Friday 7 August 2020

Inside Dream - Human Reaction

Inside Dream
HUMAN REACTION
இது உடலுக்கும்,மூளைக்கும் இடையே நடக்கும் ஒரு அனிச்சை இயக்கம் ன்னு சொல்லலாம்.அது என்ன ன்னா..பொதுவாக கனவுகள் ஒருவரின் எண்ணங்களை பொறுத்து தோன்றும் அதவது ஏக்கங்கள் - ஒருத்தன் உடலளவிலும் மனதளவிலும் ஏக்கங்கள் கொண்டிருந்தால் நிச்சயமாக அவனது உடல் மற்றும் மூளை இரண்டுமே அதை தீர்த்துக்கொள்ளவே முனையும்...உதாரணத்துக்கு தாகமா இருக்கும் குழந்தை தண்ணீரை தேடி ஓடும்..அது எங்க இருந்தாலும் அதை குடிக்க முயலும் இல்ல ன்னா அழுகும்..இது தான் ஏக்கம் இந்த ஏக்கம் தான் எண்ணங்களாக,ஆசையாக கடைசியில் கனவாகவும் உருவெடுக்குது..கனவு ன்னா நீங்க நெனைக்குற மாதிரி லட்சியம் கிடையாது..தூங்கும்போது ஏற்படும் கனவு..ஏக்கங்களால் அல்லது வேதனையால் நிறைந்த உங்களது மனது அதை தீர்த்துக்கொள்ளும் நோக்கிலே செயல்பட துவங்கும்..உதாரணத்துக்கு கார் ஓட்டனும் ன்னு ஆசையில் தூங்குறவனுக்கு நிஜத்திலே கார் ஓட்டிவிட்டது போல கனவுகள் வரும்..இது அவனது மூளை செயர்க்கையாக உருவகம் செய்யும் நிகழ்வு இதில் அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்...ஆனால்,இது சரியாக உருவாக காரணம் அவனது எண்ணங்களும் ஏக்கங்களும் தான்...ஒருவனது கனவில் பல மணிநேரங்கள் சில நொடிகளில் நடக்கும் இதெல்லாம் நம் மூளை நம் ஆன்மாவிற்காக உருவாக்கும் போலியான காட்சியமைப்பு..இந்த நிகழ்வின் போது உடல் உறுப்புகளின் பங்களிப்பு பெரிதாக தேவைப்படாது...காரணம் நமது ஆன்மா தான் கனவுலகில் வாழ்கிறது...ஆனால் நம் ஆன்மா கனவுலகில் அனுபவிக்கும் செயல்களுக்கு reaction நம்ம உடல்ல உணரலாம்...என்ன தான் கனவில் ஆன்மா மட்டுமே ஈடுபட்டாலும் கனவை தோற்றுவிக்கும் நமது மூளை உடலோடு தான் இணைஞ்சிருக்கு எனவே கனவில் நம்ம ஆன்மா அனுபவிக்கும் செயல்களுக்கு reaction நம்ம பூத உடலில் உணரலாம்...உதாரணத்துக்கு கடும் குளிரில் சுருண்டு போய் உறங்குபவனுக்கு குளிர்காய்வது போலவும்,போர்வைக்குள் சுருண்டு கொள்வது போலவும் கனவு வந்தால் அந்த இதமான கதகதப்பை அவன் உடலாலும் உணரலாம்...இது எல்லா புலன்களுக்கும் பொருந்தும்...கனவில் சாப்பிடுவது போல இருந்தால் நிஜத்தில் வாயை திறப்பது,வாயில் எச்சில் சுரப்பது..கனவில் அடிபட்டால் வலிக்காது ஆனால் வலிப்பதை போல மனது பாவனை செய்யும்..இங்க உண்மையில் எந்த சுவையும்,கதகதப்பான உணர்வும் தோன்றவில்லை எல்லாம் நமது மூளை உருவாக்கும் போலியான உருவகம்..மூளை உடலோடு இணைப்பில் உள்ளதால் அவை நம்மால் உணர முடிகிறது எப்படியோ...சந்தோஷமான கனவா இருந்தால் நல்லது தான்....இது போல நமக்கு தேவையான கனவுகளை உருவாக்கி அனுபவங்களை தெரிஞ்சிக்கலாம்...உடலால் உணர முடியாததை ஆன்மாவால் உணரலாம்...இதே போல ஒருவர் கணவுக்குள்ள இன்னொருவர் நுழைய முடியுமா ன்னு போக போக தெரிஞ்சிக்கலாம்....

 கனவுல சுச்சு போறதா நெனச்சு நிஜத்தில எத்தனை பேர் சுச்சு போனவங்க கைய தூக்குங்க (நான் first)

Inception
Inception - அதாவது பிறரது கனவில் ஊடுருவி அவர்களது மூளையில் உள்ள தகவல்களை திருடுவது தான் இந்த கதை...நிஜத்தில் இந்தளவுக்கு சாத்தியமா ன்னு தெரியல ஆனால்,பிறரது கனவில் நாம் ஊடுருவலாம் ங்குறது மட்டும் தெளிவா தெரியும்...எப்டி ன்னு தான கேக்குறீங்க~??..முதல்ல சாதாரணமாக ஒருத்தர் மூளையில் நமது கருத்துக்களை விதைப்பது/திணிப்பது குறித்து பாப்போம்...ஒருத்தர் கிட்ட போய் நீங்க ஒரு ஆப்பிளை நினைக்காதீங்க ன்னு சொன்னா அவர் கண்டிப்பாக ஆப்பிளை தான் நினைப்பார் (இது ஏற்கனவே நான் சொன்ன உதாரணம் தான்)...இதுல இருந்து என்ன தெரியுது ன்னா புலன்களின் வழியா நாம் குடுக்கும் சமிக்கை தான் அவரது மூளையில் பிம்பங்களை ஏற்படுத்தும்...இத அடிப்படையா வெச்சிக்கிவோம்... மனிதன் துகள்(உடல்) அளவில் இயங்கும் போது அலையாக ஊடுருவ முடியாது அதே சமயம் ஒருத்தர் தூங்கிட்டு இருந்தாலும் அவரது மூளையில் உண்டாகும் எண்ண காட்சிப்படிமங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை தோற்றுவிக்கும் இந்த அலைவரிசையில் சரியாக ஒன்றிப்போர் அவரது கனவில் தோன்ற வாய்ப்பிருக்கு...இதுக்கு முதலில் இருவரின் எண்ண அலைகளும் ஒன்றிக்கணும் அப்படி நடந்தா கனவில் தகவல் பரிமாற்றம் சாத்தியமாகும்..இதற்கு முதலில் உடலவிலும் மன அளவிலும் பல சோதனைகள் இருக்கு...மேலும் கனவில் நாம் தொடர்புகொள்ளும் நபருக்கும் நமக்கும் இடையேயான எண்ண பரிமாற்றம்(Telepathy) பொறுத்தும் அமையும்ஆனா இது இன்னும் ஒரு pseudoscience தான்...ஏன்னா சில மனோதத்துவ மருத்துவர்கள் இது அவங்க மூளை ஏற்படுத்தும் ஏக்கத்தினால் வந்த விளைவு உண்மையில் யாரும் கனவில் வருவது இல்ல ன்னு சொல்றாங்க..சரி மனிதரால் முடியாது ன்னா அலைவடிவமாக இருக்கும் ஆன்மாக்களால் சாத்தியம் தான...இந்த குறிப்பிட்ட அலைவரிசையில் ஆன்மாக்கள் ஒன்றிக்கும் போது...கனவு காண்பவர் மூளையில் ஆன்மாக்கள் ஏற்படுத்தும் பிம்பங்கள் பதியும் அவை கூற முனையும் விடயங்கள் சில சைகை அடிப்படையில்(குறிப்பிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட நிகழ்வுகள் நடப்பதை எச்சரிக்கும் ன்னு சொல்லுவாங்க) உணர்த்தும் இன்னும் சிலருக்கு முழு உருவமாக காட்சிப்படும் அந்த ஆன்மா அவரிடம் பேசும்...இதை தான் கிராமங்களில் இறந்தவர்கள் கனவில் வருவாங்க ன்னு சொல்லுவாங்க இதை உண்மை ன்னு சொல்லுவாங்க...கனவுல சாமி வந்து இதை செய்ய சொல்லுச்சு,அது கேட்டுச்சு ன்னு சொல்லுவாங்க...இது நினைவூட்டலாகவும் இருக்கலாம்..
தமிழகத்தில் குலதெய்வதோடு தொடர்புகொள்ள கனவு தான் சிறந்த வழி ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க...தென்மாவட்டங்களில் இது சாதாரணமா நடக்கக்கூடியது...கனவில் குறிகேட்டு சொல்லும் அறிய பழக்கமும் இங்க இருந்துட்டு தான் வருது... இதை பத்தி பொதுவுல விரிவா பேச கூடாது..ஆன்மாக்களோடு ஆன்மா தொடர்புகொள்ளும் ஒரு அற்புத நிகழ்வு அது...எல்லோருக்கும் அது சாத்தியப்படுவது அரிது.. கனவை ஒரு ஊடகமாக பயன்படுத்தி இந்தளவுக்கு தொடர்புகளை ஏற்படுத்த முடியும் ன்னா இதை வெச்சி சில கெட்டதும் செய்யலாம்...
பாம்பை கனவில் கண்டால் கெட்டது ன்னு சொல்லுவாங்க இதெல்லாம் சமிக்கை குறியீடு தான்..

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒருவருக்கு எதிரா மற்றவர் உண்டாக்கும் எதிர்மறை ஆற்றல் (ஏவல்)..அவரது ஆன்மாவை தான் முதலில் பாதிக்க துவங்கும்..ஆன்மாக்களை தொடர்புகொள்ள சரியான நேரம் தூக்கம் (கனவு) தான்....இந்த நேரத்தில் தான் அந்த எதிர்மறை ஆற்றல் அந்த ஆன்மாவின் மூளையில் தேவையற்ற பிம்பங்களை தோற்றுவித்து அவரது புலன்களுக்கு பய உணர்வையும்,பெரிய ஒரு தாக்கத்தையும் குடுக்கும்...இதற்கு உதரணம் சொல்லணும் ன்னா நம்ம வீட்டில் உள்ள TV, cellphone எப்படி நம்ம மூளையை பாதிச்சு தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவற்றை உருவாக்குதோ அப்படி தான்....

நமக்கு சம்பந்தமில்லாத ஒரு ஆன்மா...
நம்மோடு...
கனவில் தொடர்பு கொள்கிறதே..?
இது எப்படி சாத்தியம்..?

இது தான் யட்சிணி/துர்தேவதை/தீய ஆன்மாக்களின் தீண்டல் ன்னு சொல்லுவாங்க - யாராலோ ஏவப்பட்டோ அல்லது தாமாக சுயதேவைக்காகவோ ஒருவரின் உடல் மற்றும் மூளையை தொடர்புகொள்ள நினைக்கும் ஆற்றல் அல்லது ஆன்மாக்களின் செயல் தான் இது...இது செய்வினை,ஏவல் போன்றவற்றில் அடங்கும்...தாமாக வருவது அதன் சுயதேவைக்காக அமையலாம்....

2 comments:

Unknown said...

Intresting 👍🏻

Prabaroose said...
This comment has been removed by the author.