Wednesday 22 April 2020

Adam's Apple - The real Satan

Adam's Apple
THE REAL SATAN


உலகின் முதல் மனிதர்கள் ஆதாம் மற்றும் ஏவால் எனவும், அவர்கள் கடவுளின் தோட்டமான ஏதென்ஸ் எனும் சொர்க்கத்தில் வாழ்ந்து, கடவுள் சாபத்திற்கு ஆளாகி பூமிக்கு அனுப்பபட்டதாக ஆபிரகாமிய மற்றும் இஸ்லாமிய மத கருத்துக்கள் கூறுகின்றனர்.
சரி அது என்ன ஆதாமின் ஆப்பிள்...இது லத்தீனில் Adam's Pome எனப்படும்..அதாவது பூக்கும் தாவரத்தின் விதையுள்ள கனி என்று அர்த்தம்(இதில் பல கனிகள் வரும்)..அதன் வரிசையில் உலக மக்கள் அனைவரும் அறிந்த வகையில் இருக்கவே apple என பெயர் சூட்டப்பட்டது ஆனால்,எந்த மறையும் அது ஆப்பிள் தான் என கூறவில்லை..இந்த ஆதாமின் ஆப்பிள் மனித உடலில் ஒரு பாகமும் கூட...ஆம், மற்ற பாலூட்டிகளிடமிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டும் பேச்சாற்றலை குடுக்க கூடிய குரல்வளையை தான் ஆதாமின் ஆப்பிள் என்பர்..இது ஆண்களில் வெளியே தெரிய கூடியது....பெண்களுக்கு அவ்வளவாக வெளியே தெரியாது..ஆதாம் பழத்தை உண்ணும்போது தொண்டையில்  சிக்கியதாம்..அதுவே நாளடைவில் இவ்வாறு பெயர் பெற்றது..அதாவது உலகின் முதல் ஆணுக்கு ஏற்பட்ட அந்த நிகழ்வு அனைவருக்கும் பொருந்தும் வகையில் கூறப்பட்டுள்ளது...என் கருத்துப்படி அவர்கள் கூறும் அந்த சிக்கிய பழ துண்டு தான் மனிதனின் பேச்சாற்றல்...ஏனென்றால்,சாத்தானின் அறிவுரையின் படி உலகின் முதல் மனிதன் பெற்ற சாபமான வரம் தான் பேச்சு...நினைத்து பாருங்கள் மனிதன் மட்டுமே உலகில் வெவ்வேறு விதமாக பேசும் திறன் பெற்றுள்ளான்(பல மொழிகளை அமைத்து)..
மற்ற உயிரினங்கள் தகவல் தொடர்பு செய்தாலும் அவை தனித்துவமான ஒற்றை முறையை பின்பற்றுகிறது அதாவது உலகம் முழுதும் அவற்றிற்கு ஒரே மொழி..ஆனால், மனிதனுக்கு அவ்வாறு கிடையாது..இது சாத்தானால் பெறப்பட்ட ஒரு சாபம் ன்னு கூட சொல்லலாம்.  இன்னைக்கு பல பிரச்சனைகள் பலரின் வாய் வழியே தான் துவங்குது..

சாத்தானின் தூண்டுதலின் படி அவர்கள் அந்த பழத்தை புசித்தனர்..அதாவது கடவுள் சாப்பிட கூடாது என கூறியும் அதை சாப்பிட தூண்டியது வேறு எந்த சாத்தானும் அல்ல.. அவரது மூளை தான்..அதுவரை ஐந்தறிவு ஜீவன் போல் வாழ்ந்து வந்த ஆதாமும் ஏவாளும் கடவுள் சாப்பிட கூடாது என கூறிய பின்னர் அவர்கள் மூளை வேலை செய்ய துவங்கி உள்ளது...ஏன்?எதற்கு?எப்படி?...அதுவரை ஒரு குழந்தையை போல தான் அவர்கள்..இப்போவும் நம்ம வீட்டு குழந்தைங்க கிட்ட இதை செய்யாத ன்னு சொன்னா தான் செய்வாங்க...negative or opposite thinking இது குழந்தை பருவம் முதல் மூளையில் செயல்படும்..அதாவது மேலும் தொடர்ந்து பரிணாமிக்க ஒரு உயிருக்கு எழும் கேள்விகள்...உதாரணத்துக்கு சின்ன வயசுல மேல ஓடுற Fan  கழண்டு விழுந்திருமோ ன்னு பயம் வரும்(இதுபோல புரிதல் இல்லா கேள்விகளும் பயங்களும்)..
சரி மூளை எனும் சாத்தானால் பழத்தை உண்டார்கள் அப்றம் என்ன ஆச்சு...அவர்களுக்கு உணர்வுகள் வந்திச்சு அதாவது உடல உணர்ச்சிகள் வலி,கோவம்,சிரிப்பு,அழுகை,வஞ்சம் மற்றும் அவங்க ஆடை இல்லாமல் இருப்பது கூட பழம் சாப்பிட்ட அப்றம் தான் அவங்களுக்கே தெரியும்...இரு வெவ்வேறு பாலினங்கள் அருகருகே இருந்தா தான் அவங்க நிர்வாணமா இருக்காங்க ன்னு உணர முடியும் அதாவது ஆண்(ஆதாம்), பெண்(ஏவாள்) - இந்த வேறுபாடு திடீரென அவர்கள் உணர காரணம் பாலின ஹார்மோன்கள் தான்.ஒருவர் ஆண் அல்லது பெண் என உணர வைப்பது இந்த ஹோர்மோன்கள் தான்...அதாவது பழத்தை உண்ட பின்னர் பாலின ஹார்மோன்கள் சுரக்க துவங்கியுள்ளது..இதன் வேறுபாட்டை அறிந்ததன் விளைவாக தான் அவர்களுக்கு நாணம்,வெக்கம் ஏற்பட்டுள்ளது அதுக்கப்பறம் கடவுள் தோட்டத்தை விட்டு துரத்தியதால் பூமிக்கு வந்து சந்ததிகளை பெருக்கினர்..இதன் விளைவாக தான் பூமியில் மக்கள் உருவாகி உள்ளனர்...
மேலும்,மற்ற உணர்வுகள் Glands and Hormones களின் உதவியால் பெறப்பட்டுள்ளது அதாவது...சுரப்பிகள் எனப்படும் சக்கரத்தால் தான் அவர்களுக்கு கோவம்,வலி,சோகம்,சிரிப்பு,வஞ்சம் என உணர்வுகள் தோன்ற ஆரம்பித்தது...இந்த உணர்வுகளுக்கு ஆட்கொள்ளாமல் இருக்கவே சித்தர்கள் மனித உடலின் சக்கர இயக்கத்தை கட்டுப்படுத்த துவங்கினர்.. அதாவது புலன் உணர்ச்சிகளையும்,மன உணர்ச்சிகளையும் துறந்து ஆதாமும்,ஏவாளும் பழத்தை உண்பதற்கு முன்பு எவ்வாறு சொர்க்கத்தில் இருந்தனரோ அந்த நிலைக்கு...அதனால் தான் என்னவோ ஆதாம் ஏவாளை போல பல சித்தர்கள் ஆடையை மதிப்பதில்லை....நிர்வாணமாக அலைந்துள்ளனர்..சித்தர்கள் கூறுகையில் மனித உடலோடு சில அரக்கர்கள்(சாத்தான் ன்னு வெச்சிகலாம்) கலந்துள்ளதாகவும் அவர்கள் உடல் ஆரோக்கியத்தை குலைக்கவே செயல்படுகிறார்கள்..எப்படி என்றால் நாக்கில் ஒரு அரக்கன் இருக்கான் அவன் உடலில் காய்ச்சல் நேரத்தில் ருசிகரமான காரமான உணவுகளின் மீது ஆசையை கூட்டுவான், சிறுநீராகத்தோடு ஒரு அரக்கன் இருக்கான் அவன் தண்ணீரை பார்த்ததும் சிறுநீர் கழிக்க தூண்டுவான் (இது உங்களுக்கே நடக்கும் bathroom க்கு குளிக்க போகும் போது bucket ல தண்ணீரை பார்த்ததும் கேக்காம கொள்ளாம சிறுநீர்வரும்)..இதில் சில பாலின தூண்டல்களும் அடங்கும்...இது போல அந்த அரக்கன்(சாத்தான்) இரத்தம் முழுதும் கலந்து இருப்பதாக இஸ்லாமிய கருத்தும் உள்ளது  

ஷைத்தான் நம் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்றக் கருத்தை பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான். (அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி), நூல் : புகாரி 2035)

உஸ்மான் பின் அபில் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் நகரத்திற்கு என்னை ஆளுநராக நியமித்தார்கள். நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருந்தது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறக்கலானேன். இதை (அடிக்கடி) நான் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். நீ அபுல் ஆஸுடைய மகன் (உஸ்மானா?) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்றேன். நீங்கள் வந்ததற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் தொழுகும் போது வேறு விஷயங்களில் என் கவனம் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் நான் எத்தனை ரக்அத்துகள் தொழுதேன் என்பதை கூட மறந்துவிடுகிறேன் என்று கூறினேன். இது ஷைத்தானால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறிவிட்டு அருகில் வா என்றார்கள். நான் நபியவர்களுக்கு அருகில் எனது குதிங்கால்களை ஊன்றி அமர்ந்துகொண்டேன். அவர்களது கரத்தால் என் நெஞ்சில் அடித்து எனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு என்று கூறினார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று முறை செய்துவிட்டு உன் பணியை துவங்கு என்று (என்னிடம்) கூறினார்கள். (நூல் : இப்னு மாஜா 3538)

இவ்வாறு உடல்முழுதும் ரத்தத்தில் கலந்துள்ளது நம் உடலின் Hormone களும் சுரப்பிகளும் தான் இவற்றை சரியாக இயக்கினால் உடலுக்கும் மனதிற்கும் எப்போவும் சொர்க்கம் தான்...அதுக்காக புலன் உணர்வுகளை கட்டுப்படுத்தி துறவு போக வேண்டாம்..சரியாக செயல்படுத்தினாலே போதும்...

பின் குறிப்பு : ஆதாமும்,ஏவாளும் பழத்தை சாப்பிடுவார்கள் என்பதும்,சாத்தான் பாம்பு அவர்களை வஞ்சிக்கும் என்றும்,அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இறைவனுக்கு ஏற்கனவே தெரியும்..இருந்தும் இதை தொடர்ந்து இருக்கிறது என்றால்...அது இந்த உலகை உருவாக்கும் நோக்கமாக இருக்கலாம்..அன்று ஆதாம் ஏவால் செய்த பாவத்தின் சாபங்கள் தான் நாம் ன்னு கூட வெச்சிக்கலாம்.. அன்னிக்கு அவங்க சாப்பிடல ன்னா இந்த உலக இயக்கம் துவங்கி இருக்காது...இது மறை நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் எழுதியது..

No comments: