Tuesday 28 July 2020

Boundaries of Dark Matter Vibrations-கருப்பொருள் ஆற்றலின் எல்லை ஆதிக்கம்

கருப்பொருள் ஆற்றலின் எல்லை ஆதிக்கம்
Boundaries of Dark Matter Vibrations

             

ஒரு உயிர் உருவாக்கும் எண்ணங்களை செயல்படுத்த அதன் உடல் உதவியாக இருக்கும்..இறந்த ஆன்மாக்களின் இயக்கத்திற்கு அலைகளும்/அதிர்வுகளும் உதவுகின்றன..இப்படி உருவாகும் அலைகள் ஒரு radiation போல உருவாகி குறிப்பிட்ட எல்லையை கொண்டு பரவி கிடக்கும்...நீரில் கல்லை போட்டால் அதன் அதிர்வு வளையம் எப்படி பரவுமோ அது போல..இது அந்த கருப்பொருள் ஆற்றலின் வீரியத்தை பொருத்தும் அமையும்...இந்த ஆற்றல்களின் எல்லைக்குள் மற்றவர்கள் செல்லும்போது அதனால் பாதிக்கப்படுவார்கள்...உதாரணத்திற்கு TV ஓடும் போது பக்கத்தில் phone இருந்தால் ஒன்றின் electro magnetic radiation மற்றொன்றை பாதிக்கும்...இது அப்டியே cell phone tower கும் பொருந்தும்... ஆவிகள்/ஆன்மாக்களின் நடமாட்டத்தை கண்டறிய emf detection எந்திரங்கள் பயன்படுத்தபடுது amazon ல கூட கிடைக்குது...இது போல கருப்பொருள் ஆன்மாக்களின் எல்லைக்குள் நுழையும் போது பல வகைகளில் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்...உதாரணத்துக்கு சில வாடகை வீடுகளில் நிரந்தரமாக யாரும் குடியிருக்க முடியாமல் இருக்கும்...காரணம் அந்த வீட்டை சுற்றியும் திரியும் அல்லது அந்த வீட்டின் சொந்தகாரரின் குலதெய்வ ஆன்மாவின் ஆதிக்கம் கூட அதிகமாக  இருக்கலாம்..இதை தவிர்க்க தான் புதிதாக வீடுகட்டி குடியேறும் முன் தச்சு கழித்தல் செய்வாங்க..இதன் மூலம் அந்த வீட்டை சுற்றி உள்ள ஆன்மாக்களுக்கு ரத்த பலியிட்டு பூஜைகள் செய்து வீட்டில் தங்களது குல தெய்வ ஆற்றலை புகுத்தி கொள்வார்கள்...இதற்கு குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டு வந்த பிடி மண், எலுமிச்சம்பழம் போன்ற radiation protection களை வைத்து மற்றவை நெருங்காமல் பாதுகாப்பார்கள்..இப்போ நவீன உலகில் எந்திரங்களின் கதிர்வீச்சில் இருந்து தற்காத்து கொள்ள பழைய படி செம்பு (copper) பொருட்களை பயன்படுத்த துவங்கி விட்டனர்...இணையத்தில் தேடி பாருங்க rafiation or emf protection என்று....இதை பல காலம் முன்னரே யந்திர தகடுகள், படிக கற்கள் போன்றவற்றை ஆன்மாக்களின் radiation இல் இருந்து தற்காத்து கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்...உதாரணத்திற்கு படிகாரகல்,crystals,யந்திர செம்பு தகடு,எலுமிச்சம்பழம்,உலோகங்கள் போன்றவை.. எலுமிச்சம்பழம் போன்றவற்றில் நேர்மறை ஆற்றல்களை விதைத்து அதை ஒரு signal jamer போல பயன்படுத்தலாம்...பயணத்தின் போது எலுமிச்சம்பழம் கொண்டு செல்வதும் இதற்கு தான்...நாம் வேறொரு ஆற்றல் வட்டத்தினுள் செல்லும்போது அதன் அதிர்வுகள் நம்மை தாக்காமல் இருக்க நம்மால் நேர்மறை ஆற்றல் விதைக்கப்பட்ட பழத்தை பயன்படுத்துறோம்...கர்ப்பிணி பெண்கள் கையில் எப்பொழுதும் ஒரு எழுமிச்சம்பழமும், உலோக துண்டும் கொடுத்திருப்பாங்க... சில கதைகள் ல சொல்ற படி செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஆற்றல்கள் (பூதங்கள்) கற்பிணிப்பெண்களை பலி கேட்கும் ன்னு...அதனால் தான் அவர்களை தற்காத்து கொள்ள இந்த radiation pritector கள் பயன்படுத்துறாங்க...

இதன் தன்மையை check பண்ணனும் ன்னா - ஒரு செடியை வெட்ட வெளியிலும் மற்றொரு செடியை செம்பு வேலிகளின் நடுவிலும் வைத்து வளருங்கள்...இது cell phone signal coverage உள்ள இடத்தில் இருக்கணும்..இந்த இரண்டின் வளர்ச்சியை கவனித்தால் copper வேலியின் கீழ் உள்ள செடி நன்றாக வளரும் - இப்போ புரியாத கோவில் கலசம்,யந்திர தகடு எல்லாம்...

குழந்தைகளின் தொட்டிலின் கீழே அரிவாள் போன்ற எஃகு உலோகங்கள் பயன்படுத்துவதும் இதுக்கு தான்...பருவமடைந்த பெண்களுக்கு காவலாக வெண்கல பூண் போடப்பட்ட உலக்கையும் இதுக்கு தான்..இதே போல குறிசொல்லும் பெண்களின் கையிலும் சிறிய பூண் போடப்பட்ட உலக்கை போன்ற குச்சி இருக்கும்...இது போக வீட்டின் வாசலில் கட்டப்படும் குதிரை லாடம்,வீட்டு கதவு நிலை வைக்கும் போது கீழே வைக்கப்படும் ஐம்பொன் தகடு போன்றவை அனைத்தும் இந்த negative radiation இல் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவே..

சுமைதாங்கி கல்,நடுகல் போன்றவை கேள்விப்பட்டு இருப்பீங்க..இதன் பணி வித்தியாசமானது சில வீடுகளில்/தொழிற்சாலைகளில் electro magnetic field radiation அதிகமாக இருக்கும் அதனால் அந்த வீட்டின் இணைப்பு earthing செய்யப்படும் அதாவது தரையிரக்கம்.. இதுபோல கருப்பொருள் ஆற்றல்கள் உருவாக்கும் அதிர்வுகளை குறைக்க தான் இந்த நடுகல், சுமைதங்கி கல் - அதி வீரிய அலைகள் இவ்வாறு  grounding செய்யப்படுவதால் அதன் வீரியம் குறைந்து இருக்கும்...ஆனால், சில ஒப்பந்தங்கள் அடிப்படையில் அந்த கருப்பொருள் ஆற்றல்களை தேவைப்படும் போது வெளியே கொண்டுவரலாம்...சில நினைவலைகள் மரம் போன்றவற்றிலும் தங்கும் - தென்மாவட்டங்களில் பனை மரத்தில் ஆவேசமான முனியாண்டி கோவில் அமைந்திருக்கும்..கடவுளாக வழிபட்டாலும் மக்கள் உச்சி பொழுதில் அந்த பக்கம் செல்ல அச்சம் கொள்வார்கள்..
கிராமங்களில் இதுக்கு தான் எல்லைகட்டுப்பாடுகள் இருக்கும்..குறிப்பிட்ட எல்லைகள் குறிப்பிட்ட சிறு தெய்வத்திற்கு இருக்கும் (இந்த கண்மாய்கரைக்கே கருப்பு தான் காவல்,இந்த வயக்காடு முழுசும் ஆத்தா கட்டுப்பாடு தான் - இது போன்ற சொல்லாடல்கள் இதை மேலும் வலுப்படுத்தும்)
இன்னமும் தெய்வங்கள் காவல்காக்கும் மா,பலா தோப்புகள் எங்க ஊர்ல இருக்கு..

இது போல ஊர்விட்டு ஊர்வந்து வாழும் மக்கள் அவர்கள் தங்கியிருக்கும் பகுதி எந்த கருப்பொருள் ஆற்றலின் கட்டுப்பாட்டில் உள்ளதோ அதை வணங்கி அதற்கு தேவையான பலியை கொடுத்து சமரசமா போய்டனும்..இல்ல ன்னா அந்த ஆற்றல் மட்டத்திற்குள் நுழையும் நம்மை அந்நிய ஆற்றலாக எண்ணி தொந்தரவுகள் தர துவங்கும்...இது அந்த பகுதியில் ஏற்கனவே இருக்கும் சிறு தெய்வங்களுக்கு பொருந்தும் ஆனால் அதுக்கு நீங்கள் இருக்கும் எல்லை யார்க்கட்டுப்பாட்டில் உள்ளது ன்னு தெரிஞ்சிக்கணும்...அங்க அந்த ஆற்றல் வலிமை குன்றி இருந்தா நாம் புதிதாக புகுத்தும் ஆற்றல் அங்கு ஆதிக்கம் செலுத்தும் அப்போ நாம தான் ராஜா...
இதுவே தீய ஆன்மாக்களாக இருந்தால் அதனிடம் சமரசம் லாம் செய்ய முடியாது வழக்கம் போல radiation protection பயன்படுத்த வேண்டியது தான் ( யந்திரதகடு,crystals, எலுமிச்சம்பழம் )...

குறிப்பிட்ட சில இடங்களில் விபத்துகள் நடப்பதும் இதில் சேரும் ரத்த பலிக்காக வலிமை குன்றிய ஆற்றலோடு தன்னோட எல்லைக்குள் நுழைபவர்களை எளிதில் காவுவாங்கி விடும்...இதுக்கு தான் #எழுமிச்சங்கா பயன்படுத்துறோம்
சில இடங்களில் சில அதிர்வுகளை சமாளிக்க மற்றொரு கருப்பொருள் அதிர்வை பயன்படுத்துவாங்க... இதுவும் குவாண்டம் இயக்கம் தான்...
பேய் படங்களில் கோவில் எல்லைக்குள் ஆன்மாக்கள் வரமுடியாதது போல காட்சி படுத்தியிருப்பங்க...அது தான் இது...

இங்க எல்லாமே அலையியக்கம் தான்
ஒன்னோட ஒன்னு மோதும்,விலகும் - இறுதியில் வலிமை மிக்கது ஆதிக்கம் செலுத்தும்...வலிமை குறைந்ததாக இருந்தாலும் தற்காத்து கொள்ள துவங்கும்

No comments: