Thursday 20 May 2021

Humans - Advanced Evolution(மேம்பட்ட பரிணாமம்)

Humans - Advanced Evolution
(மேம்பட்ட பரிணாமம்)

பொதுவா இந்த உலகம் எப்படி தோன்றுச்சு,பிரபஞ்சம் எப்படி உருவாச்சு ன்னு இருக்குற பல கேள்விகளில் முக்கியமா கருதப்படுறது மனிதன் எப்படி உருவானான்??.உடனே டார்வினியத்தை தூக்கிட்டு வர வேண்டாம். ஏனென்றால் நான் பேசப்போறது உருவாக்கம்பற்றி,பரிணாமம் பெற்றதை பற்றி கிடையாது.அப்படியே பரிணாமத்தை பற்றி டார்வின் சொல்லியிருந்தாலும் United States, Wales, Scandinavia,Baltic region, Siberia, and China - போன்ற பகுதிகளில் வெவ்வேறு கால இடைவெளியில் பெறப்பட்ட Cambrian fossils படிமங்கள் அவரது மொத்த theory-யையும் திணற வெச்சது.எனவே,டார்வினை ஓரமா வெச்சிட்டு இயற்கையில் என்ன நடந்தது ன்னு பாப்போம்.கூடவே பண்டைய பெரு நாகரீங்கள்ல என்ன சொல்றாங்கன்னும் பாப்போம்.ஹிந்து மதத்தில் பிரம்மா போல எகிப்தில் khnum இவர்தான் மனிதர்களை உருவாக்கும் கடவுள் இவர் ஆட்டின் தலையை கொண்டவர்.ஆட்டுக்கும் படைப்பும் என்ன சம்பந்தம் ன்னா இந்த ஆட்டின் தலையை மனித பெண்ணின் uteres உடன் ஒப்பிடப்படுகிறது.இதே போல கிரேக்கத்தில் Prometheus,Aztec இல் Quetzalcoatl என ஒவ்வொரு இடத்திலும் படைப்புக்கு தனிதனியே கடவுள்கள் உண்டு.அப்படி இருக்கையில மனிதன் மட்டும் ஏன் ஒரு உயர்ந்த நிலையில் படைக்கப்படனும்.மறுபடியும் பரிணாமம் ன்னு டார்வினிய கோணத்தில் யோசிக்காம கொஞ்சம் சாதாரணமா யோசிங்க. அப்படியே சிறு உயிரினம் முதல் டைனோசர் வரை பரிணமித்து உருவாகி இருந்தாலும் மனிதன் மட்டும் ஏன் இன்று மேம்பட்டு இருக்கிறான்.இதை Natural Selection ன்னு பாக்காம. selected creation or super creation ன்னு வெச்சு பாருங்க.அதாவது மனிதன் மனிதனாக தான் உருவாக்கப்பட்டான்.குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் ன்னு சொல்றாங்க ஆனா எனக்கென்னமோ குரங்கை போல மனிதன் இருப்பதால் மட்டும் சொல்லிட முடியாதே.நியாண்டர்தால் இனம் மனித முன்னோடி எனவும் குரங்கிலிருந்து பரினாமித்தான் ன்னு சொல்றாங்க ஆனா நம்ம ஹோமோசேப்பியன் தான் natural selection ஆள அவங்களை வீழ்த்திட்டோம் ன்னு நம்புராங்க.அதாவது இதுபோல காரணங்களால நம்ப வைக்கப்படுரோம்.மேம்பட்ட மனிதன் பைனாகுலர் பார்வை,வெட்டும் பற்கள்,விரலிடை சவ்வு,உடல் முழுதும் ரோமங்கள்,கை கால்களில் நகம்,உதட்டில் ஆர்பிக்குழாரிஸ் தசைகள் என அனைத்து பரிணாமங்களில் இருந்தும் சில பொருத்தமான தகவமைப்புடனே படைக்கப்பட்டிருக்கிறான்.புவியீர்ப்புக்கு எதிரான நிலத்தன்மை,மரம் ஏர வசதியான உடலமைப்பு,எதையும் பற்றிக்கொள்ள கட்டைவிரல் ன்னு எல்லாவற்றிற்கும் மேல சிந்திக்கும் திறனையும் பெற்று ஒரு மேம்பட்ட உயிரினமா உருவாக்க பட்டிருக்கிறான்.இவை அனைத்தும் ஒரு செல் உயிராக ஒரு கரு உருவாவதில் இருந்து 9மாதம் வளரும் வரை இந்த அத்தனை பரிணாமங்களிலும் பரிணாமிக்கிறது இதற்கு சான்றாக முதுகு தண்டுக்கு கீல் இருக்கும் வால் போன்ற முள்ளெலும்பு,கரு வளர்ச்சியின் போது கழுத்தில் ஏற்படும் செதில்கள்.இத்தனை அம்சங்களும் பெற்ற மனிதன் உருவாக்கப்பட்டதாகவும் முக்கியமா களிமண்ணில் செய்யப்பட்டதாகவும் பண்டைய நாகரீகங்கள் சொல்லுது.பூமி உருவாகி எத்தனையோ காலம் நகர்ந்துவிட்டது.இன்னமும் ஆறடி உயரமும் அதீத சிந்திக்கும் திறனும் உடைய ஒரு உயிரினம் மற்ற உயிரினங்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தி பிழைத்து வருகிறது என்றால்.இது வெறுமென பரிணாம கோட்பாடால் மட்டும் சாத்தியமல்ல.மாறாக இந்த  மேம்பட்ட மனித உயிரினம் திட்டமிடப்பட்ட வகையில் தனித்து உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஒருவேளை பரிணாமகோட்பாடு மனிதனை உருவாக்கும் ஒத்திகையாக இருக்கலாம்.அப்படி இருந்தாலும் இவ்வளவு கோளாறுகளுடன் அமைந்திருக்காது.உயிரினங்கள் அனைத்தும் தனித்துவம் கொண்டது.அதே சமயம் மனித பரிணாமமும் தனித்தே உருவாக்கபட்டது.

No comments: