Thursday 24 September 2020

Genetic Induction - மரபணு தூண்டல்(DNA)

Genetic Induction - மரபணு தூண்டல்

ஏக்கங்கள் - இங்க எல்லாமே இதன் அடிப்படையில் தான் செயல்படுது இதை அடுத்த கட்ட பரிணாமத்துக்கு எடுத்துச்செல்ல காலம் அவசியமாகுது அதுதான் தலைமுறை இடைவெளி இந்த இடைவெளியில் நாம் நமது மரபுகூறினுள் புகுத்தும் அத்துணை விஷயங்களும் தேவையின் உச்சத்தை தொடும்போது முழுமையாக வெளிக்கொணரும்...

மரபு பொருள் - DNA வின் செயல்பாடு மிகவும் அபரிவிதமானது ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நிகழும் அத்தனை நிகழ்வுகளும்/அனுபவங்களும் உடல செல்களால் உணரப்பட்டு DNA வில் பதியப்படுகிறது...இதை தனக்கு தேவையான நேரத்தில் வெளிக்கொணருவது தான் ஒரு சவாலான விஷயம்...DNA வில் பதிந்துள்ள தரவுகளை வெளிக்கொணர பல காரணங்கள் இருக்கு...அதில் முக்கியமான ஒன்னு ஏக்கமும்/தேவையும் தான்...ஒரு உயிரின் ஏக்கம் தான் அதன் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது...அதே சமயம் அந்த உயிரினம் தன்னை தானே நொந்து கொண்டால் அதன் வளர்ச்சி குன்றவும் வாய்ப்பிருக்கு...இது டார்வினிய கொள்கையை சார்ந்து இருக்கும்...கிட்டத்தட்ட பரிணாமம் போலவே ஒரு பரம்பரையில் பல தலைமுறைக்கு  முன்னிருந்து ஒரு ஏக்கம்/தேவை இருந்தால் அது அடுத்தடுத்த தலைமுறைகளில் வளர துவங்கும்...சில தலைமுறைகள் கழித்து அந்த ஏக்கம் அபரிவிதாமாக பரிணாமிக்கும்... உதாரணத்துக்கு பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட(ஒடுக்கப்படுறோம் ன்னு நம்ப வைக்கப்பட்ட) ஒரு சமூகம் நான் முன்னேற வேணும் ன்னு ஏக்கத்தை உருவாக்கியதான் விளைவாக இன்றைய தலைமுறையில் அந்த குறிப்பிட்ட சமூகம் சமுதாயத்தில் சிறந்து விளங்குகிறது..இதற்கு நிகழ்கால உதாரணமாக தமிழர்களையே எடுத்துக்குவோம் சில ஆண்டுகளுக்கு முன்பு  பக்கத்து நாட்டில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டோம்..ஆனால் இப்பொழுது தமிழன் என்று சொன்னாலே உலகளவில் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு பற்றும் உணர்வும் வந்திருக்கு...இப்போது இருந்த சூழல் அப்போ இருந்திருந்தா???...அன்று வீழ்ந்ததன் ஏக்கம் தான் இன்னிக்கு நமக்கு அடையாளத்தை உருவாக்கியிருக்கு...சரி என்னடா DNA பத்தி சொல்லிட்டு திடீர் ன்னு ஒரு பெரிய இனத்தை வெச்சு பேசுறானே ன்னு தான பாக்குறீங்க...இங்க DNA வழித்தொடரா இருந்தாலும் சரி..ஒரு இனக்கூட்டமா இருந்தாலும் சரி..ஏக்கங்கள் என்பது எண்ணங்கள் தான்..மீண்டெழ வேண்டும் என்ற எண்ணமும் தேவையும் தான் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர்த்துது...இதை ஒரு தனிமனித பரம்பரை கட்டமைப்பில் பார்த்தால் எத்தனையாவது தலைமுறையில் எப்பொழுதோ ஒருவர் குறிப்பிட்ட ஒரு செயலை சாமர்த்தியமாக செய்து காட்டியிருப்பார்...அந்த நிகழ்வு அவர் மரபில் பதிந்திருக்கும்..இப்போ நிகழ்காலத்தில் அவரது வம்சாவளி ஒருவருக்கு இதே போல சிக்கல் ஏற்படுது ன்னு வெச்சிக்குவோம் இப்போது அவன் மூளை தீவிரமா சிந்திக்க துவங்கும் மூளையின் அனைத்து தரவுகளையும் புரட்டி பார்க்கும் அப்போது தான் பலதலைமுறைகள் முன்பு தனது முன்னோர் செய்த செயல் ஞாபகத்துக்கு வரும்..ஆனா,அது எப்படி ஞாபகத்துக்கு வந்தது ண்ணே தெரியாம போய்டும்...

இதனடிப்படையில் தான் இங்குள்ள பரம்பரை குலங்கள் இயங்குகிறது...குறிப்பா சொல்லணும் ன்னா மண் சிற்பங்கள் செய்யும் குடியில் பிறந்தவன் நான்...நான் சிறு வயதிலேயே நகரத்துக்கு வந்துவிட்டதால் எனக்கும் அந்த மண் சிற்ப வேலைகளுக்கும் தொடர்பே இல்லாமல் போயிடுச்சு..திடீரென  ஒருமுறை  ஒரு விநாயகர் சிலை வடிக்க தொடங்கினேன் அப்போது தான் எனக்கே தெரியாமல் ஏதோ பல காலம் பழகிய வேலை போல மடமட வென ஒரு சிலையை வடித்தேன் இதில் என்னவொரு அதிசயம் ன்னா அது என் முன்னோர் சிலை வடிக்கும் முறையிலே இருந்தது.. 

இது சாதரணமாக DNA வில் பதிந்துள்ளவை...இதை இன்னமும் ஆழமாக வெளிக்கொணரும் போது தான் நமது முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வயும் நமக்கு தேவையான பொழுது வெளிக்கொணரலாம்..இது சில நேரங்களில் அனிச்சையாக நடக்கும்..இருப்பினும் ஏக்கம்(எண்ணம்) இருந்தால் அதிக வீரியத்துடன் வெளிப்படும்...குலதெய்வ கோவிலுக்கு சென்று வேண்டும்பொழுது நமக்கு உடலவிலும் ஆற்றலும்/ஆறுதலும்/மன அமைதியும் கிடைப்பதை உணரலாம் இதுக்கு காரணம் நாம வேண்டுவது நம்மகிட்ட தான்..நமக்குள்ள அடங்கியிருக்கும் நமது முன்னோர்கிட்ட...

இதற்கு முக்கியமா தனக்கான ஏக்கங்களையும் தேவைகளையும் மனதளவில் உணரனும்...அந்த சிந்தனையை மனதில் ஆழமாக விதைக்கணும்..அப்படி செய்யும்போது நீங்க உங்க முன்னோர்களை உணருவீங்க...இப்பவும் உங்க உடலில் பல லட்சம் செல்கள் இருக்கு அதனுள் மரபுகூறும் (DNA) இருக்கு...எப்பொழுது  எந்த செல்லில் உள்ள நினைவு உங்களுக்கு உதவுது ன்னு தான் சொல்ல முடியாது...

இந்த பதிவுக்கு எடுத்துக்காட்டா சொல்லணும் ன்னா சில சாதிய ஒடுக்குமுறைகள்,பல தலைமுறையா வறுமையில் இருந்தவன் இப்போ செல்வந்தனா மாறியது,உடலவில் கூட குட்டையான வம்சாவளி ஏக்கத்தின் விளைவாக உயரமாக மாறுதல்...
இதிலுள்ள ஒரு பாதகமான விஷயம் என்ன ன்னா எண்ணங்களை விதைப்பதில் கவனம் வேணும் ஏக்கத்தினால் முன்னேற நினைப்பவன் வெற்றி பெறுவான்... அதே ஏக்கத்தினால் நொந்து போய் வருந்தி கொண்டால் அவனது மரபும்(DNA) வருந்தி முன்னேற நினைக்காமல் மேலும் மேலும் மோசமான நிலையை எட்டுவான்..

Monday 21 September 2020

Dark - இருள்

Dark - இருள்


இந்த பூமியின் duality ல ரெண்டு சமமான விஷயங்கள் இருக்கு..அதுல ஒன்னு தான் இருள் (இது பூமிக்கு மட்டுமே பொருந்தும்)...பிரபஞ்சம் முழுதும் இருள் தான் ன்னு சொன்னாலும் பூமியை பொறுத்தவரை அது ஒரு பகுதி மட்டுமே..இருள் பிரபஞ்சம் முழுதும் பரவி உள்ளதால் சில அற்புதங்களை தன்னுள் அடக்கி கொண்டுள்ளது...இருள் மனித உடல் மற்றும் மூளையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது...இருள் சூழ்ந்த நேரங்களில் மனிதனின் சிந்தனை அபரிவிதமாகவும்,உள்நோக்கு சிந்தனை உடையதாகவும் இருக்கும்...உதாரணத்துக்கு எதிர்காலம் குறித்த சிந்தனைகள் இரவில் தான் அதிகம் தோன்றும்...இரவில் பெரும்பாலும் கற்பனை கலந்த வகையிலே தான் சிந்தனைகள் பிறக்கும்..உதாரணத்துக்கு ஒருத்தன் இரவில் 'நான் அதை செய்வேன்' ,  'இன்னும் கொஞ்ச நாளில் அப்டி வாழ்வேன்', 'நாளை முதல் இப்படி மாறிடுவேன்' ன்னு என்னென்னமோ திட்டம் போடுவான் ஆனா பகலில் அதையெல்லாம் மறந்து வழக்கம் போல அவன் வேலையை தான் பாப்பான்..இதுக்கெல்லாம் அவனது உள்முக சிந்தனைகள் தான் காரணம்..இதே உள்முக சிந்தனை தான் ஒருவனை மனஉலைச்சலுக்கும் ஆளாக்குது..எல்லாரும் depression ன்னு பொலம்புறங்களே அதுக்கும் இதான் காரணம் இரவில் சிந்தனைகள் வெளி நோக்கி இருக்காது தனுக்குள்ளே யோசிச்சு தேவையற்றதை மனதில் ஆளப்பதிய செய்யும்...பெரும்பாலான வீடுகளில் இரவில் தான் அதிகம் சண்டை வரும்,இருட்டுல உக்காந்து தான் அழுதுட்டு இருப்பாங்க...அதே பகலில் பார்த்தால் எப்பவும் போல அவர்களின் வேலையை பார்க்க துவங்குவார்கள்...இன்றும் பலர் இரவில் தற்கொலை அளவுக்கு போய்விட்டு பகலில் சகஜமாக வாழ்ந்துட்டு இருப்பாங்க...சண்டைகள் என்றாலே 6 மணிக்கு மேல தான் போடணும் ன்னு இருப்பாங்க...இது தான் இருளின் சூட்சுமமே இருளில் நாம் எதை செய்யணும் ன்னு நெனைக்குரமோ அதை நம் மனதில் விதைத்தால் அது சரியான பாதையில் நம்மை அழைத்து செல்லும் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் அதன் போக்கில் ஈர்க்கும்... முழு இருளில் உறங்குவது தான் சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள் அதே சமயம் முழுவது இருள் இருந்தால் தான் pituitary சுரப்பியின் செயல்பாடும் சரியாக நடக்கும்... pituitary - ஞானத்தின் திறவுகோல் னும் சொல்றாங்க...அதுக்காக தான் கோவில் கருவறைகள் கூட இருள் கொண்டு இருக்கு...ஒளி ஆற்றல் போல இருளும் தனக்குள் ஆற்றலை கொண்டுள்ளது...ஒளியை விட வேகமானதும் கூட...

இருள் சூழ்ந்த நேரங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால் நமது உடல் ஆரோக்கியம் பெரும்..ஆனால் அதை சிதைக்கும் வகையில் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்கு...தேவையற்ற அதிர்வலைகளை நமக்கே தெரியாமல் நமது மூளைக்குள் செலுத்திவிடும்..

பழங்காலம் தொட்டே சில சடங்குகளும் வழிபாடுகளும் இரவிலேயே நடந்து வருகிறது..இதற்கும் காரணம் இருள் ஆற்றலின் பயன்பாடு தான்..உடல் சார்ந்த வளர்ச்சியும்,இதர உயிர்களின் வளர்ச்சியும் கூட இருளில் தான் நிகழ்கிறது..இன்னமும் சொல்லப்போனால் இருள் தனக்கென ஒரு உலகையே கொண்டுள்ளது...இருளில் தான் ஒருவன்(இருவர்) சுயமாக இயங்க முடிகிறது..இருள் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது...
மறையியல் சார்ந்த செயல்பாடுகளும் இரவிலே நடக்கிறது...சூரியன் உச்சம் கொண்டிருக்கும் வேளையில் இருள் தோற்கடிக்கப்படிகிறது..அப்பொழுது தான் அரக்கன் ஆட்சி(புலன்கள்) செய்கிறான்..
நீங்களே சோதித்து பாருங்கள் இருளில் உங்களது எண்ணம் மற்றும் சிந்தனை எப்படி இருக்கிறது என்று...அதே சமயம் பகலில் எப்டி உணருகிறீர்கள் என்றும் பாருங்கள்...
இருளை பயன்படுத்தி கொள்ளுங்கள்..

