Tuesday 28 July 2020

Boundaries of Dark Matter Vibrations-கருப்பொருள் ஆற்றலின் எல்லை ஆதிக்கம்

கருப்பொருள் ஆற்றலின் எல்லை ஆதிக்கம்
Boundaries of Dark Matter Vibrations

             

ஒரு உயிர் உருவாக்கும் எண்ணங்களை செயல்படுத்த அதன் உடல் உதவியாக இருக்கும்..இறந்த ஆன்மாக்களின் இயக்கத்திற்கு அலைகளும்/அதிர்வுகளும் உதவுகின்றன..இப்படி உருவாகும் அலைகள் ஒரு radiation போல உருவாகி குறிப்பிட்ட எல்லையை கொண்டு பரவி கிடக்கும்...நீரில் கல்லை போட்டால் அதன் அதிர்வு வளையம் எப்படி பரவுமோ அது போல..இது அந்த கருப்பொருள் ஆற்றலின் வீரியத்தை பொருத்தும் அமையும்...இந்த ஆற்றல்களின் எல்லைக்குள் மற்றவர்கள் செல்லும்போது அதனால் பாதிக்கப்படுவார்கள்...உதாரணத்திற்கு TV ஓடும் போது பக்கத்தில் phone இருந்தால் ஒன்றின் electro magnetic radiation மற்றொன்றை பாதிக்கும்...இது அப்டியே cell phone tower கும் பொருந்தும்... ஆவிகள்/ஆன்மாக்களின் நடமாட்டத்தை கண்டறிய emf detection எந்திரங்கள் பயன்படுத்தபடுது amazon ல கூட கிடைக்குது...இது போல கருப்பொருள் ஆன்மாக்களின் எல்லைக்குள் நுழையும் போது பல வகைகளில் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்...உதாரணத்துக்கு சில வாடகை வீடுகளில் நிரந்தரமாக யாரும் குடியிருக்க முடியாமல் இருக்கும்...காரணம் அந்த வீட்டை சுற்றியும் திரியும் அல்லது அந்த வீட்டின் சொந்தகாரரின் குலதெய்வ ஆன்மாவின் ஆதிக்கம் கூட அதிகமாக  இருக்கலாம்..இதை தவிர்க்க தான் புதிதாக வீடுகட்டி குடியேறும் முன் தச்சு கழித்தல் செய்வாங்க..இதன் மூலம் அந்த வீட்டை சுற்றி உள்ள ஆன்மாக்களுக்கு ரத்த பலியிட்டு பூஜைகள் செய்து வீட்டில் தங்களது குல தெய்வ ஆற்றலை புகுத்தி கொள்வார்கள்...இதற்கு குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டு வந்த பிடி மண், எலுமிச்சம்பழம் போன்ற radiation protection களை வைத்து மற்றவை நெருங்காமல் பாதுகாப்பார்கள்..இப்போ நவீன உலகில் எந்திரங்களின் கதிர்வீச்சில் இருந்து தற்காத்து கொள்ள பழைய படி செம்பு (copper) பொருட்களை பயன்படுத்த துவங்கி விட்டனர்...இணையத்தில் தேடி பாருங்க rafiation or emf protection என்று....இதை பல காலம் முன்னரே யந்திர தகடுகள், படிக கற்கள் போன்றவற்றை ஆன்மாக்களின் radiation இல் இருந்து தற்காத்து கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்...உதாரணத்திற்கு படிகாரகல்,crystals,யந்திர செம்பு தகடு,எலுமிச்சம்பழம்,உலோகங்கள் போன்றவை.. எலுமிச்சம்பழம் போன்றவற்றில் நேர்மறை ஆற்றல்களை விதைத்து அதை ஒரு signal jamer போல பயன்படுத்தலாம்...பயணத்தின் போது எலுமிச்சம்பழம் கொண்டு செல்வதும் இதற்கு தான்...நாம் வேறொரு ஆற்றல் வட்டத்தினுள் செல்லும்போது அதன் அதிர்வுகள் நம்மை தாக்காமல் இருக்க நம்மால் நேர்மறை ஆற்றல் விதைக்கப்பட்ட பழத்தை பயன்படுத்துறோம்...கர்ப்பிணி பெண்கள் கையில் எப்பொழுதும் ஒரு எழுமிச்சம்பழமும், உலோக துண்டும் கொடுத்திருப்பாங்க... சில கதைகள் ல சொல்ற படி செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஆற்றல்கள் (பூதங்கள்) கற்பிணிப்பெண்களை பலி கேட்கும் ன்னு...அதனால் தான் அவர்களை தற்காத்து கொள்ள இந்த radiation pritector கள் பயன்படுத்துறாங்க...

இதன் தன்மையை check பண்ணனும் ன்னா - ஒரு செடியை வெட்ட வெளியிலும் மற்றொரு செடியை செம்பு வேலிகளின் நடுவிலும் வைத்து வளருங்கள்...இது cell phone signal coverage உள்ள இடத்தில் இருக்கணும்..இந்த இரண்டின் வளர்ச்சியை கவனித்தால் copper வேலியின் கீழ் உள்ள செடி நன்றாக வளரும் - இப்போ புரியாத கோவில் கலசம்,யந்திர தகடு எல்லாம்...

குழந்தைகளின் தொட்டிலின் கீழே அரிவாள் போன்ற எஃகு உலோகங்கள் பயன்படுத்துவதும் இதுக்கு தான்...பருவமடைந்த பெண்களுக்கு காவலாக வெண்கல பூண் போடப்பட்ட உலக்கையும் இதுக்கு தான்..இதே போல குறிசொல்லும் பெண்களின் கையிலும் சிறிய பூண் போடப்பட்ட உலக்கை போன்ற குச்சி இருக்கும்...இது போக வீட்டின் வாசலில் கட்டப்படும் குதிரை லாடம்,வீட்டு கதவு நிலை வைக்கும் போது கீழே வைக்கப்படும் ஐம்பொன் தகடு போன்றவை அனைத்தும் இந்த negative radiation இல் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவே..

சுமைதாங்கி கல்,நடுகல் போன்றவை கேள்விப்பட்டு இருப்பீங்க..இதன் பணி வித்தியாசமானது சில வீடுகளில்/தொழிற்சாலைகளில் electro magnetic field radiation அதிகமாக இருக்கும் அதனால் அந்த வீட்டின் இணைப்பு earthing செய்யப்படும் அதாவது தரையிரக்கம்.. இதுபோல கருப்பொருள் ஆற்றல்கள் உருவாக்கும் அதிர்வுகளை குறைக்க தான் இந்த நடுகல், சுமைதங்கி கல் - அதி வீரிய அலைகள் இவ்வாறு  grounding செய்யப்படுவதால் அதன் வீரியம் குறைந்து இருக்கும்...ஆனால், சில ஒப்பந்தங்கள் அடிப்படையில் அந்த கருப்பொருள் ஆற்றல்களை தேவைப்படும் போது வெளியே கொண்டுவரலாம்...சில நினைவலைகள் மரம் போன்றவற்றிலும் தங்கும் - தென்மாவட்டங்களில் பனை மரத்தில் ஆவேசமான முனியாண்டி கோவில் அமைந்திருக்கும்..கடவுளாக வழிபட்டாலும் மக்கள் உச்சி பொழுதில் அந்த பக்கம் செல்ல அச்சம் கொள்வார்கள்..
கிராமங்களில் இதுக்கு தான் எல்லைகட்டுப்பாடுகள் இருக்கும்..குறிப்பிட்ட எல்லைகள் குறிப்பிட்ட சிறு தெய்வத்திற்கு இருக்கும் (இந்த கண்மாய்கரைக்கே கருப்பு தான் காவல்,இந்த வயக்காடு முழுசும் ஆத்தா கட்டுப்பாடு தான் - இது போன்ற சொல்லாடல்கள் இதை மேலும் வலுப்படுத்தும்)
இன்னமும் தெய்வங்கள் காவல்காக்கும் மா,பலா தோப்புகள் எங்க ஊர்ல இருக்கு..

இது போல ஊர்விட்டு ஊர்வந்து வாழும் மக்கள் அவர்கள் தங்கியிருக்கும் பகுதி எந்த கருப்பொருள் ஆற்றலின் கட்டுப்பாட்டில் உள்ளதோ அதை வணங்கி அதற்கு தேவையான பலியை கொடுத்து சமரசமா போய்டனும்..இல்ல ன்னா அந்த ஆற்றல் மட்டத்திற்குள் நுழையும் நம்மை அந்நிய ஆற்றலாக எண்ணி தொந்தரவுகள் தர துவங்கும்...இது அந்த பகுதியில் ஏற்கனவே இருக்கும் சிறு தெய்வங்களுக்கு பொருந்தும் ஆனால் அதுக்கு நீங்கள் இருக்கும் எல்லை யார்க்கட்டுப்பாட்டில் உள்ளது ன்னு தெரிஞ்சிக்கணும்...அங்க அந்த ஆற்றல் வலிமை குன்றி இருந்தா நாம் புதிதாக புகுத்தும் ஆற்றல் அங்கு ஆதிக்கம் செலுத்தும் அப்போ நாம தான் ராஜா...
இதுவே தீய ஆன்மாக்களாக இருந்தால் அதனிடம் சமரசம் லாம் செய்ய முடியாது வழக்கம் போல radiation protection பயன்படுத்த வேண்டியது தான் ( யந்திரதகடு,crystals, எலுமிச்சம்பழம் )...

குறிப்பிட்ட சில இடங்களில் விபத்துகள் நடப்பதும் இதில் சேரும் ரத்த பலிக்காக வலிமை குன்றிய ஆற்றலோடு தன்னோட எல்லைக்குள் நுழைபவர்களை எளிதில் காவுவாங்கி விடும்...இதுக்கு தான் #எழுமிச்சங்கா பயன்படுத்துறோம்
சில இடங்களில் சில அதிர்வுகளை சமாளிக்க மற்றொரு கருப்பொருள் அதிர்வை பயன்படுத்துவாங்க... இதுவும் குவாண்டம் இயக்கம் தான்...
பேய் படங்களில் கோவில் எல்லைக்குள் ஆன்மாக்கள் வரமுடியாதது போல காட்சி படுத்தியிருப்பங்க...அது தான் இது...

இங்க எல்லாமே அலையியக்கம் தான்
ஒன்னோட ஒன்னு மோதும்,விலகும் - இறுதியில் வலிமை மிக்கது ஆதிக்கம் செலுத்தும்...வலிமை குறைந்ததாக இருந்தாலும் தற்காத்து கொள்ள துவங்கும்

Friday 24 July 2020

Spiritual motion in Quantum - நினைவலைகளின் குவாண்டம் இயக்கம்

நினைவலைகளின் குவாண்டம் இயக்கம்
Spiritual motion in Quantum 

அண்டத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஈரியல்பு தன்மையின் அடிப்படையில் தான் இயங்கிக்கிட்டு இருக்கு...அதாவது துகள் மற்றும் அலை பண்புகள்..இது  குவாண்டம் இயக்கவியல் மூலம் தெளிவாகிறது.அணுக்களால் உருவான எந்தவொரு பொருளுக்கும் இது சாத்தியமான ஒன்னு தான்..அதன்படி மனிதனும் இதன் கீழ் தான் இயங்கனும்...இந்த ஈரியல்பு விதியில் இயங்கும் பொருள் துகளாக இயங்கினால் கட்புலனாகும் அளவிலும்,அலையாக இயங்கினால் கட்புலனாக வகையிலும் இயங்கும்...மனிதன் உயிரோடு இருக்கும் போது இவ்விரு தன்மைகளை கொண்டிருந்தாலும் துகள் நிலையில் மட்டுமே இயங்க முடியும் ஏனென்றால் மனித மூளை ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே உணர கூடியது..இதுவே ஒரு மனிதன் அலை வடிவில் இயங்கினால்??? - அவன் ஒரு super human ஆக உருவெடுப்பான்..அவனால் எதையும் எங்கும் எப்போதும் இயக்க முடிகின்ற அளவிற்கு வல்லமை படைத்தவன் ஆகிவிடுவான்..இதற்கெல்லாம் முட்டுகட்டு போடும் வகையில் அமைந்தது தான் துகள் தன்மை அதாவது உடல் நிலை..
ஒருவனது ஆன்மா(அலை) உடலை(துகளை) விட்டு வெளியேறிய பின் அலையாக மட்டுமே இயங்க முடியும் இந்த நேரத்தில் தான் நான் சொன்ன super human நிலைக்கு செல்லலாம்..ஆனால்,துகளை கைப்பற்ற இயலாத காரணத்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே அந்த அலை சுற்றி திரியும்...இதை தான் கிராமத்தில் காத்து(அலை),கருப்பு ன்னு சொல்லுவாங்க..
இப்படி அலையாக எங்கும் பரவி கிடக்கும்  ஆன்மாக்களை வணங்கும் பழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருது.. குறிப்பிட்ட சில காரணத்தால் இறந்த ஆன்மாக்களை மட்டுமே வணங்குவாங்க..
இப்படி அலையாக (காற்றாக) இருக்கும் அந்த ஆன்மாவை அழைத்து ஒருவரது உடலுக்குள் இறக்கி..துகள் நிலையை உணர செய்வார்கள் அதாவது self consciousness ஐ கொடுத்து தங்களுக்கு வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து பின்னர் அந்த துகளுக்கு தேவையானவற்றை தந்து அனுப்பி விடுவார்கள்...குறிப்பிட்ட எல்லைக்குள் பரவி கிடக்கும் அந்த அலை அங்குள்ள மக்களின் தேவைக்கேற்ப எல்லைக்குள் வேறு ஆற்றல்கள் நுழையாமலும், வேளாண்மை சிறக்கவும், மழை வேண்டியும் அவர்கள் கேட்டவற்றை நிகழ்த்தும்...மழை பொழிய செய்தல்,வேளாண்மை பெருக்கம் என்பது குவாண்டம் உலகில் சாத்தியமானது...இதற்கு அங்கு அலையாக செயல்படும்  ஆன்மாவே காரணம்..
இதை தவறான வழிகளிலும் பயன்படுத்த கூடும் ஏவல் காரியங்களுக்கு இது போன்ற அலையாக சுற்றி திரியும் ஆன்மாக்களை பிடித்து தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும் செய்கிறார்கள்..
குறிப்பிட்ட விபத்திற்கு பின்னர் சில ஊர்களில் மழை பொலிவு குறைந்ததாகவும்,விவசாயம் முடங்கியதாகவும் சொல்லப்படும்..அதே சமயம் சில கிராம அம்மன் கோவில்கள் வேளாண்மை செய்யும் களத்து மேட்டின் நடுவிலே அல்லது கண்மாய் கரைகளிலோ அமைந்திருப்பதையும் தொடர்புபடுத்தி பாத்துக்கோங்க..
இதே உயிரோடு இருக்கும் போது இது போன்ற அலை இயக்கம் என்பது அசாத்தியமான ஒன்று தான்...இதை சாத்தியப்படுத்தும் வகையில் சில செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கு...ஆனால் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்...
இன்னும் சிலர் தங்கள் வீட்டில் இறந்த கன்னிப்பெண்களை தோட்டத்தில் நடுகல் வைத்து வழிபாடு செய்வார்கள்... இது அவர்களின் தோட்டத்தை காக்கவும்,மண் வளர்ச்சிக்கும் உதவும்

சில பேய் படங்களில் பேய்கள் TV போன்ற மின் சாதனங்களையும் கட்டுப்படுத்தும் அதே சமயம் மரம் செடி போன்றவற்றையும் கட்டுப்படுத்தும் மேலும் காற்று வாக்கில் மேலிருந்து கீழிரங்கும்,எங்கு ஓடினாலும் முன்வந்து நிற்கும்,ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருக்கும்.....இதெல்லாம் குவாண்டம் அறிவியலின் அடிப்படையில் சாத்தியமானதே...
இதை மேலை நாட்டினர் நிரூபிக்கும் வரை இது ஒரு Pseudoscience தான்.
 

Human Frequency

Human Frequency
ஒரு மனிதனின் மூளையில் எழும் எண்ணங்களும்/சிந்தனைகளும் அதிர்வுகளை தோற்றுவிக்கும் இது யாவரும் அறிந்ததே..இந்த அதிர்வுகள் வலுப்பெறும் போது அதிர்வெண்ணாக உருவெடுக்கும்..இது தான் frequency of human brain wave - இது போல ஒருத்தருக்கு மேல ஒரே மாதிரி சிந்தனையை கொண்டிருந்தால் அந்த அதிர்வெண்கள் ஒரே அலைவரிசையில் அமையும் அதாவது FM ரேடியோ போல..இது உலகில் எந்த இடத்தில் இருப்பவர்களையும் இணைக்கும்.. இது ஒரு World wide frequency modulation போல செயல்படும்.. அதாவது,உலகெங்கிலும் உள்ள ஒத்த சிந்தனையை/எண்ணங்களை கொண்டவர்களை இணைக்கும் செயல்பாடு...உதாரணத்திற்கு தற்போது உங்களுடன் நெருங்கி பழகுபவர்கள் ஏதோ ஒரு அலைவரிசையில் ஒத்து போவதன் விளைவாக தான் உங்களோடு இணைப்பில் உள்ளார்...நீங்கள் ஒரு பொருளை வாங்கனும்ன்னு நெனைக்குறீங்க ன்னு வெச்சிக்குவோம்..அப்போ உங்க மூளையில் அந்த பொருள் தொடர்பான எண்ணங்கள் சிந்தனைகள் கேள்விகள் எழத்துவங்கும் இது ஒரு அதிர்வெண்ணாக கொள்வோம்..இதே போல் அந்த பொருளின் தேவை உள்ளவரோ அதை பற்றி தெரிந்தவரோ மற்றொரு இடத்தில் எண்ணங்கள் மூலம் அதிர்வெண்ணை உருவாக்குகிறார் ன்னு வெச்சிக்கலாம்...இப்போ இந்த இருவரையும் இணைப்பது அந்த அதிர்வெண்ணின் அலைவரிசை ஒன்றிப்பு நீங்கள் அவரை தேடியோ அவர் உங்களை தேடியோ நகர தொடர்வது தான் அடிப்படை (இப்போ சொன்னது உதாரணத்துக்கு மட்டுமே)..

இந்த அலைவரிசை ஒன்றிப்பு ஈர்ப்பின் அடிப்படையில் நிகழும் பிரபஞ்ச ஈர்ப்பு - அதாவது பசும்புல்லை தேடி ஆடு செல்வது போல்...இது ஒரு அனிச்சை இயக்கம்...இதில் மேம்பட்ட நிலை தான் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே அவரது எண்ணங்களை உணர்வது...உலகின் எங்கோ இரு இடங்களில் இருப்பவர்கள் யார் எவரென தெரிந்தோ/தெரியமலேயோ எண்ணங்களை பரிமாறிக்கொள்வது - இது எப்படி ன்னா குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருவரின் சிந்தனை(தகவல்) upload செய்யப்படும் அதே அலைவரிசையில் யார் ஒத்திசைகிறாரோ அவருக்கு அந்த தகவல் கடத்தப்படும்(download)..கடத்தப்படும் நபரின் சிந்தனையில் புதிதாக உதிக்கும் சிந்தனை போல தோன்றும் ஆனால் உண்மையில் அது வேறு ஒருவரின் கடத்தப்பட்ட சிந்தனையாக கூட இருக்கலாம்..இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் சரியாக அதே அலைவரிசையில் ஒத்திசைப்பது... நான் நெனச்சேன் நீ சொல்லிட்ட/இதே தான் நான் சொல்ல வந்தேன் - இது போன்ற சம்பவங்கள் லாம் இதன் அடிப்படை...சமீபத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் இடையில் இது போல பல விஷயங்கள் நடந்திருக்கு அவன் நினைப்பான் நான் சொல்லுவேன்...இது 90% ஒத்துப்போகும் நிகழ்வுகளாக நடக்கும்...சில விஷயங்கள் அவனது சிந்தனைகள் தான் என்னூடே தரவிறக்கம் செய்யப்படும்..எளிமையா சொல்லணும் ன்னா அவன் யோசிப்பான் நான் அதை திருடுறேன் எனக்கே தெரியாம...
இதை தான் telepathy ன்னு சொல்றாங்க..

இது போல நம் சிந்தனைகளை மற்றவர்கள் ஒத்திசைக்க கூடாது என்றால் நாம் உருவாக்கும் அலைவரிசை வித்தியாசமாக இருக்கணும்...இது எண்ணங்கள் உருவாக்கத்தில் ஏற்படுத்தும் தந்திரம்...இது போன்ற அலைவரிசை ஒன்றிப்பு ரத்த உறவுகளில் மிக சாதாரண ஒன்று தான் - உன் அப்பா போல யோசிக்குற/இதையே தான் உங்கப்பாவும் சொல்லிருப்பாரு.. இது போன்ற உதாரணங்கள் கேள்வி பட்ருப்போம்..ஏற்கனவே உடலவில் (DNA) இணைப்பில் உள்ள நாம் மனதளவில் உருவாக்கும் எண்ணங்களை பரிமாறிக்கொள்வது எளிது தான்...பிள்ளைகளின் எண்ணங்களை பெற்றோர் தெரிந்து கொள்வது தானே

உங்க சமூக வலைதள வட்டத்தை உற்று நோக்குங்கள்.. இவை அனைத்தும் நீங்கள் ஈர்த்து கொண்டது தான் அலைவரிசை ஒன்றிப்பின் மூலமாக...

எல்லா எண்ணங்களுக்கும் அலைவரிசை உண்டு.. ஆனால், எவரெவர் சரியாக ஒன்றிணைகிறார்களோ அவர்களால் மட்டுமே தகவல் பரிமாற்றம் சாத்தியம்..

Friday 17 July 2020

Momentum - இயக்கம்

Momentum
இயக்கம் 
Action - Reaction

இயங்குதல் தான் ஒரு தொடரை(வாழ்க்கை னும் வெச்சிக்கலாம்) அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்..  அனைத்து இயக்கமும் ஏதோ ஒரு வகையில் முன் செய்த வினையின் தொடராகவே அமையும் அதாவது எந்தவொரு இயக்கமும் முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த இயக்கம் முடிந்தாலும் அது உருவாக்கும் பக்க கிளை இயக்கங்கள் நீடித்து கொண்டே செல்லும்...அதாவது chain reaction..
ஒரு செயல் பல செயல்கள் உருவாக அடிப்படையாக அமைவது...இந்த 
இது அடிப்படை புரிதலுக்காக தான்..உண்மையில் நம் வாழ்க்கையில் நாம் செய்யும் ஓவ்வொரு சிறிய விஷயங்களும் பெரிய மாற்றத்தை குடுக்கும் அது நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் அது நிகழ்தகவை பொருத்தது.. Chaos theory இல் ஒரு முக்கோண விளையாட்டு உண்டு ஒரு முக்கோணத்தின் உள்ளே ஏதோ ஒரு இடத்தில் புள்ளி வைக்கணும் பின்னர் அதிலிருந்து கோணத்தை நோக்கி ஒரு புள்ளியை குறிக்கணும் இதை தொடர்ந்து பல முறை செய்தால் முக்கோணத்தின் உள்ளே ஒரு முக்கோணம் போன்ற அமைப்பு உருவாகும்..இது ஒரு மூடிய பகுதியில் நிகழும் ஒழுங்கான மாற்றம்...இதன்படி ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது குறிப்பிட்ட நிகழ்வு வட்டத்தையோ குறி வைத்து சில மாற்றங்களை செய்தால் அதன் விளைவு ஆச்சர்யபடும் அளவிற்கு அமையும்..எளிமையா சொல்லணும் ன்னா(கற்பனை தான்) சுற்றுலா போய்ட்டு ஒரு குடும்பம் ஊர் திரும்பிட்டு இருக்காங்க அப்போ அங்க ஒரு குழந்தை சாக்லேட் கேட்டு அடம்பிடிக்குது அத வாங்கி தர மறுக்கும் பெற்றோர் இந்த ஜுஸை குடி ன்னு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கயில குடுக்குறாங்க அதை பிடிக்க தெரியாத குழந்தை ரோட் ல போட்றுச்சு இவங்களும் ஊர் வந்தாச்சு ஆனால் அந்த பாட்டில் விழுந்த இடத்தில் 5 மணி நேரம் கழிச்சு ஒரு விபத்து நடக்குது,காரணம் இந்த பாட்டில் தான் அதுல 2 பேர் இறந்து போறாங்க அவங்க இறந்ததால அவங்க குழந்தைங்க அனாதையா நிக்குறாங்க - இந்த நிகழ்வு ல ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மாற்றம் நடந்திருந்தா இதன் விளைவு வேற மாதிரி இருந்திருக்கும்..இந்த மாதிரி யாரோ எவரோ செய்யும் சின்ன செயல்கள் இந்த சமூகத்தில் பல சிக்கல்களை கொண்டு வந்திரும்...இதை தான் butterfly effect ன்னு உருட்டுறாங்க... ஆனா நான் இங்கே சொல்ல வந்தது இயக்கங்களை பத்தி...அதாவது இந்த பூவுலக இயக்கம், பூமி சுத்துறது கூட ஒரு இயக்கம் தான்..

உலகின் முதல் மனிதனில் ஆரம்பிச்சு இன்னிக்கு வர பல தலைமுறைகள் கடந்து இந்த இயக்கம் தொடர்ந்து கிட்டு இருக்கு இதன் விளைவு தான் பணம்,புகழ்,கல்வி,பொருள் எல்லாமே...சாதாரண ஒரு LED light இயங்குறதுக்கே மின்சாரம் ங்குற ஆற்றல் வேணும்...அப்டி இருக்கையில் இவ்ளோ பெரிய உலகம் இயங்குறதுக்கு தேவையான ஆற்றல் எங்கிருந்து கிடைக்குது..எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆற்றல் தேவை...ஒரு குழந்தை கருவறையில் உருவாவது பெற்றோரின் ஆற்றலில் தான் அதாவது வெற்றிடத்தில் ஆற்றல் உருவாக்கம் போல - மின்னூட்டங்களை பயன்படுத்தி...இவ்வளவு பெரிய உலகம் இயங்க தேவையான ஆற்றல் எங்கிருந்து கிடைக்குது...அப்படியே ஆற்றல் கிடைத்தாலும் அதை இயக்குவது யார்...பூமிக்கே இப்படி ன்னா பிற கோள்களின் இயக்கம்?...அதற்கு தேவையான ஆற்றல்?...

இதன் தொடக்கத்தை போலவே முடிவும் மர்மமானது எப்பொழுது இந்த இயக்கம் துவங்கியது என கண்டறிந்தால் தான் இதன் முடிவை கணக்கிட முடியும்...இவ்வளவு நாள் இப்பிரம்மாண்ட அமைப்பிற்கு தேவையான ஆற்றல் மூலம் தான் இதற்கு விடை...

இங்க நகர்வின் ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது..ஆனால் அதை சூட்சுமமாக கையாளனும் சில நேரங்களில் நன்மையில் முடியும் சில நேரங்களில் தீமையில் முடியும் அதுவும் மூடிய ஒரு வட்டத்தின் உள் மட்டுமே.

அண்ட வெளியில் இடக்கங்கள் அனைத்தும் ஆற்றலை அடிப்படையாக கொண்டு தான் இயங்குது.அதாவது ஆற்றல்கள் எங்கும் கொட்டி கிடக்குது..இது தான் வெற்றிடத்தில் ஆற்றல் உருவாக்கம்.. உதாரணத்துக்கு புவியில் வளிமண்டலம் - சைக்கிள் காத்து அடிக்கும் பாம்பு காலியான இடத்தில் உள்ள வளியை பயன்படுத்தி காற்று ஆற்றலாக மற்றும் யுக்தி..
இதை தான் zero point energy ன்னு சொல்றாங்க...ஒன்றுமில்லா ஆற்றல் ன்னு சொல்லலாம்..இது எங்கும் இருக்கும் என்ன தான் ஆற்றல்கள் பலவாக பிரிந்து கிடந்தாலும் அடிப்படையில் ஆதி மூல ஆற்றல் ஒன்று தான் அது பரிணாமித்தே பலவாக உருவெடுத்துள்ளது...இது மட்டும் சாத்தியம் ன்னா பெட்ரோல் போடாம bike ஓட்டலாம்,current இல்லாம bulb எறிய விடலாம்...

உதாரணமா மனிதருக்கு பல வழிகளில் ஆற்றல் கிடைக்கிறது உணவு,சூரிய ஆற்றல்,காந்த சக்தி,பிராண வாயு, cosmic energy...இது பலவகையாக இருந்தாலும் எல்லாமே ஆற்றல் தான் ஒன்றின் chain reaction தான் இன்னொன்னு...அது போக எல்லாம் interconnect also...

Friday 3 July 2020

369 - Tesla(The Universal Code Numbers)

369 - Tesla(The Universal Code Numbers)

எண்ணியல் கோட்பாட்டில் முதல் இரண்டு எங்கள் இருமை தன்மையை விவரிக்கின்றன இவை தான் அடுத்தடுத்து வரும் எண்களின் ஒற்றைப்படை,இரட்டைப்படை தன்மையை துவக்குகிறது. இவ்விரு எண்களுக்கு அடுத்ததாக மூன்றாம் எண் அதாவது '3' - இது முதலில் உள்ள இரண்டையும் சாராது உள்ளது போல் மூன்றாம் தன்மையை உணர்த்துவது போல் அமைகிறது.10th Man Rule போல.எனவே தான்,இந்த மூன்றாம் எண்ணும் அதன் மடங்குகளும் பிரபஞ்ச ரகசியங்களை கொண்டிருக்கும் திறவுகோலாக கருதப்படுகிறது.இதை தான் அறிவியலாளர் டெஸ்லா-வும் முன் வைக்கிறார். சாதாரணமா எந்த ஒரு எண்ணயும் மூன்றுமுறை கூட்டி கிடைக்கும் எண்களின் கூட்டுத்தொகை மூன்றின் மடங்காகவே அமையும்.அதேபோல 3,6,9-ம் வாய்ப்படுகளில் ஒவ்வொரு சமன்பாட்டின் கூட்டுத்தொகையும் 3,6,9 என்ற வகையிலே அமையும்.இது கொஞ்சம் மாயாஜாலம் போல இருக்கலாம்.இதை இன்னமும் நமது அன்றாட வாழ்விலும், பண்டைய நாகரீக மதங்களின் அடிப்படையிலும்,அறிவியலிலும் ஆழமாக தேடிப்பார்த்தால் நிறைய ஆச்சரியமூட்டும் எதர்த்தங்களை பார்க்கலாம்.மேலும்,இவை பிரபஞ்ச ரகசியத்தின் தொடர்புகள்.சாதரணமாக ஒரு வட்டம் 360கோணம் இருக்கும் இதன் கூட்டுத்தொகை 9 அதே போல அரைவட்டம் 180கோணம் இதன் கூட்டும் 9.அடுத்து கால்வட்டம் இதன்கூட்டு கோணமும் 9.இதை அப்படியே நகர்த்தி புவியுடன் ஒப்பிட்டால்.புவியின் ஒரு வருட சுற்றுக்காலம் என்பது 365.25 நாட்கள் இதனை கூட்டி கிடைக்கும் கூட்டுத்தொகையும் இறுதியில் 3 தான்.1 முதல் 9 வரை உள்ள எண்களை கூட்டி கிடைக்கும் கூட்டுத்தொகையும் 9 தான்.இது ஏதோ விசித்திர எண்கணித விளையாட்டை போல இருக்கலாம் ஆனால் இந்த 369Hz அதிர்வுகளை பயன்படுத்தி அசாத்திய சில அற்புதங்களை காணலாம்.இது மூளையோடு தொடர்புகொண்டு மனிதனில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.இந்த எண்களை காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தோமேயானால் ஒரு நிமிடத்தில் 60நொடிகள்.இதன் கூட்டு 6.அடுத்து ஒரு மணியில் 3600நொடிகள் இதன் கூட்டு 9.அதே போல ஒரு நாளையில் கிடைக்கும் நொடிகளின் கூட்டு 9.இதை மேலும் மதங்களில் புகுத்தி பார்த்தால் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் 786குறியீடு இதன் கூட்டுத்தொகையும் 3. மேலும் மூன்றாம்பிறை நிலாவும் சூரியனில் இருந்து மூன்றாவதாக அமைந்திருக்கும் வெள்ளி கோளும். வெள்ளி கோளானது பிறைநிலாவின் மேல் நட்சத்திரம் போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இயல்பாகவே மூன்றாம் பிறை பார்ப்பது மனதிற்குள் ஒரு அமைதியை உண்டாக்கும் என்பது கூடுதல் சிறப்பு.மேலும் நவகிரகங்கள்,நவராத்திரி,உடலில் நவதுவாரம்,நவமி,அருப்படைவீடு,அறுசுவை உணவு,அறுங்கோணம்(பென்சீன் வளையம், தேன்கூடு),முக்கண் தேங்காய்,திரிசூலம்,மும்மூர்த்திகள்,முப்பெரும்தேவிகள்,அம்+உம்+நம்,முக்கனி,(படைத்தல்,காத்தல், அழித்தல்),மூவேந்தர்கள் என பல இடங்களில் 369 குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஆல்பா,பீட்டா,காமா கதிர்வீச்சுகள் மற்றும் ஒமேகா3,6,9 கொழுப்பு அமிலங்கள் என பல அறிவியல் கூறுகளும் இத்துடன் அடங்கியுள்ளது.சமஸ்கிருத ஓம்-இல் கூட 3 என்ற எண்ணை கொண்டே இருக்கும்.அதுபோல ஓம் என்ற தமிழ் சொல்லிலும் மூன்று ஆறுகள் இடம்பெற்றுள்ளன.மேலும் அ+உ+ம் ஆகிய மூன்றின் கூட்டு தான் ஓம்.இவற்றை எளிதில் புரிந்துகொள்ள இதனுடன் இணைக்கப்பட்ட படங்களை உற்றுநோக்கவும்.மேலும் இதன் ஆழத்தை அறிய நீங்கள் காணும் இடங்களில் உள்ள 369 எனும் எண்களின் ரகசியத்தை கண்டறிய துவங்குங்கள்.

Earth Rotation  Vs 369

Time Vs 369
Slope Degree Vs 369

Multiplication Matrix of 369
Number Addition 369

Islamic Mythology Vs 369
Hinduism Vs 369
Essential Good Fats Vs 369

Duality - இருமைத்தன்மை

Duality - இருமைத்தன்மை


இந்த பரந்த அண்ட வெளியில் பூமியை மட்டும் மையமாக கொண்டு பார்த்தோம் ன்னா (பூமியிலிருந்து) எல்லாமே இருமைத்தன்மையின் அடிப்படையில் தான் இருக்கும்... Ying Yang - ன்னு சொல்றதும் இது தான்..பலருக்கும் இதை பத்தி தெரிஞ்சிருக்கும்...எதிரெதிர் தன்மையை தான் இப்படி சொல்றாங்க..


அதெப்படி ன்னா 

 இரவு-பகல், நன்மை-தீமை,

இன்பம்-துன்பம்,இயற்கை-செயற்கை,

மேலே-கீழே,ஆண்-பெண்,

மனிதன்-மிருகம்,சாத்தான்-தேவதை,

கருப்பு-வெள்ளை ன்னு நீண்டுகிட்டே போகும்


இந்த விதி எல்லாவற்றிற்கும் பொருந்தும் இப்போ ஒரு செயலை செய்யுறோம் ன்னு வெச்சிக்குவோம் முடிவில் நமக்கு கிடைப்பது வெற்றி அல்லது தோல்வி இது நிகழ்தகவின் அடிப்படையில் நடக்கும் அதை பத்தி இன்னொரு நாள் பாப்போம்...இப்போ இங்க ரெண்டே விஷயம் தான் நடக்கணும் வெற்றி or தோல்வி..

வெற்றி or தோல்வி யை தவிர்த்து மூணாவதாக ஒன்னு இருக்குமே இரண்டுக்கும்  இடைப்பட்ட நிலை அதை விவரிக்க முடியாது,அப்படி ஒரு நிலையை ஏற்றுக்கொள்ளவும் முடியாது விளையாட்டில் கூட match draw ஆகிவிட்டால் திரும்ப ஆட்டம் தொடர்ந்து முடிவு தீர்மானிக்கப்படும்...


இப்படி தான் எல்லா விஷயமும் இந்த இருமை பண்பை சார்ந்து இருக்கு..இப்போ இந்த இரண்டு பக்கமும் இல்லாம ஒரு மனுஷன் இருக்கவே முடியாது..(கண்ணை மூடி யோசிச்சு பாருங்க நீங்க இப்போ இன்பமா இருக்கீங்களா இல்ல கஷ்டத்துல இருக்கீங்களா) கண்டிப்பா நீங்க ஏதோ ஒரு நிலையில் தான் இருக்கணும் அது தான் விதி..ஆனால் இந்த இரண்டும் இல்லாம இடைப்பட்ட நிலையில் ஒருத்தன் வாழ்ந்தா அவனை என்ன ன்னு சொல்றது???

அப்படியும் வாழ்ந்து இருக்காங்க பல சித்தர்களும்,ஞானிகளும் - இப்படி இரண்டுமற்ற நிலையில் வாழ்ந்ததால் தான் அவங்க இறை நிலையை அடைஞ்சாங்களா??..மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத நிலை இருந்தால் அதை வேற எப்படி சொல்வது..சரி கடவுள் ன்னு சொல்ல வேண்டாம் ஆனால் கண்டிப்பா அது ஒரு அசாத்தியமான நிலையாகவே இருக்கும் Super Humans மாதிரி...ஆனால் அந்த நிலையில் இருப்பவர்களால் இந்த பூமியில் அந்த நிலையில் கிடைக்கும் ஆற்றலை வைத்து ஒன்னும் பண்ண முடியாது..ஏன்னா இங்க வாழனும் ன்னா இந்த இரண்டில ஒன்ன தொட்டே ஆகணும்...

மனித மனதுளையும் இந்த duality இருக்கு ஒரு குழந்தை கையில கருப்பட்டியை குடுத்து சாப்பிட கூடாது ன்னு சொல்லிட்டு அவனை விட்டு சென்றால் அந்த குழந்தை மனசுல ஒரு பிரளயமே வெடிக்கும் சாப்பிடு ன்னு ஒரு பக்கம் குரல் கேக்கும் வேண்டாம் ன்னு ஒரு பக்கம் குரல் கேக்கும் ரெண்டுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு வேற வழியில்லாம எதன் ஆதிக்கம் அதிகமா இருக்கோ அந்த பக்கம் அவன் மனசு திரும்பும்..இது குழந்தைக்கு மட்டுமில்ல அனைத்து வயதினருக்கும் நடக்கும் ஏன்னா அது தான் duality (நம்மலே ஒரு விஷயத்தை துவங்கும் முன் செய்யலாமா வேண்டாமா ன்னு ஒரு யோசனை வருமே அது தான் இது)

இந்த இரண்டு நிலையும் ஒன்று தான் ஆனால் ஒன்றின் பக்கம் நின்று பார்த்தால் மற்றொன்று எதிராக இருக்கும் கண்ணாடி முன் நிற்பது போல் இரண்டும் ஒன்று தான் நிழலுக்கும் நிஜதுக்கும் இடையே மோதல் ஆனால் இரண்டும் ஒன்று தான்...

இந்த இரண்டை தாண்டி ஒன்று இருந்தால் மூணாவதாக அது இந்த duality மக்களுக்கு விசித்திரமாகவே தோன்றும் அதற்கான ஒரு சான்று தான் திருநங்கை - இவர்கள் ஆண் உடலும் பெண் உளமும் கொண்டவர்கள் அதாவது ஆண், பெண் தன்மையை தவிர்த்து மூன்றாவது பாலினம்,மூன்றாவது என்பதால் தான் மூன்றின் மடங்கான ஒன்பது என்ற கேலிப்பெயரால் அழைக்க படுகிறார்களோ என்னவோ...நான் முன்னர் சொன்னது போல் இவர்களையும் நாம் விசித்திரமாகவே பார்க்கிறோம் ஏனென்றால் அவர்கள் duality யை விட்டு வேறுபடுகின்றனர்...சரி அப்போ அவங்களுக்கும் இறை நிலையை போல சக்திகள் உள்ளனவா??? அதெல்லாம் தெரியல ஆனால், ஒன்னு மட்டும் உறுதி பிறக்கின்ற ஒவ்வொரு  குழந்தைக்கும் ஜாதகம் பார்க்கப்படும் இதற்கு தேவையான குறிப்பில் பாலினமும் உண்டு (சிலர் பாலினம் குறிப்பிடாமல் கூட எழுதுவார்கள் ஆனால் திருமணத்தின் போது அதை வைத்துத்தான் கணிக்க முடியும்) இப்போ திருநங்கையாக பிறந்த ஒருவருக்கு எப்படி ஜாதகம் எழுத முடியும்? மூன்றாம் நிலை என்பதால் இவர்களுக்கு கோள்களின் செயல்பாட்டில் பாதிப்புகள் இருக்காதா? இருக்காது ன்னு தான் நெனைக்குறேன் ..இப்படி கோள்களினால் பாதிப்பு இல்லாததனால் தான் வட இந்தியாவில் புதிய தொழில் துவங்குபவர்கள் இவர்களை அழைத்து தொடங்குகிறார்கள் போல...அது போக பண்டைய காலம் தொட்டே பல மன்னர்கள் தன் அரண்மனையில் இவர்களை போன்றோரை  வைத்துள்ளனர்..ஒருவேளை ஜாதகத்தில் இருந்து தப்பும் நோக்கமாக இருக்கலாம் (நமக்கு வந்த கெட்ட நேரம் செல்ல பிராணிகளை தாக்குவது போல)

அப்படியே நரசிம்ம அவதாரத்தையும் சேர்த்து பாருங்க நமக்கு விசித்திரமான உருவம் + நரன் கலந்த சிம்மம் + மேலும் கீழுமற்ற நிலை - இங்க இறை நிலை ன்னு கூட சொல்ல வேண்டாம்..ஏன்னா நரசிம்மரை ஏற்கனவே கடவுளாக தான பாக்குறாங்க..

என்னடா இந்து மத கருத்துகளை முன்னவெச்சே பேசுறான் ன்னு நினைக்காதீங்க ஏன்னா இதுக்கு உதாரணம் சொல்ல இதுல தான் பாக்க வேண்டி உள்ளது.மேலும் என் சூழலுக்கேற்ப இதை அடிப்படையாக வெச்சு தான் பலவற்றையும் தொடர்புபடுத்த வேண்டி இருக்கு.