Sunday 18 October 2020

Radioaction of Crystals and Compounds - படிகங்கள் மற்றும் சேர்மங்களின் கதிரியக்க செயல்பாடு

Radioaction Of Crystals and Compounds - படிகங்கள் மற்றும் சேர்மங்களின் கதிரியக்க செயல்பாடு

இந்த பிரபஞ்சம் முழுதும் கனிமகூட்டு பொருட்களால் ஆனது ன்னு தெரியும்...இருப்பதும் ஒன்னு,ஈர்ப்பதும் ஒன்னு,உண்பதும் ஒன்னு ன்னு எல்லாமே இங்குள்ள பொருட்களின் கூட்டு சேர்மானம் தான்...அவை தான் சேர்மங்கள் (compounds)..இந்த சேர்மங்கள் பல வடிவங்களில் இருக்கு உலோகமாக,அலோகமாக, படிகமாக,தனிமமாக அறியப்படுது..பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தனிமங்களும் தனித்தன்மை வாய்ந்தவை, இவை அதிர்வுகளையும், ஆற்றல்களையும் உமிழும் தன்மை மற்றும் ஈர்க்கும் தன்மை கொண்டவை..மேலும் குறிப்பிட்ட தனிமங்களின் கூட்டு சேர்மானங்கள் உருவாக்கும் கட்புலானாக கதிர்வீச்சுகள் மனிதன் மற்றும் பிற உயிர்களின் உடல் மற்றும் மன ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை...இதற்கு உதாரணமாக ராசி கற்களை(Gems) எடுத்துக்கலாம் இது எந்தளவுக்கு நல்ல அதிர்வுகளையும் ஆற்றல்களையும் மனிதன் கிட்ட ஈர்க்குது ன்னா வசதியான சிலர் கைகளில் அணிந்திருக்கும் கற்களை வெச்சு தெரிஞ்சிக்கலாம்... இதை உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்துறாங்க..எல்லாம் இதிலிருந்து வெளிப்படும் கத்திவீச்சின் செயல்பாடு தான்..இந்த சேர்மானங்கள் சில அதிர்வுகளையும் ஆற்றல்களையும் ஈர்க்கவும் செய்யுது இதற்கு எளிமையான உதாரணம் உப்பு வீட்டில் குழந்தைகளுக்கு கண்ணூரு கழிப்பதற்கு உப்பை வைத்து அவர்களை சுற்றி அவர்மீது செறிந்திருக்கும் தீய அதிர்வுகளை ஈர்த்து பின்னர் அந்த உப்பை எறிச்சிடுவாங்க.. இதே நுட்பம் தான் புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் உப்பு,மஞ்சள் கொடுக்கும் நிகழ்விலும் நடக்குது...உப்பில் நல்ல எண்ண அதிர்வுகளை விதைத்து அதை பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதன் பலன் தெரிஞ்சிக்கலாம்...இதே தான் படிகார கல்லுக்கும்..படிக கற்கள்,உப்பு போன்றவை ஈர்க்கவும் அதிர்வுகளை உமிழவும் பயன்படுகின்றன...சில வகை தனிமங்கள் உருவாக்கும் கதிர்வீச்சு மனித மூளையையும் உடலையும் பாதிக்க கூடியது..
துருதிஷ்ட வசமா இதையும் நவீன அறிவியல் ரீதியாக நிரூபிக்குற வரைக்கும் இதெல்லாம் pseudoscience ன்னு தான் சொல்லுவாங்க..
பூமிக்கு பல அடி ஆழத்தில் பல தனிமங்கள் செரிந்துள்ளன இவை வெளிப்படுத்தும் கதிர்வீச்சு மேற்பரப்பில் வாழும் மக்களை பாதிக்கும் அளவுக்கு வலிமை கொண்டதாம்..இதன் விளைவாக தான் சில இடங்களில் தொடர் விபத்துகள் நேரிடுவதாகவும் சொல்லப்படுது.. காரணம் பூமிக்கு அடியில் உள்ள தனிமங்களின் கதிர்வீச்சு..இது தான் வீட்டு வாஸ்துவிலும் மறைமுகமா சொல்லப்படுது..அது போக தனிமங்களால் ஆன பொருட்களை ஆபரணமாக அணிவது,சமையலுக்கு பயன்படுத்துவது ன்னு எல்லாமே உடலுக்கு நன்மை பயக்கும் செயல்பாடாக தான் இருக்கு...அதே சமயம் இந்த தனிம மற்றும் படிக சேர்மானங்கள் பல அசாத்தியமான ஆபத்துகளையும் உருவாக்க வல்லது (programme செய்யப்பட்ட மாந்திரீக தகடு)...அதிசக்தி வாய்ந்த படிக கற்கள்(Gem stones) பழங்காலம்தொட்டே இந்த கற்களின் மீதான நம்பிக்கையும் தேடலும் நடந்துட்டு தான் இருக்கு இந்தவகை அற்புத கற்கள் பல அதிசயங்கள் செய்வதாகவும் சொல்லப்படுது அது உண்மையும் கூட இதற்கு உதாரணமா உப்பை பயன்படுத்தி செய்யும் தியானத்தை எடுத்துக்கலாம்...அதுபோக இந்த கற்களின் கதிர்வீச்சை பயன்படுத்தி அசாத்திய செயல்கள் பல செய்வதற்காக இன்றளவும் பலர் கற்களை தேடி நகர்ந்துட்டு தான் இருக்காங்க..நாகரத்தின கற்களின் தேடுதலும் இதன் நீட்சி தான்.. Avengers படத்துல Thanos கதாபாத்திரம் கையில் கூட கற்கள் காட்டப்படும் வித விதமான கற்கள்..இந்த கற்கள் உலகையே ஆட்டிப்படைக்கும் அளவுக்கு ஆற்றல் மிகுந்தது...சாதாரண சோடியம் குளோரைடு NaCl - ரசவாத சேர்மானம் மனித உணவில் சுவை எனும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கு அது இயற்கை அதே சமயம் பேராசை கொண்ட மனித மூளையால் அதிக சுவைக்கு உருவாக்கப்பட்ட மோனோசோடியம் குளுட்டாமேட்(Monosodium Glutamate) மனித உயிரை கொள்ளும் அளவுக்கு தீங்கானது...இதன் அடிப்படையில் தான் அத்தனை மருந்து சேர்மங்களும்,பயன்பாட்டு உலோகமும்...இந்த கலவைகளின் பேராற்றல் இன்னமும் மனிதன் அறியாவண்ணம் உள்ளது நன்மை தான்...பலவகை கற்கள் பலவகை கதிர்வீச்சுகள் மனிதனின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தும் காரணியாக மாறிவிடும்...

Thursday 15 October 2020

Resonance of Convergence - அதிர்வுகளூடே ஒத்திசைதல்

Resonance of Convergence - அதிர்வுகளூடே ஒத்திசைதல்
ஒத்திசைவு - குறிப்பிட்ட ஒரு அலைவரிசையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடனோ தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும்,அதன் வாயிலாக தேக மற்றும் ஆன்ம தேவைகளுக்காக செய்யும் பயிற்சி போன்றதே இந்த ஒத்திசைவு...இதை பல இடங்களில் இன்னமும் உலகின் பல மூத்த மதங்களும்,இனங்களும் பின்பற்றிக்கொண்டு தான் உள்ளார்கள்..இத தான் எளிமையா விரதம்/நோன்பு ன்னு தமக்கு ஏற்ற மாதிரி வித்தியாசமான பெயர்களில்சொல்லிட்டு வராங்க...பிரபஞ்சத்தின் எந்த ஒரு நிகழ்வுக்கும் காலம் மற்றும் இயக்கம் தான் மூலமே இந்த குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்காக குறிப்பிட்ட காலம் தனது உடல் மற்றும் ஆன்மாவை இயக்கத்திற்கு தூண்டும் செயலே இந்த ஒத்திசைவு...நோன்பு என்றாலே இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தான் ஞாபகத்துக்கு வரும் காரணம் எச்சிலை கூட விழுங்காமல் ஒரு மாதம் கடக்கும் கடும் நோன்பு..ஆனால்,இது மட்டும் அல்ல அந்த நோன்பு நோன்பு காலங்களில் நல்லதை பேசணும்,அன்பு செய்யணும்,இறைவனை நோக்கிய சிந்தனை இருக்கணும்,பிறருக்கு உதவனும் ன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு...இதன்படி பார்த்தால் நோன்பு காலங்களில் நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு அதிர்வும் நம்மை இறையின் வழியில் ஈர்க்கும்..நோன்புகள் வெறுமென உண்ணாநிலையை மட்டும் உணர்த்தாமல் நல்ல அதிர்வுகளை உருவாக்கும் ஒரு காலகட்டமாகவும் அமைகிறது...இதையே தான் கிருஸ்தவத்திலும் பின்பற்றபடுது உண்ணாமல் இருப்பதோடு இறை மீதான பற்றை வெளிப்படுத்தும் சிந்தனைகளை மட்டுமே தோற்றுவிக்கும் எண்ணங்கள் அது சார்ந்த அதிர்வுகளை உருவாக்கும் வல்லமை கொண்டது..அடுத்ததா இந்து மதத்திலும் சொல்லவே வேணாம் இப்படி விரதங்கள் வெறும் உண்ணாமல் இருப்பதை மட்டும் நோக்கமாக கொண்டமைவதில்லை மாறாக தங்களது வேண்டுகோளுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேற்கொள்ளும் பயிற்சியை போன்றது உடலளவிலும் சரி மனதளவிலும் சரி...சரி அது எப்படி நோன்பு நோற்றல் உடல் அளவிலும் மனதளவிலும் ஆற்றலை தரும்?? இதுக்கு ஒரு உதாரணமா கிராமங்களில்  தீமிதித்தல்,தீச்சட்டி ஏந்துதல் ன்னு இருக்கும் சில சடங்குகளை எடுத்துக்கொள்வோம்..சாதாரண நாட்களில் இந்த மாதிரியான நெருப்போடு விளையாடும் விளையாட்டை யாரும் செய்திட முடியாது...முறையாக குறிப்பிட்ட நாட்கள் நோன்பு நோற்று அந்த காலத்தில் தமக்கு தேவையான உடல் & மன வலிமையை மேம்படுத்தி தனது உடலையும் ஆன்மாவையும் மேம்பட்ட ஒரு ஆற்றலாக உருவெடுக்க செய்யும் வழிமுறை தான் நோன்பு(விரதம்)..இது குலதெய்வ வழிபாட்டிலும் முக்கிய பங்காற்றுகிறது குறிப்பிட்ட முன்னோரை வணங்கும் சந்ததியினர் அந்த திருவிழாவிற்கு பல நாட்கள் முன்பிருந்தே விரதம் மேற்கொள்வார்கள் இந்த நோன்பு காலங்களில் வெளியில் எங்கும் நீர் அருந்த மாட்டார்கள் காரணம் ஒவ்வொருவரின் மண அதிர்வலைகளின் வெளிப்பாடு கண்டிப்பாக அவர் பயன்படுத்தும் நீரில் கலந்திருக்கும் இப்படி ஒரு குறிப்பிட்ட முன்னோரை வழிபட இருக்கும் மக்கள் பிற வீட்டாரின் நீரை பகிர்ந்துகொண்டால் அது அவரது எண்ணங்களை பாதிக்கும்...மேலும் முறையாக நோன்பு நோற்று தனது முன்னோர்களை எண்ணி தனது மரபணுவில் கலந்துள்ள கூறுகளை வெளிக்கொணர சில நெறிமுறைகளையும் கொண்டுள்ளனர் ("7ம் அறிவு" படத்தில் சூர்யாவுக்கு அவரது முன்னோரின் மரபுகூறை வெளிக்கொணர சில நவீன நெறிமுறைகள் பின்பற்றப்படும்...இந்த படத்தில் கூட விரதம் இருப்பது போல் சில காலம் சில பயிற்சிகள் மேற்கொள்வார்கள்)..இப்படி மனிதனுக்கு சவாலான காரியங்களில் ஈடுபடும் முன் இவ்வாறு பல நெறிமுறைகள் பின்பற்றப்படுது அதை தான் விரதம்/நோன்பு ன்னு சொல்றோம்...உலகெங்கும் உள்ள பல மதத்தினரும் தீமிதித்தல் சடங்கை செய்யுறாங்க மஞ்சள் காமாலை க்கு சூடு போடுறதுக்கு பதிலா தான் இந்த சடங்கு ன்னும் சொல்லப்படுது இருப்பினும் மக்கள் இதற்கு பல வழிமுறைகளை பின்பற்றி முறையாக விரதம் இருந்தே ஒத்திசைவை உருவாக்குகின்றனர்.. மாந்திரீக சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு செடி,கொடி மூலிகைகளும் குறிப்பிட்ட நாட்கள் காப்பு கட்டி சித்தி செய்து முறையாக நோன்பு நோற்பது போல் தான் பிடுங்கி எடுத்துவரபடுகிறது..சில மருத்துவ மூலிகைகளும் அவ்வாறு செய்தால் தான் பலிக்குமாம்...இதை விட ஊர்திருவிழாக்கள்,ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடக்கும் முன்பும் இது போல தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் பிற அதிர்வலைகள் தங்களை நெருங்காமல் இருக்கவும் தங்களது அதிர்வுகளை உருவாகும் ஒரு பயிற்சி முறை தான் இந்த நோன்பு...சின்னதா ஒரு பண்டிகை ன்னா கூட வீட்டை சுத்தம் செய்வதும் இதில் அடங்கும் வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகளை களைந்து புதிய அதிர்வை உருவாக்குதல்..ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஆண்கள் கூட போட்டிக்கு முன் சில காலம் தங்களுக்கான உடல்&ஆன்ம பயிற்சிகளை மேற்கொள்வதும் விரதம் ன்னு தான் சொல்றாங்க..குலதெய்வ வழிபாட்டில் தனது முன்னோரிடம் பேச தனது உடலையும் மனதையும் தயார்படுத்தும் வகையில் தான் இந்த நோன்பு அமைந்துள்ளது முழுக்க முழுக்க அவர்களை எண்ணி தனது மரபை நோக்கி தன்னிடமே பேசி முன்னோர்களோடு ஒத்திசைவை ஏற்படுத்துவது தான் இந்த விரதம்..

உண்ணாநிலை - இது மேற்கண்ட நோன்புகளில் தலையாயது.இந்த நிலையில் தான் சில அபரிவித ஆற்றல்களை நமது உடல் மற்றும் ஆன்மா ஈர்க்கிறது...குறிசொல்பவர்கள் கூட சாப்பிடுவதற்கு முன் தான் சொல்வார்கள் உண்ட பிறகு சொன்ன வாக்கு பலிக்காது..காட்டில் கடும் தவம் இருக்கும் யோகிகளுக்கும் ஏது உணவு...இதுபோல நமது உடல் மற்றும் ஆன்மாவை பிற ஆற்றலோடு ஒத்திசைக்கும் காரணி தான் இந்த விரதம்

Saturday 10 October 2020

Expansion of Everything - அனைத்திற்க்கான விரிவாக்கம்

Expansion of Everything - அனைத்திற்க்கான விரிவாக்கம்

உயிர்களின் இயக்கவியல் அடிப்படை நகர்தல் முக்கியமான ஒன்று அதாவது அடுத்தகட்டத்தை நோக்கிய நகர்வு...மனிதன் உட்பட அனைத்து பூவுலக ஜீவராசிகளும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயத்திற்க்காகவும் இந்த பிரபஞ்சத்தில் இயங்கிக்கொண்டுள்ளன...இந்த உலகம் தோன்றியதில் இருந்து இங்கு அனைத்தும் பெருக்கம் அடைந்து கொண்டே தான் இருக்கு...இது ஒரு சமாமன பிரபஞ்ச நியதி ன்னு கூட சொல்லலாம்..மனித பரிணாம வளர்ச்சியை கூட இதுக்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம்...ஒரு செல் உயிரில் ஆரம்பித்து பூச்சி,ஊர்வன,முதுகெலும்பி,பரப்பன ன்னு இப்போ உச்சகட்டமா மனிதன் ல வந்து நிக்கிறோம் இதுவும் இதோட நிக்க போறது இல்ல இன்னமும் சில காலங்கள் கழிச்சு இதுவும் மாறிட்டே தான் போகும்...இவை எல்லாம் ஒரே ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் தான் நிகழுது...தன்னை விரிவுபடுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் தான் அந்த ஏக்கம்...இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் தலையாய நோக்கமே இது தான் expansion - தன்னை தானே விரிவுபடுத்தி கொள்ளல்...கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் ல ஆரம்பிச்சு உருவத்தில் பெரிய யானை வரை எல்லாமே தனது சந்ததியை பெருக்குவது தான் நோக்கமாக வெச்சிருக்கு...இது பிரபஞ்சத்தின் தன்னிச்சையான ஒரு இயக்கம்...இந்த உலகம் தோன்றியதாக சொல்லப்படும் சில கருத்துகளில் கூட ஆரம்பத்தில் வெரும் நெருப்பாக இருந்ததாகவும் பின்னர் மழை பெய்ந்து பின் உயிரிகள் வளர தொடங்கியது எனவும் அதன் பின் செடி,கொடி வளர்ச்சி ன்னு ஒரு கட்டமைப்பு உருவாக தொடங்கியதா அந்த கருத்துகள் சொல்லுது...அதன் அடிப்படையில் பார்த்தால் கூட இந்த பிரபஞ்சம் கூட தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும்,விரிவாக்கம் செய்யவும் தான் முனைகிறது...இப்போ நாம உச்சகட்ட பரிணாமமாக நினைக்கும் மனிதன் கூட நாளைக்கு அவனை விட ஆற்றல் வாய்ந்த ஒரு வளர்ச்சியை நாடி தான் பயணிப்பான்.. Transhumanism - இதன் அடிப்படையில் தான் வரும்..
இந்த பிரம்மாண்ட பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு தேவையான ஆற்றல் உருவாக்கம் இந்த மெய்மையின்(reality) இருமைத்தன்மையின் உதவியால் தான் நிகழுது... உதாரணத்துக்கு ஒரு காந்தத்தை எடுத்துகிட்டா இரு வெவ்வேறு துருவங்கள் இருப்பதால் தான் அதை சுற்றி காந்தபுலம் உருவாகுது,அதே போல தான் மின்னோட்டத்திலும் electron,proton இயக்கம்...அனைத்திலும் இவ்விரண்டு தன்மை  தான் அடுத்தகட்ட விரிவை ஊக்குவிக்கிறது..ஆண் பெண் ங்குற இருமையால தான் இங்க சந்ததிகள் உருவாக்கமும் நடக்குது...
எல்லாத்துக்கும் மேல இங்குள்ள மருத்துவம்,அறிவியல்,வானியல்,கட்டுமானம்,தத்துவம் அனைத்துமே இந்த பிரபஞ்சத்தை விரிவுபடுத்தும் நோக்கிலே தான் நடக்குது...இங்க இந்த விரிவாக்கம் தான் இயல்பு..அதை விட்டுட்டு பிரம்மச்சரியம்,துறவறம் போன்றவையெல்லாம் தேவையற்றது தான்...என்ன தான் இங்க பல தத்துவ கோட்பாடுகள் துறவு செல்வதை ஆதரித்தாலும் அவை ஒரு போதும் இந்த விரிவாக்கத்திற்கு உதவாது...என்ன தான் பலர் அதை பின்பற்றினாலும் இந்த பிரபஞ்ச அனிச்சை இயக்கத்தை யாராலும் தடுக்க முடியாது...பல இழப்புகள் ஏற்பட்டாலும் சரி மேலும் மேலும் வளர்ச்சி ஒன்றை தான் நோக்கமாக கொண்டு இயங்கும் இயல்புடையது இந்த இயற்கை...ஒரு சராசரி மனிதனின் எண்ணங்களும்,ஏக்கங்களும் கூட அவனுக்குமான அவன் சந்ததிக்குமான அடுத்தகட்ட நகர்வாக தான் இருக்கும்...இவ்வாறு இருக்கும் அத்தனை உயிரினங்களின் எண்ணங்கள் தான் இன்றும் இந்த விரிவாக்கம் அதிக வீரியத்துடன் நடந்துட்டு இருக்கு...
"அவனன்றி அணுவும் அசையாது" - அந்த  அசைவு அவனுக்கானதா இருக்கணும்