Vibration Technology - அதிர்வுகளின் நுட்பம்

VibrationTechnology - அதிர்வுகளின் நுட்பம்


அதிர்வுகள் - இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கமும் அதிர்வுகளின் அடிப்படையில் தான் இயங்குது ன்னு சொன்னா நம்ப முடியாது..ஆனால் அதான் உண்மை,இதை விளக்குவது தான் string theory அணுக்கருவினுள் உள்ள நுண்துகள் அதிர்வு தான் ஒரு அணு எந்த மாதிரி இயங்கனும் ன்னு தீர்மானிக்குது(ஒவ்வொரு தனிமத்துக்கும் இந்த அதிர்வு வேறுபடும்)...இந்த பேரதிர்வு தான் மனித வாழ்வியலிலும் பல மாற்றங்களை கொண்டு வருது.. எளிமையான உதாரணம் ன்னா கோவில் மணியை சொல்லலாம்..கோவில் மணி 'ஓம்' ன்னு ஒலிக்கும் கும் சொல்றாங்க அதெல்லாம் விட அதன் அதிர்வு தான் முக்கியம்..மணி, பொதுவாக கோயில்,தேவாலயம்,புத்த விகாரம் ன்னு எல்லா இடங்களிலும் பயன்படுத்தபடுது...இதன் பயன்பாடே கேட்ட அதிர்வுகளை விலக்கி கொடுப்பது தான்...உதாரணத்துக்கு நீர் உள்ள ஒரு பாத்திரத்தின் விளிம்பை தட்டினால் அந்த பாத்திரம் உருவாக்கும் அதிர்வு அதிலுள்ள நீரை ஒரு ஒழுங்கு முறையில் அதிர செய்யும்...இதே தான் மனித உடலிலும் நடக்குது...மணி ஓசை தீய அதிர்வுகளிடம் இருந்து காக்கிறது இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயமே...அதே அதிர்வு சில தீய ஆன்மாக்களிடம் இருந்தும் நம்மை காக்கிறது...இந்த பரந்த வெளியில் கருப்பு ஆற்றல்(காத்து, கருப்பு) நிறைந்த வண்ணம் உள்ளது..இவை தங்களிடம் நெருங்காமல் இருக்கவும் இந்த மணி பயன்படுத்த படுது..உதாரணத்துக்கு இறப்பு நிகழ்வுகளில் அடிக்கப்படும் மணியின் அதிர்வு பிற ஆன்மாக்கள் அங்கு நெருங்காமல் இருக்க உதவுகிறது...இதே மணி தான் ஐந்தறிவு ஜீவன்களையும் சில தீய ஆற்றல்களிடம் இருந்து காப்பாற்றுகிறது...ஆடு, மாடுகள் கழுத்தில் கட்டிவிடப்படும் மணி - இது பொதுவாக காட்டில் கால்நடைகள் தொலைந்து போகாமல் இருக்க தான் பயன்படுத்துவார்கள்..அதே சமயம் 'குரளி' போன்ற மாந்திரீக வேலைகளுக்கு பயன்படும் கண்ணுக்கு புலப்படாத ஜந்துக்கள் இந்த ஆடு,மாடுகளின் கொம்புக்கு நடுவே தான் தங்குமாம்...இதை நெருங்காவிடாமல் செய்யவே இது போன்ற அதிர்வு பயன்படுத்தபடுது...இந்த அதிர்வுகளை பயன்படுத்தும் நுட்பத்தை வைத்து இதன் பலன் மாறுபடும் அணுகுண்டு வெடிப்பின் அதிர்வுகள் எப்படி மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா அந்த மாதிரி...சில வகை அதிர்வுகள் மூளையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும்,சில அதிர்வுகள் கருவில் உள்ள குழந்தையை கூட கொன்று விடும்...இது உலோகங்களால் உருவாகும் அதிர்வுகளாலும்,மனித/பிற ஆன்மாக்களின் எண்ண அதிர்வினாலும் நடக்கும்...அதிவுகள் தான் இந்த பிரபஞ்சத்திற்கு universal language - காது கேட்காத,வாய் பேசாத குழந்தைக்கு கூட அதிர்வுகளை உணர முடியும்...உயரமான மலை பகுதியில் மழை மேகம் சூழும் நேரங்களில் நமது கை தட்டும் அதிர்வு கூட மழை பொழிய செய்யும்..

உலோக அதிர்வுகள் கொஞ்சம் வித்தியாசமானவை - செம்பு பாத்திரங்களின் பயன்பாடும் இதை மையமாக வைத்தே இயங்குது...கிராமங்களில் அடிபட்டு துடிச்சிட்டு இருக்கும் கோழி குஞ்சுகளை நெடுநாள் கவிழ்த்து வைக்கப்பட்ட வெண்கல பாத்திரத்தை கொண்டு மூடி அதன் மீது தட்டும் போது உருவாகும் அதிர்வுகள் அந்த கோழிக்குஞ்சுகளை காப்பாற்றுகிறது...இதை நவீனமா vibration healing ன்னு சொல்றாங்க...

உலோகமல்லாத பிற அதிர்வுகளும் மனித உடல் மற்றும் மூளையில் அற்புதங்களை நிகழ்த்துது...உருமி, உடுக்கை போன்ற கருவிகளின் உதவியால் உருவாக்கப்படும் அதிர்வுகள் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி மரபு பொருளை தூண்டுகிறது..குலதெய்வ வழிபாட்டில் இந்த அதிர்வுகளின் பயன்பாடும் முக்கியமானது...
ஏற்கனவே சொன்னது போல  இந்த அதிர்வுகளை வைத்து சில தீய செயல்களும் நடக்குது...தொலைக்காட்சி,செல்போன் போன்ற வற்றிலிருந்து வெளியேறும் மின்காந்த அதிர்வுகள்..சில சமய கூடங்களில் இந்த அதிர்வை பயன்படுத்தி தனக்கு தேவையானதை கூட நிறைவேற்றி கொள்கின்றனர்...மக்களை மடைமாற்றும் சில வேலைகளும் நடக்குது..உலோக அதிர்வுகள் நிறைந்த இடத்துக்கு போகும் போது கவனமா இருக்கணும்..மந்திரம் ஜெபிக்கபட்ட கலசமும் இதன் அடிப்படையில் தான் இயங்குது...உலோக பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரிற்கு எண்ணங்களால்(மந்திரம்) அதிர செய்து தனக்கு ஏற்றார் போல் அந்த நீரை பயன்படுத்தி கொள்கின்றனர்...ஒவ்வொரு முறையும் விழிப்போடு இருக்க நீங்கள் இருக்கும் இடத்தின் அதிர்வுகளை விலக்குங்கள்.. உங்களுக்கு தேவையான அதிர்வுகளை நிரப்புங்கள்...சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி போன்றவையும் இந்த அதிர்வுகளின் அடிப்படையில் தான் இயங்குது...

அதிர்வுகள் தான் அலைவரிசையா உருவெடுக்குது - ஒரு சின்ன மணியின் ஓசை ஏற்படுத்துவதற்கும்,பல மணி ஓசைகள் சேர்ந்தால் அதுவும் ஒலியே இல்லாமல் வெரும் அதிர்வோட மட்டும்

Saturday 19 September 2020

Law of everything - யாதும் ஆகி

Law of everything - யாதும் ஆகி


எந்தவொரு பொருளும் இந்த வெளியில் அணுக்களின் ஒன்றிப்பாலே உருவாகி இருக்கு...இந்த அடிப்படை துகளாக அணுக்கள் தான் பலவாக உருவெடுத்து இருக்கு...ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான அணுத்துகள்களை கொண்டு உருவாகி இருக்கு... Hydrogen, Oxygen, Carbon,Zinc, Sodium, Pottasium,Copper,Led,Nitrogen ன்னு அடுக்கிகிட்டே போகலாம்..இப்படி தனிமவரிசை அட்டவணையில் உள்ள அனைத்தும் இதுவரை மனிதர்களால் கண்டறியப்பட்ட elements..இவை பெயர் மற்றும் பண்புகளில் வித்தியாசமாக இருந்தாலும் அடிப்படையில் அணுக்கருவில் எல்லாமே ஒன்னு தான்..எலக்ட்ரான் வெளிகூட்டு பிணைப்பின் காரணமாகவும்,string theory ன் அடிப்படையிலும்,அணுக்கரு துகள்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் - ஒவ்வொரு அணு அல்லது மூலக்கூறு வெவ்வேறு தன்மை கொண்டதாக இருந்தாலும் அடிப்படையில் அவை அனைத்தும் ஒன்றே தான்... Fibonacci வரிசைப்படி சொல்லணும் ன்னா ஒன்றிலிருந்து தான் ஒன்று தோன்றும்..இது தான் அனைத்தின் தொடக்கம்...உதாரணத்துக்கு நமது உடல் முழுக்க முழுக்க நட்சத்திர கூட்டு பொருட்களால் ஆனது...நமது எலும்பில் உள்ள கால்சியம் சுண்ணாம்பிலும் இருக்கு...ரத்த சோகை வந்து இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுறோம் அதே சமயம் இரும்புஆணி குத்திடுச்சு ன்னா புண் ஆகிடும் ன்னு மருந்து போடுறோம்...இங்க எல்லாமே அடிப்படையில் ஒன்னாதான் இருக்கு..இங்க உள்ள சுற்றுசூழலும் தேவைகளும் தான் தனக்கு ஏற்றார் போல பிரிச்சு வெச்சிக்குது...இங்குள்ள நிறங்களும்,சுவைகளும்,இசையும்,மனமும் -மனிதனின் தேவைக்காகவே பிரிச்சு வைக்கப்பட்டிருக்கு சுற்றுசூழல்,ஏக்கம் எனும் மாயை உருவாக்கப்பட்டு அதுக்குள்ள அகப்பட்டு கிடக்குறோம்..இது தான் பிரபஞ்சத்திலிருந்து விரிவடைஞ்சுகிட்டு வரும் மெய்நிகர்..எல்லா இடத்துலயும் எல்லாமும் இருக்கு,எல்லாம் ஒரே விஷயத்தினால் ஆனது.. இது எப்டி ன்னா இந்த பதிவ படிக்கிற நீங்களும் பதிவ எழுதின நானும் ஒன்னு ங்குற அளவுக்கு சிக்கலான ஒரு விஷயம்..அது உண்மையும் கூட இங்க எழுதுபவர் ங்குற reality க்காக நானும்,வாசிப்பவர் ங்குற reality க்காக நீங்களும் இருக்கீங்க ஆனா அடிப்படையில் நாம ரெண்டு பேரும் ஒன்னே தான்...அது தான் அடிப்படை அணுத்துகள்களால் ஆன உருவமைப்பு...எந்திரன் படம் மாதிரி சொல்லணும் ன்னா ஒரே மாதிரியான பல ரோபோக்கள் ஆனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தேவைகள்,ஏக்கங்கள்,சுற்றுசூழல்...இப்போ யோசிச்சு பாருங்க இதுவே எந்திரன் படத்துல இருந்த அதனை ரோபோக்களுக்கும் சனா மீது காதல் ஏற்பட்டுச்சு ன்னா என்ன ஆகும்??..எல்லாம் அத்துக்குள்ளேயே சண்டை போட்டு அழிஞ்சிரும்...அது தான் நமக்கு இந்த பிரபஞ்சம் கொடுத்திருக்க வரமும் சாபமும்.. அடிப்படையில் இங்குள்ள அனைத்தையும் ஒன்றாக வெச்சிட்டு அதற்கான இயக்கத்தை மட்டும் வேறு விதமா விதைச்சிருக்கு(உணர்வு/உணர்ச்சிகள்)..அந்த இயக்கத்தை(ஆற்றல்) தான் எல்லாரும் கோவில்களிலும்,மசூதிகளிலும்,தேவாலயங்களிலும் வேண்டி கேட்டுட்டு இருக்காங்க...இறைவன் அருள்,கிருபை,சக்தி ன்னு எல்லாமும் அந்த ஒரு ஆற்றலை நோக்கி தான் பயனிச்சிட்டு இருக்காங்க...மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே துகளால் ஆனது மதங்களும் அவ்வழியே எல்லாமும் இறைவன் இருப்பதை முன்வைத்தே கூறுகிறதே தவிர இறைவன் இல்ல ன்னு சொல்லல..நாத்தீகம் பேசுரவங்க இறைவன் இல்ல ன்னு சொல்றதுலயும் தப்பு இல்ல ஏன்னா அவங்க நம்மளோட எதிர் dulaity பயனிச்சிட்டு இருக்காங்க..இங்குள்ள உயிருள்ள,உயிரற்ற அத்தனையும் அடிப்படையில் ஒன்றாகவே உருவாகி யாதும் ஆகி தெரிகிறது...இந்த யாதும் ஆனா நிலையை மட்டும் மனிதன் எட்ட முடிந்தால் எதிர்காலம்,நிகழ்காலம்,கடந்தகாலம் ன்னு எங்கு வேணாலும் பயணிக்கலாம் அதே சமயம்,அந்த யாதுமாகின நிலையில் கோபம்,சிரிப்பு,துக்கம் ன்னு எல்லாமும் ஒரே மாதிரியே இருக்கும்...இதற்கு ஒரு உதாரணம் நம்ம ஊர்ல ஒருத்தன் அழுகுரத பாத்து ஒருத்தன் சிரிப்பான் நடுவுல இது எது உண்மை எது பொய் ண்ணே தெரியாம போயிரும்..இது இயக்கத்திற்கு மட்டுமில்ல உயிரற்ற பொருட்களுக்கு கூட பொருந்தும்...சும்மாவே உயிரற்ற சாதனங்களோட மனிதன் தொடர்புகொள்ள ஆரம்பிச்சிட்டான்... தனக்கு phone வரப்போவதை சில நொடிகளுக்கு முன்பாகவே சிலரால் கணிக்க முடியும்(இது எத்தனை பேருக்கு சாத்தியம் ன்னு தெரியல)..இதெல்லாம் வெரும் அடிப்படை தான் இதன் உட்சபட்ச நிலைய எட்டும் போது தான் மனிதன் எல்லையற்ற யாதுமாகியா ஆகுறான்...

Origin
இங்க எதுவும் உருவாக்க படல.. எதுவும் அழிக்கவும் படல...எல்லாமும் இங்கிருந்தே எடுக்கபட்டது...இறுதியில் இங்கேயே தான் விட்டும் செல்லணும்..இங்க புதுசு பழசு ன்னு ஒண்ணுமே கிடையாது மனிதனின் reality க்கு ஏற்ப அவனவன் அமைச்சுகிறது தான் எல்லாம்...பல மூலக்கூறுகளை ஒன்றிணைத்து புதுசா ஒன்றை தோற்றுவிக்கிறான் ஆனா அது புதுசு போல் காட்சிப்படும் பழசு தான்...டார்வினியம் போல உயிர்களும் அப்படியே பரிணாமித்தே உருவாகி இருக்கு...மனித இயல்புக்காக மட்டுமே physics, chemistry, biology ன்னு எல்லாவற்றையும் பிரிச்சு பாக்குறோம்..ஆனா அடிப்படையில் எல்லாம் ஒன்னு தான்...மனிதனின் புரிதலுக்காகவும் ஒற்றை இயல்பிற்காகவும் தான் பிரிக்க பட்டிருக்கு..எவ்வளவு மதங்கள்,எவ்வளவு பிரிவுகள்,இனம்,மொழி,நிறம் ன்னு இங்க பல வகையில் உடைஞ்சு இருக்கோம்..இந்த அத்தனைக்கும் அடிப்படை ஒன்னு தான் அதான் origin - இந்த origin அ தேடி தான் அத்தனை இறையியல் கோட்பாடும் நகருது... எல்லாவற்றிற்கும் மேல இந்த ஒற்றை துகள்களை இயக்கும் இயங்கு சக்தி(ஆற்றல்) தான் மனிதனால் எட்ட முடியாத பரிமாணம்...பிரபஞ்ச (கடவுள்) கோட்பாடும் அதான்...

Wednesday 16 September 2020

Karma - ஊழ்வினை

Karma-ஊழ்வினை
கர்மா இத பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது..அறிவியல் ரீதியிலும் விவரிக்கப்பட்ட ஒரு கருத்து தான் கர்மா...நியூட்டனின் மூன்றாம் விதி தான் இதற்கான விளக்கம்...நான் செய்யும் எந்த ஒரு இயக்கத்திற்கும் எதிர்வினை உண்டு என்பது தான் இதன் தத்துவம்...உதாரணத்துக்கு சுவற்றின் மீது எறியப்படும் பந்து...இதை விட அருமையா கர்மாவை பற்றி பலரும் சொல்லிருக்காங்க.. நாம என்ன தான் ஒரு விஷயத்தை சரியாவோ தப்பாவோ பண்ணிருந்தா அதுக்கான வினைப்பயன் கண்டிப்பா நம்மளை வந்து சேரும் அப்படி அது நமக்கு கிடைக்காவிட்டாலும் நம்ம சந்ததிகளுக்கு கண்டிப்பா கிடைக்கும்..உதாரணத்துக்கு சமீபத்தில் இறப்பு நடந்த வீட்டில் கொஞ்ச நாட்களில் பல மாற்றங்கள் நடக்கும் அது அந்த இறந்தவறது முன்வினைபயன்..அவர் விட்டுட்டுப்போன கணக்குக்கு விடை கிடைக்கும்..இது நன்மையாகவோ தீமையாகவோ இருக்கும்...அது அவரவர் வினைப்பயன்..குழந்தை பிறப்பும் அதுபோல தான்..சரி இப்போ இந்த கர்மாவுக்கும் நம்ம வாழ்வியலுக்கும் இடையேயான தொடர்பை பாப்போம்.
பொதுவா பூமியில் பிறந்த அனைவரும் இந்த கர்மாவால் பாதிப்பட்டு தான் ஆகணும் அதான் இதன் விதி...இது சாமானிய மனிதனுக்கு நடந்தே தீரும்..இந்த கர்மாவை சிறப்பாக கையாலுவது பெரிய பெரிய மகான்களுக்கும் ஞானிகளுக்கும் தான்  கைவந்த கலை...முதலில்  கர்மா ஒரு இயக்கத்தை கொண்டு தான் துவங்கும் அந்த இயக்கமானது கண்டிப்பாக தனக்காகவோ அல்லது தன்னை சர்ந்தோருக்காகவோ(சந்ததி) தான் இருக்கும்...இப்போ இந்த தொடர்பை துண்டிக்க தான் பிரம்மசார்யத்தை கடைபிடிச்சாங்க...ரெண்டாவது எதிர்வினை அதாவது நாம ஏதாவது செஞ்சா தான அதுக்கு எதிர்வினை வரும் எதுவுமே செய்யாம இருந்தா??? அதுக்காக தான் சில மகான்கள் சிவனே ன்னு சும்மா இருந்தாங்க... Neutral position ல இருந்தாங்க...ஓய்வும் ஒருவகை இயக்கம் தான்...அதனால முடிஞ்ச அளவுக்கு இந்த பூமியை விட்டு போக முயற்சி செஞ்சாங்க..சரி கெட்டது செஞ்சாதனே கர்மாவால் துன்பம் அவச்சொல் வரும் நல்லது செய்யலாமே-அங்க தான் இருக்குது uncertainty principle (நல்லதை மட்டுமே செய்ய கடவுளால கூட முடியாது)..இங்க நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் duality இருக்கு அதாவது நன்மைக்குள் தீமை,தீமைக்குள் நன்மை..நாம ஒரு வேலையை செய்யுறோம் ன்னா அது நமக்கு நன்மையாகவே இருந்தாலும் 0.00001% அதில் தீங்கு அல்லது எதிரான விளைவு இருக்கும்..அதனால தான் ஞானிகள் எதுவும் பேசாம எதுவும் செய்யாம யோக நிலையை பின்பற்றினாங்க அது போக அந்த வினைப்பயன்...உண்ணா நோன்பு கூட பின்பற்ற காரணம் நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்பு தான் ஹைட்ரஜன் பிணைப்பு சேர்மம் எல்லா மூலகூரையும் இணைக்கும் சேர்மம் உதாரணத்துக்கு நம்ம உடலில் மட்டும் ஹைட்ரஜன் இல்லை ன்னா...ஒவ்வொரு பாகமும் பிஞ்சு விழுந்திடும்...வீடு கட்டும் போது கூட சுவற்றுக்கு தினமும் தண்ணீர்(ஹைட்ரஜன்) விட்டு அதன் பிணைப்பை உறுதி செய்யுவாங்க... இதே தான் மனித உறவுகளுக்கும், இவருக்கிடையே சண்டை ஏற்பட்டால் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் நீரை பகிர்ந்து கொள்ள மாட்டாங்க (இதுக்கு தனி பதிவே போட்ருக்கேன்)..அதே போல தான் மகான்கள் எதையும் உண்ணாமல் எவரோடும் ஒட்டாமல் வாழ்ந்து வராங்க...இதை சுருக்கமா புரிய வைக்க தான் ஞானிகள் தாமரையை எப்போதும் குறியீடா பயன்படுத்துறாங்க..தாமரை - பீனியல் சுரப்பி (தவ நிலை) நீர் - வெளி உலகை தன்னோடு இணைக்கும் காரணி...தாமரை இதழ்கள் மீது தண்ணீர் எப்போதும் ஒட்டாது...இதை உணர்த்தும் வகையில் தான் இப்படி தாமரையை முதன்மை படுத்துறாங்க...அது போக நீர்(ஹைட்ரஜன்) தான் இங்குள்ள அனைத்தையும் இணைக்கும் காரணியாவும் திகழுது..உதாரணத்துக்கு ஒரு சின்ன குழந்தை முன்னாடி ஒரு பெரிய குளத்தை கட்டினால் அதன் மனம் ஆர்பரிச்சு உற்சாகமடையும் இது தான் சராசரி மனிதனையும் ஞானியையும் பிரிக்கும் கோடு...

Saturday 12 September 2020

Coordinated Loops

 Co-ordinated Loops
ஒன்றிணைக்கப்பட்ட தடப்பாதை
இந்த பரந்த வெளியில எல்லாமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தான்...உதாரணத்துக்கு ஒரு பேனா,பென்சில் ன்னு ஆரம்பிச்சு எந்த ஒரு பொருளை எடுத்தாலும் அது இந்த ஒட்டுமொத்த உலகத்தோடும் தொடர்புடையதா இருக்கும்..இப்போ உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் பெயரை சொல்லணும் இப்போ அவர்கிட்ட போய் இன்னொருத்தர் பெயரை கேக்கணும் இப்படி தொடர்ந்து கேட்டுகிட்டே போனோம் ன்னா முடிவில் ஆரம்பிச்ச இடத்துக்கே வரும் இருந்தாலும் விடாம அந்த சங்கிலித்தொடரை நீட்டிக்கிட்டே போனா அது இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் இந்த சங்கிலியில் இணைக்கலாம்(ஆனால் அதை நீங்க செஞ்சு முடிக்க சில வருடங்கள் ஆகலாம்)..
இது இந்த உலக மக்களுக்கு மட்டுமல்ல எந்த ஒரு பொருள்,உயிர்,செயல் எல்லாத்துக்குமே பொருந்தும் அதாவது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய விடயங்கள்...இதை ஏன் இங்க சொல்றேன் ன்னா இந்த பரந்து விரிந்த தொடரினைப்பில் யாரோ ஒருவர் எங்கோ ஏற்படுத்தும் சிறிய மாற்றம் வேறெங்கோ இருக்கும் ஒருவரை பெரிய அளவில் பாதிக்கும்(நன்மையும் நடக்கலாம்)..இதை எளிமையா விளங்கிக்கொள்ள ஒரு கயிறை எடுத்து ஒரு முனையை சுண்டினால் அந்த விசையியக்கம் மறுமுனை வரை பரவும்..அதே இப்போ ஒரு கயிற்றின் முடிவில் 5 கயிறு கட்டினால் இந்த விசையியக்கம் ஐந்து கயிரிலும் பரவும் இப்போ அந்த ஐந்து கயிறும் வெவ்வேறான நீளம் கொண்டதா இருக்கணும் இப்போ அந்த விசை இயக்கத்தின் நேரம் மாறுபடும்.. அதாவது சிறிய கயிற்றில் சீக்கிரம் விசை சென்றடயும் பெரிய கயிற்றில் மெதுவாக செல்லும்...இப்போ இந்த ஒற்றை கயிற்றை போல பல லட்சம் கயிறுகள் இருக்கு ன்னு வெச்சிக்குவோம் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று குறுக்க மறுக்க இணைக்கப்பட்டிருக்கு இப்போ ஒரு முனையில் ஒருவன் செலுத்தும் விசை மற்ற இடங்களுக்கு பரவலாம்/பரவாமல் தடுக்க படலாம்/திரும்பலாம்/வெகு காலம் கழித்து பரவலாம்/சீக்கிரம் பரவலாம் என நிகழ்தகவின் அடிப்படயில் எப்படி வேண்டுமானாலும் பரவும்...இதை அப்படியே மனிதனோடு ஒப்பிட்டு பாருங்க ஒவ்வொரு கயிறும் ஒவ்வொரு மனிதன் உருவாக்கும் இயக்கங்கள்(moments)..இது எங்க போகுது எப்படி போகுது ன்னு தெரியாது ஆனா கண்டிப்பா இந்த ஒட்டுமொத்த உலக இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்...

"ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒருவகை ஆற்றலை மற்றொருவகையாக மாற்றலாம்"  
ன்னு இயற்பியல் விதி சொல்லுது
அதேபோல அந்த ஆற்றல் கொண்ட இயக்கங்களையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது மாறாக அவை ஒருவகை இயக்கத்திலிருந்து மற்றொரு வகை இயக்கத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும்(ஓய்வும் ஒருவகை இயக்கமே)..

இதன் அடிப்படையில் தான் ஒட்டுமொத்த பிரபஞ்ச இயக்கமும் இருக்கு...அதாவது இன்னிக்கு நடந்துகிட்டு இருக்குற ஒவ்வொரு விஷயமும் ஏற்கனவே நடந்த ஒரு விஷயத்தின் தொடர்பு தான்..இது எப்போ ஆரம்பிச்சது ன்னு தேடினால் அது இந்த பிரபஞ்சம் ஆரம்பத்துக்கு தான் போகும்...உடனே எல்லாரும் பூமியோடு ஆரம்பம் பெருவெடிப்பு கொள்கை ன்னு சொல்லிடலாம் ஆனால் அதுக்கும் முன்னாடி என்ன நடந்தது,சரி எப்படியோ ஒரு இயக்கத்தின் விளைவா நாம இங்க வந்துட்டோம் இனிமேல் இது என்ன ஆகும் - யாருக்கும் தெரியாது.. இப்போ நான் முன்னாடி சொன்ன கயிறு உதாரணத்தை ஞாபகப்படுத்துங்க இப்படி பல சிக்கலாக பிணைக்கப்பட்ட கயிற்று தொடரில் எது முதல் எது முடிவுன்னே தெரியாது எல்லாமே சுத்தி சுத்தி வரும் ரொம்ப தூரம் போன மாதிரி இருந்தாலும் நாம சுத்திக்கிட்டு தான் இருப்போம்...அதே போல தான் இந்த பிரபஞ்சமும் எல்லாம் மீன்பிடி வலையில் இருக்கும் நூல் அமைப்பு போல தான்...இப்போ நீங்க இந்த பதிவை படிக்குறதுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப அதிபர் ஆகுறதுக்கும் கூட தொடர்பு இருக்கு ன்னா நம்பவா முடியுது,அதே சமயம் இந்த பதிவை படிச்சதால்  உங்களுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கு ன்னு சொன்னாலும் நம்பவா முடியுது..நம்பலனாலும் இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம் இல்லையா..இது தான் இந்த சங்கிலி தொடரின் சூட்சுமம்..இந்த சிக்கலான அமைப்புல உண்மை/பொய் ன்னு எல்லாமே ஒரே போல தான் தெரியும் உதாரணத்துக்கு ரெண்டு கயிறை எடுத்து எதிரெதிரே நிற்கும் இருவரின் கையில் ஒவ்வொரு முனையையும் பிடிக்க சொல்வோம்..
இப்போ வலது கையில் உள்ள கயிறு உண்மை இடது கையில் உள்ள கயிறு பொய் ன்னு வெச்சிக்குவோம் இப்போ ஒருத்தன் உண்மையை தேர்வு செஞ்சா அது இன்னொருத்தனுக்கு பொய்யா தெரியும்..இப்படி உண்மையும் பொய்யும் ஒரே மாதிரியே காட்சியளிக்கும் அவர் அவர் தேவைக்கு ஏற்ப நாமலே தீர்மானிக்கனும்..அது போக இந்த சுற்றுசூழல் நிலைமை தான் இங்க எல்லாத்தையும் தீர்மானிக்கும்..எல்லாமே Uncertainty தான்...ஒன்றோடொன்று கலந்த ஒன்றுமல்லாத ஒன்றின் இயக்கம் தான் இது

இப்போ உங்களுக்கு சில விஷயங்கள் தெரிய வரலாம் facebook, Twitterன்னு சமூக வலைதளங்கள் ஏன் பல மக்களை இணைக்குது...இந்த மாதிரி சங்கிலி தொடரை உருவாக்கினாலோ/மாற்றம் ஏற்படுத்தினாலோ ஒட்டுமொத்த உலக இயக்கத்திலும் மாற்றம் ஏற்படும் இயக்கங்கள் அதிகரிக்க நேரம் குறையும் நேரம் குறைந்தால் நன்மை($) தான்..

Reaction=Time=Money - காலமே காசு(கடவுள்)
இப்போ facebook ல நெறய பேர் சம்பாதிக்க ஆரம்பிச்சதயும் தொடர்புபடுத்தி பாருங்க...நம்மள விட வலிமையா இருக்குறவன் எப்படி லாம் வேலை செஞ்சு நம்மலை வெச்சே சம்பாதிக்குறான்...(நாம online ல வெட்டி சண்டை போட்டாலும் அவனுக்கு காசு தான்)

Thursday 3 September 2020

Probable Relativity - நிகழ்தகவுசார்பியல்

Probable Relativity
நிகழ்தகவுச் சார்பு 
இது தன்னிச்சையான இயக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையேயான ஒரு சிக்கலை குறிக்குது... உலகில் இரு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வு மற்றும் அதன் விளைவை கணிக்கும் யுக்தியை குறித்து தான் இதுல பாக்க போறோம்...

 உலகின் எந்த ஒரு நிகழ்வுக்கும் 50%/50% சாத்திய கூறுகள் உண்டு..அதாவது குறிப்பிட்ட ஒரு நிகழ்வு எதிர்காலத்தில் நடக்கலாம் நடக்காமலும் போகலாம்..இதை உறுதிப்படுத்துவது reality தான்..இந்த சமவாய்ப்பில் ஏதேனும் ஒன்று கண்டிப்பா நடக்கும்..இது தான் uncertain duality..இதில் உள்ள சிக்கலே இந்த சமவாய்ப்பில் ஏதாவது ஒன்றை கணிப்பது அதாவது எதிர்காலத்தை கணிப்பது...இது காலத்தோடு தொடர்புடையதா இருந்தாலும் எந்த ஒரு நிகழ்வயும் அனுபவிக்காமல் அதன் தீர்வ சொல்லிட முடியாது...மாறாக,அந்த நிகழ்வு நடப்பதற்கு முன்பே நமக்கு ஏற்றார் போல் மாத்திக்கிட்டா அந்த தீர்வில் மாற்றத்தை கொண்டு வரலாம் ஆனால் இதுவும் ஒழுங்கின்மையின்(uncertainty) அடிப்படையில் நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம்..சரி இப்போ எப்டி எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை கடந்த காலத்திலே மாற்றம் செய்வது ன்னு பாப்போம்.. "ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி எப்டி ஓடும்" - ஓடும் ஆனால் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது...ஏன்னா குவாண்டம் இயக்கத்தில் ஒரு விஷயத்தை நாம் பரிசோதிக்க முயன்றால் அது நமக்கு குழப்பம் கொண்ட முடிவயே தரும், யாரோ நம்மை கவனிக்கிறார்கள் ன்னு atomic particle க்கு தெரிஞ்சிடும் அதனால தன்னோட அற்புதமான இயக்கங்களை செய்யாம அதிலிருந்து மாறுபட்டு செயல்படும் (இதற்கு உதாரணமாக double slit experiment எடுத்துக்கலாம்)...சரி அது எப்டி ஆட்டோ கண்ணாடியை திருப்புனா வண்டி ஓடும் இது முட்டாள்தனமான கேள்வியா இருக்கலாம் இதையே விளையாட்டில் coin வெச்சு toss போட்டு batting தேர்வு செய்யுறதையும் பொருத்தி பாருங்க இது மட்டும் சாத்தியமா என்ன...எல்லாமே சாத்தியம் தான் உதாரணத்துக்கு சில விஷயங்களை துவங்குவதற்கு முன் கோவிலில் பூக்கட்டி போட்டு தனக்கான பதிலை தெரிஞ்சிக்குவாங்க..இங்க தான் ஒரு விஷயத்தை கவனிக்கணும் நிகல்காலத்தில் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் தான் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் மாற்றத்தை சாதகமாகவோ பாதகமாகவோ உண்டாக்கும்.. இது காலத்தோடு தொடர்புடையது அதே சமயம் கிரக இயக்கமும் ஜாதகமும் தான்...பரிகாரங்கள் இதனூடே தொடர்பு கொண்டது தான் எதிர்காலத்தில் நமக்கு வரப்போகும் சிக்கல்களை குறிப்பால் உணர்ந்தவர்கள் அதை மாற்றிக்கொள்ள நிகல்காலத்தில் ஏற்படுத்தும் சிறு சிறு மாற்றம் தான் பரிகாரம்..இதுவும் நிகழ்தகவின் நிலையின்மையின் அடிப்படையில் சரியாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்...இன்னிக்கு நீங்களும் நானும் உயிரோடு இருப்பது கூட இது போல ஏதாவது ஒரு செயல் செய்ததன் விளைவாக தான்... உதாரணத்துக்கு ஒரு நாள் நான் கல்லூரியில் இருந்து வழக்கமாக கிளம்பும் நேரத்தை விட 30நிமிடம் தாமதமாக கிளம்பினேன் வீட்டுக்கு போகும் வழியில அடிபட்டு கிடந்தேன் இதுவே ஒரு 2நிமிடம் முன்னதாகவோ அல்லது தமதமாகவோ கிளம்பியிருந்தால்? இல்லையெனில் சரியாக எப்போதும் போல போயிருந்தால்? அன்னைக்கு 30நிமிடம் விளையாடமால் இருந்திருந்தால்? - இது தான் சாத்திய கூறுகள்..இது போல பல நிகழ்தகவு அடிப்படையில் தான் நம்ம இயங்கிக்கிட்டு இருக்கோம்....யாரோ செய்த வினையால் யாரோ அவதிபடுவதும் இதில் அடங்கும்...இந்த ஒட்டுமொத்த உலக இயக்கமும் ஒன்றோடு ஒன்று ஏதோ ஒரு வகையில் நேரடி தொடர்புகொண்டோ மறைமுக தொடர்புகொண்டோ இயங்கிக்கிட்டு இருக்கு..
இதை வேற எந்த வகையில் விளக்கணும் ன்னு தெரியல

இதுக்கு ஒரு உதாரணம் தான்
Paul the Octopus
இது 2010ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது ஒவ்வொரு போட்டிகளின் முடிவையும் முன்னரே கணித்ததாக சொல்லப்படும் ஒரு கடல்வாழ் உயிரி ஆக்டோபஸ் (எண்காலி)..ஒரு போட்டிக்கு முன் இந்த octopus க்கு உணவளிக்கும் போது இரண்டு பெட்டகம் கொடுக்கப்படும் அந்த இரண்டிலும் போட்டியிடும் இரு அணிகளின் கொடி பொறிக்கப்பட்டிருக்கும்,எந்த அணியின் கொடி பொறிக்கப்பட்டுள்ள பெட்டகத்தை உயர்த்துகிறதோ அந்த அணி வெற்றி பெறும் அதே சமயம் கீழ்நோக்கி வைத்துள்ள பெட்டகம் கொண்ட அணி தோல்வியடையும்
                   - இது தான் இந்த எண்காலியின் சிறப்பு,சரி இதுக்கும் நிகழ்தகவு சார்பியலுக்கும் என்ன தொடர்பு? 
மேற்கண்ட விடயத்தில் இருந்து ஒரு கூற்று விளங்கும்

"போட்டியின் முடிவை octopus முன்னரே கணித்தது"

Uncertainty அடிப்படையில் இதை வேறு விதமாக பிரிச்சு பாப்போம் 

 "octopus பெட்டகத்தை உயர்த்தியதால் அந்த அணி வெற்றி பெற்றது"

எதிர்காலத்தை கணிப்பது கடினம் அதனால் முதல் கூற்றை நீக்கிடலாம்..இரண்டாம் கூற்றின் அடிப்படையில் பார்த்தால் நிகழ்காலத்தில் நமது செயல்கள் எதிர்காலத்தில் விளைவுகளை உருவாக்கும் என்பது உறுதி அது சாதகமோ பாதகமோ அதுவும் duality ன் அடிப்படையில் தான்...அது எப்படி ஒரு பெட்டகத்தை எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு ஆக்டோபஸ் உயர்த்துவதால்,மற்றொரு இடத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத கால்பந்து போட்டியோடு எப்படி தொடர்பு கொண்டிருக்கும்...இது தான் இந்த reality ஓட சூட்சுமமே இங்க நடக்குற எல்லா விஷயமும் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கும்..இருமையின் அடிப்படையில் அது உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம்....என்னதான் duality அடிப்படையில் செயல்பட்டாலும் நாம் வாழும் reality க்கு ஏற்ப நமது மூளை ஒரே ஒரு reality ஐ மட்டுமே நம்பும்..அதாவது,ஒரு காசை சுண்டி விட்டு பூவா,தலையா ன்னு பார்த்தோமென்றால் பூ அல்லது தலை என ஏதாவது ஒன்றை நாம் தீர்மானித்தே ஆகணும்...அதே போல அந்த காசும் பூ அல்லது தலை என ஏதாவது ஒன்றை மட்டுமே காட்டும்...
இது தான் நம்மளோட reality ன் மாயை...இங்க நமக்கு உண்மை,பொய் ன்னு எல்லாமே ஒன்னு தான் ஒன்றின் எதிர்த்துருவம் தான் மற்றொன்று..எதுவும் கெட்டதும் இல்ல எதுவும் நல்லதும் இல்ல எல்லாமே ஏதோ ஒரு நிலைப்பாட்டில் இருக்கணும் என்பதற்காக நாமாக உருவாக்கிக்கொள்ளும் ஒரு மெய்நிகரே