Monday 21 September 2020

Vibration Technology - அதிர்வுகளின் நுட்பம்

VibrationTechnology - அதிர்வுகளின் நுட்பம்


அதிர்வுகள் - இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கமும் அதிர்வுகளின் அடிப்படையில் தான் இயங்குது ன்னு சொன்னா நம்ப முடியாது..ஆனால் அதான் உண்மை,இதை விளக்குவது தான் string theory அணுக்கருவினுள் உள்ள நுண்துகள் அதிர்வு தான் ஒரு அணு எந்த மாதிரி இயங்கனும் ன்னு தீர்மானிக்குது(ஒவ்வொரு தனிமத்துக்கும் இந்த அதிர்வு வேறுபடும்)...இந்த பேரதிர்வு தான் மனித வாழ்வியலிலும் பல மாற்றங்களை கொண்டு வருது.. எளிமையான உதாரணம் ன்னா கோவில் மணியை சொல்லலாம்..கோவில் மணி 'ஓம்' ன்னு ஒலிக்கும் கும் சொல்றாங்க அதெல்லாம் விட அதன் அதிர்வு தான் முக்கியம்..மணி, பொதுவாக கோயில்,தேவாலயம்,புத்த விகாரம் ன்னு எல்லா இடங்களிலும் பயன்படுத்தபடுது...இதன் பயன்பாடே கேட்ட அதிர்வுகளை விலக்கி கொடுப்பது தான்...உதாரணத்துக்கு நீர் உள்ள ஒரு பாத்திரத்தின் விளிம்பை தட்டினால் அந்த பாத்திரம் உருவாக்கும் அதிர்வு அதிலுள்ள நீரை ஒரு ஒழுங்கு முறையில் அதிர செய்யும்...இதே தான் மனித உடலிலும் நடக்குது...மணி ஓசை தீய அதிர்வுகளிடம் இருந்து காக்கிறது இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயமே...அதே அதிர்வு சில தீய ஆன்மாக்களிடம் இருந்தும் நம்மை காக்கிறது...இந்த பரந்த வெளியில் கருப்பு ஆற்றல்(காத்து, கருப்பு) நிறைந்த வண்ணம் உள்ளது..இவை தங்களிடம் நெருங்காமல் இருக்கவும் இந்த மணி பயன்படுத்த படுது..உதாரணத்துக்கு இறப்பு நிகழ்வுகளில் அடிக்கப்படும் மணியின் அதிர்வு பிற ஆன்மாக்கள் அங்கு நெருங்காமல் இருக்க உதவுகிறது...இதே மணி தான் ஐந்தறிவு ஜீவன்களையும் சில தீய ஆற்றல்களிடம் இருந்து காப்பாற்றுகிறது...ஆடு, மாடுகள் கழுத்தில் கட்டிவிடப்படும் மணி - இது பொதுவாக காட்டில் கால்நடைகள் தொலைந்து போகாமல் இருக்க தான் பயன்படுத்துவார்கள்..அதே சமயம் 'குரளி' போன்ற மாந்திரீக வேலைகளுக்கு பயன்படும் கண்ணுக்கு புலப்படாத ஜந்துக்கள் இந்த ஆடு,மாடுகளின் கொம்புக்கு நடுவே தான் தங்குமாம்...இதை நெருங்காவிடாமல் செய்யவே இது போன்ற அதிர்வு பயன்படுத்தபடுது...இந்த அதிர்வுகளை பயன்படுத்தும் நுட்பத்தை வைத்து இதன் பலன் மாறுபடும் அணுகுண்டு வெடிப்பின் அதிர்வுகள் எப்படி மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா அந்த மாதிரி...சில வகை அதிர்வுகள் மூளையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும்,சில அதிர்வுகள் கருவில் உள்ள குழந்தையை கூட கொன்று விடும்...இது உலோகங்களால் உருவாகும் அதிர்வுகளாலும்,மனித/பிற ஆன்மாக்களின் எண்ண அதிர்வினாலும் நடக்கும்...அதிவுகள் தான் இந்த பிரபஞ்சத்திற்கு universal language - காது கேட்காத,வாய் பேசாத குழந்தைக்கு கூட அதிர்வுகளை உணர முடியும்...உயரமான மலை பகுதியில் மழை மேகம் சூழும் நேரங்களில் நமது கை தட்டும் அதிர்வு கூட மழை பொழிய செய்யும்..

உலோக அதிர்வுகள் கொஞ்சம் வித்தியாசமானவை - செம்பு பாத்திரங்களின் பயன்பாடும் இதை மையமாக வைத்தே இயங்குது...கிராமங்களில் அடிபட்டு துடிச்சிட்டு இருக்கும் கோழி குஞ்சுகளை நெடுநாள் கவிழ்த்து வைக்கப்பட்ட வெண்கல பாத்திரத்தை கொண்டு மூடி அதன் மீது தட்டும் போது உருவாகும் அதிர்வுகள் அந்த கோழிக்குஞ்சுகளை காப்பாற்றுகிறது...இதை நவீனமா vibration healing ன்னு சொல்றாங்க...

உலோகமல்லாத பிற அதிர்வுகளும் மனித உடல் மற்றும் மூளையில் அற்புதங்களை நிகழ்த்துது...உருமி, உடுக்கை போன்ற கருவிகளின் உதவியால் உருவாக்கப்படும் அதிர்வுகள் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி மரபு பொருளை தூண்டுகிறது..குலதெய்வ வழிபாட்டில் இந்த அதிர்வுகளின் பயன்பாடும் முக்கியமானது...
ஏற்கனவே சொன்னது போல  இந்த அதிர்வுகளை வைத்து சில தீய செயல்களும் நடக்குது...தொலைக்காட்சி,செல்போன் போன்ற வற்றிலிருந்து வெளியேறும் மின்காந்த அதிர்வுகள்..சில சமய கூடங்களில் இந்த அதிர்வை பயன்படுத்தி தனக்கு தேவையானதை கூட நிறைவேற்றி கொள்கின்றனர்...மக்களை மடைமாற்றும் சில வேலைகளும் நடக்குது..உலோக அதிர்வுகள் நிறைந்த இடத்துக்கு போகும் போது கவனமா இருக்கணும்..மந்திரம் ஜெபிக்கபட்ட கலசமும் இதன் அடிப்படையில் தான் இயங்குது...உலோக பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரிற்கு எண்ணங்களால்(மந்திரம்) அதிர செய்து தனக்கு ஏற்றார் போல் அந்த நீரை பயன்படுத்தி கொள்கின்றனர்...ஒவ்வொரு முறையும் விழிப்போடு இருக்க நீங்கள் இருக்கும் இடத்தின் அதிர்வுகளை விலக்குங்கள்.. உங்களுக்கு தேவையான அதிர்வுகளை நிரப்புங்கள்...சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி போன்றவையும் இந்த அதிர்வுகளின் அடிப்படையில் தான் இயங்குது...

அதிர்வுகள் தான் அலைவரிசையா உருவெடுக்குது - ஒரு சின்ன மணியின் ஓசை ஏற்படுத்துவதற்கும்,பல மணி ஓசைகள் சேர்ந்தால் அதுவும் ஒலியே இல்லாமல் வெரும் அதிர்வோட மட்டும்

No comments: