Tuesday 5 October 2021

நீர்மங்களும் ஆற்றல்அதிர்வலைகளும் - Water and Vibrationalwaves

நீர்மங்களும் ஆற்றல்அதிர்வலைகளும்


எண்ணஅலைகள் நீர்மத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளும் விளக்குகிறது.இவை அனைத்தும் அதிர்வு எனும் அடிப்படை நுட்பத்தை கொண்டு இயங்குகிறது.இந்த அதிர்வுகளின் செயல்பாடு இறந்த ஆன்மாக்களில் தொடங்கி,வனதேவதைகள்,பூதங்கள்,கணங்கள் என அனைத்தையும் அடக்கியது.சில இஸ்லாமிய கருத்துப்படி பாதாள உலகத்தின் பூதமாக சொல்லப்படும் ifrit - நீர்நிலைகளில் தங்குவதாக நம்பப்பட்டது.அதேபோல ஆப்பிரிக்க நாட்டுப்புற தெய்வமான மாமி வாட்டா எனும் பெண் தெய்வம் வளர்ச்சியின் அடையாளமாக வணங்கப்படுகிறது.இது கிட்டத்தட்ட நம்ம ஊர் மாரியம்மன் மாதிரி தான்.இதுவும் நீர்நிலைகளில் தங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.இன்னும் மேற்கத்திய நாட்டுப்புற இறையியளில் water spirits எனப்படும் அதிர்வலைகள் ஆறு,குளம் போன்ற நீர்நிலைகளில் குடிக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.எல்லாவற்றிற்கும் மேல நான் ஏற்கனவே சங்கிலிபூதத்தார் மரங்களில் தங்கியிருந்ததாக சொன்னது போல நீரிலும் ஆழமான கசத்தை உருவாக்கி தங்கினார் என கதைகள் உண்டு.சரி நீருக்கும் ஆன்மா,அதிர்வலைகளுக்கும் என்ன தொடர்பு?.இந்த தொடர்பு யாக வேள்விகளில் வைக்கப்படும் கும்பகலசத்தில் தொடங்கி இறந்த சடங்குகளில் பானையில் வைக்கப்படும் நீர் வரை நீளும்.ஆற்றல் அதிர்வுகளை ஒரு isolate செய்யப்பட்ட கலனில் உள்ள நீருக்குள் நிலைநிறுத்தி தங்களுக்கு தேவையான வேலைகள் செய்யப்படுகிறது.ஆனந்தப்புறத்து வீடு எனும் திரைப்படத்தில் பேயோட்டி ஒருவர் பானைக்குள் நீரை நிரப்பி அங்குள்ள பேயை விரட்ட முயல்வார்.அதோடு, ஈரம் எனும் திரைப்படத்தில் இறந்த பெண்ணின் ஆன்மா பழிவாங்கும் நோக்கில் நீரை கட்டுப்படுத்தி நீரின் மூலம் கொலைகளை செய்யும்.இந்த கற்பனைக்காட்சி எடுத்துக்காட்டுகள் தான் இதன் உச்ச செயல்பாடு.உயிரோடு இருப்பவரின் எண்ணங்களுக்கு ஏற்ப அசையும் நீரின் தன்மை, இறந்த ஆன்மாக்களோடும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.எங்கெல்லாம் நீர் வைத்து வழிபாடு செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த நுட்பம் பயன்படுத்தபடுகிறது.இது ஆன்மாக்களுக்கு மட்டுமல்லாது,சில செயற்கையாக உருவகம் செய்யப்பட்ட நுண்ணிகளின் கட்டுப்பாட்டிற்கும் உதவும்.நெய்தல் நிலத்தவர்கள் கடலின் நிலையை கட்டுப்படுத்தும் அளவிற்கு வல்லமை கொண்டவர்களாக இருந்துள்ளார்கள் இது போன்ற நீருடனான நுட்பத்தை கொண்ட கடலையே தமக்கு ஏற்றார்போல் கட்டுப்படுத்தி கொண்டதாக செவிவழி கதைகள் சொல்லப்படுகிறது.இன்னமும் கிராமப்புறங்களில் சில கிணறுகளையும் குளங்களையும் பார்த்து மக்கள் பயப்பட, ஒருபுறம் அதே கிணறு குளங்களின் மேட்டில் கிராம தேவதைகளுக்கும்,காவல் கருப்புகளுக்கும் கோவில் அமைத்து வழிபாடும் செய்யப்படுகிறது.பஞ்சபூதத்தில் ஒன்றான நீரானது பூத உடலுக்கும் நிழலில்லா அதிர்வுகளுக்குமானது.


Monday 27 September 2021

மரங்களும் ஆற்றல்அதிர்வலைகளும் - Trees and Vibrationalwaves

மரங்களும் ஆற்றல்அதிர்வலைகளும்
Trees and Vibrationalwaves
பொதுவாக மரங்களும் மனிதர்களை போல எண்ணங்களை வெளிப்படுத்தும் என  பல ஆய்வுகள் கூறுகின்றன.இப்பேர்ப்பட்ட அதிர்வுகளை வெளியிடும் மரங்கள் தங்களுக்குள் வேறு சில அதிர்வலைகளையும் தக்கவைத்து கொள்கின்றன அல்லது வேறு சில அதிர்வலைகள் மரத்தை தன் அதிர்வின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன.Organic Pod Burial - முறையில் புதைக்கப்படும் மனிதர்களின் ஆன்மா.அவர்மீது வளரும் மரத்தில் தங்கும்.சீன மருத்துவ முறைகளில் மனித ஆன்மாக்கள் பஞ்சபூதங்களை போல ஐந்தாக பிரிக்கப்படுகிறது.இதில் நிலத்தோடு சேர்ந்து மரமாக்கும் முயற்சி தான் இது.இதிலிருந்து மேம்பட்ட நிகழ்வுகள் தான் வனதேவதைகள்,பூதகணங்கள் மற்றும் நினைவலைகள் போன்றவை மரங்களை ஆக்கிரமித்து அதோடு ஒத்திசைதல்.இறந்தவர்களின் ஆன்மாக்கள்,தாந்த்ரீக முறையில் ஆக்கம் செய்யப்பட்ட தேவதைகளும்,கணங்களும் இது போன்ற மரத்துள்ளே தங்கிக்கொள்ளும்.இவற்றிற்கு இடையூறு ஏற்படும் வண்ணம் நடந்தால் இவை தனது வேலையை காட்டிவிடும்.இதையே கிராமப்புறங்களில் குறிப்பிட்ட சில மரத்தில் பேய் இருக்கு ன்னு சொல்லுவாங்க.இன்னமும் சில புளிய மரங்களின் அருகில் செல்லவே பயப்படும் மக்கள் உள்ள ஊரும் இருக்கத்தான் செய்கிறது.இதற்கு உதாரணமாக பனைமரத்தடியில் முனியாண்டி வழிபாடும் ஆல,அரச மரத்தடியில் இருக்கும் பெண்தெய்வங்களின் வழிபாடும் எடுத்துக்கொள்ளலாம். சங்கிலி பூதத்தார் குறிப்பிட்ட மரத்தில் குடியிருந்ததாகவும் அந்த மரத்தை வெட்டி கொண்டுவந்து வேறு சில வேலைகளுக்கு பயன்படுத்தியதால் கோபமுற்ற பூதத்தார் வெட்டியவர்களை பலி வாங்கியதாக கதைகள் கூறுகிறது.இதை உறுதிசெய்யும் பொருட்டு இன்றும் புதுவீடு கட்டி குடியேறும் முன் தச்சுகழித்தல் செய்யப்படுகிறது.எங்கெங்கோ இருந்து கொண்டுவரப்படும் மரங்களில் என்னென்ன பூதங்களோ,தேவதைகளோ இருக்கக்கூடும் அவற்றை வெளியேற்றும் பொருட்டே பலியிடப்படுகிறது.மேலைநாடுகளில் சூனியக்காரர்களும் மரங்களை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.இதுவும் இதே நுட்பம் தான்.நடுகல்லும், சுமைதாங்கிகல்லும் இறந்த ஆன்மாக்களின் புகலிடமாக கூறப்படுகிறதோ அதுபோலவே தான் மரங்களும்.கேரளாவிலுள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பேய் பிடித்தவர்களை கட்டுப்படுத்தி அந்த ஆன்மாவை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டிவைத்துவிடுவார்கள்.உளவியளின் அடிப்படையில் பார்த்தாலும் இயற்கையாகவே மரங்கள் மனிதர்களோடு நேர்மறையான ஒரு பிணைப்பை கொண்டுள்ளது.ஒரு மரத்தை கட்டிபிடிக்கும் போது மனித உடலில் serotonin and dopamine சுரப்பு தூண்டப்படுகிறது இது மனிதமூளையை அமைதிக்கும், உற்சாகத்திற்கும் இட்டுச்செல்கிறது.இது மேலைநாட்டு ஆய்வுகளில் நிரூபணத்திற்கு உள்ளாக்கப்பட்டதால் இதை மட்டும் ஏற்றுக்கொண்டே ஆகணும்.மேலும் மரங்கள் இயல்பாகவே கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை கொண்டது வேற்றுமண்டல அதிர்வுகளிடம் இருந்து இவை தற்காத்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.அதுபோல மரங்கள் மின்காந்த அலைகளோடு தொடர்புடையது.இவை அலைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் வெளிப்புற அலைகளோடு தொடர்பும் ஏற்படுத்துகிறது.இந்த அலைகள் பெருக்கத்தின் பேரில் அதிர்வுகளாக இறுதியில் அலைவரிசையாக மாறுகிறது.இதனடிப்படையில் ஒரே மரத்தில் பல்வேறு அதிர்வலைகள் ஒன்றோடுஒன்று பிணைப்புக்குள்ளாகின்றன.

Saturday 25 September 2021

Trio - மும்மை

Trio - மும்மை 
எண்ணியலில் மூன்றின் மடங்குகள் மிகவும் அபூர்வமானவை ன்னு ஏற்கனவே பல இடங்களில் சொல்லிருக்கேன்.இப்போ நான் சொல்றது எண்ணியலை கடந்த ஒரு விஷயம்.அதாவது மும்மை,மூன்றாம் தன்மை - இதை இரண்டுக்குமானது அல்லது இவ்விரண்டால் ஆனது ன்னு சொல்லலாம்.எப்படி என்றால் 1 - இது ஒரு ஒற்றைப்படை. 2 - இது இரட்டைப்படை.இவ்விரண்டையும் கூட்டி கிடைக்க - 3 இதான் மும்மை.இது மேற்கண்ட இரண்டையும் கொண்டுள்ளது,இவ்விரண்டாலும் ஆகி உள்ளது.1 என்பதை ஒரு பரிமாணமாக வைத்துக்கொள்ளலாம் இந்த 1- க்கான எதிர் பரிமாணம் தான் 2.இந்த இரு பரிமாணங்களும் எதிரெதிர்.ஆனால், மூன்றாவதான மும்மை இவ்விரண்டோடும் ஒத்தும், விலகியும் காணப்படும்.

1 ----- 2 ----- 3 

1,2,3 - இந்த தொடங்கு வரிசையில் இரு ஒற்றைப்படை எண்களும்,ஒரு இரட்டைப்படை எண்ணும் உள்ளது. அதாவது அடுத்தடுத்த எதிர் பரிமாண உருவாக்கங்களை குறிக்கிறது.இதை காலத்தோடு ஒப்பிட்டால் இன்னும் தீர்க்கமான புரிதலை பெறலாம்.

ஒருவன் நிகழ்காலத்தில் இருக்கிறான்.அதான் மையம் ன்னு வெச்சிக்குவோம்.முன்னோக்கி பார்த்தால் எதிர்காலம்,பின்னோக்கி பார்த்தால் கடந்தகாலம் - எப்படி பார்த்தாலும் நிகழ்காலத்தின் எதிர்பரிமாணங்கள் முன்னும் பின்னும் செயல்படும்.இப்போ அந்த நிகழ்காலத்தை 2ம் எண்ணாக வைத்துக்கொள்வோம்.முன்னிருக்கும் 3ம் எண்ணும் பின்னிருக்கும் 1ம் எண்ணும் 2ம் நிலைக்கு எதிரெதிர் பரிமாணங்களே.
இதை நீங்கள் எண்ணியல் வரிசைகளில் எங்கு வேண்டுமானாலும் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.

 உதாரணமாக, 2 ----- 3 ----- 4 என்ற வரிசையை எடுத்துக்கொள்வோம் இதில் இரு இரட்டைப்படை எண்களும் ஒரு ஒற்றைப்படை எண்களும் உள்ளன.

சரி இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன் ன்னா.மனித இயக்கத்தில் தொடங்கி இங்குள்ள அனைத்து இயக்கவியலும் இந்த எண்ணியலின் மும்மை அடிப்படையில் தான் இயங்குது.நாம எங்க போய் நின்னாலும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும் அந்த இரண்டுமே நம்முடைய தற்போதைய நிலைக்கு எதிராகவே அமையும்.அதேசமயம் அந்த இரு வாய்ப்புகளும் ஒன்றிற்கு ஒன்று எதிராகத்தான் இருக்கும்.இந்த ஓர்மை,இருமை க்கு இடையேயான மோதலில் சிக்கித்தவிப்பது மும்மையில் இருக்கும் இந்த துகள்கள் தான்.

பூதஉடலில் மூளை தரும் கட்டளைகளைக்கும்,உள்மனதின் ஏக்கத்திற்கும் இடையே சிக்கிதவிக்கும் நிலை.( பிடிக்காத வேலையை கட்டாயத்தின் பேரில் செய்பவனின் மனநிலையை போல)
இந்த மும்மை நிலை சில நேரங்களில் neutral - எனப்படுகிறது.ஏதுமற்றதாகி நிற்கும் நிலை.

3 - 3
1.5 - 6
0.75 - 3
0.375 - 6
0.1875 - 3      

6 - 6 
3 - 3
1.5 - 6
0.75 - 3
0.375 - 6

9 - 9
4.5 - 9
2.25 - 9
1.125 - 9
0.5625 - 9


Secure Coding Programmes

Secure Coding Programmes

பண்டைய எகிப்து மற்றும் உலகின் பல்வேறு நாகரீகங்களிலும் இந்தியாவிலும் கூட கோவில்களின் வெளிப்பக்க சுவர்களில் எழுப்பப்படும் பிரம்மாண்ட உருவங்கள் சிறப்பு பெற்றவை.தஞ்சை பெரிய கோவிலில் கோபுரத்தை தாங்கி நிற்கும் உள்ள ஒவ்வொரு சிற்பங்களுக்கும் கூட ஒருவகையான programme இருக்கு ன்னு சொல்லப்படுது.முதலில் கோயில் - கோ+இல் - அரசன் வாழும் இடம் அதாவது அரசனின் முக்கிய விஷயங்களை சேமிக்கும் ஒரு கூடம் Safety Locker போல.இத்தகைய சேமிப்பகத்தில் மனிதர்களும்,மற்ற வேற்று பரிணாம உயிரிகளும் நுழையாதிருக்கவே இது போன்ற கட்டமைப்பு. சேமிக்கப்படும் செல்வங்களோ,தானியங்களோ,முக்கிய குறிப்பான பீடங்களோ இந்த அமைப்பின் உதவியோடு காவல்காக்கப்படும்.இதே அமைப்பு தான் போருக்கும் பயன்படுத்தப்பட்டது.கணங்களில் முதன்மையானது கணபதி அதாவது Master Programme.இது புராணங்களில் சொல்லப்படுவது போல சிவபெருமானால் உருவாக்கப்பட்டது அதே போல இதை ஒத்த இன்னொரு programme தான் அனுமன்.இந்த இரு programme களும் கிரகங்களோடு தொடர்புகொண்டது அதாவது கிரகங்களின் நகர்வுகளையோ அதனால் உண்டாகும் விளைவுகளையோ கட்டுப்படுத்தவல்லவை.இதற்கு உதாரணமா சொல்லணும் ன்னா இறப்பு நடந்த வீட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் ஆனால் ஆற்றங்கரையில் திதி கொடுக்கும் போது அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்குவார்கள்.இதே போல ஆற்றங்கரையில் பெரும்பாலான இடங்களில் அனுமன் கோவிலும் இருக்கும்.அனுமன் ஒரு சிரஞ்சீவி அதாவது endless programme.இத்தகைய கட்டமைப்பு ஒருவரின் பிடியில் இருக்கும் பட்சத்தில் அது அவருக்காகவே இயங்கும்.எந்திரன் படத்தில் ரோபோவிடம் கடவுள் யார் என்று கேட்கையில் அதற்கு பதில் தன்னை உருவாக்கியவர் தான் என கூறும் அந்த இயந்திரம்.அதே போல இந்த கட்டமைப்பு ராமனுக்காக உருவாக்கப்பட்டது,அதேசமயம் ராமனுக்காகவே பல வேலைகள் செய்துள்ளது.கடவுளாக பார்க்கப்படும் ராமனால் முடியாத காரியங்களை அனுமன் செய்து முடிக்கும் காரணம் இது கிட்டத்தட்ட உணர்வூட்டப்பட்ட எந்திர கட்டமைப்பு.இந்த கட்டமைப்பை பற்றிய இன்னுமொரு தகவல் என்ன ன்னா புராணங்களில் சொல்லப்படுவது போல அனுமனுக்கு அதன் பலம் தெரியாது என்பது தான்.அதாவது கொடுக்கப்படும்  command க்கு ஏற்க வேலையை செய்யும்.எல்லாவற்றிற்கும் மேலே அனுமன்,கணபதி போன்ற உருவக கட்டமைப்புகள் நிகழ்வுலக Hybrid விலங்குகளை போல சந்ததிகளை பெருக்கி கொள்ள இயலாதவயாக இருக்க வேண்டும்.அதற்கும் ஒரு முடிச்சு போட்டு பிரம்மச்சார்யம் ன்னு சொல்லிட்டாங்க.மனிதவுரு கொண்ட அனைத்து கடவுள்களுக்கும் இல்வாழ்க்கை உள்ளதற்கும் சிவனின் பிள்ளையாக மற்றும் சிவனின் அம்சமாக படைக்கப்பட்ட இவ்விரு உருவாகங்களுக்கு மட்டும் இல்வாழ்க்கை இல்லாத போதே சந்தேகம் எழுகிறது இதுவும் Liger,Beefalo,Tigon போல தான்.

மேலும் எகிப்தின் anubis போன்றவையும் இது போல உருவானவை தான்.வெளிப்புறத்தில் இருந்து எந்தவொரு ஆற்றலும் தங்களை தாக்காமல் இருக்க உருவாக்கப்பட்டது.பிரமிட்/கோவிலின் உள்ளிருக்கும் ஆற்றல்களை(செல்வங்களை) பாதுகாக்க தான் இவ்வளவு செல்பாட்டியலும்.காவலுக்கு ஆரம்பித்து கிரக செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது வரை எல்லாவற்றிற்கும் ஒரு AI தொழில்நுட்பம் உருவாக்கம் செய்யப்பட்டு அதை ஒரு Hybrid உயிரியின் மூலமாக செலயலாக்கப்பட்டு வருகிறது.

Thursday 5 August 2021

Artificial Programmes

Artificial Programmes
Mystical Bots
 செயற்கையாக கட்டமைக்கப்பட்ட விலங்குகள் - இவை ஏதோ புராண,திரைப்படங்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் போல தெரியலாம்.ஆனால்,இவற்றை சற்று ஆழமாக கவனித்தோமானால் இன்றைய artificial intelligence தொழில்நுட்பமும் அதனை விட ஏதோ ஆற்றல் மிகுந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கலாம் என்பதும் தெளிவாகிறது.இந்த செயற்கையான விலங்குகள்/பூதங்கள் போன்றவை சிலரது சுய தேவைக்காக முதலில் கட்டமைக்கப்பட்டன.சில மாந்திரீக முறையில் programme செய்யப்பட்டு உருவமில்லா கட்டமைப்புகளும், Hybrid முறை போன்ற உருவத்துடன் கூடிய விலங்குகளும் உருவாக்கப்பட்டன.பெரும்பாலும் இந்த உருவம் கொண்ட விலங்குகள் பல உயிரினங்களின் கூட்டு கலப்பு வெளிப்பாடாக உருவாக்கப்படுகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக யாளி,சீனாவின் டிராகன்,ஒற்றை கொம்புள்ள குதிரை போன்றவை வெவ்வேறு அமைப்புகளில் உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள் இன்னமும் உலகம் முழுவதும் உள்ள கோவில்களில் காணலாம் ( இவை உருவாக்குபவரின் தேவைக்கேற்ப உடலமைப்புடனும்,செயல்பாட்டு உள்ளிணைப்புடனும் பல கைகள் பல கால் அசாத்திய உயரமான பெரிய உருவம் நீண்ட பற்கள் மனித தோற்றம் கொண்ட பெரு உயிரினம் போன்ற உருவ அமைப்புகள் மற்றும் உருவமே இல்லாத மாந்திரீக முறையில் கட்டமைக்கப்பட்ட working software களும் அடங்கும் ).இவற்றின் தற்கால எடுத்துக்காட்டாக   Liger,Tigon,Beefalo,Leopon -போன்றவை இரு வெவ்வேறு உயிரிகளின் கலப்பில் உருவானவை இதைப்போலவே தான் பண்டைய நாகரீகங்களில் விலங்குகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.இதனை இன்னமும் வலுப்படுத்தும் விதமாக இந்த hybrid விலங்குகளை போலவே இந்த யாளி,டிராகன் போன்றவையும் திறமையில்,வலிமையிலும் அற்புதமானவை அதேசமயம் இனப்பெருக்கம் செய்ய இயலாது.இதுவே அறிவியல்படியும்,ஆன்மீகத்தின்படியும் இவை இயற்கைக்கு எதிராகவே கருதப்படுது.

மேலும் இந்த கட்டமைப்புகள் விலங்குபோன்ற அமைப்பு மட்டுமல்லாமல் அசாத்திய மனிதர்கள் (Giants) போன்றவற்றையும் உருவாக்கி அதற்கான செயல்பாட்டை(programme task) அதனுள் பொருத்தி அதற்காகவே அதை இயங்க செய்துள்ளனர்.இதற்கு சான்றாக சிலப்பதிகாரம் சொல்லும் சதுக்கபூதத்தை எடுத்துக்கொள்ளலாம்.இந்த பூதத்தின் சதுக்கத்தின் நடுவே அமைந்திருக்கும் பொய் பேசுபவர்கள்,பெண்களுக்கு எதிராக நடந்து கொள்பவர்கள்,திருடுபவர்கள் போன்றோரை பிடித்து கொன்றுவிடும் இல்லையெனில் கட்டிவைத்து அடிக்குமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.இதை அப்படியே நவீன அறிவியலின் artificial intelligence உடன் ஒப்பிட்டு பார்த்தால் இதற்கிடையே ஒரு ஒற்றுமை உண்டு இந்த பூதத்திற்கு இரக்கம் கிடையாது என்ற கூற்று, அதாவது உணர்வுகள் அற்ற சொல்லக்கூடிய செயல்களை மட்டுமே செய்துமுடிக்க கூடிய தன்மை கொண்டது.இன்று நமது Traffic Signal களில் பொருத்தப்பட்டுள்ள Over Speed Analyzer மற்றும் Fastag போன்ற தொழில் நுட்பம் இவற்றிற்கும் இரக்கம் கிடையாது.இதை விட பெரிய எடுத்துக்காட்டு நம் நாட்டில் பொதுபயன்பாட்டில் இல்லை சீனா போன்ற வளரும் நாடுகளில் உள்ள cibil score system - ஒரு மனிதனின் நன்னடத்தை கொண்டு கண்காணிக்கும் திட்டம் இது அப்படியே இந்த பூதத்தோடு பொருந்தும்.

சரி இவையெல்லாம் பொதுவான பயன்பாட்டுக்கு.நமது computer க்கு போடப்படும் antivirus,வாகனம் தொலைந்தால் கண்டுபிடிக்க உதவும் tracking system, Anti theft,CCTV, Security Scanner போன்ற சுய பயன்பாட்டுக்கும் இது போன்ற பூதங்களையும்,விலங்குகளையும் கட்டமைத்து தோட்டங்களுக்கு காவலாகவும், அரண்மனை வாயில்காவலாகவும், செல்வங்களையும் முக்கிய இடங்களையும் காப்பதற்கு உருவமுடனோ அல்லது உருவமற்ற(invisible programme) நிலையிலோ வளர்க்கப்பட்டு வந்தன காலப்போக்கில் இவற்றின் செயல்பாடுகள் அதை கட்டமைத்தவனுக்கோ அல்லது அப்பாவி மக்களுக்கு தொந்தரவாக இருந்ததால் பலவும் கட்டப்பட்டிருக்கலாம் (deactivate) எஞ்சியுள்ளவற்றிடம் தற்காத்துக்கொள்ள அதை தெய்வமாக கொண்டு இன்றளவும் பலியிட்டு மக்கள் வணங்கி வருகின்றனர்.இந்த நிகழ்வை எந்திரன் படத்தோடு ஒப்பிட்டு பாருங்க கொஞ்சம் எளிமையா புரியும் ஒரு robot மனிதனுக்கு எதிரா திரும்புவது.இவ்வாறு உருவாக்கப்படும் செயற்கை கட்டமைப்புகள் உருவாக்கியவரின் சந்ததிகளை காக்கவும் செய்யும் வழிவழியாக அதை வணங்கவும் செய்வார்கள் ஆதியின் ஆதிக்கர்கள்.தில்லுக்கு துட்டு-2 படத்தில் கதாநாயகியின் மலையாள மாந்திரீக தந்தை தன் மகளை காக்க இது போன்ற ஒரு கட்டமைப்பை அதற்கு காவலாக வைத்திருப்பார்.

நவீன உலகில் போக போக இதுபோன்ற உருவுள்ள hybrid விலங்குகளின் பயன்பாடும்,robotics animals இன் பயன்பாடும் அதிகரிக்கும்.மேலும் நாம் இன்று பயன்படுத்தும்  உருவமற்ற google asst இல் தொடங்கி cibil score அளிக்கும் சதுக்கபூதமாகவும் உருவெடுக்கும் இந்த artificial intelligence

எகிப்தில் ஆரம்பித்து ஆதிக்க மனிதன் வாழ்ந்த அத்தனை பகுதிகளிலும் தமிழகம் உட்பட இந்த வழக்கம் இருந்துள்ளது.உலகம் முழுக்க வாணிபம் செய்வதிலே ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு முன்னோடியாக இருந்தவன் இந்த யாளி,பூதம் போன்றவற்றை வெறும் கட்டுகதயாக மட்டும் செய்திருக்க மாட்டான்.

செயற்கையாக கட்டமைக்கப்பட்ட உருவமற்ற உருவக விலங்கின பூதங்களை காட்டிலும் வடிவங்கள் அதீத ஆற்றலுடயது.Artificial Programme with Quantum Computing - அதிவேக செயல்பாடு கூடவே முறைப்படுத்தப்பட்ட சூத்திர(formula) செயல்பாடு.

ஸ்ரீ யந்திரம் - Nazca Lines - Crop Circles - CPU Mother Board - Holographic Projection

Monday 2 August 2021

Entropic Environment

Entropic Environment


வெப்பஇயக்கவியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் பகுதி தான் entropy. அதாவது ஒரு அமைப்பின் சீரற்றதன்மையை குறிப்பது.எளிதாக சொல்லணும் ன்னா வீட்டில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்துக்குவோம் தற்போது அதன் entropy - 0 அதே புத்தகங்கள் அறை முழுவதும் கலைத்து போடப்படுகிறது தற்போது குறிப்பிட்ட வேலை நடந்துள்ளது. எனவே,அமைப்பின் entropy அதிகரிக்கும். தற்போது entropy - 1 என வைத்துக்கொள்வோம்.இவ்வாறு உலகில் செய்யப்படும் எந்த ஒரு வேலைக்கும்/ஓய்வுக்கும் entropy என்ற மதிப்பு இருந்துகொண்டே வரும்.இந்த entropy வெப்பத்துடன் தொடர்புகொண்டது.எவ்வாறென்றால், பிரபஞ்சத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்விலும் இறுதிக்கட்ட ஆற்றல் வெளிப்படானது வெப்ப நிலையிலே வெளியிடப்படும்.அதே சமயம் "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது,ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்றலாம்" - அப்படி இருக்கையில் எந்தவொரு இயக்கமும் இறுதியில் வெப்பதிலேயே முடிவடைகிறது.நாம் உடலளவில் ஒரு பொருளை நகர்த்தினால் கூட நமது உடலில் சிறிது வெப்பம் உருவாக்கப்படும்,இதே தத்துவம் தான் அனைத்து இயந்திர இயக்கங்களுக்கும்.சரி திரும்ப புத்தக கதைக்கே வருவோம்.கலைக்கப்பட்ட புத்தகங்களின் entropy-1 எனில் திரும்பவும் அந்த புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படுகிறது தற்போது அதன் entropy-2 என அதிகரிக்கும்.அதாவது மீள் வினையோ,மீளா வினையோ ஒரு அமைப்பின் entropy ஆனது அதிகரித்துக்கொண்டே தான் போகும்.உண்மையில் சொல்லப்போனால் 0-entropy மதிப்பில் பிரபஞ்சத்தில் எந்தவொரு பொருளும் இல்லை.நமது கணக்கீட்டிற்காகவே ஒரு குறிப்பிட்ட நிலையை 0 என எடுத்துக்கொள்கிறோம்.ஒரு பொருள் ஓய்விலே இருந்தாலும் அது இயங்கிக்கொண்டு தான் உள்ளது அதற்கான குறிப்பிட்ட அளவு entropy உயர்ந்துகொண்டே தான் செல்லும்.ஏனென்றால்,ஒருவர் எதுவும் செய்யாமல் ஓய்வில் இருந்தாலும் இந்த பிரபஞ்ச பேரசைவு நம்மை ஆட்கொண்டுள்ளது - அது தான் String Theory. ஒரு மெல்லிய அதிர்வில் தொடங்கி பிரபஞ்சம் முழுதும் அதிர்ந்துகொண்டு உள்ளது.அந்த அதிர்வோடு இயைந்து ஆடும் ஆட்டம் தான் மனிதர்களின் பூவுலக வாழ்க்கை.entropy காலத்தை போல நேர்கோடாக பயணிக்க கூடியது.இது காலத்தோடு இயைந்த அதிர்வில் இருந்து விடுபட மேற்கொண்டு வினைகளை நிகழ்த்தாமல் இருக்கவே சில ஆன்மீகவாதிகள் இந்த அதிர்வுகளை விட்டு விலகி இருக்கும் யோக முறைகளை பின்பற்றி முடிந்தளவு தனது entropy மதிப்பை கூட விடாமல் பார்த்துக்கொண்டனர்.இது இயற்கைக்கு மாறே.entropy காலத்தோடு சேர்ந்து பயணிக்கும் இதனடிப்படையில் பார்த்தால் entropy தான் காலம்.அதாவது ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை செய்யும்போது அமைப்பின் entropy அதிகரிக்கும் அதேசமயம் காலமும் அதிகரிக்கும்.இதன்படி ஒரு கூற்று தெளிவாகிறது பிரபஞ்சத்தில் ஏற்படுகின்ற/பதிவுசெய்யப்படுகிற ஒவ்வொரு செயலும்/இயக்கமும் காலம்.காலத்தை எப்படி பின்னோக்கி நகர செய்ய முடியாதோ அதே போல தான் இயக்கங்களையும் entropy யையும் பின்னோக்கி நகர்த்த முடியாது.இதை காலபயணத்தோடு தொடர்புபடுத்தினால் - உடலளவில் மனிதன் காலபயணத்திற்கு ஏற்றவன் அல்ல ஏனென்றால் அதற்கு பெரும் முட்டுகட்டு இந்த entropy.எப்படி ன்னா இப்போ நாம உணவு உண்கிறோம் இத அப்படியே reverse timetravel பண்ணுறோம் ன்னு வைங்க.இப்போ விழுங்கப்பட்ட உணவு இரைப்பையில் இருந்து உணவு குழாய் வழியே வெளியேறும் இது மனிதருக்கு ஒப்பானது அல்ல கிட்டத்தட்ட வாந்தி எடுப்பது போன்று இருக்கும் இதுமட்டுமல்லாமல் வெப்பளவில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு ஒவ்வாது.பிரபஞ்சத்தில் பயன்படுத்தப்படும் ஆற்றல்கள் தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரேமாதிரி இருப்பதில்லை.100km திறனுள்ள என்ஜினுக்கு 1லிட்டர் பெட்ரோல் என இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அது 100km பயணிக்காது இல்லையேல் சில மில்லி பெட்ரோல் இழக்கப்பட்டிருக்கும் - energy loss. இதேபோல தான் இறுதியில் வெப்பமாக வெளியிடப்படும் ஆற்றல் இந்த பிரபஞ்சத்தில் சமன்செய்யப்பட்டு பயன்படுத்த இயலா ஆற்றல்களாக மாறிவிடுகின்றன.இதற்கு எடுத்துக்காட்டு வெப்ப ஆற்றலை பயன்படுத்தி நீரை கொதிக்க வச்சு பின்னர் அந்த நீர் ஆவியாக பிரபஞ்சத்தில் சமன் செய்யப்படுகிறது.இந்த ஆற்றலை பயன்படுத்தும் நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை ஒருவேளை இது கண்டறியப்பட்டால் ஆற்றலுக்கு பஞ்சமே இருக்காது.அதே சமயம் இந்த பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொரு entropy மாற்றங்களும் நினைவுகளாக (free energy) பதியப்பட்டுள்ளது.இந்த நினைவுகள் காலத்தால் கட்டப்பட்டு மீட்டெடுக்க முடியாமல் உள்ளது.இதற்கு எதிர் பரிணாமமாக இருளில் பயணித்தால் நினைவுகளோடு காலத்தையும் வென்றெடுக்கலாம்.

Monday 5 July 2021

Creations from Classical Elements

Creations from Classical Elements
பஞ்சபூத கோட்பாடு 

உலகின் பல நகரீகங்களும் மத கோட்பாடுகளும் பரிணாம கோட்பாட்டை விடுத்து மனிதனின் உருவாக்கத்தில் இருந்தே துவங்குகிறது காரணம் இவ்வுலகம் பரிணாமத்தில் திளைத்த மற்ற எந்த உயிரிகளுக்கும் அல்லாது மனிதனை மையமாக கொண்டே இயங்குகிறது இதில் மற்ற உயிரினங்களும் உட்படும் எவ்வாறென்றால் மனிதனால் மற்றவையும் மற்றவையால் மனிதனும் பிழைத்திருக்கும் வகையில் ஒரு சங்கிலி தொடரமைப்பில் பின்னி கொண்டுள்ளது.இவ்வாறாக உள்ள மனிதன் எப்படி படைக்கப்பட்டான்?.ஒவ்வொரு நாகரீகத்திலும் படைப்பிற்கென தனித்தனி கடவுள்கள் உள்ளனர் ஒரே தேவன் என்ற கோட்பாட்டை கொண்ட மதங்களும் கூட மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் குறிப்பாக அவர் மனிதனை களிமண்ணில்(நிலத்தில்) இருந்து உருவாக்கினார் என கூறுகிறது மதகோட்பாடும்,வாய்வழி கதைகளும்.சரி களிமண்ணை ஏன் குறிப்பாக கொண்டு படைப்புகள் உருவாகியிருக்க வேண்டும்.அதன் பின் ஒளிந்துள்ளதே பஞ்சபூத கோட்பாடு,ஆம் களிமண்-நிலம்,அதை குழைத்து உருவாக்க நீர் மற்றும் வெப்பம் கொண்டு காய நெருப்பும்,காற்றும் - இவை அனைத்தும் சேர்ந்தே ஒரு உயிர் உருவாகியிருக்கும் இதை சற்றே நவீன டார்வினிய கருத்துகளோடு ஒப்பிட்டு பார்த்தால் முதலில் ஒரு செல் உயிர் உயிரி-வேதிய கனிம கூட்டு பொருட்களால் உருவானவை இவை அனைத்தும் நிலத்தில் கிடைக்கக்கூடியவையே அது மெல்ல நீரில் வாழ்ந்து கரையை தொட குளிர்வை விட்டு வெப்பத்தில் வாழ்ந்தது பின் ஓங்கி மூச்செடுக்க இறுதியில் பூத உடலை கொண்ட மனிதன் உருவானான் மனித உடலில் நீராக ரத்தமும், நிலமாக கனிம கூட்டு பொருட்களும்,வாயுவாக பிராணமும், நெருப்பாக உடல் வெப்பமும் உள்ளது இது களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைக்கு தேவையான பண்புகளை ஒத்துள்ளது.இந்த பரிணாமம் பஞ்சபூதத்திற்கானதே இதன் சுழற்சியில் உருவான சோதனை மாதிரிகளே பிற உயிர்கள் அதனால் தான் மனிதனை இறுதியான மேம்பட்ட உயிரினமாக கடவுள் படைத்தார்.இதே தத்துவத்தை சிவ ஐந்தெழுத்து தத்துவதோடு ஒப்பிட்டால் இங்கு ஐந்தெழுத்து என்பது "நமசிவய"- இந்த எழுத்துக்களில், ந - பிருதிவியையும், ம - நீரையும், சி - நெருப்பையும், வ - வாயுவையும், ய - ஆகாயத்தையும் குறிக்கும்.

மேற்கூறிய அனைத்து கருத்தியலிலும் ஒரே விஷயம் மட்டும் கேள்வியாக இருக்கும் அதுதான் ஆகாயம் - இதை நவீன டார்வினியத்தால் கூட விளக்க இயலாது.அது தான் உயிர்,ஆன்மா,ஜீவன் என பலவாறு அழைக்கப்படும் பிரபஞ்ச பேராற்றல். என்னதான் களிமண்ணால்(நிலம்,நீர்,நெருப்பு,காற்று கொண்டு) ஒரு பொம்மையை(மனிதனை) உருவாக்கினாலும் அதற்கு உயிரான ஆன்மாவை கொடுப்பது இப்பிரபஞ்சமே அதனால்தான் எங்கும் நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சதோடு கலந்த கருப்பு ஆற்றல்கள் மனிதனை போல் அல்லாமல் ஒரே ஒரு தன்மையை மற்றும் பெற்றுள்ளன(ஆகாயம்) 

தென் மாவட்டங்களில் சுடப்படாத களிமண்ணால் தெய்வ உருவங்கள் செய்யப்பட்டு திருவிழாக்கள் நடத்தப்படும் இந்த மண் சிற்பங்கள் செய்து கண்திறக்கும் போது குறிப்பிட்ட பலி கொடுக்கப்பட்டு தங்களுக்கு தேவையான கருப்பொருள் ஆற்றல் சிற்பத்தினுள் புகுத்தப்பட்டு ஒரு ஆற்றல் வாய்ந்த உருவமாக கொண்டு விழாக்கள் நடத்தி மக்கள் தங்கள் வேண்டுதல்களை முன்வைப்பர்.இதை திருவிழா முடிந்ததும் தண்ணீரில் கரைத்து விடுவார்கள் அதே சமயம் பச்சையாக சுடப்படாத களிமண் சிலைகளை வீட்டிற்குள் வைக்க மாட்டார்கள் பேய் பிடிக்கும் ன்னு ஒரு பேச்சுவழக்கு உண்டு.இப்போ இதையே புது வீட்டிற்கு கொடுக்கப்படும் பலியோடு ஒப்பிட்டு பாருங்க.
நான்கு பூதங்களால் அடங்கிய ஒன்றினுள் தனித்திருக்கும் ஐந்தாவது ஒன்று உட்புக முயற்சிக்கும்.இதை அக்குபஞ்சர் மருத்துவர்கள் அருமையாக விளக்குவார்கள்.சிலருக்கு பேய் பிடிப்பதும் இதனடிப்படையில் தான் ஐந்தில் ஒன்று பலவீணமடைந்து திசைமாறும் பட்சத்தில் மீதமுள்ள நான்கையும் ஒன்று வந்து ஆக்கிரமிக்கும்.இதை தான் நம்ம டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் Neuralink என்ற நிறுவனத்தை உருவாக்கி அதற்கான ஆராய்ச்சியை முடுக்கி கொண்டிருக்கிறார்.

பின் குறிப்பு : இஸ்லாம்,சுமேரியன்,எகிப்து,கிரேக்கம், மாயன்,ஜொராஷ்டரியம்,சீனம்,பாபிலோனிய மறையியல்,யூதம் என அனைத்து மதங்களும் களிமண்ணால் மனிதன் உருவாக்கப்பட்டதை கூறுகிறது.

Wednesday 30 June 2021

Quantum ZENO



குவாண்டம் உலகம் ரொம்ப விசித்திரமானது ன்னு கேள்விபட்டிருப்போம்.ஆமா, ஆச்சார்யமான சில விஷயங்களை கொண்ட விசித்திர உலகம் தான் அது.ஆனாலும் அதுவும் பிரபஞ்ச நியதிக்கு உட்பட்டே நடக்கணும் அது தான் விதி.இங்க நடக்கும் எந்தவொரு நிகழ்வும் uncertainty அடிப்படையில் தான் நிகழும்.அதாவது நடக்கும்/நடக்காது (yes or no )என்னும் இரு வாய்ப்புகளுக்குள்ளே அடங்கி விடும்.இதை நம்ம scrodinger cat experiment ஓட ஒப்பிட்டு பார்த்தோம் ன்னா விசமுள்ள பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பூனை ஒரு நிமிடம் கழித்து திறந்து பார்க்கையில் ஒன்று உயிரோட இருக்கணும் இல்லை இறந்து போய் இருக்கணும்.அதே சமயம் அந்த ஒரு நிமிடத்தில் 10 வினாடிகளுக்கு ஒரு முறை பெட்டியை திறந்து பார்த்தோம் ன்னா குறிப்பிட்ட நேரம் பூனை உயிரோடு இருக்க வாய்ப்புகள் இருக்கு அதாவது பூனை நமது கண்ணில் படுமாறு இருக்கும் போது அது நம்மால் காப்பாற்றப்படும் அது முதல் 10 வினாடிகளில் இறந்தாலும் நிகழ்தகவின் அடிப்படையிலே அமையும். அதுவே ஒவ்வொரு வினாடியும் பெட்டியை திறந்து பார்த்துக்கொண்டிருந்தால். அந்த பூனை கண்டிப்பாக ஒரு நிமிடம் கழித்து உயிரோடு தான் இருக்கும்.இது தான் quantum zeno அதாவது கவனித்து/பார்த்துக் கொண்டே இருந்தால் அமைப்பின் செயல்பாடு மாறாது(அல்லது மாறுபட்டு காணப்படும்).இதற்கு எளிய உதாரணம் சொல்லணும் ன்னா சேட்டைகள் செய்யும் குழந்தையை அம்மா கவனித்து பார்த்துக்கொண்டே இருக்கும் போது குழந்தையின் சேட்டைகள் இருக்காது சமத்து குழந்தையாக நடந்து கொள்ளும்.அதேபோல வகுப்பில் ஆசிரியர்கள் இருக்கும் போது ஏற்படும் அமைதியான சூழல் என கவனிக்கப்படும் போது இந்த அமைப்பு மாற்றம் கொள்கிறது.எனக்கு நடந்த ஒரு விஷயத்தை இத்தோடு ஒப்பிட்டு பகிர்கிறேன் " அன்று எனக்கு 1.5kms running test அதை 6.30 நிமிடத்தில் கடக்கணும் ஆனால் ஏற்கவனவே நான் 6 நிமிடத்தில் கடந்துள்ளேன் இருப்பினும் coach முன்னாடி செய்து காட்டனும் சரி ன்னு ஓடுனேன் ஓடுனேன் 7.15 நிமிடத்துக்கு ஓடுனேன்.ஆனால் மறுநாளே யாருமில்லா நேரத்தில் நானாக ஓடி 6.15 நிமிடத்தில் ஓடிமுடித்தேன் " அதற்கான காரணம் எனக்கு கொஞ்சம் தாமதமாக தான் விளங்கியது.இதேமாதிரி தான் கண்காணிக்கப்படும் எந்தவொரு விஷயங்களும் கட்டுப்படுத்தப்படும் அல்லது இயக்கம் திசைதிருப்பப்படும்.பாத்துகிட்டே இருந்தா பாலும் பொங்காது / கடிகார முள்ளும் நகராது.இத அடிப்படையா வெச்சு நேரத்தை கவனிக்க தொடங்கினால்? ஒவ்வொரு மில்லி மைக்ரோ நொடிகளும் கவனிக்கப்பட்டால் இங்கு நேரத்தை சிறு சிறு துண்டாக்கலாம்.Bootstarp Paradox மாதிரி ( குறிப்பிட்ட தொலைவை பாதியாக கொண்டு அதை மீண்டும் பாதியாக அளந்து அதை மீண்டும் பாதியாக அளப்பதே Bootstrap) 

எலக்ட்ரான் Double Slit Experiment இதைத்தான் சொல்லுது கவனிக்கப்படும் போது எலக்ட்ரான்கள் நகராமலோ/மாறுபட்ட இயக்கத்திலோ இயங்குகிறது.இப்போ இதை மனித வாழ்கைக்குள்ள கொண்டு வந்து பாருங்க கடவுள் ன்ற ஒரு கண் நம்மை கவனிக்குது ன்னு ஆணித்தனமா நம்புறவங்க கேட்ட செயல்களில் ஈடுபட கொஞ்சம் பயப்படுவாங்க.School, College, Officeகளில் நடக்கும் inspection/auditing கூட ஒரு வகையில் குவாண்டம் zeno தான்.நீங்களே முயற்சி பண்ணுங்க உங்க அறையில் ஒரு கண் மட்டும் உள்ள படத்தை வெச்சு அதை ஒரு camera மாதிரி நெனச்சிட்டு உங்க வேலையை செய்யுங்க மாற்றம் தெரியும்.இங்குள்ள cctv களும் அப்படியே.நான் கண் ன்னு சொன்னதும் வேற ஒரு கண்ணை நினைக்காதீங்க நான் கண்டிப்பா அத சொல்லல

Thursday 20 May 2021

Patterned Formulas

Patterned Formulas

பொதுவா formulas கணிதம்,வேதியல், இயற்பியலில் பயன்பட கூடிய சிக்கலான அமைப்புகளை தீர்க்க பயன்படும் ஒரு திறவுகோல் ன்னு வெச்சிகலாம்.இது பூவுலகின் அனைத்து நீள, அகல,உயர அளவைகள் மட்டுமல்லாது வேதிய பிணைப்புகளையும் கட்டுப்படுத்துது.உதாரணத்துக்கு E=Mc2 ல ஆரம்பிச்சு பாலில் சர்க்கரை கலந்து டீ போடுறது வரைக்கும் இந்தவகை சமன்பாடுகளை அடிப்படையாக கொண்டு தான் நடக்குது.மனிதர்கள் தங்கள் அறிவுக்கு எட்டிய விடயங்களை வைத்து இதுவரை கண்டறிந்துள்ள சூத்திரங்கள் குறைவு தான் இவை பெரும்பாலும் பொறியியல் பயன்பாட்டுக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.இந்த formulas தான் ஒட்டுமொத்த உலகத்தையே இயக்குது ன்னா உங்களால நம்ப முடியுமா?? ஆமா,உண்மை தான்.இது போன்ற மனிதனுக்கு எட்டாத சில சூத்திரங்கள் தான் இந்த உலகத்தை மட்டுமல்லாது உங்களையும் என்னையும் கூட இயக்குது.அதுதான் Patterned அதாவது முறைப்படுத்தப்பட்ட சூத்திரங்கள்.இதன்படி தான் இங்க எல்லாமே இயங்கிட்டு இருக்கு.இந்த formulas ஒன்றுக்கொன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையது. உதாரணத்துக்கு புவியில் உள்ள அழுத்தம்,எடை,வெப்பநிலை லாம் நிலையானது ன்னு நெனச்சிட்டு இருக்கோம்.ஆனா இந்த அமைப்புல ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் அது மொத்தமும் மாறிடும் constant (மாறிலி) மதிப்புகள் மாறினால் இங்குள்ள சூத்திரம் அனைத்துமே மாற்றம் கண்டிடும்.இந்த மாற்றங்கள் நிகழலாம ஓடிட்டு இருக்குறதும் ஒரு formula வின் அடிப்படையில் தான்.சூரியன் கிழக்கே உதிப்பது முதல்,பூமி சூரியனை சுற்றுவது,சந்திரன் சுழற்சி ன்னு எல்லாமும் இந்த formula அடிப்படையில் தான்.சரி எல்லாமே formula படிதான் இயங்குது  ன்னா அப்போ நம்ம இயக்கமும் அப்படியா?? மனிதனின் இயக்கம் இரண்டுவகையில் இருக்கும்  ஒன்று மனதளவில் மற்றொன்று உடலளவில் இவ்விரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும் உதாரணத்துக்கு ஒருதனால் 50கிலோ எடையை தூக்க முடியும் ஆனால் மனது அதற்கு சம்மதிக்காது,அதேபோல் மனதளவில் முடியும் ன்னு நினைக்கும் போது உடல் ஒத்துழைக்காது. இது தான் Uncertainty - நிலையற்ற தன்மை இந்த நிலையில் இருக்கையில் மனிதனின் இயக்கம் மட்டும் எப்படி formulas அடிப்படையில் நடக்கும்? கண்டிப்பா இதுக்கும் ஒரு formula இருக்கு.அது தான் மற்ற formula களின் கூட்டு வெளிப்பாடு.நாம என்ன தான் இங்க நம்ம இஷ்டத்துக்கு இயங்குனாலும் நாம இந்த அமைப்புக்குள்ள(பூமிகுள்ள) தான் இருக்ககோம். நாம சூத்திரங்களை பயன்படுத்தாவிட்டாலும் சூத்திரங்களுக்குள்ள தான் இயங்குறோம்.இதற்கு உதாரணமா ஒரு பகடைய(Dice) சொல்லலாம்.ஒரு பகடைய உருட்டும் போது என்ன தான் நிலயற்றதா கணிக்க முடியாம விழுந்தாலும் அது கண்டிப்பாக 6 வகையான எண்களை மட்டுமே காட்ட முடியும்.இத அப்படியே மனித இயக்கத்துடன் பொருத்தி பார்த்தோம் ன்னா மனிதனுக்கு Duality (yes or no).இதன்படி ஒரு பகடைய காட்டிலும் ஒரு மனிதனின் இயக்கம் எளிதில் இந்த அமைப்போடு ஒத்துப்போகும்.

இந்த formula விளையாட்டின் சில ஆச்சர்ய பகுதிதான் 3,6,9 series - Fibonacci series எல்லாம்.நமக்கு தெரிந்தவரை formula க்களை கணித பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துறோம் ஆனா இதே formulas தான் உலகில் பல ஆச்சர்யங்களுக்கு அடிப்படையாக அமையுது. இந்த formula க்களை சரிவர கட்டுப்படுத்தும் master program தான் உலகில் உள்ள அனைத்திற்கும் மூலம்.AI, Computer programmers, Computer Coders க்கு இதன் ஆழம்  புரியலாம்.எல்லாம் விதிப்படி ன்னு சொல்லிட்டு திரியும் பாமரனுக்கும் புரியும்.ஆக எல்லாம் முன்னரே திட்டமிட்டு இப்படி தான் நடக்கணும் ன்னு நடப்பதில்ல.மாறாக,எப்படி எல்லாம் நடக்கணும் ங்குறதுக்கு முறைப்படுத்தப்பட்ட சூத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கு.இதன் விளைவா தான் முக்காலத்துக்கும் பயணித்து குறிசொல்ல முடியுது

ஆட்டுவிப்பவன் அவனே!!!


Humans - Advanced Evolution(மேம்பட்ட பரிணாமம்)

Humans - Advanced Evolution
(மேம்பட்ட பரிணாமம்)

பொதுவா இந்த உலகம் எப்படி தோன்றுச்சு,பிரபஞ்சம் எப்படி உருவாச்சு ன்னு இருக்குற பல கேள்விகளில் முக்கியமா கருதப்படுறது மனிதன் எப்படி உருவானான்??.உடனே டார்வினியத்தை தூக்கிட்டு வர வேண்டாம். ஏனென்றால் நான் பேசப்போறது உருவாக்கம்பற்றி,பரிணாமம் பெற்றதை பற்றி கிடையாது.அப்படியே பரிணாமத்தை பற்றி டார்வின் சொல்லியிருந்தாலும் United States, Wales, Scandinavia,Baltic region, Siberia, and China - போன்ற பகுதிகளில் வெவ்வேறு கால இடைவெளியில் பெறப்பட்ட Cambrian fossils படிமங்கள் அவரது மொத்த theory-யையும் திணற வெச்சது.எனவே,டார்வினை ஓரமா வெச்சிட்டு இயற்கையில் என்ன நடந்தது ன்னு பாப்போம்.கூடவே பண்டைய பெரு நாகரீங்கள்ல என்ன சொல்றாங்கன்னும் பாப்போம்.ஹிந்து மதத்தில் பிரம்மா போல எகிப்தில் khnum இவர்தான் மனிதர்களை உருவாக்கும் கடவுள் இவர் ஆட்டின் தலையை கொண்டவர்.ஆட்டுக்கும் படைப்பும் என்ன சம்பந்தம் ன்னா இந்த ஆட்டின் தலையை மனித பெண்ணின் uteres உடன் ஒப்பிடப்படுகிறது.இதே போல கிரேக்கத்தில் Prometheus,Aztec இல் Quetzalcoatl என ஒவ்வொரு இடத்திலும் படைப்புக்கு தனிதனியே கடவுள்கள் உண்டு.அப்படி இருக்கையில மனிதன் மட்டும் ஏன் ஒரு உயர்ந்த நிலையில் படைக்கப்படனும்.மறுபடியும் பரிணாமம் ன்னு டார்வினிய கோணத்தில் யோசிக்காம கொஞ்சம் சாதாரணமா யோசிங்க. அப்படியே சிறு உயிரினம் முதல் டைனோசர் வரை பரிணமித்து உருவாகி இருந்தாலும் மனிதன் மட்டும் ஏன் இன்று மேம்பட்டு இருக்கிறான்.இதை Natural Selection ன்னு பாக்காம. selected creation or super creation ன்னு வெச்சு பாருங்க.அதாவது மனிதன் மனிதனாக தான் உருவாக்கப்பட்டான்.குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் ன்னு சொல்றாங்க ஆனா எனக்கென்னமோ குரங்கை போல மனிதன் இருப்பதால் மட்டும் சொல்லிட முடியாதே.நியாண்டர்தால் இனம் மனித முன்னோடி எனவும் குரங்கிலிருந்து பரினாமித்தான் ன்னு சொல்றாங்க ஆனா நம்ம ஹோமோசேப்பியன் தான் natural selection ஆள அவங்களை வீழ்த்திட்டோம் ன்னு நம்புராங்க.அதாவது இதுபோல காரணங்களால நம்ப வைக்கப்படுரோம்.மேம்பட்ட மனிதன் பைனாகுலர் பார்வை,வெட்டும் பற்கள்,விரலிடை சவ்வு,உடல் முழுதும் ரோமங்கள்,கை கால்களில் நகம்,உதட்டில் ஆர்பிக்குழாரிஸ் தசைகள் என அனைத்து பரிணாமங்களில் இருந்தும் சில பொருத்தமான தகவமைப்புடனே படைக்கப்பட்டிருக்கிறான்.புவியீர்ப்புக்கு எதிரான நிலத்தன்மை,மரம் ஏர வசதியான உடலமைப்பு,எதையும் பற்றிக்கொள்ள கட்டைவிரல் ன்னு எல்லாவற்றிற்கும் மேல சிந்திக்கும் திறனையும் பெற்று ஒரு மேம்பட்ட உயிரினமா உருவாக்க பட்டிருக்கிறான்.இவை அனைத்தும் ஒரு செல் உயிராக ஒரு கரு உருவாவதில் இருந்து 9மாதம் வளரும் வரை இந்த அத்தனை பரிணாமங்களிலும் பரிணாமிக்கிறது இதற்கு சான்றாக முதுகு தண்டுக்கு கீல் இருக்கும் வால் போன்ற முள்ளெலும்பு,கரு வளர்ச்சியின் போது கழுத்தில் ஏற்படும் செதில்கள்.இத்தனை அம்சங்களும் பெற்ற மனிதன் உருவாக்கப்பட்டதாகவும் முக்கியமா களிமண்ணில் செய்யப்பட்டதாகவும் பண்டைய நாகரீகங்கள் சொல்லுது.பூமி உருவாகி எத்தனையோ காலம் நகர்ந்துவிட்டது.இன்னமும் ஆறடி உயரமும் அதீத சிந்திக்கும் திறனும் உடைய ஒரு உயிரினம் மற்ற உயிரினங்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தி பிழைத்து வருகிறது என்றால்.இது வெறுமென பரிணாம கோட்பாடால் மட்டும் சாத்தியமல்ல.மாறாக இந்த  மேம்பட்ட மனித உயிரினம் திட்டமிடப்பட்ட வகையில் தனித்து உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஒருவேளை பரிணாமகோட்பாடு மனிதனை உருவாக்கும் ஒத்திகையாக இருக்கலாம்.அப்படி இருந்தாலும் இவ்வளவு கோளாறுகளுடன் அமைந்திருக்காது.உயிரினங்கள் அனைத்தும் தனித்துவம் கொண்டது.அதே சமயம் மனித பரிணாமமும் தனித்தே உருவாக்கபட்டது.