Thursday 20 May 2021

Patterned Formulas

Patterned Formulas

பொதுவா formulas கணிதம்,வேதியல், இயற்பியலில் பயன்பட கூடிய சிக்கலான அமைப்புகளை தீர்க்க பயன்படும் ஒரு திறவுகோல் ன்னு வெச்சிகலாம்.இது பூவுலகின் அனைத்து நீள, அகல,உயர அளவைகள் மட்டுமல்லாது வேதிய பிணைப்புகளையும் கட்டுப்படுத்துது.உதாரணத்துக்கு E=Mc2 ல ஆரம்பிச்சு பாலில் சர்க்கரை கலந்து டீ போடுறது வரைக்கும் இந்தவகை சமன்பாடுகளை அடிப்படையாக கொண்டு தான் நடக்குது.மனிதர்கள் தங்கள் அறிவுக்கு எட்டிய விடயங்களை வைத்து இதுவரை கண்டறிந்துள்ள சூத்திரங்கள் குறைவு தான் இவை பெரும்பாலும் பொறியியல் பயன்பாட்டுக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.இந்த formulas தான் ஒட்டுமொத்த உலகத்தையே இயக்குது ன்னா உங்களால நம்ப முடியுமா?? ஆமா,உண்மை தான்.இது போன்ற மனிதனுக்கு எட்டாத சில சூத்திரங்கள் தான் இந்த உலகத்தை மட்டுமல்லாது உங்களையும் என்னையும் கூட இயக்குது.அதுதான் Patterned அதாவது முறைப்படுத்தப்பட்ட சூத்திரங்கள்.இதன்படி தான் இங்க எல்லாமே இயங்கிட்டு இருக்கு.இந்த formulas ஒன்றுக்கொன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையது. உதாரணத்துக்கு புவியில் உள்ள அழுத்தம்,எடை,வெப்பநிலை லாம் நிலையானது ன்னு நெனச்சிட்டு இருக்கோம்.ஆனா இந்த அமைப்புல ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் அது மொத்தமும் மாறிடும் constant (மாறிலி) மதிப்புகள் மாறினால் இங்குள்ள சூத்திரம் அனைத்துமே மாற்றம் கண்டிடும்.இந்த மாற்றங்கள் நிகழலாம ஓடிட்டு இருக்குறதும் ஒரு formula வின் அடிப்படையில் தான்.சூரியன் கிழக்கே உதிப்பது முதல்,பூமி சூரியனை சுற்றுவது,சந்திரன் சுழற்சி ன்னு எல்லாமும் இந்த formula அடிப்படையில் தான்.சரி எல்லாமே formula படிதான் இயங்குது  ன்னா அப்போ நம்ம இயக்கமும் அப்படியா?? மனிதனின் இயக்கம் இரண்டுவகையில் இருக்கும்  ஒன்று மனதளவில் மற்றொன்று உடலளவில் இவ்விரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும் உதாரணத்துக்கு ஒருதனால் 50கிலோ எடையை தூக்க முடியும் ஆனால் மனது அதற்கு சம்மதிக்காது,அதேபோல் மனதளவில் முடியும் ன்னு நினைக்கும் போது உடல் ஒத்துழைக்காது. இது தான் Uncertainty - நிலையற்ற தன்மை இந்த நிலையில் இருக்கையில் மனிதனின் இயக்கம் மட்டும் எப்படி formulas அடிப்படையில் நடக்கும்? கண்டிப்பா இதுக்கும் ஒரு formula இருக்கு.அது தான் மற்ற formula களின் கூட்டு வெளிப்பாடு.நாம என்ன தான் இங்க நம்ம இஷ்டத்துக்கு இயங்குனாலும் நாம இந்த அமைப்புக்குள்ள(பூமிகுள்ள) தான் இருக்ககோம். நாம சூத்திரங்களை பயன்படுத்தாவிட்டாலும் சூத்திரங்களுக்குள்ள தான் இயங்குறோம்.இதற்கு உதாரணமா ஒரு பகடைய(Dice) சொல்லலாம்.ஒரு பகடைய உருட்டும் போது என்ன தான் நிலயற்றதா கணிக்க முடியாம விழுந்தாலும் அது கண்டிப்பாக 6 வகையான எண்களை மட்டுமே காட்ட முடியும்.இத அப்படியே மனித இயக்கத்துடன் பொருத்தி பார்த்தோம் ன்னா மனிதனுக்கு Duality (yes or no).இதன்படி ஒரு பகடைய காட்டிலும் ஒரு மனிதனின் இயக்கம் எளிதில் இந்த அமைப்போடு ஒத்துப்போகும்.

இந்த formula விளையாட்டின் சில ஆச்சர்ய பகுதிதான் 3,6,9 series - Fibonacci series எல்லாம்.நமக்கு தெரிந்தவரை formula க்களை கணித பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துறோம் ஆனா இதே formulas தான் உலகில் பல ஆச்சர்யங்களுக்கு அடிப்படையாக அமையுது. இந்த formula க்களை சரிவர கட்டுப்படுத்தும் master program தான் உலகில் உள்ள அனைத்திற்கும் மூலம்.AI, Computer programmers, Computer Coders க்கு இதன் ஆழம்  புரியலாம்.எல்லாம் விதிப்படி ன்னு சொல்லிட்டு திரியும் பாமரனுக்கும் புரியும்.ஆக எல்லாம் முன்னரே திட்டமிட்டு இப்படி தான் நடக்கணும் ன்னு நடப்பதில்ல.மாறாக,எப்படி எல்லாம் நடக்கணும் ங்குறதுக்கு முறைப்படுத்தப்பட்ட சூத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கு.இதன் விளைவா தான் முக்காலத்துக்கும் பயணித்து குறிசொல்ல முடியுது

ஆட்டுவிப்பவன் அவனே!!!


No comments: