Friday 26 June 2020

Human Cell - Basal Mechanism

மனித செல் - அடிப்படை இயக்கவியல்
மனித செல் பத்தியும் அதிலுள்ள உட்கூறுகள் பத்தியும் நெறய படிச்சிருப்பீங்க...நம் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அது தான் மூலமே...இந்த செல்களின் உச்சபட்ச பயன்பாடுகளை முறையாக கையாண்டோம் ன்னா சில அசாத்தியமான விஷயங்களை கூட எளிதில் செய்து முடிக்கலாம்...அதுக்கு மனித மூளை செல்களான நியூரான்களின் உதவி தேவை...இந்த நியூரான்களும் உடல செல்களும் ஒரு சேர இயங்குவதன் மூலம் ஒருவன் திடீரென அசாதாரண ஆற்றலை பெறுகிறான்....சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஒரு வித்தை இருக்கும் அந்தரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட கத்தி அதன் கீழே ஒரு மனிதன் படுத்தவாறு இருப்பார்...மேலே கட்டப்பட்ட கத்தி அறுந்து கீழே உள்ள மனிதர் மீது விழப்போகும்..அந்த தருவாயில் பயிற்சி பெற்ற ஒருவர் அந்த கத்தியை தட்டி விடுவார்...இந்த நிகழ்வில் கண்,மூளை,கை பகுதியிலுள்ள செல்களும் நரம்பமைப்பும் ஒருங்கே செயல்படுகிறது...இதை ஓரிரு முறை செய்து பார்த்தாலே மூளையில் பதிந்து கொள்ளும்...அது தான் உடல செல்களின் சிறந்த பண்பு...இப்போ பலாப்பழத்தை நினைவில் கொள்ளுங்கள் அதன் மீதுள்ள முட்களை தொடுவது போன்ற உணர்வது நம்மால் செயற்கையாக பெற முடியும் (அதை நினைவு கூறுவதன் மூலம்)..அதே போல் குறிப்பிட்ட ஒரு உணவை நினைக்கும் போது அதன் சுவை நம் நாவில் ஊறும்... இதெல்லாம் செல்களின் வேலை தான்...பலாப்பழத்தை தொடும்போது கை செல்களும்,ருசியான உணவை உண்ணும்போது நாவில் உள்ள செல்களும் நினைவுகளை உருவாக்குகின்றன அப்படி உருவாக்க படும் நினைவுகள் மூளையில் பதியப்பட்டு...தூண்டப்படும் வேளைகளில் அவை நம் உடல செல்களில் நினைவுக்கு வந்து அந்த உணர்ச்சியை உணர செய்யும்..இவ்வாறு செல்கள் அனைத்தும் எப்பொழுதும் அதன் வேலைகளை மூளையில் சேமித்து கொள்கின்றது..உதாரணத்திற்கு - வெண்ணிலா ன்னு சொன்னவுடன் நாக்கில் வெண்ணிலா சுவையையும் மூக்கில் வெண்ணிலா மணமும்...
இவ்வாறு உணர்ச்சிகளை தூண்டுவதற்கு ஒரு காரணம் தேவை வெண்ணிலா என்ற சொல் தான் இங்கு key. அதுவே அந்த மணத்தையும் சுவையையும் தூண்டசெய்கிறது..இதுபோல உங்கள் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான, அற்புதமான,அழகான நிகழ்வுகளை மீள் நினைவுக்கு கொண்டுவருவதன் மூலம் அந்த நிகழ்வுக்கு திரும்ப செல்லலாம்...தெளிவா சொல்றேன் ஒருத்தன் காலைல நேரமா எந்திரிச்சு 10வது பரீட்சைக்கு படிக்கிறான் ன்னு வெச்சிக்குவோம்..இது ஒரு வருடம் நிகழும் நிகழ்வு இந்நேரத்தில் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் நினைவாக சேமிக்கப்படும்(படிக்கும் காலத்தில் உண்ட உணவு,கேட்ட இசை - காலை நேரங்களில் கோவிலில் ஒலிக்கும் இசை அவனை பெரிதும் பாதித்து இருக்கலாம்)..பரபரப்பா ஒரு விழாவுக்கு தயாராகும் போது,எல்லாருக்கும் சென்ற முறை விழா நடைபெற்ற  உணர்வுகளும் அங்கு அவர்கள் அனுபவித்த விடயங்களும் உணரலாம்...எனக்கு ஒரு பழக்கம் இருக்கு குறிப்பிட்ட பாடல்களை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் திரும்ப திரும்ப கேட்பது ...ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை பாடல்கள் மாறி மாறி update ஆகும்...இந்த பழக்கம் என் வாழ்வில் நடந்த அற்புதமான நிகழ்வுகளை மீட்டு மீண்டும் அதை அனுபவிக்க உதவுகிறது...உதாரணத்திற்கு கடந்த ஆண்டு நாங்க கல்லூரி சுற்றுலா சென்ற நிகழ்வு அற்புதமானது அந்த மூணு நாட்களும் நான் கேட்டது குறிப்பிட்ட 5,6 பாடல்கள் மட்டுமே..இப்போ இரவு நேரங்களில் கண்களை மூடி அந்த பாடல்களை திரும்ப கேட்கும்போது பாடல்வரிகளோட நான் சுற்றுலாவில் பார்த்த விஷயங்கள்,bus ல பண்ண கலாட்டா,dance ஆடுனது -ன்னு திரும்பவும் என்னை சுற்றுலாவுக்கே கூட்டிட்டு போய்டும் அந்த பாட்டு...இப்படி ஒவ்வொரு நினைவுகளை  தூண்டும் சாவியை கண்டுபிடித்து அதை முறையாக உணர முடிந்தால் ரொம்ப அதிர்ஷ்டசாலி தான்..இன்னும் சிலர் தான் காதலித்த/நண்பர்களோடு பழகிய காலகட்டத்தில் அவர்கள் கேட்ட பாடல்களை அவர்களின் பிரிவுக்கு பிறகு கேட்கும்போது அவர்கள் சந்தோசமாக வாழ்ந்த காலங்களை உடலளவிலும் உணரலாம்..நான் இசை ன்னு சொன்னது ஒரு வகையில் எனக்கான frequency தான்..இதுபோல ஒருவனின் கனவில்  அவனுக்கு அனுபவமில்லாத செயலை செய்ய வைத்தால் அது அவனது மூளையில் பதியப்படுவதோடு அந்த நினைவுகள் ஒவ்வொரு செல்களுக்கும் கடத்தப்படும்...இவ்வாறு அனுபவம் பெற்ற செல்கள் அதை செய்வது மிகவும் எளிது....கனவு காணும்போது வலி,சுவை போன்ற உணர்வுகளை உணர முடியாது ஆனால் அந்த வலியால் நாம் உண்டாக்கும் அழுகையை உணரலாம்(சிலர் தூக்கத்தில் அழுவது போல)..இதிலிருந்து கனவுகளில் நிகழும் நிகழ்வுகள் நம் உடல செல்களில் பதிகிறது...எல்லாரும் அவரவருக்கான கனவுகளை கட்டமைத்து அந்த செயலை செய்தால் எப்படி இருக்கும் ன்னு முன்கூட்டியே ஒரு சோதனை செஞ்சு பாருங்க

Tuesday 2 June 2020

Attraction of Energy Sources

ஆற்றல் மூலங்களுக்கு இடையேயான ஈர்ப்பியல்
ATTRACTION OF ENERGY SOURCES
மனிதன், விலங்கு,பறவைகள் ன்னு உயிருள்ள ஜீவராசிகள் பல வழிகளில் ஆற்றலை தனக்குள் எடுத்து கொள்கிறது...உணவு,காற்று,சூரிய ஆற்றல்,etc... இவ்வாறு தினம் ஆற்றல் ஏற்றம் செய்யப்படும் ஒரு ஆற்றல் கட்டமைப்பு மற்றொரு ஆற்றல் கட்டமைப்பே சார்ந்தே இருக்கும் அல்லது அதன்படி ஈர்க்கப்படும்... உதரணத்திற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணின்பால் ஈர்க்கப்படுதல்...அதே போல அருகருகே நட்டுவைக்கப்பட்டுள்ள இரு மரங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் வகையில் இரண்டும் ஒன்று சேர முயற்சிக்கும்...சாலையில் இருபுறமும் உள்ள மரங்கள் ஈர்க்கப்பட்டு சாலையின் நடுவே ஒன்று சேரும்...இது அந்தந்த வகைப்பாட்டின் உள்ளே நடக்கும் ஈர்ப்பு...இதே ஒரு மரமும் மனிதனும் ஈர்க்கப்படலாம்,அதே போல் ஒரு மனிதனும் ஒரு விலங்கும் ஈர்க்கப்படலாம்...இவ்வாறு ஈர்க்கப்படும் போது ஒரு ஆற்றலின் தேவையை மற்றொரு ஆற்றல் பூர்த்தி செய்யும்...அதாவது ஒருவர் ஒரு மரம் வளர்க்கிறார் அதன் வலதுபுறம் பக்கவாட்டில் சுவர் உள்ளது இப்பொழுது இந்த மரம் வலது புறம் நீண்டு வளர்ந்தால் சுவற்றில் முட்டும்..இந்த சமயத்தில் அந்த நபர் அந்த மரத்தை இடது புறமாக வளர்க்கும் நோக்கத்தில் ஈர்த்தால் அந்த மரம் இடது புறத்தில் வளரும்...அநேக இடங்களில் மரங்களின் வளர்ச்சி மனிதர்களின் நடமாட்டம் உள்ள பகுதியை நோக்கியே அமையும்...ஒரு ஆற்றல் கட்டமைப்பு மற்றொரு ஆற்றல் கட்டமைப்பை இயக்குவதற்கு பயன்படுத்துவது எண்ண அலைகள் தான்...அதாவது ஒரு மனிதன் மரத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அவனது எண்ண அலைகளை தான் பயன்படுத்த முடியும்..எப்படி என்றால் ஜெண்டில் man படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும் அதில் செந்தில் சொல்லுவார் 

"Star TV ல  பாத்தேன் பாட்டு கேட்டதால் தக்காளி பழம் லாம் குண்டு குண்டு உப்புதாம் அப்பம் உப்பாதா என்ன??"

அதாவது இசையின் மூலம் தக்காளி பழத்தின் வளர்ச்சியை தூண்டுதல்...இங்க இசை ங்குறது தக்காளி பழத்துக்கு அதிர்வுகளாக தான் போய் சேரும்..இதையே நம் எண்ணங்களில் உண்டாக்கும் அலைகள்(waves)  அதிர்வெண்ணாக(Frequency) உருவெடுத்து அந்த ஆற்றல் மூலத்தை கட்டுப்படுத்தும் அல்லது இயக்கும்....இது மரத்திற்கு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும்,பிற உயிரினங்களுக்கும் பொருந்தும் எண்ணஅலைகளை வலுப்படுத்தி அதிர்வெண்ணாக மாற்றி பிற உயிர்களின் மீது செயல்படுத்தலாம்..
                          இது இயர்க்கையான ஆற்றல் மூலங்களுக்கு பொருந்தும்..செயற்கையான ஆற்றல் கட்டமைப்புகள் நம்மை எவ்வாறு கட்டுப்படுத்தும்...மேலே சொன்னது போல உணவு,காற்று,சூரிய ஒளி போல cosmic energy-பிரபஞ்ச சக்தியும் ஒரு ஆற்றல் தான்...இது முக்கோணத்தின்(கூம்பு,கோபுரம்,கூறிய முனை) வழியே தான் ஈர்க்கப்படும்..இவ்வாறு காஸ்மிக் ஆற்றல் ஈர்க்கப்பட்டு வலுவாக உள்ள ஒரு ஆற்றல் கட்டமைப்பு பிற ஆற்றல் மூலங்களை கட்டுப்படுத்தும்...இந்த ஆற்றல் கட்டமைப்புகள் மனிதரை தாண்டிய சக்திகளை இயக்கவல்லது...இந்த ஆற்றல்கள் மழை பொலிவு முதலான விஷயங்களை கூட செய்யும்...இங்கு இந்த காஸ்மிக் கதிர்களின் உதவியால் உருவாக்கப்படும் சிறிய அளவிலான அலைகள் மிகப்பெரிய அதிர்வெண்ணாக மாறி பல அசாத்திய செயல்களையும் செய்து முடிக்கும்...கூம்பு - பல கற்றை கதிர்களை/அலைகளை ஒன்றாக்கி கொள்ளும் அதுபோல ஒற்றை அலையை பல கற்றையாக மாற்றி வெளியிடவும் கூடும்..
(பிரமீடு உதாரணத்திற்கு தான் சொல்லப்பட்டது)

ஆற்றல் மூலங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் ன்னு மேல பாத்தோம்...அதே போல வலிமை மிகுந்த ஆற்றல் மூலம் வலிமை குன்றிய ஆற்றல் மூலத்தை ஈர்க்கும்.எப்படி ன்னா ஒரு வலிமை குறைந்த கட்டமைப்பு க்கு ஆற்றல் தேவைப்படும் பொழுது அது வலிமை மிகுந்த ஆற்றலை தான் நாடும்...வெப்பம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு கடத்தப்படுவது போல...இங்கு மனிதர்களும் பிற உயிர்களும் சூரியன் எனும் வலிமை மிகுந்த ஆற்றல் கட்டமைப்பையே நாடி உள்ளது..உதாரணத்துக்கு சூரியகாந்தி பூவை சொல்லலாம்..இதை போல பல தாவரங்களும் சூரிய ஒளி படாத இடத்தில் வளர்த்தால் கூட அதன் வளர்ச்சி சூரிய ஒளியை நாடியவாறே செல்லும்...இது அதற்கு தேவையான ஒளிச்சேர்கையை நிறைவு செய்யும் பொருட்டு நடந்தாலும்...இதுவும் ஆற்றலின் ஈர்ப்பு தான்..