைத்துக்கொள்வோம்.முன்னிருக்கும் 3ம் எண்ணும் பின்னிருக்கும் 1ம் எண்ணும் 2ம் நிலைக்கு எதிரெதிர் பரிமாணங்களே.
இதை நீங்கள் எண்ணியல் வரிசைகளில் எங்கு வேண்டுமானாலும் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.

 உதாரணமாக, 2 ----- 3 ----- 4 என்ற வரிசையை எடுத்துக்கொள்வோம் இதில் இரு இரட்டைப்படை எண்களும் ஒரு ஒற்றைப்படை எண்களும் உள்ளன.

சரி இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன் ன்னா.மனித இயக்கத்தில் தொடங்கி இங்குள்ள அனைத்து இயக்கவியலும் இந்த எண்ணியலின் மும்மை அடிப்படையில் தான் இயங்குது.நாம எங்க போய் நின்னாலும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும் அந்த இரண்டுமே நம்முடைய தற்போதைய நிலைக்கு எதிராகவே அமையும்.அதேசமயம் அந்த இரு வாய்ப்புகளும் ஒன்றிற்கு ஒன்று எதிராகத்தான் இருக்கும்.இந்த ஓர்மை,இருமை க்கு இடையேயான மோதலில் சிக்கித்தவிப்பது மும்மையில் இருக்கும் இந்த துகள்கள் தான்.

பூதஉடலில் மூளை தரும் கட்டளைகளைக்கும்,உள்மனதின் ஏக்கத்திற்கும் இடையே சிக்கிதவிக்கும் நிலை.( பிடிக்காத வேலையை கட்டாயத்தின் பேரில் செய்பவனின் மனநிலையை போல)
இந்த மும்மை நிலை சில நேரங்களில் neutral - எனப்படுகிறது.ஏதுமற்றதாகி நிற்கும் நிலை.

3 - 3
1.5 - 6
0.75 - 3
0.375 - 6
0.1875 - 3      

6 - 6 
3 - 3
1.5 - 6
0.75 - 3
0.375 - 6

9 - 9
4.5 - 9
2.25 - 9
1.125 - 9
0.5625 - 9


Secure Coding Programmes

Secure Coding Programmes

பண்டைய எகிப்து மற்றும் உலகின் பல்வேறு நாகரீகங்களிலும் இந்தியாவிலும் கூட கோவில்களின் வெளிப்பக்க சுவர்களில் எழுப்பப்படும் பிரம்மாண்ட உருவங்கள் சிறப்பு பெற்றவை.தஞ்சை பெரிய கோவிலில் கோபுரத்தை தாங்கி நிற்கும் உள்ள ஒவ்வொரு சிற்பங்களுக்கும் கூட ஒருவகையான programme இருக்கு ன்னு சொல்லப்படுது.முதலில் கோயில் - கோ+இல் - அரசன் வாழும் இடம் அதாவது அரசனின் முக்கிய விஷயங்களை சேமிக்கும் ஒரு கூடம் Safety Locker போல.இத்தகைய சேமிப்பகத்தில் மனிதர்களும்,மற்ற வேற்று பரிணாம உயிரிகளும் நுழையாதிருக்கவே இது போன்ற கட்டமைப்பு. சேமிக்கப்படும் செல்வங்களோ,தானியங்களோ,முக்கிய குறிப்பான பீடங்களோ இந்த அமைப்பின் உதவியோடு காவல்காக்கப்படும்.இதே அமைப்பு தான் போருக்கும் பயன்படுத்தப்பட்டது.கணங்களில் முதன்மையானது கணபதி அதாவது Master Programme.இது புராணங்களில் சொல்லப்படுவது போல சிவபெருமானால் உருவாக்கப்பட்டது அதே போல இதை ஒத்த இன்னொரு programme தான் அனுமன்.இந்த இரு programme களும் கிரகங்களோடு தொடர்புகொண்டது அதாவது கிரகங்களின் நகர்வுகளையோ அதனால் உண்டாகும் விளைவுகளையோ கட்டுப்படுத்தவல்லவை.இதற்கு உதாரணமா சொல்லணும் ன்னா இறப்பு நடந்த வீட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் ஆனால் ஆற்றங்கரையில் திதி கொடுக்கும் போது அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்குவார்கள்.இதே போல ஆற்றங்கரையில் பெரும்பாலான இடங்களில் அனுமன் கோவிலும் இருக்கும்.அனுமன் ஒரு சிரஞ்சீவி அதாவது endless programme.இத்தகைய கட்டமைப்பு ஒருவரின் பிடியில் இருக்கும் பட்சத்தில் அது அவருக்காகவே இயங்கும்.எந்திரன் படத்தில் ரோபோவிடம் கடவுள் யார் என்று கேட்கையில் அதற்கு பதில் தன்னை உருவாக்கியவர் தான் என கூறும் அந்த இயந்திரம்.அதே போல இந்த கட்டமைப்பு ராமனுக்காக உருவாக்கப்பட்டது,அதேசமயம் ராமனுக்காகவே பல வேலைகள் செய்துள்ளது.கடவுளாக பார்க்கப்படும் ராமனால் முடியாத காரியங்களை அனுமன் செய்து முடிக்கும் காரணம் இது கிட்டத்தட்ட உணர்வூட்டப்பட்ட எந்திர கட்டமைப்பு.இந்த கட்டமைப்பை பற்றிய இன்னுமொரு தகவல் என்ன ன்னா புராணங்களில் சொல்லப்படுவது போல அனுமனுக்கு அதன் பலம் தெரியாது என்பது தான்.அதாவது கொடுக்கப்படும்  command க்கு ஏற்க வேலையை செய்யும்.எல்லாவற்றிற்கும் மேலே அனுமன்,கணபதி போன்ற உருவக கட்டமைப்புகள் நிகழ்வுலக Hybrid விலங்குகளை போல சந்ததிகளை பெருக்கி கொள்ள இயலாதவயாக இருக்க வேண்டும்.அதற்கும் ஒரு முடிச்சு போட்டு பிரம்மச்சார்யம் ன்னு சொல்லிட்டாங்க.மனிதவுரு கொண்ட அனைத்து கடவுள்களுக்கும் இல்வாழ்க்கை உள்ளதற்கும் சிவனின் பிள்ளையாக மற்றும் சிவனின் அம்சமாக படைக்கப்பட்ட இவ்விரு உருவாகங்களுக்கு மட்டும் இல்வாழ்க்கை இல்லாத போதே சந்தேகம் எழுகிறது இதுவும் Liger,Beefalo,Tigon போல தான்.

மேலும் எகிப்தின் anubis போன்றவையும் இது போல உருவானவை தான்.வெளிப்புறத்தில் இருந்து எந்தவொரு ஆற்றலும் தங்களை தாக்காமல் இருக்க உருவாக்கப்பட்டது.பிரமிட்/கோவிலின் உள்ளிருக்கும் ஆற்றல்களை(செல்வங்களை) பாதுகாக்க தான் இவ்வளவு செல்பாட்டியலும்.காவலுக்கு ஆரம்பித்து கிரக செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது வரை எல்லாவற்றிற்கும் ஒரு AI தொழில்நுட்பம் உருவாக்கம் செய்யப்பட்டு அதை ஒரு Hybrid உயிரியின் மூலமாக செலயலாக்கப்பட்டு வருகிறது.